search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வால்பாறை"

    • பொதுமக்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
    • வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் ஆறுகளில் தண்ணீர் வறண்டு தண்ணீர் இன்றி காணப்படுகிறது.

    வனப்பகுதியில் தண்ணீர் இன்றி மரங்கள் அனைத்தும் காய்ந்து இருக்கிறது. இந்நிலையில் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் அக்காமலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள வனத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்புத் துறையினர் சம்பவ இடததிற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில், 7 ஏக்கர் மதிப்புள்ள செடி, தேயிலை, மரங்கள் போன்றவை எரிந்து சாம்பலாகியது,

    வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வனப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வேண்டாம் என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதி வழியாக எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் வனத்துறை ஆலோசனை
    • சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால் அதிகாரிகள் நடவடிக்கை

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறைக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து மாதந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வால்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறை சார்பில் சமீபத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததாக வால்பாறையில் உள்ள ஓட்டுநர் சங்கத்தினர் தெரிவித்தனர். வால்பாறையில் சுற்றுலாவை நம்பி இருக்கும் அனைவருடைய வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும் என்றும், கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து வால்பாறை எம்.எல்.ஏ. கந்தசாமி தலைமையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் பார்கவ் தேஜா முன்னிலையில், வால்பாறையில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

    இதுகுறித்து, வனத்துறையினர் கூறும்போது, தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. 6 மணிக்கு மேல் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க சாலை ஓரங்களில் நடந்து செல்கின்றன. இந்த நேரத்தில் சுற்றுலா பயணிகள் வனத்துக்குள் வரும் போது மனித வனவிலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனவிலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாது. இதனால் 6 மணிக்கு மேல் வால்பாறை செல்வதை பயணிகள் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த தடை நேரத்தை தளர்த்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து பரிசீலனை செய்யப்படும் என்றனர்.

    • சுற்றுலா போர்வையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயல்களால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • வால்பாறை சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. நடுவில் வால்பாறை நகராட்சி 217 ச.கிமீட்டர் பரப்பளவில் உள்ளது. வால்பாறை நகரம் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

    வால்பாறையில் நிலவும் சிதோஷ்ண நிலை மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள்தோறும் பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே மாலை 6 மணிக்கு பிறகு சமவெளி பகுதிகளில் இருந்து பலரும் வால்பாறைக்கு சுற்றுலா வருகின்றனர். அப்படி வருபவர்களில் பலரும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், வனவிலங்கு தாக்குதலுக்கு ஆளாவதாகவும் தகவல் வந்தது.

    இதையடுத்து சமூக விரோத செயல்களை தடுக்கவும், வனவிலங்கு தாக்குதலுக்கு ஆளாகாமல் தடுக்கவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப் படுகிறார்கள்.

    மாலை 6 மணிக்கு மேல் வருபவர்களிடம் அறை புக் செய்துள்ளீர்களா? என்ன காரணத்திற்காக வருகிறீர்கள்? எனவும் விசாரிக்கின்றனர். மேலும் அவர்கள் வைத்திருக்கும் உடைமைகளையும் சோதனை செய்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-வால்பாறைக்கு இரவு நேரங்களில் சட்டவிரோத சுற்றுலா, சாலையோரம் மது அருந்துவது, நள்ளிரவில் போதைப்பொருள் கடத்துவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. நேற்று கூட சுற்றுலா பயணிகள் 2 பேரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இவற்றை நெறிப்படுத்த வேண்டும். சுற்றுலாவை முன்வைத்து நடைபெறும் சட்டவிரோத செயல்களுக்கு இடம் அளிக்க கூடாது என்று கருதுகிறோம். இதனால் சோதனை சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.

    இதன் காரணமாக மாலை 6 மணிக்கு பிறகு வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க ப்படுகிறார்கள். உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறினால், அவர்கள் போனில் விசாரித்த பின்பே உள்ளே அனுமதித்து வருகிறோம். மற்றபடி வாகனங்கள் 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×