என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vegetable"
- சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதா லும் முகூர்த்த நாட்கள் வருவதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.
- சபரிமலை சீசன் முடியும் வரை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த மாதம் வரை மழை மற்றும் பனி காரணமாக காய்கறிகள் வரத்து சீரற்ற நிலையில் இருந்தது. இதனால் தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான காய்கறி களுக்கு போதிய விலை கிடைக்க வில்லை. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதா லும் முகூர்த்த நாட்கள் வருவதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தை போலவே கேரளாவிற்கும் காய்கறிகள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் (கலர் காய்) ரூ.60க்கும், பச்சை கத்தரி ரூ.100க்கும் விற்பனையாகிறது. தக்காளி ஒரு பெட்டி ரூ.400, வெண்டை ஒரு கிலோ ரூ.50, புடலங்காய் ரூ.30, சுரைக்காய் ரூ.20, பூசணிக்காய் ரூ.20, அவரை ரூ.80, கொத்தவரக்காய் ரூ.30, முருங்கை ரூ.80, சம்பா பச்சை மிளகாய் ரூ.30, உருண்டை மிளகாய் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.80, பல்லாரி ரூ.60, கருணை க்கிழங்கு ரூ.60, சேனை க்கிழங்கு ரூ.60 என விற்பனையாகிறது.
மார்க்கெட் விலை யிலேயே இந்த நிலவரம் என்றால் சில்லரை க்கடைகளில் இதை விட சற்று கூடுதலாகவே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்து ள்ளனர். சபரிமலை சீசன் முடியும் வரை காய்கறிகள் விைல குறைய வாய்ப்பு இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- வெண்டை ரூ.60, சின்னவெங்காயம்-ரூ.90க்கு விற்பனை
- வரத்து குறைவு காரணமாக விலைகள் உயர்ந்தன
கோவை,
கோவை காய்கறி மார்க்கெட்டுக்கு ஊட்டி, மேட்டுப்பாளையம், ெதாண்டாமுத்தூர், ஆலாந்துறை, ஓட்டன் சத்திரம் மற்றும் கர்நாடகாவில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் பல மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் தீபாவளியை யொட்டி தொடர்ச்சியாக விடுமுறை இருந்ததால் வாகன போக்குவரத்தும் குறைந்து விட்டது.
இதனால் கர்நாடகாவில் இருந்து கோவை மார்க்கெட்டுக்கு வழக்கமாக கொண்டு வரப்படும் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மேலும் பல காய்கறிகள் வரவே இல்லை.
இதன் காரணமாக கோவை மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. முக்கிய காய்கறிகளின் விலை 20 சதவீதம் விலை அதிகரித்து காணப்படு கிறது.
சின்னவெங்காயம் கிலோ ரூ.90க்கும், பீன்ஸ் கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது. கடந்த சில தினங்க ளாக கிலோ ரூ.15க்கு விற்பனையாகி வந்த வெண்டைக்காய் இன்று கிலோ ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.
கோவை மார்க்கெட்டில் விற்பனையாகும் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
கேரட்-ரூ.40, பீன்ஸ்-ரூ.100, முட்டைகோஸ்-ரூ.20, பீட்ரூட்-ரூ.40, சவ்சவ்-ரூ.20, வெள்ளைபூசணி, அரசாணி-ரூ.15, எலுமிச்சை-ரூ.70, உருளைகிழங்கு-ரூ.50, சேப்பக்கிழங்கு-ரூ.80, சின்னவெங்காயம்-ரூ.90, பெரிய வெங்காயம்-ரூ.60, இஞ்சி-ரூ.100, சிறுகிழங்கு-ரூ.80க்கு விற்பனையாகிறது.
தக்காளி ரூ.50க்கும், ஆப்பிள் தக்காளி-ரூ.60க்கும், மிளகாய்-ரூ.40, பாகற்காய்-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.60க்கும், கத்தரி-ரூ.32, அவரை-ரூ.50, முருங்கைக்காய்-ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.
- பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை
- பெங்களூருவில் இருந்து வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு
கோவை,
ேகாவையில் மேட்டுப்பாளையம் ரோட்டில் எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மார்க்கெட், அண்ணா காய்கறி மார்க்கெட், கோவை தியாகி குமரன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
இந்த மார்க்கெட்டுகளுக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூர் பகுதிகளில் இருந்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகளும் வருகின்றன.
இதுதவிர கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கிணத்துக்கடவு, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். ெமாத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கோவை டி.கே.மார்க்கெட்டுக்கு பெங்களூர் பகுதியில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி, வெண்டைக்காய் உள்பட பல காய்கறிகள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன.
