search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "glass"

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார்.
    • பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பஸ் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று காங்கயம் செல்ல வந்தது. பஸ்சின் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் அருகில் இருந்த கடைக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றனர்.

    அந்த சமயத்தில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நிறுத்தப்பட்டிருந்த அரசு டவுன் பஸ் மீது கல்லை வீசி எறிந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே இதுகுறித்து தகவல் அறிந்து ஓடி வந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் போதை ஆசாமியை பிடித்தனர். பின்னர் அவ்வழியே ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார். அந்த போதை ஆசாமியையும் பஸ்சில் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த போதை ஆசாமி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பதும், ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளி என்பதும் தெரிந்தது.

    மேலும் நேற்று இரவு பஸ் நிலையத்தில் யாரோ ஒருவரிடம் ஏற்பட்ட தகராறில் அவரது சட்டை கிழிந்துள்ளது. அந்த கோபத்தில் அங்கு நின்ற டவுன் பஸ் மீது கல்லை எறிந்ததாக அவர் தெரிவித்தார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பஸ் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • அரியலூரில் பிளேடு கண்ணாடி துகள்களை விழுங்கிய கைதியால் பரபரப்பு ஏற்பட்டது
    • திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது

    அரியலூர்

    அரியலூர், சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியை சேர்ந்த சத்தியாவின் மகன் வல்லவராஜ்(வயது 25). இவரும், இவரது சகோதரர் தர்மராஜ்(23) மற்றும் நண்பர் குமார் ஆகியோர் அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டில் பூஜை செய்வதாகவும், செய்வினை எடுப்பதாகவும் கூறி, பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து விஜயகுமார் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வல்லவராஜ், தர்மராஜ், குமார் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தர்மராஜ், குமார் ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. இந்நிலையில் வல்லவராஜை வழக்கு விசாரணைக்காக அரியலூர் குற்றவியல் கோர்ட்டில் ேபாலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, தான் ஆக்சா பிளேடு பாகங்கள் மற்றும் கண்ணாடி துகள்களை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் உடனடியாக அவரை அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றில் இரும்பு துண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது.

    திருப்பூர் :

    பல்லடம் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சக்திகுமார் ஓட்டி சென்றார். பஸ் பல்லடம் அடுத்த சின்னிய கவுண்டன் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மயில் ஒன்று பறந்து வந்து பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்ஸில் முன்பக்க கண்ணாடி உடைந்து தூள் தூளானது.

    மேலும் மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து டிரைவர் சக்திவேல் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் வனத்துறையினருடன் இறந்த மயிலை மீட்டு சென்றனர். பின்னர் பயணிகளை வேறொரு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    • கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மினி பஸ்களை இயக்குவதில் டைமிங் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது.
    • மினி பஸ் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள நக்கம்பாடி வடக்கு தெருவில் வசிப்பவர் அன்பழகன் மகன்வந்தியதேவன் (வயது 26). இவர் ஒரு மினி பஸ்சில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமம் வடக்கு தெருவில் வசிக்கும் மாரிமுத்து மகன் விக்னேஷ் (24). தட்டுமால் நடுபடுகை செல்வராஜ் மகன் முனுசாமி (29) ஆகிய இருவரும் வேறு ஒரு மினி பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்குள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மினி பஸ்களை இயக்குவதில் டைமிங் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இதனால் சம்பவத்தன்று நக்கம்பாடி வந்தியதேவன் நடத்துனராக பணியாற்றும் மினி பஸ்சில் இரவு மினி பஸ்சை நிறுத்திவிட்டு உள்ளே படுத்து தூங்கி உள்ளார்.

    அப்போது அங்கே வந்த விக்னேஷ், முனுசாமி ஆகிய இருவரும் மினி பஸ் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தனர். இதில் உள்ளே படுத்து உறங்கிய வந்தியதேவன் படுகாயம் அடைந்த கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வந்தியதேவன் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பகவதி சரணம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், முனுசாமியை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலைராஜின் தந்தை போஸ் ஆட்டோவில் அமர்ந்திருந்த 3 பேரின் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டுள்ளார்.
    • தாக்குதல் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் மலைராஜ். ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆட்டோவில் அமர்ந்து பேசி உள்ளனர். இதனை அவர் கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது ஆட்டோ கண்ணாடி உடைக்க ப்பட்டிருந்தது. இதுகுறித்து மலைராஜின் தந்தை போஸ் ஆட்டோவில் அமர்ந்திருந்த 3 பேரின் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டுள்ளார். சிறிது நேரத்தில் அந்த 3 பேரும் போஸ் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி உள்ளனர்.

    இதனை தடுக்க முயன்ற போஸின் மற்றொரு மகன் குமாரையும் அடித்து தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கிஷோர் டேனியல் என்பவரை கைது செய்தனர். மேலும் காளிராஜ், சங்கர் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    பிளாஸ்டிக் தடையால் கோவையில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதிலாக வாடிக்கையாளர்களுக்கு கண்ணாடி டம்ளர்கள் வழங்கப்பட்டன. #Plasticban
    கோவை:

    ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து நேற்று முதல் கோவையில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதிலாக வாடிக்கையாளர்களுக்கு கண்ணாடி டம்ளர்கள் வழங்கப்பட்டன.

    இதற்காக ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு பதிலாக தண்ணீர் பாட்டில்கள் மட்டும் விற்கப்பட்டன. சுண்டல், முட்டை பொடிமாஸ், வேர்க் கடலை உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளும் பாக்குமட்டை மற்றும் பனை ஓலைகளில் வைக்கப்பட்டிருந்தன.

    உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கியவர்களுக்கு வாழை இலையில் பொதிந்து கொடுக்கப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கறிக்கடைகளில் இறைச்சியை தாமரை இலையில் வழங்கினர்.



    ஓட்டல்களில் பிளாஸ்டிக் தாள்கள் அகற்றப்பட்டு முழுவதும் வாழை இலை பயன்படுத்தப்பட்டன. இதனால் வாழை இலை விற்பனை அமோகமாக இருந்தது. வாழை இலையில் சாப்பாட்டு இலை, டிபன் இலை, தலை வாழை இலை என பிரித்து வெட்டி விற்பனை செய்தனர். 1 டிபன் இலை ரூ.2.50, சாப்பாட்டு இலை ரூ4, தலைவாழை இலை ரூ.6, தள்ளவண்டிகடைகளுக்கு சிறிய இலை ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பிளாஸ்டிக் தடையைத் தொடர்ந்து மளிகை கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பிளாஸ்டிக் கவர் கொடுப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பல்வேறு வகையான துணிப்பைகள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    பணம் கொடுத்து பை வாங்கி தான் பொருட்களை எடுத்து செல்ல முடியும் என்பதால் தற்போது பொதுமக்கள் கடைக்கு செல்லும் போது வீட்டில் இருந்து துணிப்பை எடுத்து செல்வதை காண முடிகிறது.

    கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே பிளாஸ்டிக் மாற்று பொருட்களுக்கு என தனியாக ஒரு அங்காடி உள்ளது. இங்கு ஏராளமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பல்வேறு ரகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து இங்கு மாற்றுப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாது வியாபாரிகளும் இங்கு வந்து மொத்தமாக மாற்றுபொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

    பிளாஸ்டிக் தடைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. வீடு மற்றும் கடைகளில் இருப்பு உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தாமாக முன்வந்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த் திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார். இதையேற்று கடைக்காரர்கள் பலரும் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் கவர்களை ஒப்படைத்து வருகின்றனர்.

    மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் வீடு, வீடாக சென்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வருகின்றனர். இவற்றை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Plasticban
    ×