என் மலர்
நீங்கள் தேடியது "வால்பாறை"
- சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது.
- சுற்றுலா வாகனங்களில் வருவோர் இ-பாஸ் அனுமதியுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய மலைப்பிரதேசங்களில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது.
இதன்படி ஊட்டி, கொடைக்கானலை சேர்ந்தவர்களை தவிர்த்து வெளியூர், பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா வாகனங்களில் வருவோர் இ-பாஸ் அனுமதியுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றான மலைப்பிரதேசமான வால்பாறையிலும் இ-பாஸ் நடைமுறையை நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.
சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்பதை ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி மற்றும் சோலையாறு அணை இடதுகரை மழுக்குப்பாறை வழி சோதனைச்சாவடியிலும் கண்காணிக்கப்படுகிறது. இந்த கண்காணிப்பு பணியில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறை வருவதற்கு இ-பாஸ் பெற https://www.tnepass.tn.gov.in/home என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அத்துடன் இ-பாஸ் பதிவு செய்யாமல் வால்பாறைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி சோதனைச்சாவடிகளில் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் வால்பாறை தாலுகாவில் உள்ள முகவரிகளை கொண்ட அனைத்து வாகனங்கள் அதே இணையதளத்திற்கு சென்று உள்ளூர் பாஸ் ஒரு முறை மட்டும் பதிவு செய்து பெற்றுகொண்டால் போதுமானதாகும். அரசு பஸ்களில் வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை. எனவே, வால்பாறை தவிர்த்து வெளியூர் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுதான் வர வேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
- வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம்
- போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை
ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. உயர்நீதிமன்ற ஆணைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து உள்ள வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், www.tnepass.tngov.in என்ற இணையதளத்தில் வால்பாறைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் சோதனை சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் இதனை கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வால்பாறைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
- நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீடு திரும்பாததால் பெற்றோர் தேட தொடங்கினர்.
- தகவல் அறிந்து வால்பாறை வனத்துறையினர், காடம்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் பகுதி உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த சொர்பத் அலி மற்றும் அவருடைய மனைவி ரோகமாலா ஆகியோர் தங்கியிருந்து தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களது மகன் நூர்சல் ஹக்(வயது 8). இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று மாலை 6.45 மணியளவில் நூர்சல் ஹக் தனது வீட்டின் அருகில் உள்ள மற்றொருவரின் வீட்டுக்கு பால் வாங்க சென்றான். அங்கு பால் வாங்கிவிட்டு திரும்பி வந்தான்.
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தபோது, திடீரென அங்கு வந்த கரடி ஒன்று, அவனை தாக்கி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் இழுத்து சென்றது. அங்கு அவனை கடித்துக்கொன்றுவிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.
இதற்கிடையில் நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீடு திரும்பாததால் பெற்றோர் தேட தொடங்கினர். அப்போது அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தின் அருகில் பாலும், ரத்தமும் சிதறி கிடந்தது.
உடனே தோட்டத்துக்குள் சென்று பார்த்தபோது உடலில் பலத்த காயங்களுடன் நூர்சல் ஹக் பிணமாக கிடந்தான். இதை கண்டு அவர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்து வால்பாறை வனத்துறையினர், காடம்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே வால்பாறை பகுதியில் குழந்தைகளை சிறுத்தைகள் தாக்கிய சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கரடி ஒன்று சிறுவனை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- பல்வேறு இடங்களில் யானைகள் கூட்டம் தனித்தனியாக முகாமிட்டு சுற்றி திரிகின்றன.
- சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக கருமலை, சிறுகுன்றா, வெள்ளமலை, புதுத்தோட்டம், தாய்முடி, நடுமலை அம்மையப்பன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளன.
மேலும் வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டின் பல்வேறு இடங்களில் யானைகள் கூட்டம் தனித்தனியாக முகாமிட்டு சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு சென்றது.
