என் மலர்
நீங்கள் தேடியது "துணை வேந்தர்கள் மாநாடு"
- துணை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.
- நேற்று தொடங்கிய இந்த மாநாடானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.
ஊட்டி:
தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் வருடாந்திர மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
அந்த வகையில் 4-வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று தொடங்கியது. மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
தேசிய கல்வி கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.
தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.
இன்று 2-வது நாளாக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.
இதில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்வி சார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, ஆராய்ச்சி சிறப்பு அம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் திறன் வளர்ச்சி, குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
நேற்று தொடங்கிய இந்த மாநாடானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.
- துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் 3 நாட்கள் பயணமாக நீலகிரிக்கு நேற்று வந்தார்.
- தோடர் பழங்குடியின மக்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்து வரும் துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் 3 நாட்கள் பயணமாக நீலகிரிக்கு நேற்று வந்தார்.
நேற்று ஊட்டி ராஜ்பவனில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அதனை தொடர்ந்து ஊட்டி அருகே உள்ள தோடர் பழங்குடியினரின் தலைமை வசிப்பிடமான முத்தநாடு மந்துவுக்கு துணை ஜனாதிபதி சென்றார்.
அங்கு அவரை தோடரின பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்கி, பாரம்பரிய நடனமாடி வரவேற்றனர். அப்போது துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரும் தோடரின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். தொடர்ந்து அவர் தோடர் பழங்குடியின மக்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
அதன்பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் ஊட்டி ராஜ்பவன் வந்தார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்கிறார்.
- பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும்.
- நாட்டின் வளர்ச்சியை வடிவமைப்பதில் பல்கலைக்கழக வேந்தர்கள் முக்கியமானவர்கள்.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியதாவது:-
கல்வி நிறுவனங்களுக்கு சாதகமான அணுகுமுறை அவசியமானது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி அடைவது என்பது அவசியம். கல்வியால் தான் நான் துணை ஜனாதிபதி பதவிக்கு வந்துள்ளேன். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். பயங்கரவாதம் உலகளவில் அச்சுறுத்தலாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியை எந்த சூழலிலும் தடுக்க முடியாது. நாட்டின் வளர்ச்சியை வடிவமைப்பதில் பல்கலைக்கழக வேந்தர்கள் முக்கியமானவர்கள்.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் முயற்சியை பாராட்டுகிறேன். கல்வி நிலையங்களின் பிரச்சனைகளை அறிந்து அவற்றை களைவதற்கு துணை வேந்தர்கள் மாநாடு உதவும். கவர்னராக பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட பிரமாணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தீவிரமாக கடைபிடிக்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார். எவ்வித தடையும் இல்லாமல் நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் தெரிவித்தார்.
- மகளின் திருமணம் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மாநாட்டில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் தெரிவித்தார்.
துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கூடாது என சிறப்பு குழு வைத்து மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், தமிழக அரசின் எந்த அதிகாரிகளாலும் நாங்கள் மிரட்டப்படவில்லை என துணை வேந்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக துணை வேந்தர்கள் கூறுகையில், தமிழக அரசை பகைத்துக்கொண்டு ஆளுநர் அழைக்கும் மாநாட்டிற்கு செல்ல எங்களுக்கு விருப்பமில்லை.
மகளின் திருமணம் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மாநாட்டில் பங்கேற்கவில்லை.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் ஜெநாதன் வழக்கு விசாரணைக்கு ஆஜரானதால் மாநாட்டிற்கு செல்ல முடியவில்லை என்று தெரிவித்தனர்.
- ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது.
- பல பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த மாநாட்டை நடத்துகிறேன்.
தமிழ்நாடு அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
இந்த நிலையில் துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் புகார் தெரிவித்தார்.
துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கூடாது என சிறப்பு குழு வைத்து மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
பல பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த மாநாட்டை நடத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
- துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.
இந்த நிலையில் உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
- தமிழக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக நினைத்து ஆளுநர் செயல்படுகிறார்.
- மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய அமைச்சர் சிவராஜ் பட்டேல் பதவி விலகினார்.
தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
* ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி.
* தமிழக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக நினைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.
* ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு யார் காரணமாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பஹல்காம் தாக்குதலுக்கு அமித்ஷா பொறுப்பேற்க வி.சி.க. கூறியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது.
* மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய அமைச்சர் சிவராஜ் பட்டேல் பதவி விலகினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பங்கேற்கவில்லை.
- தமிழ்நாட்டில் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் மங்கையர்கரசி (பொறுப்பு) மாநாட்டில் பங்கேற்கவில்லை.
தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டை பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
* மாநாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை.
* கோவை வேளாண் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தர் தமிழ்வேந்தன் பங்கேற்கவில்லை.
* தமிழ்நாட்டில் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் மங்கையர்கரசி (பொறுப்பு) மாநாட்டில் பங்கேற்கவில்லை.
* மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லாத நிலையில் அதிகாரிகளும் மாநாட்டை புறக்கணித்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் மாநாட்டில் 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்கின்றனர்.
ஒட்டுமொத்த துணை வேந்தர்களும் மாநாட்டை புறக்கணித்ததாக தகவல் வெளியான நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- நாளை ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்.
- இன்று மாலை முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.
ஊட்டி:
தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர், இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணிக்கு ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் தரையிறங்குகிறார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், இன்று மாலை 6 மணிக்கு ஊட்டி அடுத்த முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.
நாளை ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார். நாளை மறுநாள் ஊட்டியில் இருந்து துணை ஜனாதிபதி விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையத்தை சென்றடைகிறார். அதன் பின்னர், அன்று காலை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவ-மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை மார்க்கமாக நேற்று மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் வரவேற்றனர். ஆளுநர் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒத்திகை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று பாதுகாப்பு வாகன ஒத்திகை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் இறங்குதளம், துணை ஜனாதிபதி வரும் சாலை, தாவரவியல் பூங்கா ஆகிய பகுதிகள் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
நீலகிரியில் உள்ள 16 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கி இருப்பவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் தங்கி இருப்பவர்களின் முழு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
- கவர்னர் மாளிகை-அரசு இடையே அதிகார மோதல் எனக்கூறுவது முற்றிலும் தவறானது.
- மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை:
பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்ற மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.
இந்த நிலையில் ஊட்டியில் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், அதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைப்பார் என்றும் ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் அதிகார மோதல் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை. ஆளுநர் மாளிகை-அரசு இடையே அதிகார மோதல் எனக்கூறுவது முற்றிலும் தவறானது.
ஒவ்வொரு வருடமும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இந்த ஆண்டும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஜனவரி மாதத்தில் இருந்தே தொடங்கின. மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.
2022 முதல் துணை வேந்தர் மாநாட்டை வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடத்தி வருகிறார். சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் தவறாக இணைத்து ஆளுநர் மாளிகைக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகார போராட்டமாக முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள். இவை அனைத்தும் தவறானது. உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரிக்கு வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- போலீசார் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ராஜ்பவன் மாளிகை உள்ளது. இங்கு வருகிற 27 மற்றும் 28-ந்தேதி துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். இதற்காக இன்று அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் நீலகிரிக்கு புறப்படும் அவர் சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு செல்கிறார். ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதனை தொடர்ந்து வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள 48 பல்லைக்கழகங்களின் துணைவேந்தர்களும் பங்கேற்கின்றனர். துணை வேந்தர்கள் மாநாடு முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி 29-ந்தேதி கோத்தகிரி பகுதியை சுற்றி பார்க்க உள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரிக்கு வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியிலும் இன்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும்.
- புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார்.
மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
2021-ம் ஆண்டு நான் கவர்னராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சில பிரச்சனைகளும் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன. அவைகளின் தரமும் குறைந்து காணப்பட்டது. இதனை சரி செய்து, ஒன்றிணைக்கவே இந்த மாநாடு மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
புதிய தேசிய கல்வி கொள்கை தான் எதிர்காலம். நமது நாடு தற்போது பெரிய மாற்றத்திற்காக தயாராக உள்ளது. உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் நாம் பின் தங்கி உள்ளோம். சுதந்திரத்திற்கு பிறகு பொருளாதார நிலையில் 5-ம் இடத்தில் இருந்த நாம் 11-ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டோம். தற்போது 5-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3-ம் இடத்திற்கு முன்னேற உள்ளோம்.
தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும். நாம் சுதந்திரத்திற்கு முன்பு உலகின் பெரும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம். இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும். கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். கற்கும் முறையை, பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






