search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt town bus"

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார்.
    • பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பஸ் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று காங்கயம் செல்ல வந்தது. பஸ்சின் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் அருகில் இருந்த கடைக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றனர்.

    அந்த சமயத்தில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நிறுத்தப்பட்டிருந்த அரசு டவுன் பஸ் மீது கல்லை வீசி எறிந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே இதுகுறித்து தகவல் அறிந்து ஓடி வந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் போதை ஆசாமியை பிடித்தனர். பின்னர் அவ்வழியே ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார். அந்த போதை ஆசாமியையும் பஸ்சில் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த போதை ஆசாமி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பதும், ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளி என்பதும் தெரிந்தது.

    மேலும் நேற்று இரவு பஸ் நிலையத்தில் யாரோ ஒருவரிடம் ஏற்பட்ட தகராறில் அவரது சட்டை கிழிந்துள்ளது. அந்த கோபத்தில் அங்கு நின்ற டவுன் பஸ் மீது கல்லை எறிந்ததாக அவர் தெரிவித்தார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பஸ் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • முருகன் வீட்டுக்கு செல்வதற்காகவிழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
    • பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன்(வயது 35). இவர் நேற்று மாலை வீட்டுக்கு செல்வதற்காகவிழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பஸ் நிலையத்துக்குள் வந்த அரசு டவுன் பஸ் முருகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
    • இலசவ பஸ்களில் தங்கள் ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மணிக்கணக்கில் இருந்தாலும் பஸ் புறப்படாததால் ஏமாற்றம் அடைகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இருந்து சின்னாளபட்டி, செம்பட்டி, நிலக்கோட்ைட, வடமதுரை, அய்யலூர், தாடிக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு டவுன்பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் பெரும்பாலான நேரங்களில் பஸ்நிலையத்தில் நீண்டநேரம் கண்டக்டர், டிரைவர் இன்றி நிறுத்தப்படுகிறது.

    இதில் தங்கள் ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அமர்ந்து காத்திருக்கின்றனர். மணிக்கணக்கில் இருந்தாலும் பஸ் புறப்படாததால் இடையில் வரும் தனியார் பஸ்களில் ஏறி தங்கள் ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். குறிப்பாக டவுன்பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால் இந்த பஸ்களில் பெண்கள் அமர்ந்து பின்னர் ஏமாற்றத்துடன் இறங்கி வேறு பஸ்சில் ஊர்களுக்கு செல்கின்றனர்.

    இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் தெரிவிக்கையில், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதுதவிர தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் பணிக்கு வருவதே இல்லை. இதனால் அனைத்து பஸ்களுக்கும் டிரைவர், கண்டக்டர் பணியமர்த்த இயலாத சூழல் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் பஸ்நிலையத்தில் நீண்டநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    ×