என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி"

    • கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.
    • குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே பனியும் குளிரும் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டியில் கடும் குளிர் அதிகரித்து உள்ளது.

    அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக இயக்கப்படுகின்றன. இதேபோல மாலையிலும் பனி மூட்டம் வலுப்பெறுவதால் ஊட்டி லவ்டேல், பெர்ன்ஹில், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.

    மேலும் பகலில் வெயில் குறைந்து சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தொடர்ச்சியான சாரல்மழை காரணமாக ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலங்களான ரோஸ் கார்டன், பூங்கா மற்றும் ஏரி பகுதிகளில் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

    உள்ளூர் மக்கள் கடும் குளிரால் காலை-மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே தயக்கம் காட்டுகின்றனர். இதேபோல விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் கடுங்குளிரில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக வெம்மை தரும் ஆடைகள் மற்றும் கையுறைகள் போன்றவற்றுடன் வலம் வருகின்றனர்.

    குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. குன்னூரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் நடைபயணம் மேற்கொள்வோர் வெளியே வர இயலாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

    மேலும் குன்னூரில் மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் விரைவில் உறைபனியின் தாக்கமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • சாரல் மழையில் நனைந்தவாறே பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    தமிழகத்தில் தற்போது காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளது. மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர்.

    அவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அவலாஞ்சி, சூட்டிங் மட்டம், பைக்காரா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு இருந்த மலர்களை கண்டு ரசித்து அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர். தாவரவியல் பூங்கா புல்வெளியில் குடும்பத்துடன் அமர்ந்து பொழுதை கழித்தனர். நேற்று மதியம் ஊட்டியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் மழையில் நனைந்தவாறே சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.

    கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சி முனையில் நேற்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அங்கு வந்தவர்கள், கொடநாடு காட்சி முனையில் இருந்தவாறு, பசுமையான தேயிலைத் தோட்டங்கள், வண்ணமயமான பள்ளத்தாக்குகள், மாயார் நதி, பவானி அணை, மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.

    மேல் கூடலூர், மசினகுடியில் உள்ள இ-பாஸ் மையத்தில் நேற்று காலை முதல் சோதனைக்காக வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர். இ-பாஸ் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    கூடலூர், நடுவட்டம், பைக்கார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சமவெளிப்பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குளிர்ந்த காலநிலையை அனுபவித்தனர். சாரல் மழையில் நனைந்தவாறே பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் ஊட்டி கூடலூர், ஊட்டி கோத்தகிரி, ஊட்டி குன்னூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதிகளில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள கவியருவிக்கும் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

    • ஊட்டி-குன்னூர் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
    • கடும் பணிச்சுமைக்கு மத்தியில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது.

    ஊட்டி:

    கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இதன்காரணமாக அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் பார்வையாளர்களின் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது. அங்கு அவர்கள் இதமான காலநிலையை அனுபவித்தபடி இயற்கை காட்சிகளை கண்டுகளித்தனர்.

    சுற்றுலாப்பயணிகள் திரண்டு வந்திருந்ததால் ஊட்டி சுற்றுலா தலங்களில் நுழைவு டிக்கெட் பெறவும், படகு சவாரி செய்யவும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வந்தது.

    இதற்கிடையே கோடை சீசனையொட்டி சுற்றுலாப்பயணிகள் குவிந்து உள்ளதால், ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி-குன்னூர் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை ஜூன் 30-ந்தேதி வரை இருப்பதால் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 6,000 வாகனங்களும், வார விடுமுறை நாட்களில் 8,000 வாகனங்களும் அனுமதிக்கப்படுகிறது. கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் வெளியூர் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை செய்யப்படுகிறது.

    இதற்கிடையே, மே 1-ந்தேதியில் இருந்து ஒருவழிப்பாதை கடைப்பிடிக்கப்படுவதால் ஊட்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் குஞ்சப்பனை வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்கள் பர்லியார் வழியாகவும் ஊட்டிக்கு வர வேண்டும்.

    ஆனால் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை காரணமாக அந்த பகுதியில் ஒரு வழிப்பாதை நடைமுறையை கடைப்பிடிக்க முடியாததால், ஒருசில வாகனங்கள் இருவழிப் பாதையில் சென்று வருகின்றன.

    இதன் காரணமாக ஊட்டியில் முக்கிய சந்திப்புகளான, 'சேரிங்கிராஸ், மதுவான் சந்திப்பு, குன்னூர் சந்திப்பு, பிங்கர் போஸ்ட் சாலை என்று நகரில் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் சுற்றுலா வாகனம் மட்டுமின்றி உள்ளூர் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதே நிலை இரவு வரை தொடர்ந்ததால் அவசரபணிகளுக்கு செல்லமுடியாமல், அனைத்து தரப்பினரும் அவதி அடைந்தனர்.

