என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valparai"

    • சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது.
    • சுற்றுலா வாகனங்களில் வருவோர் இ-பாஸ் அனுமதியுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய மலைப்பிரதேசங்களில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இதன்படி ஊட்டி, கொடைக்கானலை சேர்ந்தவர்களை தவிர்த்து வெளியூர், பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா வாகனங்களில் வருவோர் இ-பாஸ் அனுமதியுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றான மலைப்பிரதேசமான வால்பாறையிலும் இ-பாஸ் நடைமுறையை நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.

    சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்பதை ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி மற்றும் சோலையாறு அணை இடதுகரை மழுக்குப்பாறை வழி சோதனைச்சாவடியிலும் கண்காணிக்கப்படுகிறது. இந்த கண்காணிப்பு பணியில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    வால்பாறை வருவதற்கு இ-பாஸ் பெற https://www.tnepass.tn.gov.in/home என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அத்துடன் இ-பாஸ் பதிவு செய்யாமல் வால்பாறைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி சோதனைச்சாவடிகளில் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் வால்பாறை தாலுகாவில் உள்ள முகவரிகளை கொண்ட அனைத்து வாகனங்கள் அதே இணையதளத்திற்கு சென்று உள்ளூர் பாஸ் ஒரு முறை மட்டும் பதிவு செய்து பெற்றுகொண்டால் போதுமானதாகும். அரசு பஸ்களில் வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை. எனவே, வால்பாறை தவிர்த்து வெளியூர் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுதான் வர வேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    • வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம்
    • போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை

    ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. உயர்நீதிமன்ற ஆணைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து உள்ள வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், www.tnepass.tngov.in என்ற இணையதளத்தில் வால்பாறைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் சோதனை சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் இதனை கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வால்பாறைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

    • நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீடு திரும்பாததால் பெற்றோர் தேட தொடங்கினர்.
    • தகவல் அறிந்து வால்பாறை வனத்துறையினர், காடம்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் பகுதி உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த சொர்பத் அலி மற்றும் அவருடைய மனைவி ரோகமாலா ஆகியோர் தங்கியிருந்து தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களது மகன் நூர்சல் ஹக்(வயது 8). இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6.45 மணியளவில் நூர்சல் ஹக் தனது வீட்டின் அருகில் உள்ள மற்றொருவரின் வீட்டுக்கு பால் வாங்க சென்றான். அங்கு பால் வாங்கிவிட்டு திரும்பி வந்தான்.

    வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தபோது, திடீரென அங்கு வந்த கரடி ஒன்று, அவனை தாக்கி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் இழுத்து சென்றது. அங்கு அவனை கடித்துக்கொன்றுவிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

    இதற்கிடையில் நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீடு திரும்பாததால் பெற்றோர் தேட தொடங்கினர். அப்போது அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தின் அருகில் பாலும், ரத்தமும் சிதறி கிடந்தது.

    உடனே தோட்டத்துக்குள் சென்று பார்த்தபோது உடலில் பலத்த காயங்களுடன் நூர்சல் ஹக் பிணமாக கிடந்தான். இதை கண்டு அவர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்து வால்பாறை வனத்துறையினர், காடம்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே வால்பாறை பகுதியில் குழந்தைகளை சிறுத்தைகள் தாக்கிய சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கரடி ஒன்று சிறுவனை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
    • அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.

    வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.

    60 வயதான அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

    கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.

    இந்நிலையில், அமுல் கந்தசாமி மறைவைத் தொடர்ந்து வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

    • வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.
    • அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர்

    இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான T.K. அமுல்கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர்

    அமுல் கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.

    அன்புச் சகோதரர் அமுல்கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றிருந்தார்.
    • 60 வயதான அமுல் கந்தசாமி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

    60 வயதான அமுல் கந்தசாமி உடல்நல குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகலில் அவர் உயிரிழந்தார்.

    2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளரை 13,171 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமுல் கந்தசாமி வெற்றி பெற்றிருந்தார்.

    • ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.
    • தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்.

    கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட்டில் தாயின் கண்முன்னே 4 வயது சிறுமி ரோஷினியை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பச்சமலை எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.

