என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் பீதி"

    • கோவிந்தசாலை பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • உயிரிழப்பு ஏற்பட்ட கோவிந்தசாலை பகுதிக்கு, முத்தரையர்பாளையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகர பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறி வந்தனர்.

    கடந்த மாதம் 5-ந்தேதி உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதியில் குடிநீரை குடித்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    நேற்று முன்தினம் மீண்டும் மேலும் பலருக்கும் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் வழியில் கோவிந்தசாலை பகத்சிங் வீதி பூசைமுத்து (வயது43), காமராஜ் வீதி மூதாட்டி பார்வதி(65), பாரதிபுரம் மெயின்ரோடு கோவிந்தசாமி(70) ஆகியோர் இறந்தனர்.

    கடந்த 3 நாட்களாக வாந்தி மற்றும் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் 31 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 40 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

    வயிற்று போக்கால் 3 பேர் இறந்த சம்பவத்தால் உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி மக்கள் பீதியடைந்தனர்.

    கோவிந்தசாலை பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதமாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. ஒரு சில நாட்கள் தண்ணீர் நன்றாக வருகிறது. அடுத்த சில நாட்கள் கழிவு நீர் கலந்து வருகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்து வருகிறது.

    இதுகுறித்து பல முறை நகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இப்போது நடந்த உயிரிழப்பிற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியமே என குற்றம் சாட்டினர்.

    உயிரிழப்பு ஏற்பட்ட கோவிந்தசாலை பகுதிக்கு, முத்தரையர்பாளையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் ஏதேனும் கழிவு நீர் கலந்துள்ளதா என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மேலும் அந்த பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    பாதிக்கப்பட்ட பகுதியில் குளோரின் கலந்த குடிநீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே குடிநீரில் 0.2 பி.பி.எம்., குளோரின் கலந்து வழங்கப்படும் நிலையில், தற்போது 0.4 பி.பி.எம்., ஆக அதிகரித்து வழங்கப்படுகிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பிளீச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    குடிநீர் குழாயை முழுவதுமாக ஆய்வு செய்துவிட்டோம். கழிவு நீர் கலந்ததாக தெரியவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் ஆய்விற்காக சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சில தினங்களில் கிடைக்கும். அதன்பிறகே, வாந்தி, வயிற்று போக்குக்கு காரணம் தெரியவரும். பொதுப்பணித்துறையின் பறக்கும் படையினர் வீடு, வீடாக சென்று குடிநீர் துர்நாற்றத்துடன் வருகிறதா என்றும், துர்நாற்றம் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சுகாதாரத்துறை சார்பில் வாந்தி, பேதி ஏற்பட்ட கோவிந்த சாலை பகுதியில் டாக்டர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • புலிமான்குளம் செல்லும் அணுகு சாலையில் இன்று அதிகாலை கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.
    • வனத்துறையினர் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி பகுதியில் புலிமான்குளம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் இருக்கிறது.

    இங்குள்ள ராமன்குடியில் இருந்து ஆத்தாங்கரை பள்ளிவாசல் செல்லும் மெயின் சாலையில் இருந்து புலிமான்குளம் செல்லும் அணுகு சாலையில் இன்று அதிகாலை கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியதால் மக்கள் அந்த பகுதியில் குவிந்து கரடி நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

    தகவல் அறிந்து உவரி போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் கரடி மாயமாகிவிட்டது. தற்போது வனத்துறையினர் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உணவு தட்டுப்பாடு, வாழ்விட அழிப்பு அல்லது மனிதர்களின் அத்துமீறல் போன்ற காரணங்களால் வனவிலங்குகள் இது போன்று குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகிறது.

    தற்போது இந்த கரடியால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பாக, அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதனிடையே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கரடியை கண்டால் அதற்கு அருகில் செல்லாமல் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாநகர் பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.
    • தற்போது மீண்டும் பல்லடம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள நந்தவன தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாடியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டபோது அதில் சிறுத்தையின் உருவம் பதிவாகி இருந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நள்ளிரவு நந்தவன தோட்டம் பகுதி வழியாக ஒரு விலங்கு வேகமாக சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நந்தவன குட்டைக்குள் சென்று விட்டது. சந்தேகம் அடைந்து சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தோம். அதில் பதிவான உருவம் சிறுத்தை என்பது தெரிந்தது. குட்டை பகுதியில் சிறுத்தையின் காலடி தடங்கள் காணப்படுகிறது. இவற்றை வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தை இருந்தால் அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். மேலும் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிறுத்தை நடமாட்டம் இருந்தால் அதனை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாநகர் பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு அதனை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தற்போது மீண்டும் பல்லடம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மூன்று மாதங்களாக 9 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது.
    • யாரும் வனப்பகுதிக்கு வர வேண்டாம் எனவும் வனத்து றையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஏக்கல்நத்தம் வனப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 9 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது அப்பகுதியில் ஊருக்கள் புகுந்து விவ சாய நிலங்களையும், பயிர்க ளையும் நாசம் செய்து வந்தது.

