என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ooty"
- ஊட்டியில் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து அங்கு தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.
- கோடைமழை பெய்ய தொடங்கி உள்ளதால் அங்குள்ள வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், இது ஒரு குளிர்பிரதேசம் என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக காலை முதல் மாலை வரை அனல் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்ததால் அங்குள்ள அணைகள் மற்றும் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
நீலகிரியில் கோடைக்காலம் தொடங்கும்போது அனல் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு பெய்ய வேண்டிய கோடைமழை தொடங்காததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென காலநிலை மாற்றம் ஏற்பட்டு, வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சடசடவென கோடைமழை பெய்ய தொடங்கியது. இது சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
இதனால் ஊட்டியில் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து அங்கு தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.
இது அங்குள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடைக்காலம் காரணமாக வனப்பகுதிகள் வறண்டு காணப்படுவதால் அங்கு தற்போது அடிக்கடி வனத்தீ பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கோடைமழை பெய்ய தொடங்கி உள்ளதால் அங்குள்ள வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் ஊட்டியில் கோடைமழை காரணமாக அங்கு தற்போது குளிர்ந்த காற்று வீசுவதுடன் இதமான காலநிலையும் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
- சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கின்றனர்.
- கோடை விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிவார்கள்.
ஊட்டி:
மலைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சுற்றுலா வுக்கு பெயர் போன பகுதியாகும். இங்குள்ள சுற்றுலா தலங்களை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு சினிமா படப்பிடிப்புகளும் நடக்கும், ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ஏராளமான சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்ப டும். .சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடை விழா விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தோட்டக்கலை துறையினர் செய்து வருகின்றனர்.
கோடை விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிவார்கள். சுற்றுலா பயணிகள் இடையூறின்றி வந்து செல்லவும், மலர்கள் சேதமாகாமல் இருப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடைவிதிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனையடுத்து இன்று முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெடிகுண்டு தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.
ஊட்டியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல தனியார் பள்ளிகளுக்க இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நேற்று கோவையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஊட்டியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.
- பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.
ஊட்டி:
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் அனல்வெயில் கொளுத்தி வருகிறது.
இதன்காரணமாக மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு சுற்றுலாபயணிகள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு ஆண்டுதோறும் மக்கள் வருகை இருக்கும். இருந்தாலும் கோடை காலத்தில் அங்கு மக்கள் அதிகம் கூடுவர்.
தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடைசீசனை முன்னிட்டு எண்ணற்ற மலர் நாற்றுகள் நடவுசெய்யப்பட்டு அங்கு தற்போது மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவர்கள் பூங்காவின் மலர் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். அங்கு பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.
ஊட்டி படகு குழாம் இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதி வருகிறது. அங்கு அவர்கள் நீண்டவரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டு, ஊட்டி ஏரியில் உள்ள மிதிபடகு, எந்திர படகு ஆகியவற்றின் மூலம் சவாரிசெய்து, ஏரியின் சுற்றுப்புற பகுதிகளில் இடம்பெற்று உள்ள இய ற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
இதுதவிர தொட்டப்பெட்டா காட்சிமுனையம், லேம்ஸ்ராக் காட்சிமுனை, டால்பின்நோஸ் மற்றும் கோத்தகிரி காட்சிமுனையம் ஆகிய சுற்றுலா பிரதேசங்களிலும் திரளான சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் கோடை சீசனை முன்னிட்டு அங்குள்ள மலர் மாடங்களில் அலங்கரித்து வைப்பதற்காக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுற்றுலா வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த வண்ணம் இருப்பதால் அங்குள்ள கக்கநல்லா உள்ளிட்ட முக்கிய சோதனைச்சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவந்த வண்ணம் உள்ளன.
- விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.
- 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.
2024- 25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த திட்டம் முதற்கட்டமாக உதகையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை அமைச்சர்கள் சிவசங்கர், ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி., ஆகியோர் விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தில் இயக்கப்பட்ட 11 அரசுப் பேருந்துகள் 99ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இனி, இத்திட்டத்தின் மூலம் 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.
