என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "monsoon"

    • தமிழக அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
    • இயக்குனர் ரவி ஏற்பாடு செய்துள்ள மீட்பு பணிகள் குறித்த விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்: 

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடங்கி உள்ளது. இந்த பருவமழையானது பல இடங்களில் கொட்டி தீர்த்து வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடற்கரை ஓரம் அமைந்துள்ளது. இதனால் இந்த பருவ மழையில் ஏற்படும் சேதங்களை தடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ரவி மரக்காணம் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள மீட்பு பணிகள் குறித்த விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்படும் சேதங்களை தடுக்க தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கடலோர மாவட்டங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல் மரக்காணம் பகுதியிலும் பருவ மழையை எதிர்கொள்ள மீட்பு பணிகள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த ஆய்வினைத் தொடர்ந்து கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்யப் போகிறேம். இவ்வாறு கூறினார். அப்பொழுது தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வீரர்கள் உடன் இருந்தனர்.

    • தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    • புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    மாலை 4 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கி சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது.

    நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. மேலும் இடி- மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

    தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    சேவப்பநாயக்கன்வாரி வடகரையில் 12-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. தகவல் அறிந்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ஆணையர் சரவணக்குமார், மேயர் சண்.ராமநாதன்மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கலெக்டர் உத்தரவுப்படி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

    தொடர்ந்து இடைவிடாது பெய்த மழையால் தஞ்சையில் எங்கு பார்த்தாலும் வெள்ள க்காடாக காட்சியளித்தது. சாலைகளில் தண்ணீர் ெபரும ளவில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே சென்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்த கனமழைக்கு ஒரு கூரைவீடு பகுதி அளவில் சேதமடைந்தது. 2 கால்நடைகள் இறந்தன.

    இதேப்போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 409.90 மி.மீ. மழை பதிவாகியது.

    அதிகபட்சமாக தஞ்சையில் 177.50 மி.மீ. பெய்தது.இன்று காலை 9 மணி வரை தஞ்சையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    தொடர்ந்து நேற்று போல் இன்றும் கனமழை பெய்வதற்கான அறிகுறி தென்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடள் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ. வருமாறு:-

    தஞ்சாவூர்-177.50, நெய்வாச ல்தென்பாதி-72.60, வல்லம்-40, குருங்குளம்-34.60, கீழணை-28, அய்யம்பேட்டை-16, பூதலூர்-10.80.

    • பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
    • தூர்வாரும் பணிகளை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

    நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். இதில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகர பகுதி களில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகள், ஓடை தூர்வாருதல், சாக்கடை கால்வாய்கள் சீரமைத்தல் போன்ற பணிகளை விரைவுப்படுத்த அதிகாரி களுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தர விட்டார். மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் தெரிவித்தார்.

    அப்போது நெல்லை மாநகர பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான எஸ்.என்.ஹைரோடு, பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை, சமாதானபுரம் சாலை, திருமால் நகர் சாலை உள்ளிட்டவை உள்ளது. இதில் பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக வாகன போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அதேபோல் திருமால் நகர் சாலையும் பழுதடைந்து காணப்படுகிறது.

    இதனால் மாநகரப் பகுதிகளுக்குள் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைக ளையும் மாநகராட்சிக்கு மாற்றிக் கொடுத்தால் உடனடியாக சீரமைத்து மாநகராட்சி முழுவதும் தரமான சாலைகள் பொது மக்கள் பயன்படுத்தலாம் என கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி கூறினார்.

    தொடர்ந்து அமைச்சரின் உத்தரவுக்கு இணங்க நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் ஓடைகளை சீரமைத்து தூர்வாரும் பணிகளை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

    மாநகராட்சி கமிஷனரின் இந்த நடவ டிக்கைகளை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.

    • நகராட்சியின் சார்பில்க லைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு குளத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஆறுகாட்டுக்குறை பகுதிக்கு செல்லும் வழியில் வைதூக்கையம்ஆலயத்தின் எதிர் புறத்தில் நகராட்சி க்கு சொந்தமான குளம் அமை ந்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நகராட்சி முழுவதும் 35 கிலோமீட்டர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழை பெய்தவுடன் தண்ணீர் உடனுக்குடன் வடியும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நகரமன்ற தலைவர் புகழேந்தி , நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன் ஆகியோர் ஆய்வு செய்தனர் .

    மேலும் ஆறுகாட்டுக்குறை பகுதிக்கு செல்லும் வழியில் வைதூக்கையம்ஆலயத்தின் எதிர் புறத்தில் நகராட்சி க்கு சொந்தமான குளம் அமை ந்துள்ளது.

    நாள்தோறும் நூற்றுக்க ணக்கான மக்கள் குளிப்பதற்கு பயன்படும் இந்த குளம் மாசுபட்டு இருந்தது. அதனை தற்போது நகராட்சியின் சார்பில்க லைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு குளத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது குளம்தூர்வா ரப்பட்ட பின்பு மிகுந்த தூய்மையாகவு ம்பெருவாரியான மீனவ மக்கள் குளிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது இந்த குளக்கரையில் நடைபெறும் பணியினையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர். 

    • காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மருத்துவ மனை மட்டுமின்றி பல்வேறு தனியார் மருத்துவமனை களிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • பரிசோதனையில் பெரும்பாலானோருக்கு டைபாய்டு அறிகுறிகள் காணப்படுகிறது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாநகர பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    சிறுவர்கள் பாதிப்பு

    காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மருத்துவ மனை மட்டுமின்றி பல்வேறு தனியார் மருத்துவமனை களிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


    குறிப்பாக நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட டவுன் 24-வது வார்டு பகுதியில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதிலும் பெரியதெரு, நடுத்தெரு, வேம்படி தெரு, மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் அதிகம் பாதிக்கபட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

    சுகாதாரமற்ற குடிநீர்

    பரிசோதனையில் பெரும்பாலானோருக்கு டைபாய்டு அறிகுறிகள் காணப்படுகிறது.

    இது தொடர்பாக அப்பகுதி யினர் கூறும்போது, மழைக்காலங்களில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் கலங்களாகவும், சுகாதாரமற்ற முறையிலும் வருகிறது.

    இதனால் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி கமிஷனர் உடனடியாக தலையிட்டு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மழை காலத்தில் மாநகராட்சி சுகாதார துறையினர் மூலம் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது.
    • கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் முருகன் காலனிக்கு செல்லும் கன்னிகாபுரம் பகுதியில் வேகவதி ஆற்று தரைப்பாலம் உள்ளது. பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனால் கன்னிகாபுரம் மக்கள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் பருவமழை முடிந்த பின்னரும் சேதம் அடைந்த வேகவதி ஆற்றுத்தரைப் பாலம் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது. சேதம் அடைந்த இந்த தரை பாலத்தின் வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். பொதுமக்களும் நீண்ட தூரம் சுற்றி செல்வதற்கு பதிலாக சேதமடைந்த இப்பாலம் வழியாக ஆபத்தான முறையில் செல்வதினால் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சேதம் அடைந்த இந்த பாலத்தை உடனே சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

    கோவை:

    தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தொடங்கும். இந்த மழையானது செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

    கேரள மாநிலத்தில் அதிகம் பெய்யும் தென் மேற்கு பருவமழை அதனை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கொட்டித்தீர்க்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:-

    எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்துக்கான (ஜூன் முதல் செப்டம்பர்) மழை பற்றிய முன்னறிவு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கம் ஆகியவை ஆராய்ச்சி மேற்கொண்டன.

    இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு 2023-ம் ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

    அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஜூன் 1-ந் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தள்ளிபோனது.
    • நேற்று மதியம் 12 மணி முதல் இரவு வரை விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்து கொண்டே இருந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

    ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்யும். இதேபோல, ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தான் அதிக அளவில் பெய்யும்.

    அதன்படி, தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டர், வடகிழக்கு பருவமழை 300 மில்லி மீட்டர், கோடை மழை 230 மில்லி மீட்டர் பதிவாகும். ஆனால், கடந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பதிவானது.

    இதற்கிடையே ஜூன் 1-ந் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தள்ளிபோனது. கூடலூர், பந்தலூர், குன்னூரில் சில இடங்களில் கடந்த வாரம் மழை பெய்தாலும், தொடர்ச்சியாக இல்லாமல் நின்றுவிட்டது.

    இந்நிலையில், ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது.

    நேற்று மதியம் 12 மணி முதல் இரவு வரை விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. லேசான மண் சரிவுகள் ஏற்பட்டன.

    குளிர் காற்று வீசியதால் பள்ளி, கல்லூரி மாணவிகள் அவதிக்குள்ளாகினர். இதேபோல், மதியம் முழுவதும் சாலைகளில் கடும் மேகமூட்டம் நிலவியது. ஊட்டி, குன்னூர், மசினகுடி, மஞ்சூர் செல்லும் சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றனர்.

    அதிகபட்சமாக நேற்று 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்த பட்சமாக 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 82 சதவீதமாக இருந்தது.இந்நிலையில், மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என்று காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    கீழ் கோத்தகிரி -60, சேரங்கோடு-29, அப்பர் பவானி-26, கேத்தி-24, ஊட்டி, அவலாஞ்சி, குந்தா -14, நடுவட்டம்-12. மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • ஜூன் மாதம் இறுதியாகியும் ஒரு கனமழை கூட பெய்யவில்லை.
    • சிறுவாணி அணை, வறண்டு பாளம் பாளமாக காட்சியளிக்கிறது.

    கோவை,

    தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்கள் பெய்யும். தற்போது ஜூன் மாதம் கடைசி வாரத்துக்கு வந்த நிலையிலும், ஒரு கனமழை கூட கோவை மாவட்டத்தில் பெய்யவில்லை.