    இந்த நிலையில் காட்டு யானைகளை வனத்துறையினர் ஏக்கல்நத்தம் வனப்பகுதிக்கு விரட்டி இருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் 9 காட்டு யானைகளும் தமிழக எல்லை வனப்பகுதியான எப்ரி பகுதியில் முகா மிட்டுள்ளது. மீண்டும் 9 காட்டு யானைகள் எப்ரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகளும் பீதி அடைந்துள்ளனர். காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வேறு வனப்பகுதி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் எப்ரி வனப்பகு தியில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், ஆடு, மாடுகள் மேய்ப்பவர்கள் யாரும் வனப்பகுதிக்கு வர வேண்டாம் எனவும் வனத்து றையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதிப்பு மிக்க செல்போன் மற்றும் அவர்கள் வைத்திருந்த பணங்களை பறித்து சென்றனர்.
    • போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை

    சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியை அடுத்துள்ள சங்கோதி பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் பட்டா கத்தி மற்றும் இரும்பு தடியுடன் ஒவ்வொரு வீடாக பூட்டை உடைத்து உள்ளே வீட்டில் இருப்பவர்களை மிரட்டி அங்கிருந்த விலை மதிப்பு மிக்க செல்போன் மற்றும் அவர்கள் வைத்திருந்த பணங்களை பறித்து சென்றனர்.

    இதேபோன்று சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வருவதற்கு உள்ளாகவே அங்கிருந்த கொள்ளையர்கள் அனைவரும் தப்பி ஓடினர். இச்சம்பவத்தில் இரண்டு வட மாநில தொழிலாளர்கள் கத்திflகுத்து காயம் அடைந்தனர்.

    பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களிடம் கருமத்தம்பட்டி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் பற்றிய உருவப் படத்தை வைத்து அடையாளம் காணும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். 

    • அருப்புக்கோட்டை பகுதியில் அதிகரிக்கும் கொள்ளை-வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் மட்டுமே சமூக விரோத சம்பவங்கள் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக வழக்கத்தை விட குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமூக விரோதிகள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளை, மோட்டார் சைக்கிள் திருட்டு போன்றவற்றில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களில் அருப்புக்கோட்டை பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, பழக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல் அஜித் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள மீன் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் பாலமுருகன் (29). மளிகை கடை நடத்தி வரும் இவரது ரூ. 1 அரை லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து அருப்புக்கோட்டை டவுன் மற்றும் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் சரண்யா என்பவரது பழக்கடையில் புகுந்த மர்ம நபர்கள் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதுபோன்று அருப்புக்கோட்டை பகுதிகளில் நாள்தோறும் கொள்ளை, வழிப்பறி போன்றவை நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக களத்தில் இறங்கி சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் மட்டுமே சமூக விரோத சம்பவங்கள் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கொடுமுடி தீயணைப்பு துறை அதிகாரிகள் குழுவினர் ஊடையம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • சிறுத்தையின் கால் தடம் ஏதாவது பதிந்து உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே ஊடையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் நாய் ஒன்று நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போனது. இந்த நிலையில் ஊடையம் கிராமத்திற்கு சிறுத்தை ஒன்று வந்து காணாமல் போன நாயை கொன்று தின்று விட்டதாகவும், சிறுத்தையை ஈரோடு மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி, கொளந்தபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் நேரில் பார்த்ததாகவும், தொிவித்தார்.

    எனவே வேலம்பாளையம், முத்தூர், அஞ்சூர், கார்வழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது. மேலும் சமூக வலைத்தளங்களில் சிறுத்தை ஒரு மரத்தின் மேல் உட்கார்ந்து இருப்பது போல் தவறாக சித்தரிக்கப்பட்ட படம் ஒன்று வெளியானது.

