என் மலர்
நீங்கள் தேடியது "துணை வேந்தர்கள்"
- தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தரைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி வாசுகி தலைமையில் 5 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- அதிகாரிகளும் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
விசாரணை நிறைவில், தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.
இதைத்தொடர்ந்து சென்னையில் தமிழக அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி நீலகிரியில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தினார். மாநாட்டில் ஏராளமான துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை. தமிழக அரசின் அச்சுறுத்தல் காரணமாகவே அவர்கள் மாநாட்டுக்கு வர மறுத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.
இந்த சூழ்நிலையில் காலியாக உள்ள சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் இடத்தை நிரப்ப தேடுதல் குழுவை தமிழக அரசு நியமித்து இருந்தது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தரைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி வாசுகி தலைமையில் 5 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று 2 பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டது. மேலும் 3 பல்கலைக்கழகளுக்கான துணை வேந்தர் தேடுதல் குழுவை மீண்டும் செயல்பட உத்தவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுல் குழு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.
தமிழ்நாடு அரசு நியமித்துள்ள தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதிகளுக்கு இடமில்லை.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகத்திற்கு தற்போது துணை வேந்தர்கள் இல்லை. துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பல்கலை. பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் துணை வேந்தர்களை நியமித்து பல்கலை. செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையடுத்து அதிகாரிகளும் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
- மாநாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பங்கேற்கவில்லை.
- தமிழ்நாட்டில் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் மங்கையர்கரசி (பொறுப்பு) மாநாட்டில் பங்கேற்கவில்லை.
தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டை பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
* மாநாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை.
* கோவை வேளாண் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தர் தமிழ்வேந்தன் பங்கேற்கவில்லை.
* தமிழ்நாட்டில் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் மங்கையர்கரசி (பொறுப்பு) மாநாட்டில் பங்கேற்கவில்லை.
* மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லாத நிலையில் அதிகாரிகளும் மாநாட்டை புறக்கணித்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் மாநாட்டில் 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்கின்றனர்.
ஒட்டுமொத்த துணை வேந்தர்களும் மாநாட்டை புறக்கணித்ததாக தகவல் வெளியான நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- உலகளாவிய வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டு மாணவர்களை தயார் படுத்துவது தான் நமது நோக்கம்.
- அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சமூகநீதியை அடிப்படையாக கொண்ட மாநிலம். திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படும்.
இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளி விளக்காக உயர்ந்து நிற்கிறது.
உலகளாவிய வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டு மாணவர்களை தயார் படுத்துவது தான் நமது நோக்கம்.
அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.
தரமான கல்வியால் நாம் நாட்டை வழி நடத்தி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையால் 2030-க்குள் அடையலாம் என்ற கல்வி வளர்ச்சியை நாம் இப்போதே அடைந்து விட்டோம்.
உயர்கல்வி தர வரிசையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. திராவிட மாடல் அரசின் நடவடிக்கையால் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாம் உருவாக்க உள்ள மாற்றங்களின் பலன்கள் நமது மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
நாட்டின் சிறந்த கல்வி ஆலோசகர்களுடன் அடுத்தக்கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளோம்.
தொழில்துறையினருடன் இணைந்து நாம் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். AI மற்றும் கிரீன் எனர்ஜி போன்றவை தான் பொருளாதார மாற்றங்களை மேற்கொள்கிறது.
நமது பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
நான் முதல்வன் திட்டம் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மருத்துவ சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
- முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
துணை வேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு அதிகாரத்தை மாற்றிய சட்டம் உச்சநீதிமன்றத்தில் வழியே சமீபத்தில் அமலுக்கு வந்தது. மேலும் முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம்.
- துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் வரும் 16ம் தேதி பல்கலைக்கழகங்களின் அனைத்து துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வரும் 16ம் தேதி மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் துணைவேந்தர்களின் கருத்துக்களை அமைச்சர் பொன்முடி கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்தும் விளக்கி கூறப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி சில ஆலோசனைகளை வழங்கினார். பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.
- துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
- எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவை துணை வேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை, ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை என இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. எடுத்திருப்பதுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முரண்பாடுகளில் மொத்த உருவமாக தி.மு.க. விளங்குகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு காரணமாக கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக் குழு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவது அவசியம். இதனைப் பின்பற்றாமல், துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.
தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நடைமுறைகளின்படி பல்கலைகழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