தற்போது மார்க்கெட்டில் சில காய்கறிகளின் விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்து காணப்படுகிறது. நேற்று வரை கிலோ ரூ.20க்கு விற்பனையாகி வந்த தக்காளி இன்று ரூ.5 உயர்ந்து கிலோ ரூ.25க்கு விற்பனையாகி வருகிறது.
இதேபோல் பெரிய வெங்காயம் நேற்று கிலோ ரூ.40க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ.20 உயர்ந்து, ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.
கோவை மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
பெரிய வெங்காயம்-ரூ.60, சின்னவெங்காயம்-ரூ.100, வெண்டைக்காய்-ரூ.40, தக்காளி-ரூ.25, கத்தரிக்காய்-ரூ.30, கேரட்-ரூ.50, மாங்காய்-ரூ.100, முருங்கைக்காய்-ரூ.120, பீன்ஸ்-ரூ.90, பீர்க்கங்காய்-ரூ.50, காலிபிளவர்-ரூ.30, எலுமிச்சை-ரூ.90க்கு விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளரி-ரூ.30, அரசாணிகாய்-ரூ.15, பாகற்காய்-ரூ.30, மிளகாய்-ரூ.40, உருளை-ரூ.40, சிறுகிழங்கு-ரூ.80, சேனைகிழங்கு-ரூ.60, கருணை கிழங்கு-ரூ.70, சேம்பு-ரூ.80, இஞ்சி-ரூ.120க்கு விற்பனையாகி வருகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோவை மார்க்கெட்டுக்கு பெங்களூருவில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு வரும்.
தற்போது அங்கு விளைச்சல் பாதித்துள்ள தால் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் கோவை மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து விற்பனையாகி வருகிறது என்றார்.
- வாழை இலை, கரும்பு, மஞ்சள் விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
- உழவர் சந்தைகளில் ஆயுத பூஜையையொட்டி காய்கறி விற்பனை களைகட்டியது.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தைகளில் ஆயுத பூஜையையொட்டி காய்கறி விற்பனை களைகட்டியது. முதலில் பூசணிக்காய், பின்னர் பூ, பழம், காய்கள் வரத்து அதிகரித்தது. கடந்த 20-ந் தேதி முதல் வாழை இலை, கரும்பு, மஞ்சள் விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
காய்கறி விளைச்சல் அதிகரிப்பால் சந்தைகளில் காய்கறி வரத்தும் அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக விற்பனை சூடுபிடித்தது. கடந்த 22-ந்தேதி வடக்கு உழவர் சந்தை வரத்து 31 டன்னும், தெற்கு உழவர் சந்தையில் 86 டன்னும் விற்பனைக்கு வந்தது.
வழக்கமாக வடக்கு உழவர் சந்தையில் 24 டன்னும், தெற்கு உழவர் சந்தையில் 75 டன்னும் விற்பனைக்கு வரும். காய்கறி வரத்து அதிகமாக இருந்த போதிலும் விற்பனையும் அதிகரித்தது. காய்கறிகளின் விலையும் உயரவில்லை. கடந்த வார விலையே தொடர்ந்தது.
- பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாகவே உள்ளது.
- பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாகவே உள்ளது. குறிப்பாக 'பீக்அவர்ஸ்' நேரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பல மணி நேரம் ஆகும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலில் வாகனம் சிக்கும் போது அதில் இருக்கும் பயணிகள் அலுவல் வேலைகளை செய்வது போன்ற காட்சிகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி இருந்தன.
இந்நிலையில் தற்போதும் அதுபோன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் நேரத்தை வீண் செய்யக்கூடாது என திட்டமிட்டு 3 கவர்களில் வைத்திருந்த காய்கறிகளை உறிக்க தொடங்கி உள்ளார். மேலும் அதனை புகைப்படமாக எடுத்து தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார். அவரது இந்த படம் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- விவசாயிகள் அனைவருக்கும் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
- முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு தோட்டக்க லைத்துறை அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
இதில் துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராசு, தோட்டக்கலை துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா, ராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.
இதில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
- காய்கறிகளின் விலை விபரங்களை வியாபாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
- தானியங்கி வானிலை ஆய்வு மையத்தை ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி வட்டத்திற் குட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில், எடக்குடி வடபாதி, தென்னலக்குடி, கடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை , உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வேளாண் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வைத்தீஸ்வரன்கோயில் துணை வேளாண் விரிவாக்க மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விதை இருப்பு விவரங்களை கேட்டறிந்தார். விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இடுபொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா என வேளாண்மை துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வைத்தீஸ்வரன் கோயில் விதை சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விதை சுத்திகரிப்பு பணியினை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக தரமான விதைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார்.
