search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Local Holiday"

    • மஹாசிவராத்திரியினை முன்னிட்டு மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
    • மார்ச் 08 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் 23 அன்று வேலை நாளாக அறிவிப்பு

    மஹாசிவராத்திரியினை முன்னிட்டு மார்ச் 8 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    மார்ச் 08 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் 23 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துளளார். 

    • இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் 20ம் தேதி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் 20ம் தேதி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. அப்போது சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    இந்நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் வரும் 20-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • அடுத்த மாதம் 9-ந் தேதி சனிக்கிழமை, பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
    • அரசு அலுவலகங்களுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் கோவிந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சியில், 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், புதிய ரோடுகள் அமைத்தல், வடிகால், சிறுபாலம், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல் உள்பட பணிகள் நடந்து வருகிறது. நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஏதாவது, ஒரு திட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு பணி என்ற வகையில் நடந்து வருகிறது. இதனால், நகர் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கும், அவதிக்கும் ஆளாகி வருகின்றனர். போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு நிலவுகிறது. எனவே ஒப்பந்ததாரர்கள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொரடாவும் 44 வது வார்டு கவுன்சிலருமான கண்ணப்பன் பேசியதாவது:-

    மாநகராட்சியின் மையப்பகுதியாக, மத்திய பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்கிய வார்டாக உள்ளது 44 வது வார்டு. ஆனால் அதிமுக கவுன்சிலர் வார்டு என்பதால் இந்த வார்டில் எந்த பணிகளும் நடைபெறாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களின் வார்டுகளில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக ஐம்பதாவது வார்டில் 39 பணிகளும், 51 வது வார்டில் 41 பணிகளும், 56 வது வார்டில் 44 பணிகளும், 33 வது வார்டில் 19 பணிகளும் நடைபெற்று உள்ளது. ஆனால் அதிமுக கவுன்சிலர் வார்டான எனது வார்டில் இதுவரை வெறும் 4 பணிகள் மட்டும் நடந்துள்ளது. காரணம் கேட்டால் 44 வது வார்டில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணிகள் முடிந்தவுடன் மற்ற பணிகள் நடக்கவிருப்பதாக கூறுகின்றனர். ஆனால் பக்கத்து வார்டான 51 வார்டிலும் 24 மணி நேர குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அங்கு 41 பணிகள் நடந்துள்ளது. மேலும் 44 வது வார்டில் 24 மணி நேர குடிநீர் திட்டம் பாதி தெருகளுக்கு தான் வந்துள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனரிடம் 300 கடிதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் அதிமுக கவுன்சிலர் கூறும் குற்றச்சாட்டை கண்டு கொள்வதில்லை. இந்நிலை நீடித்தால் வார்டு மக்களை திரட்டி மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் தினேஷ்குமார் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் எந்த பாகுபாடு காட்டாமல் பணிகள் நடைபெறுவதாக கூறினார்.

    • குடியாத்தம் சிரசு திருவிழாவை முன்னிட்டு நடவடிக்கை
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ் வாய்ந்த ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வல திருவிழா 15-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துக்கொள்ள வசதியாக, சிரசு ஊர்வல திருவிழா நடைபெறும் நாளான வருகிற 15-ந் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    அதற்கு பதிலாக (24.06.2023) சனிக்கிழமை அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், (25.06.2023) ஞாயிற்றுக்கிழமை அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

    உள்ளூர் விடுமுறை அன்று கருவூலங்களிலும், சார்நிலை கருவூலங்க ளிலும் அரசு பாது காப்புக்கான அவசர அலுவலக பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்தார்.
    • 21.1.2023 அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருஉத்திர கோசமங்கை கிராமத்தில் உள்ள மங்கள நாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக இருக்கும். அதனை ஈடு செய்யும் பொருட்டு 21.1.2023 அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களும் 21.1.2023 அன்று வழக்கம்போல் இயங்கும். மேலும் 6.1.2023 வெள்ளிக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்தி லுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 8-ந் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • 17 ந் தேதி அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும்.

    திருப்பூர் :

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் வருகிற 8-ந்தேதி( வியாழக்கிழமை ) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 8-ந்தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக வரும் செப்டம்பா் 17 ந் தேதி அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும். திருப்பூா் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள், அரசு அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 28.07.2022 அன்று உள்ளூர் விடுமுறை.
    • சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 27.08.2022 அன்று பணி நாள்.

    44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு செயலாளர் டி.ஜகந்நாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

    மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு 28.07.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 28.07.2022 அன்று ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு அரசு முதன்மை செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேற்காணும் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

    மேலும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 27.08.2022 அன்று (நான்காவது சனிக்கிழமை) சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.

    மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாட்டினை செய்யுமாறு மேற்கண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை அன்று விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
    • அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது

    அரியலூர்:

    மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை அன்று அரசு விழாவாக கொண்டாடப்படுவதால், அரியலூர் மாவட்டத்துக்கு ஜூலை 26 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ரமணசரஸ்வதி தெரிவி–த்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை உலக பிரதான பாரம்பரிய சின்னமாக யுனோஸ்கோ அறிவித்து, அதனை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆலயத்தை கட்டிய மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை அன்று விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிகழாண்டு இவ்விழாவை தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்த தமிழக அரசு அரசாரணை வெளியிட்டது.

    அதன்படி வரும் 26 ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் ராசேந்திரன் சோழன் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதால்,

    அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இருப்பினும் இந்த உள்ளுர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தேர்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கனவேஅரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடை பெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 06.08.2022 (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாளாக ஆணையிடப்பட்டுள்ளது.

    விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆனித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
    • தேரோட்டத்தை ஒட்டி நாளை மறுநாள் நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் ஆனி தேரோட்டம் நடைபெறவில்லை.

    தேரோட்டம்

    இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வருவார்கள்.

    வடம் பொருத்தும் பணி

    தேரோட்டத்தை காணவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத வீதிக்கு வருகை புரிவார்கள்.

    தேரோட்டத்திற்கு தேரை தயார்படுத்தும் பணி தொடங்கி தேர்களை சுத்தம் செய்தல், குதிரை பொம்மைகளை பொருத்துதல், கம்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முடிவடைந்து விட்டது. இன்று தேருக்கு வடம் கயிறு கட்டும் பணி நடைபெற்றது.

    வீதி உலா

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    7-ம் நாள் திருவிழாவான இன்று காலை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆகியோர் பல்லக்கு சப்பரத்தில் தவழ்ந்த கோலத்தில் 4 ரத வீதிகளிலும் உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகள் தீவிரம்

    தேரோட்டத்தை ஒட்டி நாளை மறுநாள் நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் தேரோட்டத்தை காண வருவார்கள் என்பதால் நான்கு ரத வீதிகளிலும் கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    • பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.
    • உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 23-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி–யிட்–டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்–ளது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால், பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

    இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும், மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 23-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9-ந்தேதி நடைபெறுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி செலவாணி முறிவு சட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேற்படி நாளில் கோவிலில் நடைபெறும் அனைத்து வித நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் கலந்து கொள்ள தடை உள்ள காரணத்தால் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

    எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து சூரசம்ஹார நிகழ்ச்சிகளை கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை கோவில் திருவிழாவையொட்டி வருகிற 8-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்த்திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 27-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 28-ந்தேதி பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும்

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    ×