அப்போது 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே குட்டியுடன் நின்ற 3 யானைகள் சாலையை வழிமறித்து நின்றன. இதனை பார்த்த அரசு பஸ் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். பயணிகளும் பீதி அடைந்தனர்.
அரசு பஸ் டிரைவர் உடனடியாக வாகனத்தை பின்னோக்கி இயக்கினார். தொடர்ந்து பஸ்சின் பின்னால் வந்த வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் சிறிது நேரம் சுற்றி திரிந்த யானைகள் பின்னர் சாலையோரம் ஒதுங்கி சென்றன. அதன்பிறகு அந்த பகுதியில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பருவமழைக்கு பிறகு மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரோட்டில் இரவு நேரத்தில் செல்வோர் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். மேலும் யானைகள் எதிரில் தென்பட்டால், சிறிது நேரம் அமைதியாக இருந்தாலே அவை விலகி சென்று விடும். ஹாரன் ஒலித்து யானைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
- அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.
60 வயதான அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.
இந்நிலையில், அமுல் கந்தசாமி மறைவைத் தொடர்ந்து வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
- மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான்.
- அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம்.
வால்பாறையில் சில தினங்களுக்கு முன்னதாக சிறுமி ஒருவரை சிறுத்தை, தூக்கிக் கொண்டு சென்று தாக்கியது. பின்னர் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ராஜ கண்ணப்பன் "மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான். அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம்" எனப் பதில் அளித்துள்ளார்.
மிருகங்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மோதுமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்பதற்குப் பதிலாக மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான் என பதில் அளித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
- வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் வருத்தமடைந்தேன்.
- அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் வருத்தமடைந்தேன். மறைந்த செய்தியறிந்து மிகவும்
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.
- அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர்
இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான T.K. அமுல்கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர்
அமுல் கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.
அன்புச் சகோதரர் அமுல்கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றிருந்தார்.
- 60 வயதான அமுல் கந்தசாமி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
60 வயதான அமுல் கந்தசாமி உடல்நல குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகலில் அவர் உயிரிழந்தார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளரை 13,171 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமுல் கந்தசாமி வெற்றி பெற்றிருந்தார்.
- ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.
- தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட்டில் தாயின் கண்முன்னே 4 வயது சிறுமி ரோஷினியை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பச்சமலை எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.
வீட்டின் அருகே சிறுமி ரோஷினிகுமாரி விளையாடி கொண்டிருந்தபோது சிறுத்தை பாய்ந்து கவ்விச் சென்றுள்ளது.
இதை நேரில் கண்ட தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்.
- நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
- கோவை மாவட்டத்திற்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
- கனமழையால் சக்தி, தலனார், எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்களின் மீது மரங்கள் விழுந்தது.
- தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து தங்கள் பகுதிக்கு சென்றனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 6 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியான வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
நேற்றும் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சின்னக்கல்லார், பெரிய கல்லார், ஈடியார், பண்ணிமேடு, சோலையார் அணை, சேக்கல்முடி, தலனார், கவர்கள், வாட்டர் பால்ஸ், அட்டகட்டி, சக்தி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்தது.
கனமழையால் சக்தி, தலனார், எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்களின் மீது மரங்கள் விழுந்தது. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதிகள் இருளில் மூழ்கின.
வால்பாறையில் உள்ள நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணலி எஸ்டேட் பகுதியில் உள்ள தரைப்பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து தங்கள் பகுதிக்கு சென்றனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 12 செ.மீ, வால்பாறை பி.ஏ.பியில் 11 செ.மீ, வால்பாறை தாலுகாவில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்னக்கல்லார்-126, வால்பாறை பி.ஏ.பி-114, வால்பாறை தாலுகா-106, சின்கோனா-103, சோலையார்-95, சிறுவாணி அடிவாரம்-46, பொள்ளாச்சி தாலுகா-31, மாக்கினாம்பட்டி-37.
மழையால் சோலையார், ஆழியார் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சோலையார் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 936 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது.






