search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic Ban"

    • ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது.
    • எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது. தடையாணையில் குறிப்பிட்டுள்ளபடி பாலி எதிலீன் டெரிப்தாலேட், உயர் அடர்த்தி பாலிஎதிலீன், வினைல், குறைந்த அடர்த்தி பாலிஎதிலீன், பாலிப்ரோப்பிலீன், பாலிஸ்டைரீன் ரெசின்கள் போன்ற அதிக மூலக்கூறு எடைகொண்ட பாலிமரில் இருந்து தயாரிக்கப்பட்டு சுயமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், உபயோகிப்பதற்கும், கையாளுவதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    தற்போது நெய்யப்பட்ட பைகள் அல்லது ரபியன் பைகள் என்ற பெயரில் பிளாஸ்டிக் கைப்பைகள், விற்பனையாளர்களிடமும், கடைக்காரர்களிடமும் பூ, உணவு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், ஜவுளி, முதலியவைகளை விநியோகிக்க உபயோகப்படுகின்றது. இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்பட்டு குப்பையாக மாறிவிடுகிறது. இவ்வாறு குப்பையாக வீசப்பட்ட பிளாஸ்டிக்குகள் ஏரிகள், ஆறுகள், கடல் போன்ற நீர்நிலைகள் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்து கின்றன. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தயாரிப்ப தோ, விற்பனை செய்வதோ மற்றும் விநியோகிப்பதோ தமிழக அரசின் தடை அறிவிப்பை மீறும் குற்ற செயலாகும். 

    ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்று வதற்கு, தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட தடை யை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக் கைப்பைகளை எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பதனை தமிழக அரசு லியுறுத்துகிறது. எனவே உலகம் எதிர்கொ ள்ளும் பெரும் அச்சுறுத்தலை அகற்று வதற்கு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம் என உறுதிமொழி மேற்கொ ள்வதோடு, அதை உறுதியுடன் பின்பற்றுவோம். இவ்வாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    • மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக கண்டுபிடித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
    • நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமாக இருக்கும் 22 பேரை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார்கள்.

    சென்னை:

    நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதில் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

    மனித கழிவுகளில் பிளாஸ்டிக் இருப்பது 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் பறவைகள், விலங்குகள், கடல்வாழ் உரியிரினங்கள் ஆகியவற்றின் கழிவுகளிலும் பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,

    இந்த நிலையில் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக கண்டுபிடித்து இருப்பது இதுவே முதல் முறையாகும். பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், குளிர்பானம் குடிப்பது, பிளாஸ்டிக் பார்சல்களில் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவது போன்ற காரணங்களால் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமாக இருக்கும் 22 பேரை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார்கள். அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சி செய்தனர். இதில் 17 பேரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது தெரியவந்தது. இதில் குளிர்பான பாட்டில்களில் உள்ள பிளாஸ்டிக் 50 சதவீதம் அளவுக்கு கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு அடுத்த படியாக உணவு பார்சல், டீ, காபி கப்புகள், தண்ணீர் பாட்டில்களின் பிளாஸ்டிக் கலந்துள்ளது. மேலும் 23 சதவீத பிளாஸ்டிக், பழங்களை பார்சல் செய்து விற்பனை செய்யும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகும்.

    உணவு, தண்ணீர், காற்று மாசு ஆகிய 3 வழிகள் மூலம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் மனிதனின் உடலில் கலக்கின்றன. இதில் காற்று மாசு என்பது சுவாசத்தின் மூலம் நுரையீரல் வழியாக ரத்தத்தை அடைகிறது. எனவே பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், குளிர் பானம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

    வீட்டில் அதிக பிளாஸ்டிக் பொருட்களை வைத்து இருந்தால் வீட்டை காற்றோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் பிளாஸ்டிக் காற்றுமாசுவில் இருந்து தப்பிக்க முடியும்.