    கோடை சீசனின்போது குறைந்தபட்சம் 250 போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடுவர். ஆனால் தற்போது 50 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்கள் கடும் பணிச்சுமைக்கு மத்தியில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டால் மட்டுமே போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று சமூகஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • துணை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.
    • நேற்று தொடங்கிய இந்த மாநாடானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    ஊட்டி:

    தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் வருடாந்திர மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    அந்த வகையில் 4-வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று தொடங்கியது. மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

    தேசிய கல்வி கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துணை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.

    தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    இன்று 2-வது நாளாக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது.

    இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    இதில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்வி சார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, ஆராய்ச்சி சிறப்பு அம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் திறன் வளர்ச்சி, குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    நேற்று தொடங்கிய இந்த மாநாடானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    • ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது.
    • பல பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த மாநாட்டை நடத்துகிறேன்.

    தமிழ்நாடு அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.

    உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.

    இந்த நிலையில் துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் புகார் தெரிவித்தார்.

    துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கூடாது என சிறப்பு குழு வைத்து மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

    பல பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த மாநாட்டை நடத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
    • துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழ்நாடு அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.

    இந்த நிலையில் உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.

    துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    • நாளை ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்.
    • இன்று மாலை முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.

    ஊட்டி:

    தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர், இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணிக்கு ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் தரையிறங்குகிறார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், இன்று மாலை 6 மணிக்கு ஊட்டி அடுத்த முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.

    நாளை ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார். நாளை மறுநாள் ஊட்டியில் இருந்து துணை ஜனாதிபதி விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையத்தை சென்றடைகிறார். அதன் பின்னர், அன்று காலை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவ-மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார்.

    இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை மார்க்கமாக நேற்று மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் வரவேற்றனர். ஆளுநர் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    துணை ஜனாதிபதி வருகையையொட்டி நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒத்திகை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று பாதுகாப்பு வாகன ஒத்திகை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் இறங்குதளம், துணை ஜனாதிபதி வரும் சாலை, தாவரவியல் பூங்கா ஆகிய பகுதிகள் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் உள்ள 16 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கி இருப்பவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் தங்கி இருப்பவர்களின் முழு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • ஊட்டியில் நடக்க உள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை ஊட்டி வருகிறார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை மற்றும் நாளை மறுநாள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடக்கிறது.

    மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்குகிறார்.இந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார்.

    இதில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10.35 மணிக்கு கோவைக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார்.

    பின்னர் அவர் காரில் புறப்பட்டு, ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    ஊட்டியில் நடக்க உள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை ஊட்டி வருகிறார்.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், சட்டத்தை மீறியும் துணை வேந்தர்கள் மாநாட்டை அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஊட்டி காபி ஹவுஸ் முன்பு மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    இதேபோல தந்தை பெரியார் திராவிடர் கழகம் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரை கண்டித்து ஊட்டி ராஜ்பவனை முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளது.

    இதன்காரணமாக நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊட்டி ராஜ்பவன், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம், துணை ஜனாதிபதி வரும் சாலை, தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்துக்காக வருபவர்களை அந்தந்த இடங்களிலேயே கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • யானையை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • தொரப்பள்ளி பஜாரில் உலா வந்த காட்டு யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி, முதுமலை புலிகள் காப்பகம் இணையும் பகுதியில், மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி பஜார் அமைந்து உள்ளது.

    இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். பொதுவாக இந்த சாலையில் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    இதன்காரணமாக ஊட்டிக்கு தாமதமாக வரும் சுற்றுலா பயணிகள் தொரப்பள்ளி பஜாரில் வாகனங்களை நிறுத்தி மறுநாள் காலை 6 மணி வரை காத்திருந்து பின்னர் புறப்பட்டு செல்வார்கள். மேலும் கனரக வாகன டிரைவர்கள் தொரப்பள்ளியில் வண்டியை நிறுத்திவிட்டு வாகனத்தில் படுத்து தூங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை நேற்று இரவு தொரப்பள்ளி பஜாருக்கு வந்தது. பின்னர் அந்த யானை அங்கு நின்றிருந்த வாகனங்களில், சாப்பிட எதாவது உள்ளதா என தேடிப்பார்த்தது.

    இதற்கிடையே தொரப்பள்ளி பஜாரில் யானையை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொரப்பள்ளி பஜாரில் உலா வந்த காட்டு யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர்.

    • நீலகிரி மாவட்டத்தில் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை நுழைவதை தடுக்க நடவடிக்கை.
    • தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு.

    நீலகிரி மாவட்டத்தில் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

    ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், குடிநீர் பாட்டில், பைகள் அடங்கிய பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது.
    • பாகுபலி யானை சாலையை கடந்து நெல்லிமலை வனபகுதிக்குள் சென்றது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம், ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது.

    இந்த யானை பகலில் வனப்பகுதிக்குள்ளும், இரவு நேரத்தில் வனப்பகுதியை ஓட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை சாலையை கடக்க முயன்றனர்.

