search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valparai"

    • 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வருகிறார்.
    • மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    வால்பாறை,

    வால்பாறை அருகே முத்துகுட்டி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு டி.பார்ம் படிப்பதற்கு விருப்பம் இருந்து வந்துள்ளது. ஆனால் மாணவிக்கு அவர் விரும்பிய பாட பிரிவு கிடைக்கவில்லை. இதனால் வாழ்கையில் விரக்கி அடைந்த மாணவி வீட்டில் இருந்த மீன் வளர்ப்பு உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மாணவி மயக்கம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
    • போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.

    கோடை விழாவின்போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர மலர் கண்காட்சியும் இடம்பெறுகிறது.

    கலை பண்பாட்டு துறை, பள்ளிகல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டைமேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா?, மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது? அந்த காலமா? இந்த காலமா?, பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் 27-ந் தேதி அன்று பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

    இந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    இந்த தகவலை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

    • இரவு 9 மணிக்கு சேலத்தில் பஸ் புறப்படும்.
    • இரவு 11:00 திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு பஸ் இயங்கும்.

    திருப்பூர் :

    அரசு போக்குவரத்து கழக சார்பில், சேலம் - வால்பாறை இடையே பஸ் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இரவு, 9 மணிக்கு சேலத்தில் புறப்படும் பஸ், நள்ளிரவு திருப்பூர் வந்தடைத்து பின்னர் நள்ளிரவு திருப்பூரில் இருந்து புறப்பட்டு அதிகாலை, 4:20 மணிக்கு வால்பாறை சென்று சேருகிறது.

    தற்போது, இரவு, 11:00 திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு (பொள்ளாச்சி வழி) கடைசி பஸ் இயங்கி வந்த நிலையில், இரவு, 12:15 க்கு பொள்ளாச்சி, வால்பாறைக்கான கடைசி பஸ் இந்த பஸ் இனி இயங்கும். மறுநாள் மதியம், 12:30 மணிக்கு வால்பாறையில் புறப்பட்டு, பொள்ளாச்சி, திருப்பூர் வந்து, இரவு, 7:00 மணிக்கு சேலம் செல்லும். இந்த புதிய பஸ் சேவை மூலம் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சாதிக் செல்போன் கடை நடத்தி வருகிறார்
    • 7 செல்போன்கள் திருட்டு போனது.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் அஹ்மத் சாதிக் (வயது 27). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த 7 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அவர் வால்பாறை போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வால்பாறையை சேர்ந்த 13, 14 வயதுடைய சிறுவர்கள் என்பதும், 2 பேரும் கடையில் செல்போன்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 சிறுவர்களையும் வால்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் 2 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • என்.சி.எப். அமைப்பினர் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
    • பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் மற்றும் வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன.

    இவை புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி சாலைகளில் அதிகளவில் காணப்படுகின்றன. சிங்கவால் குரங்குகள் வாகனங்களில் அடிபடக் கூடாது என்பதற்காக அப்பகுதியில் என்.சி.எப். அமைப்பினர் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் பகல் நேரங்களில் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர். இருப்பினும் அதிகளவில் வாகனங்கள் வரும்போது சாலையை கடக்கும் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்து வருகின்றன.

    வறட்டுப்பாறை எஸ்டேட் சாலையில் வாக னத்தில் அடிபட்டு சிங்கவால் குரங்கு நேற்று உயிரிழந்தது. அழிந்து வரும் இந்த அரியவகை சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • ஜாஸ்மின் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
    • ஜாஸ்மின் குடித்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக பூச்சி கொல்லி மருந்தினை ஊற்றி வைத்துள்ளனர்.

    வால்பாறை

    கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் 3-வது டிவிசனை சேர்ந்தவர் மதுஅருமராஜ்குமார் (வயது68).

    இவர் அங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் துணை மேலாளராக வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.

    இவரது மனைவி ஜாஸ்மின்(வயது67). இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவருக்கு அங்கு ஒரு வீடும் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாஸ்மின் பணி ஒய்வு பெற்றார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த வீட்டினை காலி செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி சம்பவத்தன்று தனது கணவருடன் வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தையும் ஒதுங்க வைத்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் ஏற்படவே அங்கு பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தார்.தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் அவர் வலியால் அலறி துடித்தார். இதை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியானர். உடனடியாக மனைவியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஜாஸ்மின் ஏற்கனவே இறந்து விட்டதா க தெரிவித்தார். இதை கேட்டு அவர் கதறி அழுதார். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், ஜாஸ்மின் குடித்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக பூச்சி கொல்லி மருந்தினை ஊற்றி வைத்து ள்ளனர். அது விஷம் என தெரியாமல் அவர் குடித்தில் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
    • இருள் சூழ்ந்தவேளையில் கரடிகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன.

    வால்பாறை

    வால்பாறை நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். ஆணையர் பாலு, துணைத் தலைவர் செந் தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய அளவில் கழிப்பறை வசதிகள் இல்லை. எனவே நகராட்சி மூலம் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். மேலும், எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இதனால், இருள் சூழ்ந்தவேளையில் அவை குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி மேலாளர் ஜலாலுதீன், பொறியாளர் வெங்கடாசலம் உள்பட வார்டு உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். 

    • தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
    • தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.

    வால்பாறை

    வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவை அவ்வப்போது தேயிலை தோட்டம் மற்றும் ெதாழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    இந்த நிலையில் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் மேல் பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

    பின்னர் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள தண்ணீர் தொட்டியின் அருகே சென்றது. அங்கு தண்ணீர் குடிக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக காட்டெருமை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.

    இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் பேரில் வால்பாறை வனசரகர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டெருமையை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து அந்த தொட்டியின் பக்கவாட்டு சுவரை உடைத்து காட்டெருமையை மீட்கும் பணி நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 8 மணியளவில் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அதனை வனத்தில் விட்டனர்.

    • அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு அளித்தார்.
    • 7 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளது.

    கோவை

    வால்பாறை ெதாகுதி அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. கலெக்டர் சமீரனிடம் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    வால்பாறை மக்கள் பயன்பெறும் வகையில் முடீஸ் பகுதியில் தொழில் பயிற்சி நிறுவனம் ஒன்றை அமைக்க வேண்டும். தேயிலைதோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 425 ரூபாய் 40 பைசா என நிர்ணயம் செய்து கடந்த ஆண்டு தமிழக அரசால் வரைவு ஆணை வெளியிடப்பட்டது.

    இறுதி ஆணை வெளியிடாததால் 40 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இறுதி அரசாணை வெளியிட வேண்டும். வனவிலங்கு மோதல் அதிகமாக இருப்பதால் வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி பாதுகாப்பு வேலி மற்றும் அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வால்பாறை பகுதி சிறந்த சுற்றுலா தலமாக மாறி வருகிறது. அதனை மேம்படுத்த முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட படகு இல்லம், பூங்கா ஆகியவற்றை உடனடியாக திறக்க வேண்டும்.வால்பாறை நகரத்திற்கு பொள்ளாச்சியில் இருந்து மாற்றுப்பாதையும் வால்பாறை மலைப்பகுதிக்கு கீழ் பகுதியில் இருந்து ரோப்கார் அல்லது வின்ச் வசதி செய்து தர வேண்டும்.

    ஆனைமலையில் தீயணைப்பு நிலையம், கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினை கம்பாலப்பட்டி கூட்டுகுடிநீர் குழாய்கள் மிகவும் பழுதாகி, ஒரு பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக சீரமைத்து திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காளியப்ப கவுண்டன்புதூர் கிரா மத்தில் தரைப்பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக மாற்ற வேண்டும். சர்க்கார்பதி, பவர்ஹவுஸ் இடத்தில் மலைவாழ் மக்கள் வசதித்து வருகிறார்கள். அங்கு சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    பி.ஏ.பி. பாசன திட்டத்தில் வேட்டைக்கா ரன்புதூர் பகுதியில் உள்ள 7 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளது. இந்த நிலங்களை ஆயக்கட்டில் சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 ஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர்.
    • சேவை பிரச்சினை காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க முடிய வில்லை.

    கோவை

    கோவை மாவட்டம் வால்பாறை நகரம் மற்றும் தேயிலை தோட்டங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு செய்யவும், பயணத்தை கைவிடும் போது டிக்கெட்டை ரத்து செய்யவும் வால்பாறையில் இருந்து 3 மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்து பொள்ளாச்சிக்கும், உடுமலைக்கு செல்ல வேண்டியது உள்ளது.

    ரெயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன்பு பயணிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விடும். காத்திருக்கும் பட்டியலில் உள்ளவர்கள் ரெயில் புறப்படும் அரை மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் மட்டுமே படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டில் ரூ.35, குளிர்சாதன வசதி கொண்ட டிக்கெட்டில் ரூ.60 பிடித்தம் செய்து கொண்டு, மீதி தொகை பயணிகளுக்கு கிடைக்கும்.

    ஆனால் வால்பாறையில் முன்பதிவு மையம் வசதி இல்லாததால் காலதாமதமாக வந்து டிக்கெட்டை ரத்து செய்தால் முழு தொகையும் இழக்க நேரிடும். இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இதனையடுத்து வால்பாறையில் ரெயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர். இந்தநிலையில் வால்பாறையில் தெற்கு ரெயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் ெதாடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இணையதள சேவை குறைபாட்டால் முன்பதிவு தொடங்கப்படாமல் இருந்தது.

    இதனையடுத்து வால்பாறை தபால் நிலையத்தில் பாலக்காடு ரெயில்வே கோட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அங்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கப்பட்டது.

    இது குறித்து வால்பாறை தபால் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    இணையதள சேவை பிரச்சினை காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க முடிய வில்லை. தற்போது பிரச்சி னை சரிசெய்ய ப்பட்டதால் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது. வேலை நாட்களில் பொதுமக்கள் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி ரெயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.    

    • அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர்.
    • பள்ளியை சுற்றியுள்ள புதற் செடிகளை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வால்பாறை:

    வால்பாறை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் கரடிகள் நடமாட்டத்தை பார்த்த பகுதி மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.

    வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகள் நட மாட்டம் அதிகரித் துள்ளதாக பொது மக்கள் கூறுகின்றனர். யானை, சிறுத்தை நட மாட்டம் மட்டுமே காணப்பட்டு வந்த நிலையில் தற ்போது எஸ்டேட் பகுதிகளில் கரடிகள் நட மாட்டம் காணப் படுவதாக கூறுகி றார்கள்.

    இந்நிலையில் வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளாகத்தில் 3 குட்டிகளுடன் 2 கரடிகள் நடமாடியதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

    இதை அடுத்து அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளியை சுற்றியுள்ள புதற் செடிகளை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் வனத்துறை அதிகாரிகளிடம் பேசி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் அங்கு வேட்டை தடுப்பு காவலர்களைக் கொண்டு கரடி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    • மாவட்டத்தில் அதிகபட்சமாக வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
    • கோவை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    கோவை

    கோவை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் பலத்த மழை கொட்டி தீர்த்து. இதனால் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    வால்பாறை பி.ஏ.பி-73, வால்பாறை தாலுகா-69, வேளாண் பல்கலைக்கழகம்-59, சின்னக்கல்லார்-55, சோலையார்-53, சின்கோனா-50, கோவை தெற்கு-42, மேட்டுப்பாளையம்-33. 

    ×