    பிளாஸ்டிக்கால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பிளாஸ்டிக்கால் ஆன பால் பாட்டில்களை பயன்படுத்துவதால் குழந்தைகள் பிளாஸ்டிக் நுண்துகள்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பது என்பது ஆபத்தானது. மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பதால் உடல் உறுப்புகளை பாதிக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. அது என்னென்ன உடல் உறுப்புகளை பாதிக்கும் என்பது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் அடுத்த கட்ட ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • சேலம், கன்னங்குறிச்சி தாமரை நகரில் சேர்வரான் தெற்கு வனச்சரகம் சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • வனங்களும், வன உயிரினங்களும் சிறப்பாக பாதுகாக்க வேண்டும். வனத்துக்குள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.

    சேலம்:

    சேலம், கன்னங்குறிச்சி தாமரை நகரில் சேர்வரான் தெற்கு வனச்சரகம் சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வனச்சரக அலுவலர் முரளிதரன் பேசியதாவது:-

    வனங்களும், வன உயிரினங்களும் சிறப்பாக பாதுகாக்க வேண்டும். வனத்துக்குள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. வன உயி ரினங்கள் வாழும் இடங்க ளில் மனித நடமாட்டம் இருக்கக்கூடாது.

    அதே போல் வனத்துக்குள் அன்னியர்கள் நுழையக்கூடாது. வனத்தை பாதுகாத்தால் தான் பருவ மழை சரியாக பெய்யும். இவ்வாறு அவர் கூறினார். கிராம வன குழுவினர், வன பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் குறித்து ஊழியர்களுக்கு காட்சி ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • தொழிற்சாலை விழாக்கள், கூட்டங்களில் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் வழிபாட்டு தலங்களில் புத்தாண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை தொழிற்சாலைகளிலும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடைமுறைகளை அறிவியல் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் பிரியதர்ஷினி, உறுப்பினர் செயலர் ரமேஷ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாசுகட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்டுள்ளது.

    இதன்படி பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் குறித்து ஊழியர்களுக்கு காட்சி ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலை வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம், வாங்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நீக்க அதிகாரி நியமிக்க வேண்டும்.

    குடிநீர்பாட்டில் பயன்பாடை தடுத்து, கண்ணாடி பாட்டில் பயன்படுத்த வேண்டும். காவலாளிகள் தொழிலாளர்களை பரிசோதித்து பிளாஸ்டிக் கொண்டுவருவதை தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத தொழிற்சாலை அறிவிப்பை முகப்பில் வைக்க வேண்டும்.

    தொழிற்சாலை விழாக்கள், கூட்டங்களில் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனை த்து தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

    • ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்று ஐகோர்ட் கருத்து
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கவேண்டும்

    சென்னை:

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்று பொருட்களை பிரபலப்படுத்துவது தொடர்பான மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கையை ஐகோர்ட் பாராட்டியது. அதேசமயம், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்றும், அதன் உற்பத்தியை ஏன் நிறுத்தக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை வெளியிடும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

    • உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, பெரும்பாலான உணவுப்பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உடலுக்கு தீங்கு என்பதை அறிந்தும் நாம் அதை வாங்கி உண்கிறோம் என்பது கவலையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்யப்படுவதை ஏன் தடுக்கக்கூடாது என்றும் கேள்வியெழுப்பினர். அமுல், நெஸ்ட்லே போன்ற நிறுவனங்கள் டெட்ரா பேக்கில் பொருட்களை விற்பனை செய்வது போல ஆவின் நிறுவனமும் கண்ணாடி பாட்டிலில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்பனை செய்யக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    அதற்கு தமிழக அரசு தரப்பில், உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றால் அதனை தடை செய்ய தயார் என்றும், இதுகுறித்த அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கொடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

    அப்போது பேசிய நீதிபதிகள் ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் அடைத்து விற்பனை செய்ய முடியுமா என்று தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், வாட்டன் கேன்களின் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அறிக்கையில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்தது.

    மேலும், பாட்டில் பயன்பாட்டை தவிர்க்க ரயில், பேருந்து நிலையம், சுற்றுலா தலங்களில் குடிநீர் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை உத்தரவை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு செயல் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.
    • மாசுக்கட்டுப்பாட்டு துறை சீனியர் என்ஜினீயர் ரமேஷ் தலமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை உத்தரவை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு செயல் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.

