என் மலர்
நீங்கள் தேடியது "leopard"
- சிறுத்தைகளை விஜயவாடா உயிரியல் பூங்கா மற்றும் வன சரணாலயத்தில் வனத்துறையினர்விட்டனர்.
- பக்தர்களின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக அப்பகுதியில் சுற்றி தெரியும் சிறுத்தையை பிடிக்க வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் 6 வயது சிறுமியை சிறுத்தை கடித்து கொன்றது.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறையினர் சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க நடைபாதை அருகே இரும்பு கூண்டுகளை வைத்தனர். இதில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கின.
மேலும் 200 கேமராக்களை பொருத்தி சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கம்பு வழங்கப்பட்டது.
கூண்டில் சிக்கிய சிறுத்தைகளை வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் அடைத்தனர். சிறுமியை கொன்ற சிறுத்தை எது என்பதை அறிய சிறுத்தைகளின் முடி ரத்தம் உள்ளிட்டவைகள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் 2 சிறுத்தைகளின் டி என் ஏ பரிசோதனை அறிக்கை வந்தது. அறிக்கையில் 2 சிறுத்தைகளும் சிறுமையை கொல்லவில்லை என தெரியவந்தது.
இதையடுத்து சிறுத்தைகளை விஜயவாடா உயிரியல் பூங்கா மற்றும் வன சரணாலயத்தில் வனத்துறையினர் விட்டனர்.
மற்ற சிறுத்தைகளின் டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை விரைவில் வர உள்ளது. அதற்குப் பிறகு சிறுமியை கொன்ற சிறுத்தை எது என தெரியவரும்.
இந்நிலையில் நேற்று இரவு மலைப்பாதையின் 15-வது திருப்பத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனை வாகனங்களில் சென்ற பக்தர்கள் பார்த்தனர்.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
சேஷாசல வனப்பகுதியில் உள்ள ஒரு சில சிறுத்தைகள் திருப்பதி மலைபாதை அருகே வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பக்தர்களின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக அப்பகுதியில் சுற்றி தெரியும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பக்தர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கேர்மாளம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
- 2-வது முறையாக மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் கேர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட காட்டடி அருகே உள்ள வேடர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் 15 ஆடுகள், 5 மாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது பட்டியல் இருந்த 11 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கேர்மாளம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுத்தை கால் தடம் பதிவானதை கண்டு பிடித்தனர். இதையடுத்து சிறுத்தை தான் 11 ஆடுகளை கடித்து கொன்றது உறுதியானது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு 11 மணி அளவில் ராஜன் தோட்டத்திற்கு மீண்டும் சிறுத்தை வந்துள்ளது. அங்கு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை சிறுத்தை கடித்துள்ளது. மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு ராஜன் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்களை பார்த்ததும் சிறுத்தை அங்கிருந்து ஓடி வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. மீண்டும் சிறுத்தை வந்ததை கண்டு ராஜன் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தை கடித்ததில் கன்று குட்டிக்கு காது கழுத்தில் காயம் ஏற்பட்டது.
அங்கிருக்கும் வீடுகள் தனித்தனியாக வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால், சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி கால்நடைகளை வேட்டையாடி மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விடுகிறது.
2-வது முறையாக மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். உடனடியாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து கே2-வது முறையாக மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். கேர்மாளம் வனத்துறையினர் அந்தப்பகுதியில் முகாமிட்டு முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளனர்.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தை என தெரிய வந்தது.
- வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதைப்போல் சிறுத்தை, புலிகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.
இந்நிலையில் ஏர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட காட்டடி அருகே உள்ள வேடர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் 15 ஆடுகள், 5 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார்.
இன்று காலை எழுந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 11 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடுகளின் கழுத்துகளில் மர்ம விலங்கு ஆழமாக கடித்த தடயங்கள் இருந்தன.
இதுகுறித்து ஏர்மாளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தை என தெரிய வந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயி ராஜா பலியான ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
- இறந்த ஆடுகளின் கழுத்து பகுதியில் மர்ம விலங்கு கடித்து இருந்தது.
- சிறுத்தைப்புலி நடமாட்டத்துக்கு வனத்துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
பூண்டி ஏரிக்கரை அருகே காட்டுப்பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள மோவூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் வீடுகளில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கிராமத்தைச் சேர்ந்த ரஜினி என்வரின் 8 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றுவிட்டு சென்று விட்டது. இன்று காலை ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு ரஜினி அதிர்ச்சி அடைந்தார்.
இறந்த ஆடுகளின் கழுத்து பகுதியில் மர்ம விலங்கு கடித்து இருந்தது. எனவே ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றுவிட்டு சென்றதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது. தகவல் அறிந்ததும் வன அலுவலர் விஜயசாரதி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் பீமன் தோப்பு கால்நடை மருத்துவர் சரவணகுமார், கால்நடை ஆய்வாளர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளின் உடல்களை ஆய்வு செய்தனர்.
