என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ponmudy"

    • செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்
    • அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் சோதனை

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர். பொன்முடி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.

    சைதாப்பேட்டை வீட்டில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மேல் விசாரணைக்காக காரில் அழைத்துச் சென்றனர். 

    • 2006-11ம் ஆண்டு காலகட்டத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார்.
    • பூத்துறையில் உள்ள குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவரது கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது மனைவி மேகலா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

    3-வது நீதிபதி செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு தி.மு.க. அமைச்சர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மகன் பொன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அமைச்சர் பொன்முடியின் வீடு சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ளது. இங்கு இன்று காலை 6.50 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.

    அவர்கள் பொன்முடியின் வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறையின் இந்த சோதனையின்போது உள்ளூர் போலீசாரை அழைத்து வரவில்லை. பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையினரை உடன் அழைத்து வந்திருந்தனர். அமைச்சர் பொன்முடியின் வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இதேபோல் மொத்தம் 9-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி எம்.பி. வீடு சைதாப்பேட்டையில் உள்ளது. இங்கு அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள்.

    விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் திருபாணாழ்வார் தெருவில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு உள்ளது. இதன் கீழ் தளத்தில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்த இன்று காலை 7.30 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் வந்து இருந்தனர். ஆனால் அமைச்சர் வீடு பூட்டி இருந்தது.

    அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட யாரும் வீட்டில் இல்லை. வீடு பூட்டி இருந்ததால் அமைச்சரின் உதவியாளரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு வீட்டை திறக்குமாறு கூறினார்கள்.

    ஆனால் அவர் அமைச்சர் உத்தரவு இல்லாமல் வீட்டை திறக்க முடியாது என கூறி விட்டார். இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே காத்து இருந்தனர்.

    இந்த நிலையில் காலை 8 மணியளவில் அமைச்சர் பொன்முடியின் உறவினர் அங்கு வந்தார். அவர் வீட்டை திறந்து விட்டார். அங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த வீட்டின் கீழ் தளத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 10-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

    கவுதமசிகாமணி எம்.பி. வெளிநாடுகளில் அன்னிய செலாவணி சட்ட விதிகளை மீறி முதலீடு செய்ததாக கூறி ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி இருந்தனர். விழுப்புரத்தில் கடந்த 2012-ம் ஆண்டு செம்மண் குவாரிகளில் விதிகளுக்கு முரணாக மண் அள்ளியதில் ரூ.28 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இந்த 2 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த சூழலில் தி.மு.க. மூத்த நிர்வாகியும், அமைச்சருமான பொன்முடி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சைதாப்பேட்டை ஸ்ரீநகர் இல்லம், சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் மகன் இல்லம், விழுப்புரம் பொன்முடி இல்லம், அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை குறித்த தகவல் அறிந்ததும் அந்தந்த பகுதிகளில் ஏராளமான தி.மு.க.வினர் குவிந்தனர்.

    சமீபத்தில்தான் 2 முக்கிய வழக்குகளில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். அமைச்சர் பொன்முடி 1996-2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த கால கட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. இதில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

    அதேபோல் கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இதிலும் போதிய ஆதாரம் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்றும், நாளையும் கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது.
    • ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காகத் தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறதே தவிர வேறு அல்ல.

    சென்னை:

    காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி தலைமையில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஏற்கனவே பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர் கூட்டத்தைக்கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்தோம்.

    அதைத்தொடர்ந்து, இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் 24 கட்சியினுடைய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பீகாரிலும், தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் பி.ஜே.பி.-யை வீழ்த்துவதற்காக தொடர்ந்து கூட்டப்படக்கூடிய கூட்டம் இது.

    பி.ஜே.பி. ஆட்சிக்கு மிகப் பெரிய எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் இது. அமலாக்கத்துறை இன்றைக்கு அவர்களால் ஏவப்பட்டு, ஏற்கனவே வடமாநிலப் பகுதிகளில் அந்தப் பணிகளை செய்து கொண்டிருந்தவர்கள், தற்போது தமிழ்நாட்டிலும், அந்தப் பணியை தொடங்கி இருக்கிறார்கள்.

    ஆகவே, அதைப்பற்றியெல்லாம் கிஞ்சுற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் கவலைப்படவில்லை. இன்றைக்கு, உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கக்கூடிய மாண்புமிகு பொன்முடி இல்லத்தில், அமலாக்கத்துறையின் மூலமாக சோதனை நடத்தப்படுகிறது என்று சொன்னால், இந்த வழக்கை பொறுத்தவரையில், அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, புனையப்பட்ட பொய் வழக்கு இந்த வழக்கு. ஏறக்குறைய 13 ஆண்டு காலத்திற்கு முன்பு போடப்பட்ட வழக்கு. தொடர்ந்து 10 ஆண்டுகாலம் அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம், இதைப்பற்றி எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.

