என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எந்த அதிகாரிகளாலும் மிரட்டப்படவில்லை - துணை வேந்தர்கள் தகவல்
    X

    எந்த அதிகாரிகளாலும் மிரட்டப்படவில்லை - துணை வேந்தர்கள் தகவல்

    • பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் தெரிவித்தார்.
    • மகளின் திருமணம் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.

    உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.

    துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் தெரிவித்தார்.

    துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கூடாது என சிறப்பு குழு வைத்து மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில், தமிழக அரசின் எந்த அதிகாரிகளாலும் நாங்கள் மிரட்டப்படவில்லை என துணை வேந்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக துணை வேந்தர்கள் கூறுகையில், தமிழக அரசை பகைத்துக்கொண்டு ஆளுநர் அழைக்கும் மாநாட்டிற்கு செல்ல எங்களுக்கு விருப்பமில்லை.

    மகளின் திருமணம் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் ஜெநாதன் வழக்கு விசாரணைக்கு ஆஜரானதால் மாநாட்டிற்கு செல்ல முடியவில்லை என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×