- கவர்னர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு 18-ந் தேதி சென்னை திரும்புகிறார்.
ஊட்டி:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 4 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்ட த்திற்கு இன்று வருகிறார்.
இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டிக்கு செல்கிறார்.
அங்கு ஊட்டி தாவரவி யல் பூங்கா பகுதியில் உள்ள ராஜ்பவனில் தங்கி ஓய்வெ டுக்கிறார். அதனை தொட ர்ந்து நாளை (16-ந் தேதி) ஊட்டி அடுத்த முத்தநாடு மந்து பகுதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி செல்கிறார்.
அப்போது அங்கு வசி த்து வரும் தோடர் இன மக்களை சந்தித்து, அவர்களுடன் சிறிது நேரம் கலந்து ரையாடுகிறார்.
தொடர்ந்து நாளை மறுநாள் (17-ந் தேதி) ஊட்டியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கவர்னர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை ஊட்டிக்கு வருகை தரும் கவர்னர் ஆர்.என்.ரவி வருகிற 18-ந் தேதி வரை ஊட்டியில் தங்கி இருக்கிறார்.
தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு 18-ந் தேதி சென்னை திரும்புகிறார். அன்று காலை ஊட்டியில் இருந்து கார் மூலமாக புறப்படும் அவர், அங்கிருந்து கோவை விமான நிலையம் வந்து, விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊட்டி ராஜ்பவன், கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 400 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கவர்னர் மாளிகை உள்ள தாவரவியல் பூங்கா பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உறைபனியால் வாகனங்களை இயக்குவதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.
- பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜனவரி மாத தொடக்கத்திலேயே உறைபனியின் தாக்கம் ஆரம்பித்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே உறைபனியின் தாக்கம் உள்ளது. உறைபனியுடன் அவ்வப்போது நீர்ப்பனியும் சேர்ந்து கொட்டி வந்தது.
இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் அதிகளவில் திரண்டு காலை 11 மணி வரை பகல் நேரமே இரவாக காட்சியளிக்கிறது. அதன்பிறகு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
மாலையில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. இப்படி தினந்தோறும் காணப்படும் உறைபனியால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கடுமையான உறைபனி காணப்பட்டது. காந்தல், தலைகுந்தா, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
உறைபனி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரைகள், குதிரை பந்தய சாலையில் உள்ள புல் தரைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள செடிகள், கொடிகள், புல் தரைகள் மீதும் உறைபனி படர்ந்து காணப்பட்டது.
இதனால் அந்த பகுதிகள் முழுவதும் புற்கள் இருந்த தடமே மறைந்து வெள்ளை கம்பளிஆடை போர்த்தியது போன்று வெண்மை நிறத்தில் காட்சியளித்தன. இதுதவிர வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், கார்கள் மீதும் உறைபனி கொட்டியிருந்தது. இதனை வாகன உரிமையாளர்கள் அகற்றினர். உறைபனியால் வாகனங்களை இயக்கு வதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.
காஷ்மீரில் தான் அதிகளவு குளிர் காணப்படும். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊட்டியிலும் தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் ஊட்டி தற்போது மினி காஷ்மீராகவே மாறி காணப்பட்டது. பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.
உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன் கடும் குளிரும் காணப்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் பொதுமக்கள் வீட்டிற்கு ள்ளேயே முடங்கினர். வீட்டிற்குள்ளும் குளிர் வாட்டியதால் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.
பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்ட பணிக்கு செல்வோர் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டு சென்றனர். சில இடங்களில் பொது மக்கள், ஆட்டோ, சுற்றுலா வாகன டிரைவர்கள் குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.
மேலும் மாவட்டத்தின் பல இடங்களில் காலை முதலே பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.
வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கின்றனர். தொடர்ந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், தேயிலை, மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
- உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.
