என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disaster"

      ராமேசுவரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி கடல் பகுதி. 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரை ராமேசுவரத்திற்கு அடுத்தபடியாக தனுஷ்கோடி சிறப்பு பகுதியாக விளங்கியது.

      தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தும் நடைபெற்று வந்துள்ளது. தனுஷ்கோடியில் இருந்து இர்வின் கோசன், ராமானுஜம் என்ற 2 கப்பல்கள் பயணிகளுக்காக தினமும் சென்று வந்தன.

      மேலும் தனுஷ்கோடியில் துறைமுகம், மருத்துவமனை கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், தபால்நிலையம், ரெயில் நிலையம், ஆலயங்கள் இருந்தன.

      1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலுக்கு முன்பு வரை சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை ரெயில் இயக்கப்பட்டது. ராமேசுவரம் வர விரும்புபவர்கள் பாம்பன் ரெயில் நிலையத்தில் இறங்கி பாம்பனில் இருந்து இயக்கப்பட்ட ரெயில் மூலமாக ராமேசுவரம் வந்து சென்றனர். அந்த ஆண்டு வரையிலும் தனுஷ்கோடி பகுதியில் தொழில் வாய்ப்புக்களும் அதிகமாக இருந்தன. ராமேசுவரம்-தனுஷ்கோடிக்கும், இலங்கை தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து இருந்த சமயத்தில் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பும் இருந்தது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த பகுதியாக விளங்கிய தனுஷ்கோடி நகரத்தை புயல் புரட்டி போட்டது என்று சொன்னால் மிகையாகாது.

      1964-ம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி அன்று தனுஷ்கோடி பகுதியில் கனமழையுடன் பலத்த காற்று வீசியது. 23-ந்தேதி மதியத்திற்கு பிறகு மழையின் வேகம் அதிகரித்தது. அன்று மாலை சூறைகாற்றும் வீசியது. இதனால் தனுஷ்கோடி பகுதியில் வடக்கு கடலும், தென் கடலும் என இரண்டும் சிறிது சிறிதாக ஒன்றுசேர்ந்தது.

      அன்று இரவு வீசிய கடும் சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி நகரமே முழுமையாக கடல்நீரில் மூழ்கியது. தனுஷ்கோடி கடற்கரையில் இருந்த அனைத்து கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின.

      பள்ளி விடுமுறைக்காக 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த ரெயில் ஒன்றும் அன்று இரவு ஏற்பட்ட கனமழை, சூறாவளி காற்றில் சிக்கி கொண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட ரெயில் கடலுக்குள் மூழ்கியது. அந்த ரெயிலில் இருந்த அனைவரும் இறந்தனர். 23-ந் தேதி அன்று இரவு வீசிய புயலால் தனுஷ்கோடியில் மட்டும் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதில் பலரது உடல்கள் கிடைக்கவில்லை. 24-ந்தேதி காலை பார்த்தபோது தனுஷ்கோடி பகுதியில் உள்ள 2 கடல்களும் ஒன்றாக காட்சியளித்தது. பலபேரின் உடல்கள் கடல்நீரில் மிதந்தன. இடிபாடுகளில் சிக்கியபடி கைக்குழந்தைகள், பெரியவர்களின் உடல்களும் மிதந்தன.

      இந்த காட்சிகள் வரலாற்றில் ஒரு சோக சுவடுகளாகவே இன்று வரை அறியப்படுகின்றன. தனுஷ்கோடி துறைமுகம் முழுமையாக இடிந்து சேதம் அடைந்ததால் அங்கிருந்து தலைமன்னாருக்கு சென்று வந்த கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது. கடந்த 1983-ம் ஆண்டு வரையிலும் கப்பல் போக்குவரத்து விடப்பட்டு அது நாளடைவில் நிறுத்தப்பட்டது. பாம்பன் ரெயில் பாலமும் சீரமைக்கப்பட்டு ராமேசுவரம் வரை ரெயில் போக்குவரத்து இயக்கப்பட்டது.