    அண்மையில்கூட பொன்முடி மீது கடந்த கால ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்டிருந்த இரண்டு வழக்குகளிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆகவே, இந்த வழக்கைப் பொறுத்த வரையிலே சட்டரீதியாக அவர் இதனை நிச்சயமாக சந்திப்பார்.

    எது, எப்படி இருந்தாலும், வர இருக்கக்கூடிய பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரையில், இதற்கெல்லாம் நிச்சயமாக மக்கள் பதில் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரே வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால், பீகாரிலும், கர்நாடக மாநிலத்திலும் இதைத்தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களில் நடைபெற விருக்கக்கூடிய இந்த கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக, செய்து கொண்டிருக்கக்கூடிய தந்திரம் தான் தவிர, வேறல்ல. இதை எல்லாம் நிச்சயமாக எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாங்கள் சமாளிப்பதற்கு தயாராக இருக்கிறோம்.

    கேள்வி: உங்களுக்கு கொடுக்கக்கூடிய நெருக்கடியாக பார்க்கிறீர்களா?

    பதில்: ஏற்கனவே தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் ஆளுநர் தேர்தல் பிரச்சாரத்தை எங்களுக்காக நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது அமலாக்கத்துறையும் சேர்ந்திருக்கிறது. ஆகவே, தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன்.

    கே: கடந்த முறை நீங்கள் பீகார் சென்ற போது அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்தது, பிறகு இரண்டாவது முறை யாக பெங்களூர் செல்லும் போது அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடக்கிறது, இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப: இது எல்லாம் சகஜம், சர்வ சாதாரணம். மக்களை திசை திருப்புவதற்காக செய்யக்கூடிய நாடகம். இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கே தெரியாதா. நீங்களே உங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே இது நியாயமா, இதை எதற்காக செய்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

    கே: பெங்களூருக்கு செல்கிறீர்கள், காவேரி விவகாரம் பற்றி பேசுவீர்களா?

    ப: காவேரி பிரச்சனை பொறுத்தவரையிலே, மேகதாது பிரச்சனை பொறுத்தவரையிலே என்றைக்கு கலைஞர் அதிலே ஒரு முடிவெடுத்து அந்தப் பணியை நிறைவேற்றி கொண்டிருந்தாரோ, அந்தப் பணியில் கிஞ்சிற்றும் மாறாமல் அதை கடைப்பிடிப்போம்.

    இந்தக் கூட்டம் என்பது, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக நடைபெறவுள்ள கூட்டம். காவேரி பிரச்சனை பற்றிய கூட்டம் அல்ல.

    இன்னும் சொல்லப் போனால், இப்போது இந்தியாவிற்கே ஆபத்து வந்திருக்கிறது, அந்த ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காகத் தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறதே தவிர வேறு அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதுமைப்பெண் திட்ட விளக்க கையேடுகள், சிறந்த கல்லூரிக்கு பரிசு ஆகியவை வழங்கப்படுகிறது.
    • அமைச்சர் பொன்முடி நாளை விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. கலைக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 'உயர்வுக்கு படி' மற்றும் கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.

    மேலும் நான் முதல்வன் திட்டத்தில் 'உயர்வுக்கு படி' உடனடி சேர்க்கை பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு ஆணைகளையும், கல்வி பயில புத்தகங்களையும், 15 பேருக்கு கல்வி கடனும் வழங்கப்படுகிறது. மேலும் பணியில் இருந்தபோது மரணம் அடைந்த சத்துணவு பணியாளர்களின் வாரிசுகள் 9 பேருக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை, புதுமைப்பெண் திட்ட விளக்க கையேடுகள், சிறந்த கல்லூரிக்கு பரிசு ஆகியவை வழங்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வி துறை அமைச்சருமான அமைச்சர் பொன்முடி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதால் அவரது தூத்துக்குடி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த நிகழ்ச்சி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நாளை(செவ்வாய்க் கிழமை) நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர் பொன்முடி கலந்து கொள்வதாக இருந்தது. இது தொடர்பாக பல்கலை கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, அமைச்சர் பொன்முடி நாளை விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றனர்.

    • ஒரு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் திடீரென சோதனை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது.
    • பழைய வழக்கில் பா.ஜ.க. ஆதாயம் தேடுவதை எதிர்க்கிறோம்.

    சென்னை:

    அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அமலாக்கத்துறை பா.ஜ.க.வின் இளைஞர் அணி போல செயல்படுகிறது.

    ஒரு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் திடீரென சோதனை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது. இந்த சோதனைகள் பா.ஜ.க. மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்தும்.

    எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இதுபோன்ற சோதனைகள் நடைபெறுகின்றன. எதிர்க்கட்சிகள் கூட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வகையில் சோதனை நடைபெறுகின்றன.

    பா.ஜ.க. ஒரு மூழ்கும் கப்பல், அதை எது செய்தாலும் சரி என்று செய்ய முடியாது.

    மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை? அதன் மீது ஏன் நடவடிக்கைகள் இல்லை.

    பழைய வழக்கில் பா.ஜ.க. ஆதாயம் தேடுவதை எதிர்க்கிறோம்.