    இதனால் ஊடையம் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த தாராபுரம் கோட்டம் மற்றும் காங்கயம் துணை கோட்ட வனத்துறை அதிகாரிகள், கொடுமுடி தீயணைப்பு துறை அதிகாரிகள் குழுவினர் ஊடையம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஊடையம் கிராம பகுதிகளில் கரும்புத்தோட்டம், வண்டி தடம் பாதை, மண் சாலை பகுதிகளில் சிறுத்தை நடமாடி, உலாவியதற்கான அறிகுறி ஏதாவது கிடைக்கிறதா என்றும், சிறுத்தையின் கால் தடம் ஏதாவது பதிந்து உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் ஊடையம் சுற்றுவட்டார கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் வனத்துறை அதிகாரிகள் குழுவினர்களுக்கு கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் ஊடையம் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்களிடம் கூறியதாவது:-

    ஊடையம் கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எவ்வித அறிகுறியும் மற்றும் எவ்விதமான தகவலும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் கிராம பொதுமக்கள் உடனடியாக வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது போல் சமூக வலைதளங்களில் வெளியான தகவல் குறித்து கிராம பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். வீண் வதந்திகளை உண்மை என நம்பி பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. இருப்பினும் இப்பகுதி கிராம பொதுமக்கள் அனைவரும் பகல், இரவு நேரங்களில் எச்சரிக்கையாகவும், மிகுந்த பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்தபோது அந்த 2 ஆசாமிகளும் திடீரென பாலாமணி ஓட்டிச் சென்ற மொபட்டை வழிமறித்தனர்.
    • காங்கயம் போலீஸ் நிலையத்தில் பாலாமணி புகார் செய்தார்.

     காங்கயம்:

    காங்கயம் நகரம், மூர்த்திரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி பாலாமணி (வயது 44). இந்தநிலையில் பாலாமணி நேற்று முன்தினம் மதியம் காடையூர் - கல்லாங்காட்டு புதூர் செல்லும் சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பாலாமணியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 ஆசாமிகள் வந்தனர். கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்தபோது அந்த 2 ஆசாமிகளும் திடீரென பாலாமணி ஓட்டிச் சென்ற மொபட்டை வழிமறித்தனர்.

    பின்னர், பாலாமணியை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானார்கள். இதுகுறித்து காங்கயம் போலீஸ் நிலையத்தில் பாலாமணி புகார் செய்தார்.

    அதன் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். காங்கயம் பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

    • அதிவேகத்தில் செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்கள் பீதி
    • வெள்ளமடம் இணைப்பு சாலை வழியாக புகுந்து நாகர்கோவில் வந்து விடுகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரை 4 வழிச் சாலை பணிகள் முடிந்து உள்ளது.

    இதனால் காவல்கிணறில் இருந்து நாகர்கோவில் வரும் பல கனரக வாகனங்கள் அனைத்தும் தற்போது இந்த வழியாகவே வருகிறது.

    அதிக பாரம் ஏற்றியபடி வரும் இந்த வாகனங்கள் சாலையில் அதிவேகமாக செல்கிறது. இவ்வாறு செல்லும் போது அந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    இதற்கிடையே இந்த 4 வழிச்சாலையை பயன்படுத்தும் கார், வேன் மற்றும் பஸ்கள் வெள்ளமடம் இணைப்பு சாலை வழியாக புகுந்து நாகர்கோவில் வந்து விடுகிறார்கள்.

    இதுபோல ஆரல்வாய் மொழி, குமாரபுரம் சாலை யிலும், திருப்பதிசாரம், வெள்ளமடம் சாலை வழியாகவும் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது.

    இவ்வாறு செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதோடு, இணைப்பு சாலைகளில் திரும்பும் போது அடிக்கடி விபத்துக் கள் ஏற்படுகிறது.

    இதுபோல வெள்ள மடம்-குலசேகரன்புதூர் ரோட்டில் 4 வழிச்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை செங்குத்தாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாககனங்களும் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி கொள்கிறது.

    இப்படி விபத்துக்களில் சிக்கி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளுக்கு செல் வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி இப்பகுதி மக்களுக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    இச்சாைலையில் விபத் துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகமும், சாலை போக்கு வரத்து துறையும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும்.

    மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பகலில் வீடுகளை பூட்டிவிட்டு விவசாய நிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர்.
    • கிராமத்தில் சாமி குத்தம் காரணமாக தீ பற்றி எரிவதாக வதந்தி பரவியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மண்டலத்தில் கொத்தாசனம்பட்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அதிக அளவில் விவசாயிகள் வசித்து வருகின்றனர்.

    மேலும் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. விவசாய நிலங்களுக்கு அருகில் வைக்கோல்களை தனியாக அடுக்கி வைத்துள்ளனர்.

