என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பருவமழை தீவிரம்.. காரைக்காலில் அவசர உதவி எண் அறிவிப்பு
- காரைக்கால் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது.
- மழை சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காரைக்காலில் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காரைக்கால் நகராட்சி ஆணையர் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் நகராட்சி இந்த ஆண்டு தொடங்க உள்ள வடகிழக்குப்பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக காரைக்கால் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது.
ஆகவே பொதுமக்கள் 04368 222427 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தங்களின் பகுதிகளில் உள்ள மழை சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






