என் மலர்
நீங்கள் தேடியது "Monsoon"
- மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது.
- கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் முருகன் காலனிக்கு செல்லும் கன்னிகாபுரம் பகுதியில் வேகவதி ஆற்று தரைப்பாலம் உள்ளது. பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனால் கன்னிகாபுரம் மக்கள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் பருவமழை முடிந்த பின்னரும் சேதம் அடைந்த வேகவதி ஆற்றுத்தரைப் பாலம் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது. சேதம் அடைந்த இந்த தரை பாலத்தின் வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். பொதுமக்களும் நீண்ட தூரம் சுற்றி செல்வதற்கு பதிலாக சேதமடைந்த இப்பாலம் வழியாக ஆபத்தான முறையில் செல்வதினால் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சேதம் அடைந்த இந்த பாலத்தை உடனே சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மருத்துவ மனை மட்டுமின்றி பல்வேறு தனியார் மருத்துவமனை களிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- பரிசோதனையில் பெரும்பாலானோருக்கு டைபாய்டு அறிகுறிகள் காணப்படுகிறது.
நெல்லை:
வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாநகர பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சிறுவர்கள் பாதிப்பு
காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மருத்துவ மனை மட்டுமின்றி பல்வேறு தனியார் மருத்துவமனை களிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட டவுன் 24-வது வார்டு பகுதியில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதிலும் பெரியதெரு, நடுத்தெரு, வேம்படி தெரு, மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் அதிகம் பாதிக்கபட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரமற்ற குடிநீர்
பரிசோதனையில் பெரும்பாலானோருக்கு டைபாய்டு அறிகுறிகள் காணப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதி யினர் கூறும்போது, மழைக்காலங்களில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் கலங்களாகவும், சுகாதாரமற்ற முறையிலும் வருகிறது.
இதனால் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி கமிஷனர் உடனடியாக தலையிட்டு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மழை காலத்தில் மாநகராட்சி சுகாதார துறையினர் மூலம் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- நகராட்சியின் சார்பில்க லைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு குளத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
- ஆறுகாட்டுக்குறை பகுதிக்கு செல்லும் வழியில் வைதூக்கையம்ஆலயத்தின் எதிர் புறத்தில் நகராட்சி க்கு சொந்தமான குளம் அமை ந்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நகராட்சி முழுவதும் 35 கிலோமீட்டர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழை பெய்தவுடன் தண்ணீர் உடனுக்குடன் வடியும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நகரமன்ற தலைவர் புகழேந்தி , நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன் ஆகியோர் ஆய்வு செய்தனர் .
மேலும் ஆறுகாட்டுக்குறை பகுதிக்கு செல்லும் வழியில் வைதூக்கையம்ஆலயத்தின் எதிர் புறத்தில் நகராட்சி க்கு சொந்தமான குளம் அமை ந்துள்ளது.
நாள்தோறும் நூற்றுக்க ணக்கான மக்கள் குளிப்பதற்கு பயன்படும் இந்த குளம் மாசுபட்டு இருந்தது. அதனை தற்போது நகராட்சியின் சார்பில்க லைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு குளத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது குளம்தூர்வா ரப்பட்ட பின்பு மிகுந்த தூய்மையாகவு ம்பெருவாரியான மீனவ மக்கள் குளிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது இந்த குளக்கரையில் நடைபெறும் பணியினையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர்.
- பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
- தூர்வாரும் பணிகளை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்
நெல்லை:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். இதில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகர பகுதி களில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகள், ஓடை தூர்வாருதல், சாக்கடை கால்வாய்கள் சீரமைத்தல் போன்ற பணிகளை விரைவுப்படுத்த அதிகாரி களுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தர விட்டார். மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் தெரிவித்தார்.
அப்போது நெல்லை மாநகர பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான எஸ்.என்.ஹைரோடு, பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை, சமாதானபுரம் சாலை, திருமால் நகர் சாலை உள்ளிட்டவை உள்ளது. இதில் பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக வாகன போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அதேபோல் திருமால் நகர் சாலையும் பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால் மாநகரப் பகுதிகளுக்குள் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைக ளையும் மாநகராட்சிக்கு மாற்றிக் கொடுத்தால் உடனடியாக சீரமைத்து மாநகராட்சி முழுவதும் தரமான சாலைகள் பொது மக்கள் பயன்படுத்தலாம் என கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி கூறினார்.
தொடர்ந்து அமைச்சரின் உத்தரவுக்கு இணங்க நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் ஓடைகளை சீரமைத்து தூர்வாரும் பணிகளை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
மாநகராட்சி கமிஷனரின் இந்த நடவ டிக்கைகளை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.
- தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
- புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
மாலை 4 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கி சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. மேலும் இடி- மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சேவப்பநாயக்கன்வாரி வடகரையில் 12-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. தகவல் அறிந்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ஆணையர் சரவணக்குமார், மேயர் சண்.ராமநாதன்மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கலெக்டர் உத்தரவுப்படி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.
தொடர்ந்து இடைவிடாது பெய்த மழையால் தஞ்சையில் எங்கு பார்த்தாலும் வெள்ள க்காடாக காட்சியளித்தது. சாலைகளில் தண்ணீர் ெபரும ளவில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே சென்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த கனமழைக்கு ஒரு கூரைவீடு பகுதி அளவில் சேதமடைந்தது. 2 கால்நடைகள் இறந்தன.