சிறுத்தைப்புலி நடமாட்டத்துக்கு வனத்துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். எனினும் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து வனத்துறை ஊழியர்கள் காட்டுப்பகுதிக்குள் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சிறுத்தைப்புலி கால் தடம் பதிவாகி உள்ளதா என்று பார்வையிட்டு வருகின்றனர். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும் மோவூர் கிராம மக்கள் சிறுத்தை புலி பீதியால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
- நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிப்பிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற 4 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
இதையடுத்து சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடியது. பெற்றோர்களுடன் அலிபிரி நடைபாதையில் நடந்த சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.
சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. இந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் நடைபாதையில் செல்வதை தவிர்த்தனர். இதனால் நடைபாதையில் செல்லும் பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்தது.
கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தை எது என்பதை கண்டுபிடிக்க அவைகளின் நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரபணு பரிசோதனை வர தாமதம் ஆகி வருகிறது.
மரபணு பரிசோதனை அறிக்கையில் கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளும் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தால் மீண்டும் சிறுத்தைகளை வனப்பகுதியில் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் அலிபிரி நடைபாதை அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் மீண்டும் கூண்டு வைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி 15 ஆயிரம் கம்புகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன. கம்புகள் வந்த பிறகு பக்தர்களுக்கு அலிபிரி நடைபாதையில் கம்புகள் வழங்கப்படும்.
முழங்கால் மெட்டு என்ற பகுதியில் பக்தர்களிடம் இருந்து கம்பு மீண்டும் பெறப்பட்டு அலிபிரி நடைபாதைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 81,655 பேர் தரிசனம் செய்தனர். 38,882 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3. 84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
- ஒரு சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் பதிவாகி இருந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் சிறுமியை திடீரென சிறுத்தை இழுத்துச் சென்று கொன்றது.
இதனையடுத்து வைக்கப்பட்ட கூண்டில் 2 சிறுத்தைகள் சிக்கியது.
குழந்தையை கொன்றது இந்த சிறுத்தைகள் தானா என்பது குறித்து தெரிந்துகொள்ள, சிறுத்தை ரத்த மாதிரிகள் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அலிப்பிரி நடைபாதையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து வனத்துறையினர் ஆங்காங்கே 300 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்தனர்.
அதன்படி நடைபாதை முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அலிப்பிரி நடைபாதையில் பொருத்தப்பட்ட 300 கண்காணிப்பு கேமராக்களில், நேற்று ஒரே நாளில் 50 கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது.
50 கேமராக்களில் பதிவான சிறுத்தை ஒன்று தானா? அல்லது சிறுத்தைகள் அதிகமாக உள்ளதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஒரு சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் பதிவாகி இருந்தது.
இது குறித்து திருப்பதி வனவிலங்கு மேலாண்மை வட்டத்தின் தலைமைப் பாதுகாவலர் நாகேஸ்வரராவ் கூறியதாவது:-
நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும்.
கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை கண்டறிந்து, நடைபாதைகளில் இருந்து விரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள சிறுத்தையின் தடவியல் மாதிரிகளின் அறிக்கை 15 நாட்களில் வந்து விடும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
- பகல் நேரங்களில் அங்கு உள்ள பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்து வருகிறது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே நொண்டி மேடு பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒரு சிறுத்தை நடமாடி வருகிறது. அது பகல் நேரங்களில் அங்கு உள்ள பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்து வருகிறது.
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வருவது கிராம மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர்.
ஊட்டி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சிறுத்தை நடமாட்டம் தொடரும் பட்சத்தில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
- டிரோன் கேமரா சிறுத்தை அருகில் கொண்டு செல்லும்போது, அது கீழே இறங்கி செல்வது பதிவாகி இருந்தது.
- சிறுத்தை இருந்த பகுதியில் மரங்கள், பாறைகள் ஆகிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் கட்டி வைத்துள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி ஊராட்சியில் வைரன்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டியுள்ள பெரிய கரட்டில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை ஒன்று நடமாடி வந்துள்ளது.
இதை பார்த்த கிராம மக்கள் அச்சத்தில் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணித்தனர்.
சிறுத்தை ஒரே இடத்தில் இல்லாமல் ஒவ்வொரு கரடாக மாறிமாறி சென்று வைரன்காடு பகுதியில் உள்ள கரட்டில் 2 நாட்களாக பதுங்கி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 4 ஆடுகளை சிறுத்தை வேட்டையாட முயன்றது.
அப்போது சிறுத்தையிடம் இருந்து தப்பிய 4 ஆடுகள் அங்குள்ள செங்குத்தான பாறைக்கு சென்று தஞ்சமடைந்தன. ஆனால் 4 ஆடுகளும் கீழே இறங்க முடியாமல் எட்டி எட்டி பார்த்தபடி பாறையிலேயே நின்றது. இரவு நேரமானதால் வனத்துறை அதிகாரிகள், ஆடுகள் இருந்த பகுதிக்கு செல்லாமல் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆடுகள் இருந்த பாறையின் மீது ஏறிய சிறுத்தை பாறை மீது பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனை டிரோன் கேமரா மூலம் வனத்துறை அதிகாரிகள் படம் பிடித்தனர். ஆடுகள் செங்குத்தான பாறை பகுதியில் இருந்ததால், சிறுத்தையால் ஆடுகளை வேட்டையாட முடியாமல், பாறையின் மேலே படுத்துக்கொண்டு ஆடுகளை கீழே விரட்டும் வகையில் அச்சுறுத்தி வந்துள்ளது.
