search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vice Chancellors"

    திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க. 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். #ADMK #SPVelumani #Thirupparankundram
    கோவை:

    கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா டூரிஸ்ட் டாக்சிஓட்டுனர் தொழிலாளர் மற்றும் உரிமையாளர் சங்க தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.

    தமிழகத்திற்கு கனமழை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சி துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்தி தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டு உள்ளார்.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 15 மண்டலத்தில் ஒரு மண்டலத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதே போல் அந்தந்த மாவட்டத்தில் கலெக்டர்கள் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    மழையால் தேங்கும் நீரை உறிஞ்ச பம்பு செட், மரம் அறுக்கும் எந்திரம், ஜே.சி.பி. எந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மழை அதிகமாக பெய்யும் இடங்களை கண்டறிந்து அதனை சமாளிக்கும் நிலை இருக்கிறது. பொது மக்களுக்கு தங்கும் இடங்கள், உணவு தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    அவரிடம் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆன போது நீங்கள் துணை முதல்-அமைச்சர் பதவி கேட்டதாக டி.டி.வி. தினகரன் கூறுகிறாரே என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் அளிக்கும் போது, டி.டி.வி. தினகரன் நிறைய காமெடி செய்கிறார். டி.டி.வி. தினகரனை கட்சியில் இருந்து விலக சொன்னது நானும் தங்கமணியும் தான்.

    திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க. 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஆர்.கே. நகரில் 20 ரூபாய் நோட்டுகள் கொடுத்தது போல் திருப்பரங்குன்றத்தில் இது செல்லுபடியாகாது. தினகரன் கனவு பலிக்காது.

    எடப்பாடியும், ஒ.பி.எஸ்சும் அண்ணன்-தம்பியாக இருக்கிறார்கள்.

    தினகரன் 10 வருடங்கள் கட்சியில் இல்லை. அவர் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. தினகரனுக்கு ஓ.பி.எஸ். முழுமையாக பதில் அளித்துள்ளார். தினகரன் பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை என்றார்.

    அவரிடம் துணை வேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியிருப்பதாக கவர்னர் பன்வாரிலால் குற்றம்சாட்டி உள்ளாரே? என கேட்டதற்கு அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.  #ADMK #SPVelumani #Thirupparankundram
    தினகரன் கட்சியினர் தங்களை சந்திக்க தூது அனுப்பியதாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP #TamilisaiSoundararajan #TTVDhinakaran
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுக்குள் நடப்பது தர்மயுத்தமா? தர்ம சங்கட யுத்தமா? என்பது எனக்கு தெரியாது. அது அவர்களுக்குள் நடக்கும் போர்.

    இதற்கு முன் தினகரன் கட்சியினரும் எங்களை சந்திக்க தூது அனுப்பினார்கள். யார் யாரை எந்த சூழ்நிலையில் எதற்காக சந்தித்தார்கள் என்பது அந்த அந்த சூழ்நிலையை பொறுத்தது.

    துணை முதல்-அமைச்சர்- டி.டி.வி. தினகரன் சந்திப்பு எந்த சூழ்நிலையில் எதற்காக நடந்ததோ எனக்கு தெரியாது. அவர்களுக்குள் நடப்பது தர்மயுத்தமா, தர்மசங்கட யுத்தமா என்பது தெரியாது. ஆனால் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொடுக்கும் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. ஆனால் டி.டி.வி. தினகரன் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

    கடந்த கால ஆட்சிகளும் சரி, இப்போதைய ஆட்சியும் சரி கோவில்களை பாதுகாக்க தவறிவிட்டன. கோவில்களில் காணாமல் போன சிலைகளும், தூண்களும், எங்கெல்லாம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளன.


    கல்வி வியாபாரமாக்கப்பட்டுவிட்டது. துணை வேந்தர்கள் நியமனத்துக்கு கோடி கணக்கில் பணம் புரண்டு இருக்கிறது. கவர்னர் பன்வாரிலால் வந்த பிறகு தகுதியின் அடிப்படையில் 9 துணை வேந்தர்களை நியமித்துள்ளார். இதுதான் முதல்படி.

    அதற்கு முன்பு துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டு மண் பரிசோதனை நடக்கிறது. இந்த நேரத்தில் முதல்வர் டெல்லி செல்வது ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்காக என்றால் நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #TTVDhinakaran
    ×