    எப்போதும் பரபரப்பாக இயங்கும் அந்த சாலையில், அந்த நேரத்தில் அதிகளவிலான வாகனங்கள் வந்தது.

    சாலையை கடக்க முயன்ற யானை அந்த வாகனங்களை வழிமறித்தது. தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களை நோக்கி பாகுபலி யானை வந்தது.

    இதனால் மிரண்டு போன வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு அமைதியாக நின்றனர்.

    பரபரப்பாக இயக்கும் ஊட்டி சாலையில் திடீரென பாகுபலி யானை உலா வந்ததால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    மேலும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

    ஆனால் வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே பாகுபலி யானை சாலையை கடந்து நெல்லிமலை வனபகுதிக்குள் சென்றது.

    வாகன போக்குவரத்து அதிகமுள்ள ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் பாகுபலி யானை நடமாடியது வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை இயக்கி செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து ஆ.ராசா பெயரில் நாளை வழக்கு.
    • நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை பெரிய அளவில் இழக்க நேரிடும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, ரூ.727 கோடியில் 56 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.


    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15,634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    நாங்கள் உழைப்பது, இந்தியா முழுமைக்கும் சமூக நீதி மாநில சுயாட்சி, கூட்டாட்சி மத நல்லிணக்கம் ஆகிய உயர்ந்த கருத்துக்களை வென்றெடுக்கத்தான். அதனால் தான் நம் கழக எம்.பி.க்கள் எல்லோரும் மக்களவையில் மாநிலங்க ளவையில் எடுத்து வைக்க கூடிய வாதங்கள் இந்தியா வையே காப்பாற்றக் கூடிய அளவுக்கு அமைந்து உள்ளது. இதைப் பார்த்து இப்போது என்ன செய்கிறார்கள்?

    தமிழ்நாட்டின் நாடாளு மன்ற எண்ணிக்கையை குறைக்க சதி செய்கி றார்கள். தொகுதி மறுசீர மைப்பு என்ற பெயரில் மிகப் பெரிய சதி நடக்க இருப்பதை முதன் முதலில் உணர்ந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தான் நம்முடைய தமிழ்நாடு.


    வர இருக்கக் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்ப டையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பு நம்மை போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகுது.

    மக்கள் தொகையை பல்வேறு பல திட்டங்கள் மூலமாக கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை பெரிய அளவில் இழக்க நேரிடும்.

    இதைப்போல தென் மாநிலங்களும் தொகுதி எண்ணிக்கையை இழப்பார்கள். உடனே இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினேன்.

    அந்த கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி இது போல பாதிக்கப்படும் மாநிலங்களை இணைத்து சென்னையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. 7 மாநிலங்களை சார்ந்த 22 கட்சிகள் அதில் கலந்து கொண் டார்கள்.

    அந்த கூட்ட முடிவின்படி அகில இந்திய அளவிலான கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்து உள்ளோம்.

    அந்த குழுவின் சார்பில் பிரதமர் மோடியை சந்திக்க தேதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். பிரதமர் விரைவில் நேரம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம். இன்னும் சில மணி நேரத்தில் தமிழ்நாட்டுக்கு, ராமேசுவரத்துக்கு பிரதமர் வர இருக்கிறார்.

    நீலகிரி விழாவில் கலந்து கொள்வதால் ராமேசுவரம் விழாவில் என்னால் பங் கேற்க முடியாத நிலைமை. இந்த சூழ்நிலையை அவருக்கு நான் தெரிவித்து விட்டேன். அந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் பங்கேற்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியின் மூல மாக உங்கள் மூலமாக தமிழ்நாட்டுக்கு வரும் மோடியை, நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும்.

    தென்மாநிலங்கள் உள் ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதி விழுக்காடு குறையாது என்ற உறுதி மொழியை தமிழ்நாட்டு மண்ணில் நின்று நீங்கள் வழங்க வேண்டும்.

    அதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும். இது ஏதோ தொகுதி எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, நம் அதிகாரம், உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய கவலை.

    இந்த எண்ணிக்கையும் குறைந்தால் தமிழ்நாட் டையும் நசுக்கி விடுவார்கள். அதனால்தான் நம் வலிமையை குறைக்க பா.ஜ.க. துடிக்கிறது.

    வக்பு வாரிய திருத்த சட்டத்தை நள்ளிரவு 2 மணிக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றியதை பார்த்திருப்பீர்கள். தொடக்கம் முதல் தமிழ்நாடு அரசும் தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்தோம். வக்பு திருத்த சட்டம் ஜனநாயகத்துக்கு விரோத மான முறையில் நிறை வேற்றப்பட்டு உள்ளது.

    இதில் அ.தி.மு.க. உறுப்பினர் தம்பித்துரை 1 நிமிடம்தான் பேசினார். ஆனால் நாங்கள் சட்ட மன்றத்தில் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தோம். தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்துள்ளேன்.

    நாளை துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பெயரில் வழக்கு தொடுக்கப் படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×