துவக்கத்தில் ஒருமாதம் நீர்ப்பனி விழும். தொடர்ந்து உறைபனி கொட்டும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
இதுபோன்ற நேரங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசுக்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.
ஆனால் இம்முறை உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
பகல் நேரங்களில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. மேலும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், காடுகள் மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் உறைபனி விழத்தொடங்கி உள்ளது.
இன்று ஊட்டியின் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 7.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாக உள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, சூட்டிங்மட்டம், காமராஜ்சாகர் அணைக்கட்டு மற்றும் எச்.பி.எப் ஆகிய பகுதிகளில் நீர்ப்பனி அதிகமாக காணப்பட்டது.
மேலும் பனிப்பொழிவு, குளிரால் அதிகாலை நேரங்களில் தேயிலை-காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். எனவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மாலைநேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.
- கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.
- அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.
துவக்கத்தில் ஒரு மாதம் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து உறைபனி விழும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இதுபோன்ற சமயங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசிற்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.
ஆனால் இந்த முறை உறைபனி அதிகம் விழவில்லை. அதேசமயம் கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.
பகல் நேரங்களில் வேளையிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது.
அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.
நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்பிஎப் போன்ற பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது.
பனிப்பொழிவால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் குளிரால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
நேற்று ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், நீர்நிலை பகுதிகளில் 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி இருந்தது. இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி உள்ளது.
கடுமையான குளிர் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் மாலை நேரங்களிலேயே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
- அனைத்து கடைகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த போலீசார் வேண்டுகோள்
- பழுதாகி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 21-வது வார்டில் போலீசார் சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் மற்றும் சாகுல் மொய்தீன் ஆகியோர் கூட்டத்தில் பேசும்போது, அனைத்து கடைகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் பாதுகாவலுக்கு கூர்க்காக்களை நிய மிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் பேசும்போது எங்கள் பகுதியில் இரவு-பகல் நேரங்களில் மப்டி யில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், சாலையோரங்களில் பழுதாகி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை சரிசெய்ய வேண்டும், ஒரு வழிச்சாலையாக உள்ள மெயின் பஜாரை வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை. மேலும் அங்கு இரு சக்கர வாகனங்கள் அதி கவேகத்தில் இயக்குகின்றனர்.
அதை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
- குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிா்வாகம் செய்து தருவதில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
- இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், பொது மக்களின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததை அடுத்து போ ரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி 1-வது வாா்டுக்கு உள்பட்ட குளிச்சோலை பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதிக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், இப்பகுதியில் குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிா்வாகம் செய்து தருவதில்லை என்றும், அதிகாரிகள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களிடம் கூறினால் அலட்சியமான பதில்களையே அவா்கள் கூறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இப்பகுதிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பணிக்குச் செல்வோா், முதியவா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில் குளிச்சோலை பகுதியில் சாலையை சீரமைத்துத் தர வேண்டும், பஸ் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த புதுமந்து காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கவுன்சிலர் உடனடியாக இங்கு வர வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பஸ்சை விடுவிக்கமாட்டோம் என கிராம மக்கள் கூறினா்.
இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், பொது மக்களின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததை அடுத்து போ ரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
- பந்தலூர் பகுதிகளில் ஒரு சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது.
- சிறுத்ைத வேட்டையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது.
எனவே இங்கு காட்டு யானை, கரடி, காட்டு மாடு, சிறுத்தை, புலி ஆகிய வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் பந்தலூர் இந்திரா நகர், எம்.ஜி.ஆர் நகர், நத்தம், ரிச்மண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது.
அங்கு உள்ள வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்கிறது.
இதற்கிடையே நத்தம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் ஒரு சிறுத்தைப்புலி புகுந்தது.
தொடர்ந்து அங்கு உள்ள ஒரு வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடியது. பின்னர் இறைச்சியை வாயில் கவ்வி கொண்டு சென்றது.
இந்த காட்சிகள் குடியிருப்பில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா மூலம் தெரியவந்தது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்