    பகலில் வீடுகளை பூட்டிவிட்டு விவசாய நிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்ட வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

    மேலும் விவசாய நிலத்தில் இருந்த வைக்கோல்களும் பற்றி எரிந்தன. ஆனால் இவற்றிற்கு யாரும் தீ வைத்ததாக தெரியவில்லை. திடீர் திடீரென வீடுகளில் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    கிராமத்தில் சாமி குத்தம் காரணமாக தீ பற்றி எரிவதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அங்குள்ள கோவிலில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். மேலும் வீடுகளிலும் விளக்கேற்றி பரிகார பூஜை செய்தனர்.

    அதற்கு பிறகும் பூட்டிய வீடுகள் தீ பிடித்து எரிந்தது.

    இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து நேரடியாக ஆய்வு செய்தனர்.

    அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வகத்தின் அறிக்கை வந்தவுடன் தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியவரும் என திருப்பதி கலெக்டர் கூறினார்.

    இதுகுறித்து சந்திரகிரி செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி எம்.எல்.ஏ கூறுகையில், தீ விபத்துகளின் மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம். காரணம் விரைவில் தெரியவரும். அடுத்து என்ன செய்வது என்று பார்ப்போம். ஆங்காங்கே எரியும் தீ பற்றி வரும் கட்டுக்கதைகள், வதந்திகளை நம்பாதீர்கள், அதற்கான காரணங்கள் விரைவில் தெரிய வரும், வேறு கிராமத்தில் இப்படி நடக்காமல் கவனமாக இருப்போம்.

    மாவட்ட வருவாய் அலுவலர் கனக நரசா ரெட்டி, சுற்றுச்சூழல் பேராசிரியர் தாமோதர், தீயணைப்பு அலுவலர் ரமணய்யா, போலீஸ் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி தீ விபத்து எரிவது குறித்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது.
    • இரவு நேரங்களில் பெண்கள் தனியாக செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் சுற்றி உள்ள பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, டாஸ்மார்க் அருகே ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு திட்டக்குடி அருகே அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சிம்ரன் (28), ராஜவேணி (32), பரிமளா (36) ஆகிய 3 பேரும் ஸ்கூட்டியில் ராமநத்தத்தில் இருந்து அரங்கூர் சென்ற போது திட்டக்குடி ராம நத்தம் நெடுஞ்சா லையில் உள்ள பெரங்கியம் அரங்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடை யாளம் தெரியாத, 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டியை ஓட்டி வந்த சிம்ரன் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சித்தனர்.

    ஆனால் திருட முடியவி ல்லை இந்த வழிப்பறியில் ஸ்கூட்டியில் வந்த 3 பெண்களும் கீழே விழு ந்ததில், ராஜவேணி படுகா யம் அடைந்தார். மற்ற 2 பெண்கள் சிறு காயமும் ஏற்பட்டு ராமநத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ராஜவேணி மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ஒரு வாரத்தில் மட்டும் திட்டக்குடி மற்றும் வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிபறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் பெண்கள் தனியாக ஸ்கூட்டியில் செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட காவல் துறையினர் விரைந்து இந்த வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிக்கப்பட்டது.
    • தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    மதுரை

    மதுரை விமான நிலையம் அருகே உள்ள சம்பக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருமணி(வயது34). இவர் அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கொள்ளை கும்பல் திடீரென குருமணியை மறித்து சரமாரியாக தாக்கினர்.

    தொடர்ந்து அவருடைய மோட்டார்சைக்கிள், செல்போனையும் பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியது. இதுகுறித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    அவனியாபுரத்தில் இருந்து விமான நிலையம், மண்டேலாநகர் செல்லும் சாலைகளில் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்திருக்கும். இதனை பயன்படுத்தி சாலையில் மறைந்திருந்து சமூக விரோதிகள் வாகன ஓட்டிகளையும், அந்த வழியாக நடந்து செல்வோரையும் தாக்கி நகை-பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    குறிப்பாக அவனியாபுரம் ரிங்ரோடு, மண்டேலாநகர், அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோடுகளில் அண்மை காலமாக வழிப்பறி சம்ப வங்கள் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் பீதியுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அவனியாபுரம போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது. வில்லா புரம் ஹவுசிங்போர்டு, மீனாட்சி நகர், அவனியா புரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்வோரை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வரும் கும்பல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    எனவே ேபாலீசார் வழிப்பறி சம்பவத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    ×