இதேப்போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 409.90 மி.மீ. மழை பதிவாகியது.
அதிகபட்சமாக தஞ்சையில் 177.50 மி.மீ. பெய்தது.இன்று காலை 9 மணி வரை தஞ்சையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
தொடர்ந்து நேற்று போல் இன்றும் கனமழை பெய்வதற்கான அறிகுறி தென்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடள் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ. வருமாறு:-
தஞ்சாவூர்-177.50, நெய்வாச ல்தென்பாதி-72.60, வல்லம்-40, குருங்குளம்-34.60, கீழணை-28, அய்யம்பேட்டை-16, பூதலூர்-10.80.
- தமிழக அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
- இயக்குனர் ரவி ஏற்பாடு செய்துள்ள மீட்பு பணிகள் குறித்த விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடங்கி உள்ளது. இந்த பருவமழையானது பல இடங்களில் கொட்டி தீர்த்து வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடற்கரை ஓரம் அமைந்துள்ளது. இதனால் இந்த பருவ மழையில் ஏற்படும் சேதங்களை தடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ரவி மரக்காணம் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள மீட்பு பணிகள் குறித்த விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்படும் சேதங்களை தடுக்க தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கடலோர மாவட்டங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் மரக்காணம் பகுதியிலும் பருவ மழையை எதிர்கொள்ள மீட்பு பணிகள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த ஆய்வினைத் தொடர்ந்து கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்யப் போகிறேம். இவ்வாறு கூறினார். அப்பொழுது தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வீரர்கள் உடன் இருந்தனர்.
- பருவ மழையை முன்னிட்டு திருவாடானை பகுதியில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது.
- 42 ஆயிரத்து 500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளான திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். தற்போது ஐப்பசி மாதம் வருவதையொட்டி பருவமழை பெய்யும் என எதிர்பார்த்து அந்தப்பகுதியில் விவசாய ப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 42 ஆயிரத்து 500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருவாடானை பகுதியில் 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு விவசாயப்பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து விவசாயி கடுக்களுர் துரைப்பாண்டி கூறுகையில், பொதுவாக ஆடியில் விதை விதைப்பார்கள்.
இந்தப்பகுதி வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், பருவ மாற்றம் காரணமாகவும் ஆவணி, புரட்டாசி மாதங்களில் விதைக்கிறார்கள். தற்போது பெய்த மழையில் சில இடங்களில் பயிர் முளைத்துள்ளது. களைக்கொல்லி தெளிக்க ப்பட்டும், ஸ்பிரே செய்யப்பட்டும் வருகிறது. அடுத்த மழைப்பொழிவை எதிர்பார்த்து உரம் போடப்பட்டு வருகிறது. இந்த வருடம் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் விவசாயப்பணிகளை தொடங்கியுள்ளோம் என்றார்.
- பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
- மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சியில், மூலதன மான்ய நிதியின் கீழ், ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஆசாத் மார்கெட் கட்டுமானப் பணி மற்றும் மகாலெட்சுமி நகரில் ரூபாய் 1.675 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை.
ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஒருங்கிணைந்த அறிவுசார் மையம் கட்டும் பணியினையும், மூலதன மான்ய நிதியின் கீழ், ரூபாய் 5.30 கோடி மதிப்பீட்டில் நாகப்பட்டினம் அக்கரைக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பாலம் கட்டுமானப் பணியினையும் நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகராட்சி செயற் பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வடகிழக்கு பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னேரி ஆரணி ஆற்றின் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆற்றின் இருபுறங்களிலும் முள்செடிகள் அகற்றப்பட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலம் கரைகள் பலப்படுத்தப்படுகின்றன.
மராமத்து பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளும், சவுக்கு கம்புகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்த தகவலை பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகன் தெரிவித்தார்.
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் அருகே தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, காளிபட்டி, கொத்தயம், கள்ளிமந்தையம், 16-புதூர், தேவத்தூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மானாவாரி மற்றும் தண்ணீர் பாய்ச்சல் நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆடு வளர்ப்பிற்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடாக, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் உள்ள தலைச்சேரி ஆட்டு ரகங்களை விலைக்கு வாங்கி, ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய ஆடு ரூ.12 ஆயிரத்திற்கும், ஆட்டுகிடா ரூ.20 ஆயிரத்திற்கும் வியாபாரிகளால் வாங்கி வரப்பட்டு, வளர்க்கப்படுகிறது.
ஆடுகள் ஆண்டுக்கு இருமுறை 2 முதல் 3 குட்டிகள் வரை ஈணும். வருடத்திற்கு சுமார் 80 குட்டிகள் வரை கிடைப்பதாகவும், ஒரு குட்டி ரூ.3 ஆயிரத்திற்கு ஆடு வளர்ப்பிற்காக வியாபாரி கள் மற்றும் பொதுமக்கள் வாங்கிச் செல்வதாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள காளிபட்டி தெற்கு தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகவேல் என்பவர் கூறுகிறார்.
ஆடு வளர்ப்பின் மூலம் கிடைக்கும் ஆட்டுச்சானம், தென்னை மற்றும் பல்வேறு பயிர்களுக்கு இயற்கையான உரமாக இடப்படுவதால், கணிசமான தொகை அதன் மூலம் கிடைப்பதாக விவசாயி கூறுகிறார்.