பின்னர் எடக்குடி வடபாதி கிராமத்தில் விவசாயி ஒருவர் பயிரிடப்பட்டுள்ள பருத்திக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையுமா என்பதனை வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, தென்னலக்குடி கிராமத்தில் தானியங்கி வானிலை ஆய்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையினை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் மற்றும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகளின் விலை விபரங்கள் வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். உழவர் சந்தை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதனையும் ஆய்வு செய்தார். மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் (வேளாண் வணிகம்); வெற்றிவேலன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் , வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், தோட்டக்கலைத்துறை குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஓமலூர் வட்டார தோட்டக்கலை அதிகாரிகள், கிராமங்களில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறு, குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி குறுகிய கால பயிர்களான காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்ய ஊக்கபடுத்தி வருகின்றனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் தோட்டக்கலை துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஓமலூர் வட்டார தோட்டக்கலை அதிகாரிகள், கிராமங்களில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறு, குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி குறுகிய கால பயிர்களான காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்ய ஊக்கபடுத்தி வருகின்றனர்.
காய்கறி சாகுபடி குறைந்தது
ஆனால் கடந்த ஓராண்டாக ஓமலூர் வட்டார விவசாயிகள் பணப் பயிர்களையே அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். அதனால் தற்போது தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் காய்கறி சாகுபடி குறைந்து, விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பயிற்சி
இந்த நிலையில் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள், கீரைகள் சாகுபடி செய்வதற்கான பயிற்சி முகாமை ஓமலூர் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை நடத்தியது. இந்த முகாமில் பொது மக்கள் தங்களது வீடுகளில் மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைத்து காய்கறிகள் சாகுபடி செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் இயற்கையான முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லாத காய்கறிகளை அறுவடை செய்து சாப்பிடலாம் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைக்க தேவையான பைகள், விதைகள், நார் கழிவுகள், செடிகளின் நாற்றுகள், உயிர் உரங்கள் ஆகிய அனைத்தும் அடங்கிய ஒரு தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், மாடி தோட்ட தொகுப்புகளை வாங்கி சென்று வீடுகளில் காய்கறிகள் சாகுபடி செய்து, வீட்டிற்கு தேவையான காய்கறிகளை விளைவித்து பயனடையலாம். மேலும் அதிகளவில் சாகுபடி செய்து விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதவிகள்
மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து பொதுமக்கள் தரப்பில் பல்வேறு சந்தேகங்கள் கேட்கப்பட்டது. அப்போது அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மழைக்காலங்களில் உருளைக்கிழங்கு கேரட், பீன்ஸ் ஆகியவற்றில் நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
- பேசிலோமைசீஸ் கலவையை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 கிலோ தொழுவூரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் பருவமழைக்காலம் நடக்கிறது. இதனால் பயிர்களில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அபாயம் அதிகம் உள்ளது. எனவே அங்கு உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களை ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் மேலாண்மை மூலம் தற்காத்து கொள்வது எப்படி என்பது தொடர்பாக கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேலாண்மை அறிவியல் நிலைய அதிகாரிகள் செயல்விளக்கம் செய்து காட்டினர்.
அப்போது மழைக்காலங்களில் உருளைக்கிழங்கு கேரட், பீன்ஸ், முட்டைக்கோசு மற்றும் சைனீஸ் காய்கறி ஆகியவற்றில் நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே ட்ரைக்கோ டெர்மா உள்ளிட்ட நுண்ணுயிர் கலவைகளை ஒரு ஏக்கருக்கு 2 புள்ளி வீதம் 5 கிலோவை, 200 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயல் முழுவதும் தெளித்து வந்தால், நோய் வரும் முன்பாகவே தற்காத்து கொள்ளலாம்.
அதேபோல நோய் எதிர்ப்பு திறன் மிகுந்த பயிர் வகைகளை பயிரிடுவது, பரிந்துரைக்கப்பட்ட அளவில் பூஞ்சன கொல்லிகளை சரியான கால இடைவெளியில் பயன்படுத்தி ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.
அதிலும் குறிப்பாக கேரட், உருளைக்கிழங்கு பயிர்களில் மிகவும் சவாலாக உள்ள நூல் புழுக்களை பேசிலோமைசீஸ் கலவையை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 கிலோ தொழுவூரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
மேலும் வரப்பு ஓரங்களில் கடுகு, செண்டுமல்லி ஆகிய பூச்சிகளை கவரும் பொறிபயிர்கள் பயிரிட்டு, அங்கு ஏக்கருக்கு 2 எண்கள் சோலார் விளக்கு பொறி, லிட்டருக்கு 12 எண்கள் மஞ்சள் ஒட்டு பொறிகளை பயன்படுத்தி ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை களை செய்தால், விவசாயிகள் செலவினங்களை குறைத்து பயனடைய முடியும் என்று அதிகாரிகள் நேரடி செயல் விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனர்.
- காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
- தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை:
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதேபோல் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.