    அணைகள் வறண்டன

    கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, வறண்டு பாளம் பாளமாக காட்சியளிக்கிறது. அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஆங்காங்கே குட்டை குட்டையாக தேங்கியுள்ள தண்ணீரை சேகரித்து குடிநீர் வழங்கி வருகின்றனர்.

    மற்றொரு குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையிலும் மொத்த உயரம் 100 அடியில், 81 அடி உயரத்துக்கே தண்ணீர் இருக்கிறது. பாதிக்கும் மேல் சேறு நிரம்பியிருக்கும் இந்த அணையும், மழையை எதிர்பார்த்தே இருக்கிறது.

    இந்த பகுதியில் இருக்கும் பாசன அணைகளிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஆழியாறு அணையில் 57 அடி (மொத்த நீர்த்தேக்க உயரம் 120 அடி), திருமூர்த்தி அணையில் 23 அடி (மொத்த உயரம் 60 அடி), பரம்பிக்குளத்தில் 15 அடி (மொத்த உயரம் 72 அடி) மட்டுமே தண்ணீர் இருக்கிறது.

    ஜூன் மாதத்தில் நேற்று வரை பெய்திருக்க வேண்டிய இயல்பு மழை, 137.2 மி.மீ., ஆகும். ஆனால், கண்ணாமூச்சி காட்டும் பருவக்காற்றால், இதுவரை 58.4 மி.மீ., மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இது, 57 சதவீதம் பற்றாக்குறை யாகும்.வரும் நாட்களிலும் மழை பெய்ய தவறினால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதால் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது.

    சென்னை:

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பருவ மழையின்போது தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்குவது கடும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.

    அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல போதிய வடி கால்வாய் வசதி இல்லாததால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த வாரம் பெய்த ஒரு நாள் கோடை மழைக்கே பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகைள எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், அந்த தண்ணீர் வீணாகாமல் அருகில் உள்ள சிறிய ஏரி, குளங்களில் சேமிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்காக மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான முதல் கட்டபணி ரூ.44 கோடி மதிப்பில் நடைபெற இருக்கிறது.15 மண்டலங்களில் உள்ள 49 சிறு ஏரி, மற்றும் குளங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதேபோல் குளங்களில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் இல்லாததாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்கவும் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள்.

    இதற்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பான விரிவான ஆய்வு முடிந்த பின்னரே எவ்வளவு இடம் கையகப்படுத்தப்படும் என்ற விபரம் தெரியவரும்.

    பலத்த மழை பெய்யும்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு ஏரி, மற்றும் அயப்பாக்கம், கோலடி ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் அம்பத்தூர் ஏரியில் கலப்பதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இதேபோல் நன்மங்கலம் ஏரியில் உபரி நீர் கால்வாய் இல்லை. மழை நீரால் குளம் நிரம்பும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இதே போல் போரூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட சில ஏரிகளில் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரிகளில் உபரி நீர் கால்வாய்கள் இல்லாததால் பல மண்டலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளது. உபரி நீர்கால்வாய் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும். பெரும்பாக்கம் ஏரியில் உபரிநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி சவாலானது. அயனம்பாக்கம் ஏரிப்பகுதியில் போதிய கால்வாய்கள் இல்லை. முகப்பேர், பாடி, நொளம்பூர் பகுதிகளில் இருந்த குளங்கள் தற்போது இல்லை. இதுபோன்ற இடங்களில் கூடுதலாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க வேண்டும் என்றார்.

    • கோழிக்கோடு மாவட்டத்திற்கு வருகிற 5-ந்தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களி லும் மிதமான அளவு மழை பெய்து வருகிறது.

    தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 5 நாட் களுக்கு பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கண்ணூர் மற்றும் காசர் கோடு மாவட்டங்களுக்கு நாளை முதல் 5-ந்தேதி வரையிலும் எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 4-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோழிக்கோடு மாவட்டத்திற்கு வருகிற 5-ந்தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை போன்று மிக கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அங்கு 204.4 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யுமென்று எதிர்பார்க் கப்படுகிறது.

    இதேபோல் பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழையின்போது, பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

    அவசரகால அறிவுறுத்தல் களை பின்பற்றுமாறும், கடல் தாக்குதலுக்கு உள்ளா கும் பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மீனவர்கள் வருகிற 5-ந்தேதி வரை கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது. கடற்கரைகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.
    • மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பருவமழை இன்னும் துவங்கவில்லை. மழை பொழிவு துவங்கினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுவது, வெள்ளத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கும். எனவே மழை காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், தீயணைப்புத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மழை காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றனர்.

    மழை பெய்யும் போது மரத்தடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர்வரத்தை அறியாமல் ஆறு, ஓடைகளில் நிற்பதையும், நீர்வழித்தடங்களில் வாகனங்களில் கடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஈரமான சுவற்றில் உள்ள மின் சுவிட்ச்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தென்மேற்கு பருவமழை காலத்தில், பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உடுமலை தீயணைப்பு மீட்பு நிலையத்தில், மீட்பு பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் மற்றும் பணியாளர்கள், கருவிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். 

    ×