    வீட்டின் அருகே சிறுமி ரோஷினிகுமாரி விளையாடி கொண்டிருந்தபோது சிறுத்தை பாய்ந்து கவ்விச் சென்றுள்ளது.

    இதை நேரில் கண்ட தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்.

    • நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
    • கோவை மாவட்டத்திற்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

    நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

    • மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அங்கு நின்ற யானையை சத்தம் எழுப்பி வனத்திற்குள் விரட்டினர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் டேம் அருகே இடதுகரை குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதி வனத்தையொட்டி உள்ளது.

    இதனால் அவ்வப்போது வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய யானை இடதுகரை குடியிருப்புக்குள் புகுந்தது.

    குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த யானை, அங்குள்ள ஜோசப் என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த மேரி (வயது77) என்பவர் எழுந்தார். யானை நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர், அங்கிருந்து ஓட முயன்றார்.

    ஆனால் அதற்குள்ளாகவே யானை அவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவருடன் தங்கியிருந்த தெய்வானை(75) என்பவர் பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அங்கு நின்ற யானையை சத்தம் எழுப்பி வனத்திற்குள் விரட்டினர்.

    இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த மானாம்பள்ளி வனசரகர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

    பின்னர் இறந்த மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயமடைந்த மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறது.

    • அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
    • விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வால்பாறை:

    திருப்பூரில் இருந்து இன்று அதிகாலை 12.30 மணி அளவில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் கணேஷ் ஓட்டினார். சிவராஜ் கண்டக்டராக இருந்தார்.

    திருப்பூர்-வால்பாறை பஸ்சில் 72 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பஸ் வால்பாறை அடுத்த கவர்கள் எஸ்டேட் பகுதியின் 33-வது கொண்டை ஊசி வளைவுக்கு வந்தது. அப்போது வாகனம் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    இது குறித்து தகவலறிந்த வால்பாறை போலீசார், 108 ஆம்புலன்சுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த பஸ்சில் இருந்த பயணிகளை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் கை, கால் மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு பொள்ளாச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வால்பாறையில் இன்று அதிகாலை ஒரு அரசு பஸ் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜாஸ்மின் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
    • ஜாஸ்மின் குடித்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக பூச்சி கொல்லி மருந்தினை ஊற்றி வைத்துள்ளனர்.

    வால்பாறை

    கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் 3-வது டிவிசனை சேர்ந்தவர் மதுஅருமராஜ்குமார் (வயது68).

    இவர் அங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் துணை மேலாளராக வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.

    இவரது மனைவி ஜாஸ்மின்(வயது67). இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவருக்கு அங்கு ஒரு வீடும் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாஸ்மின் பணி ஒய்வு பெற்றார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த வீட்டினை காலி செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி சம்பவத்தன்று தனது கணவருடன் வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தையும் ஒதுங்க வைத்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் ஏற்படவே அங்கு பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தார்.தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் அவர் வலியால் அலறி துடித்தார். இதை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியானர். உடனடியாக மனைவியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஜாஸ்மின் ஏற்கனவே இறந்து விட்டதா க தெரிவித்தார். இதை கேட்டு அவர் கதறி அழுதார். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், ஜாஸ்மின் குடித்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக பூச்சி கொல்லி மருந்தினை ஊற்றி வைத்து ள்ளனர். அது விஷம் என தெரியாமல் அவர் குடித்தில் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என்.சி.எப். அமைப்பினர் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
    • பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் மற்றும் வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன.

    இவை புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி சாலைகளில் அதிகளவில் காணப்படுகின்றன. சிங்கவால் குரங்குகள் வாகனங்களில் அடிபடக் கூடாது என்பதற்காக அப்பகுதியில் என்.சி.எப். அமைப்பினர் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் பகல் நேரங்களில் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர். இருப்பினும் அதிகளவில் வாகனங்கள் வரும்போது சாலையை கடக்கும் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்து வருகின்றன.

    வறட்டுப்பாறை எஸ்டேட் சாலையில் வாக னத்தில் அடிபட்டு சிங்கவால் குரங்கு நேற்று உயிரிழந்தது. அழிந்து வரும் இந்த அரியவகை சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    ×