என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karaikal"

    • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மேலும் புதுச்சேரியில் நாளை அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட், காரைக்காலில் நாளை கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

    • காரைக்கால் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது.
    • மழை சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு.

    பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காரைக்காலில் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக காரைக்கால் நகராட்சி ஆணையர் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் நகராட்சி இந்த ஆண்டு தொடங்க உள்ள வடகிழக்குப்பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக காரைக்கால் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது.

    ஆகவே பொதுமக்கள் 04368 222427 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தங்களின் பகுதிகளில் உள்ள மழை சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்து போராடி வருகின்றனர்.
    • இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

    புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி அழுத படியே பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலானது. அதில் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்வதாகவும், நிர்வாண புகைப் படங்களை அனுப்பாவிட்டால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இதேபோல் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழத்திலும், பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக்கால் துறைத் தலைவர் மீதும், மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுஉள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ரஜினிஸீகுப்தானி மற்றும் நிர்வாக அதிகாரிகளை சிறைபிடித்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    மாலையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் இரவிலும் நீடித்தது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

    போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தி மாணவ பிரதிநிதிகள் 18 பேரை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    இதனால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மாணவர்களை போலீசார் வலுகட்டாயமாக அடித்து இழுத்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து வேனை மறித்து மற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போலீசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் இன்றும் தொடர்கின்றனர்.   

    • பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை கோலாகாலமாக தொடங்கியது.
    • மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 8-ந்தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

    மாங்கனித்திருவிழாவின் 2-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், நாஜிம் எம்.எல்.ஏ., புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யா, தி.மு.க. விவசாய பிரிவு அமைப்பாளர் பிரபு என்கிற பிரித்திவிராஜ், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை கோலாகாலமாக தொடங்கியது. காலை 9 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவில் எதிரில், பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார். அது சமயம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொறுத்து வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வீசி எறிந்தனர்.

    அந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்து சென்றனர். தொடர்ந்து, பவளக்கால் சப்பரம் காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி வழியாக சென்று மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை சென்றடைவார்.

    விழாவில் வீதியெங்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி, பட்டு வஸ்திரங்களோடு பிச்சாண்டவருக்கு படைத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • உள்ளூர் விடுமுறை வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
    • வருகிற 14, 21-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருநள்ளாறு:

    காரைக்காலில் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் மற்றும் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழகப்பகுதியான நாகப்பட்டினம், தஞ்சாவூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் உள்ளூர் விடுமுறை வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    அதனை ஏற்று இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகிற 14, 21-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவை புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் ஹிரண் பிறப்பித்துள்ளார்.

    • சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
    • ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விடிய விடிய சிபிஐ விசாரணை நடத்தியது.

    புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    சிபிஐ நடத்திய விசாரணையில் ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    அரசு தங்கும் விடுதியில் விடிய விடிய தொடர்ந்து 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று தொடர்ந் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
    • மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல்

    காரைக்கால்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு.

    தமிழகத்தில் நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தொடர் கனமழை எதிரொலி மற்றும் நாளை கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

    • கார்னிவெல் விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
    • இதன் நிறைவு நாளான நேற்று மாலை நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் காரைக்காலில் கார்னிவெல் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். முதல் -அமைச்சர் ரங்கசாமி நடிகை ஆண்ட்ரியாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.


    இசை நிகழ்ச்சியில் "ஊம்... சொல்றியா...ஊகூம் சொல்றியா.. மற்றும் நடிகர் விஜய்யின் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி உட்பட ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

    இசை நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட ஆண்ட்ரியாவின் காரை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவருடன் செல்பி எடுக்கவும் முயன்றனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் ஆண்ட்ரியா சிக்கி திணறினார். உடனே போலீசார் அவரை சிரமத்திற்கிடைய பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காரை துரத்தி சென்றனர். ஆண்ட்ரியா கார் பறந்து சென்றது.


    விழா முடிந்து இரவு 9 மணிக்கு கூட்டம் கலைந்தது. ஒரே நேரத்தில் அனைவரும் முண்டியடித்து சென்றதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அப்போது மக்கள் ரெயில்வே கேட்டை கடக்கும் போது சென்னை ரெயில் வந்தது. இதனால் ரெயில்வே கிராசிங்கில் கேட் இறக்கப்பட்டது. இதில் தண்டவாளத்தின் நடுவே பலரும் சிக்கினார்கள். இதனால் மீண்டும் கேட் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து வேகமாக வெளியேறினர். இதன் காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

    • காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள இந்தியா வந்தார்

    புகழ்பெற்ற மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் நாளை(பிப்.20) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள இந்தியா வந்தார். இந்தியாவில், திருச்சி, நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றி வந்தார். காரைக்காலில் தங்கி இருந்தபோது. அவர் இயற்கை எய்தினார். அவரது நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    • புதுவை, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
    • 526 மாண வர்கள் 100-க்கு 100 மதிப் பெண் பெற்றுள்ளனர்.

    புதுச்சேரி, மே.6-

    புதுவை, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    இதில் புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 526 மாணவர்கள் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இயற்பியல் 9, வேதியியல் 3, உயிரியல் 4, கணிப்பொறி அறிவியல் 165, கணிதம் 20, விலங்கியல் 1, பொருளியல் 22, வணிகவியல் 81, கணக்கு பதிவியல் 15, வணிக கணிதம் 1, கணிப்பொறி பயன்பாடு 69, மனையியல் 1, பிரெஞ்சு 135 என மொத்தம் 526 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் கணிப்பொறி அறிவியல் 9, கணிதம் 1, பொருளியல் 1, வணிகவியல் 3, கணிப்பொறி பயன்பாடு 3, மனையியல் 1, பிரெஞ்சு 2 என மொத்தம் 20 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    • ஆய்வு செய்யும் இடங்களில் மாவட்ட கலெக்டராக இணைந்து பணியாற்றுவார்.
    • மாணவி வித்யாஸ்ரீ விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும் எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும் பள்ளியில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து ஒரு நாள் கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவித்திருந்தார்.

    அதன்படி காரைக்கால் மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி வித்யாஸ்ரீ ஒருநாள் கலெக்டராக பணியாற்ற முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாணவி கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் மணிகண்டன் ஆய்வு செய்யும் இடங்களில் மாவட்ட கலெக்டராக இணைந்து பணியாற்றுவார்.

    இன்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் மணிகண்டனுடன் இணைந்து ஒரு நாள் கலெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி வித்யாஸ்ரீ விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    ×