இந்த நிலையில் டிரோன் கேமரா சிறுத்தை அருகில் கொண்டு செல்லும்போது, அது கீழே இறங்கி செல்வது பதிவாகி இருந்தது. இந்த நிலையில் காலை வனப்பகுதிக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், ஆடுகளை பாதுகாப்பாக கீழே விரட்டிவிட்டு, சிறுத்தை படுத்திருந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு சிறுத்தையின் முடி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுத்தை இருந்த பகுதியில் மரங்கள், பாறைகள் ஆகிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் கட்டி வைத்துள்ளனர். தொடர்ந்து வனத்தை சுற்றிலும் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை இருப்பதை உறுதி செய்துள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து அங்கேயே தங்கி கண்காணித்து வருகின்றனர்.
- பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பேருந்து மூலமாக செல்ல சாலைகளும் உள்ளன
- திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ளது திருப்பதி.
இந்துக்களுக்கு மிக முக்கிய புனித தலமாக கருதப்படும் திருப்பதியில் உள்ள திருமலை எனும் மலையில் உள்ள உலக புகழ் பெற்ற கோயிலில், இந்துக்கள் வழிபடும் தெய்வமான திருமாலின் சன்னதி உள்ளது.
இவரை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி அங்கு வந்து செல்கின்றனர். இக்கோயிலின் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) எனும் வாரியம் மேற்கொண்டு வருகிறது.
திருப்பதியில் இருந்து மலை மீது உள்ள திருமலைக்கு பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பேருந்து மற்றும் 2 அல்லது 4 சக்கர வாகனங்கள் மூலமாக செல்வதற்கு சாலைகளும் உள்ளன. படிக்கட்டுகள் வழியாக மேல் திருப்பதிக்கு செல்ல சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.
சென்ற வாரம் அங்கு படிக்கட்டு மார்க்கமாக திருமலைக்கு சென்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த லக்ஷிதா எனும் 6-வயது சிறுமி பெற்றோரிடமிருந்து சற்று விலகி நடந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மலைப்பகுதியிலுள்ள காடுகளில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று அச்சிறுமியை தாக்கியதில், அச்சிறுமி உயிரிழந்தாள்.
இச்சம்பவத்திற்கு பிறகு திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்தே செல்ல விரும்பும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை தேவஸ்தான வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது.
வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:
"நடந்து செல்ல விரும்பும் பக்தர்கள் உணவு பண்டங்களை வழியில் இரைக்க கூடாது. நடைபயணமாக படிக்கட்டில் ஏறிச்செல்லும் பக்தர்கள் இனி 100 பேர் கொண்ட ஒரு குழுவாக ஒன்றாக இணைந்துதான் செல்ல வேண்டும். தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு கம்பு கொடுக்கப்படும்," இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
திருமலையிலுள்ள காடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுக்களின் பக்கவாட்டில் உள்ள திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் வாரியம் தெரிவிக்கிறது.
- நடைபாதை அருகில் சுற்றித்திரிந்த சிறுத்தையை பார்த்து பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
- சிறுத்தை எந்த ஒரு அசைவும் இன்றி பயமுறுத்தியபடி நின்றது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் அலிபிரி நடைபாதையில், சிறுமியை சிறுத்தை கொன்றது. இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்ட கூண்டில் பெரிய சிறுத்தை ஒன்று சிக்கியது.
இது குழந்தையை கவ்வி சென்றிருந்தால் முழுவதுமாக சாப்பிட்டிருக்கும். குழந்தையை கொன்றது இதைவிட சிறிய சிறுத்தையாகத்தான் இருக்க முடியும்.
எனவே மேலும் ஒரு கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சிறுமியை கொன்ற சிறுத்தை அலிபிரி நடைபாதையில் நடமாடியது.
நடைபாதை அருகில் சுற்றித்திரிந்த சிறுத்தையை பார்த்து பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிறுத்தையின் மீது பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் பொருட்களை தூக்கி வீசி எறிந்தனர்.
ஆனால் சிறுத்தை எந்த ஒரு அசைவும் இன்றி பயமுறுத்தியபடி நின்றது. பக்தர்கள் கூச்சலிட்டபடி அங்குமிங்கும் சிதறி ஓடியதால் பதட்டமான சூழல் நிலவியது. தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து அங்கிருந்த சிறுத்தை வனப்பகுதிக்கு ஓடியது.
சிறுத்தையின் நடமாட்டத்தால் நடைபாதையில் சென்றவர்கள் ஆங்காங்கே பயத்துடன் கூட்டம், கூட்டமாக நின்றனர்.
அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது சுற்றி தெரியும் சிறுத்தை தான் குழந்தையை கொன்றது என தெரிய வந்துள்ளது.
இதனால் நடைபாதை வழியாக பக்தர்கள் செல்ல அச்சம் அடைந்தனர்.