      அதன்பின்னர் அரசால் தடைசெய்யப்பட்ட பகுதியாக தனுஷ்கோடி அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்று வரையிலும் தனுஷ்கோடி கம்பிப்பாடு, பாலம், முகுந்தராயர்சத்திரம் ஆகிய கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலை நம்பி 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தற்காலிகமாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

      இந்த சம்பவத்தால் டிசம்பர் மாதம் வந்து விட்டாலே மீனவர்கள் ஒரு வித அச்ச உணர்வோடுதான் தனுஷ்கோடியில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தனுஷ்கோடி நகரம் அழிந்து 61 ஆண்டுகள் ஆகிறது.

      இத்தனை ஆண்டுகள் ஆகியும் தனுஷ்கோடியில் எந்த ஒரு சீரமைப்பு பணிகளும் நடைபெறாமல் அதன் சிதிலங்கள் 1964-ம் ஆண்டு புயலின் கோரத்தை நினைவுகூரும் காலச்சுவடுகளாகத்தான் இருந்து கொண்டு இருக்கின்றன.

      பழைய கட்டிடங்கள் என்று சொல்வதற்கு அடையாளமாக கிறிஸ்தவ ஆலயத்தின் முகப்பு மற்றும் ரெயில் நிலைய கட்டிடம்தான் உள்ளன. பெரும்பாலான சிதிலங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்டன.

       

      புயலின் சேதத்துக்கு பின்பு தனுஷ்கோடியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்காததால் மீனவர்கள் குடிசைகள் மட்டும் அங்கு இருப்பதை காணலாம்.

      தனுஷ்கோடி நகரத்தை மீண்டும் புதுப்பொலிவு பெற செய்ய மத்திய-மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை ரூ.65 கோடி நிதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தனுஷ்கோடி வரை சாலை வசதி வந்த பின்னர் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கும் வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

      இந்த நகரத்தை புதுப்பொலிவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

      • கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
      • மீட்பு பணியில் 2 கப்பல்களும் ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபட்டது.

      கொச்சிக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்த சரக்கு கப்பல் கடலில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. விழிஞ்சத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்கு MSC ELSA3- கப்பலில் பொருட்கள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.

      கப்பல் கொச்சியிலிருந்து தென்மேற்கு சுமார் 38 மைல் தொலைவில் இருந்ததுபோது கடலில் சாய்ந்தது. அப்போது கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் வழிந்தது. இதனை தொடர்ந்து கப்பல் நிர்வாகம் உதவி கோரி இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

      அதனை தொடர்ந்து, மீட்பு பணியில் 2 கப்பல்களும் ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபட்டது. இந்த மீட்பு பணியில் கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

      கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரை ஒதுங்கிய பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு கடற்படை அறிவுறுத்தியுள்ளது.

      இந்நிலையில், கேரள கடற்கரையில் எம்.எஸ்.சி எல்சா 3 சரக்கு கப்பல் மூழ்கியதை மாநில பேரிடராக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

      • சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.
      • சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது

      தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

      கடந்த வெள்ளிக்கிழமை சான்சியோங் கவுண்டியில் தொடங்கிய தீ, தற்போது மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. சனிக்கிழமை இரவு நிலவரப்படி, சான்சியோங் தீ 25% கட்டுப்படுத்தப்பட்டது. சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.

      சான்சியோங்கிலிருந்து 260க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் உல்சான் மற்றும் கியோங்சாங் மாகாணத்தில் காட்டுத் தீயில் இருந்து தப்பி சுமார் 620 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

      தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். கொரியா வனத்துறை தீயை கட்டுப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது, மேலும் சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது.

       

      • பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது.
      • கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க வேண்டும்.

      நாகப்பட்டினம்:

      நாகையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த தீயணைப்புத்துறை இயக்குநர் ரவி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை அவ்வபோது பெய்து வருகிறது. இந்த நிலையில் தீயணைப்புத்துறை சார்பாக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.

