search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rehearsal Training"

    • உயிருக்கு போராடுபவர்களை மீட்பது குறித்து மாணவ- மாணவிகளுக்கு ஒத்திகை நிகழ்த்தி காட்டப்பட்டது.
    • தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

    கடையநல்லூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்க ளையும், கட்டிட இடிபாடு களில் சிக்கியவர்க ளையும் மீட்பது எப்படி திடீரென ஏற்பட்ட தீயை அணைப்பது எப்படி, அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி கடைய நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    கல்லூரிகளின் முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா மாணவ- மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணிகள் மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள், கல்லூரியின் பேராசிரி யர்கள் குருசித்திர சண்முக பாரதி, சண்முகப்பிரியா, சாம்சன் லாரன்ஸ், சண்முக வடிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி கரையில் நடந்த பேரிடர் ஒத்திகை பயிற்சியை நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள காலங்களில் ஏற்படும் பேரிடரில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று நெல்லை வண்ணார்பேட்டை, வி.கே.புரம், முக்கூடல், களக்காடு, கூத்தங்குழி ஆகிய 5 இடங்களில் தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மற்றும் பேரிடர் பயிற்சி பெற்றவர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்களுடன் இணைந்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி கரையில் நடந்த பேரிடர் ஒத்திகை பயிற்சியை நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.

    ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் அதில் சிக்கி தவிப்பவர்களை தண்ணீர் கேன், கம்பு, டியூப் உள்ளிட்ட எளிமையான பொருட்கள், பயனற்ற பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் தண்ணீரில் மூழ்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு தத்ரூபமாக முதல் உதவி சிகிச்சை அளித்துக் காட்டினர்.

    இதனை பார்வையிட்ட பொது–மக்களிடம் ஒவ்வொருவரும் கட்டாயம் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    தொடர்ந்து மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் என்ன? என்பதை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள், பாளை தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் பால–சுப்பிரமணியன், தேசிய பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளத்தில் சிக்கும் போது பொதுமக்கள் தனது உயிர்களையும் உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • ஏரியில் உள்ளே காணாமல் போனவர்களை தேடுவது, அவர்களை எவ்வாறு மீட்டு வெளியே கொண்டுவருவது போன்ற பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    அரியலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் ஜெயம்கொண்டம் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்பாளையம் வேலப்ப செட்டி ஏரியில் பெரம்பலூர் மாவட்ட அலுவலர் ஆலோசனைப்படி மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.

    உடையார்பாளையம் வருவாய் அலுவலர் பரிமளம் முன்னிலையில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அதிக அளவில் வெள்ளத்தில் சிக்கும் போது பொதுமக்கள் தனது உயிர்களையும் உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் அந்த இடத்தில் இருந்து விரைந்து வெளியேறுவதற்கு ஏதுவாகவும் அவர்களுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் மீட்பு பணி குழுவினர் ஏரியில் உள்ளே காணாமல் போனவர்களை தேடுவது, அவர்களை எவ்வாறு மீட்டு வெளியே கொண்டுவருவது அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது போன்றவற்றிற்கான செயல்முறை விளக்கத்துடன் போலி ஒத்திகை பயிற்சி நிகழ்ச்சி நடத்திக் காண்பித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×