    புதுவை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மாசு கட்டுப்பாட்டு குழும அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு துறை சீனியர் என்ஜினீயர் ரமேஷ் தலமை தாங்கினார். இதில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கடந்த ஜூலை 1-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை ஆணையை புதுவை மாவட்டத்தில் அமல்படுத்துவதற்கான மத்திய அரசு பொர்டல் எனப்படும் அமைப்பு மூலம் கண்காணிக்க உள்ளது. இதனை புதுவையில் உள்ள சுற்றுச்சூழல் துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அமுல்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து புதுவையில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விபரங்கள் குறித்தும், அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் தொடர்பாகவும், அவற்றின் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து, படக் காட்சிகளுடன் விளக்கம் அளித்தார்.

    இப்பயிற்சி முகாமில், புதுவை நகராட்சி, உழவர்கரை நகராட்சி, பாகூர், நெட்டப்பாக்கம், வில்லியனுார், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், புதுவை மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் அறிவியல் உதவியாளர் செல்வநாயகி, தினேஷ், விமல்ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5,850 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • கள ஆய்வுகளில் 6 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்கால் ஆன தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5,850 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 6 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக், மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை வேலைவாய்ப்பு அலுவலகம் வளாகம் முன்பு நடைபெற்றது.
    • சுவர் ஓவிய திறப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உழவர்கரை நகராட்சி சார்பில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் புதுவை வேலைவாய்ப்பு அலுவலகம் வளாகம் முன்பு நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுவை அரசு கொறடாவும், இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.டி. ஆறுமுகம் கலந்து கொண்டு சுவர் ஓவிய திறப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ், தட்டாஞ்சாவடி அளவிலான வசந்தம் வண்ணமலர்கள் கூட்டமைப்பு மற்றும் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • கீரனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
    • இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பழனி:

    பழனி அருகே கீரனூர் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில தூய்மை திட்டம் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் பேரூராட்சி தலைவர் கருப்புச்சாமி, செயல் அலுவலர் அன்னலட்சுமி, கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியைகள், தொண்டு அமைப்பினர், மகளிர் சுய உதவிக்குழுவினர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து ெகாண்டனர்.

    ஊர்வலத்தின் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக மஞ்சள்பை பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

    தா.பழூர் ஒன்றியத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 35 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ் மற்றும் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து தா.பழூர், கோட்டியால், சுத்தமல்லி, விக்கிரமங்கலம், உதயநத்தம் ஆகிய கிராமங்களில் உள்ள பல்வேறு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தா.பழூர் கடைவீதியில் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 16 கடைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 600 அபராதமாக விதிக்கப்பட்டது.

    மேலும் உதயநத்தம் கிராமத்தில் 2 கடைகளுக்கு ரூ.500, கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள ஒரு கடைக்கு ரூ.200, கோட்டியால் கிராமத்தில் 4 கடைகளுக்கு ரூ.800, ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் 2 கடைகளுக்கு ரூ.700, விக்கிரமங்கலம் கிராமத்தில் 5 கடைகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய், சுத்தமல்லி கிராமத்தில் 5 கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடைபெற்ற கடைகளில் இருந்து மொத்தம் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒன்றியம் முழுவதும் மொத்தம் 35 கடைகளுக்கு ரூ.7 ஆயிரத்து 300 அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், சத்யராஜ், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஏ.உதயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மோகோல் கோப்பைகள், உணவுப்பொருட்களை பார்சல் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் பேப்பர்கள், குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை தயாரிப்பது, விற்பது, உபயோகிப்பது, வினியோகிப்பது, சேமித்து வைப்பது, போக்குவரத்து செய்வது போன்றவை தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட்டு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை தொடர்ந்து அரசுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

    பிளாஸ்டிக் தடையை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆய்வு மற்றும் புகார் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அதனை மூடுவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

    இருப்பினும் சட்டவிரோதமாக செயல்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.

    எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் புகார் அளிக்கலாம். https://tnpcb.gov.in/contact.php என்ற இணையதள முகவரியிலும், மின்னஞ்சல், கடிதம், செல்போன், வாட்ஸ் அப் வாயிலாகவும் புகாரை பதிவு செய்யலாம்.

    புகார் அளிப்பவர்கள் தங்களது பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் பங்கு பெறும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×