      தீயணைப்பு நிலையத்தில் மரம் வெட்டும் கருவி, கட்டிடம் இடிக்கும் கருவி, ஆபத்து காலத்தில் கதவுகளை உடைக்கும் கருவி உள்ளிட்ட நவீன மீட்பு பணி உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் கூறுகையில்;

      நாகை மாவட்டத்தில் 7 தீயணைப்பு நிலையங்களில், 7 மீட்பு படையினர், 160 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை காலங்களில் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது, பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது மற்றும் வெகுமதி கட்டாயம் உண்டு. மேலும், சுற்றுலா தலங்களாக விளங்கும் வேளாங்கண்ணி, நாகூர், தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

      • பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
      • தூர்வாரும் பணிகளை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்

      நெல்லை:

      தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

      நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். இதில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

      அப்போது நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகர பகுதி களில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகள், ஓடை தூர்வாருதல், சாக்கடை கால்வாய்கள் சீரமைத்தல் போன்ற பணிகளை விரைவுப்படுத்த அதிகாரி களுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தர விட்டார். மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் தெரிவித்தார்.

      அப்போது நெல்லை மாநகர பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான எஸ்.என்.ஹைரோடு, பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை, சமாதானபுரம் சாலை, திருமால் நகர் சாலை உள்ளிட்டவை உள்ளது. இதில் பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக வாகன போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அதேபோல் திருமால் நகர் சாலையும் பழுதடைந்து காணப்படுகிறது.

      இதனால் மாநகரப் பகுதிகளுக்குள் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைக ளையும் மாநகராட்சிக்கு மாற்றிக் கொடுத்தால் உடனடியாக சீரமைத்து மாநகராட்சி முழுவதும் தரமான சாலைகள் பொது மக்கள் பயன்படுத்தலாம் என கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி கூறினார்.

      தொடர்ந்து அமைச்சரின் உத்தரவுக்கு இணங்க நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் ஓடைகளை சீரமைத்து தூர்வாரும் பணிகளை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

      மாநகராட்சி கமிஷனரின் இந்த நடவ டிக்கைகளை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.

      • கடம்பவிளாகம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.
      • வேதாரண்யம், வடபாதி, எக்கல், கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

      திருத்துறைப்பூண்டி:

      திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட குன்னலூர் ஊராட்சியில், குடிசை தீவில் இருந்து எக்கல், கடம்பவிளாகம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

      இந்த சாலையானது மேலமருதூர் மெயின் சாலையை இணைக்கும் வழித்தடமாக இருப்பதால், விவசாயிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த வழியாக தான் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், வடபாதி, எக்கல், கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

      இதுகுறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி பூமிநாதன் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

      எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
      • பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா கேட்டறிந்தனர்.

      சீர்காழி:

      கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்களில் ரூ16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைய இருக்கும் இடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

      மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பாக கொள்ளிடம் மற்றும் குத்தாலம் ஆகிய இரண்டு ஒன்றிய குழு தலைவர்களுக்கு தலா ரூ 12.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் வழங்குவதற்கான சாவிகளை வழங்கி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் பெற்றுக்கொண்டனர்.

      கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அனுமந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடைக்கு சென்ற பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.

      ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா.முருகன்,சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா,வட்டாட்சியர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா,ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர்,அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • உயிருக்கு போராடுபவர்களை மீட்பது குறித்து மாணவ- மாணவிகளுக்கு ஒத்திகை நிகழ்த்தி காட்டப்பட்டது.
      • தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

      கடையநல்லூர்:

      முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்க ளையும், கட்டிட இடிபாடு களில் சிக்கியவர்க ளையும் மீட்பது எப்படி திடீரென ஏற்பட்ட தீயை அணைப்பது எப்படி, அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி கடைய நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

      கல்லூரிகளின் முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா மாணவ- மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணிகள் மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள், கல்லூரியின் பேராசிரி யர்கள் குருசித்திர சண்முக பாரதி, சண்முகப்பிரியா, சாம்சன் லாரன்ஸ், சண்முக வடிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • பெண்கள் உள்பட 200 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு உள்ளனர்.
      • மழையில் நனையாமல் இருக்க உடைகள், தலைக்கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டன.

      ஊட்டி,

      நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பா் வரை தென்மேற்குப் பருவ மழையும், அக்டோபா் முதல் நவம்பா் வரை வடகிழக்குப் பருவ மழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது.

      இது மலைப் பிரதேசம் என்பதால் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் சாலையோரங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுவதால் பெரும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதுதவிர நீலகிரியின் குறுகிய மலைச்சாலை வழியாக தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட காலதாமதம் ஆகிறது.

      இதனைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து 200 பேருக்கு பேரிடர்மீட்பு பயிற்சி தருவது என்று முடிவு செய்தனர். இதற்காக பெண்கள் உள்பட 200 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பேரிடர்மீட்பு தன்னார்வலர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவா்.

      இதற்காக அவா்களுக்கு தனி அடையாள அட்டை, பயிற்சி சான்றிதழ், பேரிடா் கால மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் மழையில் நனையாமல் இருக்க உடைகள், தலைக்கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டன.

      • சரக்கு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் செல்ல தலிபான் அரசு அனுமதிக்கவில்லை.
      • பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

      காபூல்:

      ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர். பல்வேறு கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். அங்கு மீட்புப்பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

      இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆப்கானிஸ்தானில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது.

      பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுமாறு உலக நாடுகளை தலிபான் அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு குழுக்களை அனுப்பி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு உறுதியளித்து உள்ளன.

      இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அன்வாருல் ஹக்கக்கர் அத்தியாவசிய உதவிகளுடன் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதாக அறிவித்தார். அவர்கள் காபூல் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. சரக்கு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆப்கானிஸ்தா னுக்குள் செல்ல தலிபான் அரசு அனுமதிக்கவில்லை.

      இதுகுறித்து இரு நாட்டு தரப்பில் இருந்தும் அதிகார பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் பதற்றம்தான் பாகிஸ்தானின் உதவியை தலிபான் அரசு நிராகரித்ததற்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது.

      சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த அனைவரையும் நாடு கடத்துவது, ஆப்கானியர்களுக்கான விசா கொள்கை மற்றும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

      • மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
      • நாங்கள் காலம், காலமாக இங்கு கடை நடத்தி வருகிறோம்.

      கடலூர்:

      கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் சாலை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியபகுதிகளில் சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன. இதில் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக 123 கடைகள் ஆக்கிரமித்து இயங்கி வருவதாக கணக்கெடுத்து அதன் உரிமையாளருக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின் பேரில் மாநகராட்சி செயற்பொறியாளர் கலைவாணி தலைமையில் அதிகாரிகள் குருமூர்த்தி, பாஸ்கரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்களுடன்2 ஜே.சி.பி. மற்றும் 4 டிப்பர் வாகனம் கொண்டு வந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் வளாகம் உள்ள இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

      முன்னதாக மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு மற்றும் அங்கு கடை வைத்திருப்பவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டனர். நாங்கள் காலம், காலமாக இங்கு கடை நடத்தி வருகிறோம். இங்குள்ள கடைகளை அகற்றக் கூடாது. எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் இது குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொண்டிருந்த அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தற்போது அகற்றப்படும் கடைகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கி கடைகளை அப்புறப்படுத்த அவகாசம் வழங்க வேண்டும். மேலும் கடந்த பல ஆண்டுகளாக ஏற்கனவே நகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெற்று வாடகை செலுத்தி வரும் கடைகளுக்கு நிரந்தரமாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது முதல் கட்டமாக தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றோம். மேலும் 15 நாட்களுக்கு பிறகு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தால் கண்டிப்பாக அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபடும். வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. 

      • தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
      • பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள்.

      கோவை:

      மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. 1 அரை லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

      இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றனர்.

      அவர்களுக்கு தேவையான உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

      மேலும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

      அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

      1.045 டன் பால் பவுடர், 1.5 டன் அரிசி, 1 டன் காய்கறிகள், 25 ஆயிரம் நாப்கின்கள், 1090 படுக்கை விரிப்புகள், 3 ஆயிரம் மெழுகுவர்த்தி, 13 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 2,700 பிரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

      இவை அனைத்தும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர்.

      இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருந்து நிவாரண பொருட்கள் லாரி மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

      இந்த பொருட்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.

      பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள். தொண்டு நிறுவனங்கள், மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

      உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்களை கொண்ட தனி விமானம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை சென்றதும் அங்கு மண்டலவாரியாக பிரித்து சரியான முறையில் வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

      இவ்வாறு அவர் தெரிவித்தார்.

      ×