    தமிழகத்தில் பா.ஜ.க. நுழைய முடியாது, தி.மு.க.வை உடைக்க முடியாது, அதனால்தான் அமைச்சர்களை குறி வைக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை.
    • அமலாக்கத்துறை வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?

    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை நடத்தும் சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. முதல் கட்டமாக பாட்னாவில் நடந்தபோது இதேபோல் தான் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை போட்டார்கள்.

    2-வது கட்டமாக இன்றும், நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவதால் ஏற்பட்டுள்ள எரிச்சலாலும், மக்கள் கவனத்தை திசை திருப்பவும் அமலாக்கத்துறையை ஏவிவிட்டு சோதனை நடத்துகிறார்கள். இந்த சோதனைகளுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்.

    என்ன வழக்குக்காக சோதனை நடத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை. அவரது வக்கீல் என்ற முறையில் அதை தெரிந்து கொள்ளும் உரிமை எங்களுக்கு உள்ளது. ஆனால் எங்களை உள்ளேயே அனுமதிக்கவில்லை. அமலாக்கத்துறைக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கிறதா என்பதே சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது.

    இதேபோல் தான் கர்நாடகத்தில் சோதனை நடத்தினார்கள். ஆனால் டி.கே.சிவகுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அமலாக்கத்துறை 100 வழக்கு போட்டால் அதில் 2 வழக்குகளில் கூட குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை. மோடியின் இந்த நடவடிக்கைகளால் கர்நாடகத்தில் ஏற்பட்ட நிலை தான் பா.ஜனதாவுக்கு ஏற்படும். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை படுதோல்வியை சந்திப்பார்கள். ஒரு சர்வேயில் 140 முதல் 160 இடங்களில் தான் பா.ஜனதா வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாதிரி மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் நாங்கள். மிசாவையே சந்தித்தவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டும் என கேட்டுள்ளோம்
    • எல்லாமே அரசியல் தாங்க என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

    காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டும் என கேட்டுள்ளோம், நீச்சல் குளத்திற்கு அருகில் உள்ள நீர் தேக்கத் தொட்டியில் இருந்து நீர் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம், அதேபோல விளையாட்டு வீரர்களுக்கு இதே மைதானத்தில் நிரந்தரமான தங்கும் விடுதி கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

    வேலூர் விளையாட்டு மைதானத்தை தமிழகத்தில் உள்ள ஒன் ஆப் தி பெஸ்ட் விளையாட்டு மைதானமாக மாற்றிக் காட்டுவேன் என்றார். அப்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்வது குறித்து கேள்வி எழுப்பினர்.

    அதற்கு "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே" என்ற பாடலை பாடினார். எல்லாமே அரசியல் தாங்க என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

    • தமிழக உயர் கல்வி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டிக்கிறோம்.
    • எதிர்க்கட்சிகளை உடைத்து அனைவரையும் பயமுறுத்த முயற்சிக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழக உயர் கல்வி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டிக்கிறோம். அவர்கள் எதிர்க்கட்சிகளை உடைத்து அனைவரையும் பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். அமலாக்கத்துறை மூலம் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை உங்களால் (பா.ஜனதா) பயமுறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • கணக்கில் காட்டப்படாத 70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மகன் பொன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அமைச்சர் பொன்முடியின் வீடு சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ளது. இங்கு காலை 6.50 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் பொன்முடியின் வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில்  அதிகாரிகள் சோதனையின்போது அவர்களிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வங்கி பரிவர்த்தனை, பணப் பரிமாற்றம், நகை மதிப்பீடு தொடர்பாக வங்கி அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, பொன்முடியின் வீட்டுக்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். சோதனையின் முடிவில் பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றியதாகவும் தகவல் வெளியானது.

    சென்னையில் நடந்த சோதனைக்குப்பிறகு சைதாப்பேட்டை வீட்டில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மேல் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரது மகன் பொன் கவுதம சிகாமணியும் சென்றுள்ளார். விசாரணையின் முடிவில் பொன்முடி கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • விழுப்புரத்தில் உள்ள பொன்முடி வீட்டில் காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது.
    • இந்த சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு நிறைவடைந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது.

    இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    இந்த சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியானது.

    • அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீட்டில் சோதனை நிறைவடைந்தது.
    • அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது.

    இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு ச் சென்றனர். இந்த சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியானது.

    இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அமலாக்கத் துறையை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மகனின் வீட்டில் சோதனை நிறைவடைந்தது.

    சென்னை:

    உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் பொன்முடிக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.

    சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து 70 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், அமெரிக்க டாலர் உள்பட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து 13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை அவரது வீட்டில் இருந்து அவரது காரில் அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் அசோக் இருவரும் அழைத்து செல்லப்பட்டு, அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அமைச்சர் பொன்முடியிடம் 17 மணி நேரத்தை கடந்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமலாக்கத்துறை விசாரணையில் ரூ.48 கோடி வருவாய் வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ரூ.48 கோடியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ×