என் மலர்
நீங்கள் தேடியது "கரடி"
- நிழற்குடைக்குள் நின்றிருந்த கரடி திடீரென சாலையில் வேகமாக ஓடி வந்தது.
- கரடி சர்வசாதாரணமாக சாலையில் ஓடுவதும், நடப்பதுமாக இருந்தது.
குன்னூர்:
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் பகுதி உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று ராணுவ முகாம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் வந்தது.
ஊருக்குள் வந்த கரடி, அந்த பகுதியில் உள்ள சாலையில் சிறிது நேரம் நடந்து சென்றது. சில சமயங்களில் சாலையில் அங்கும் இங்குமாக ஓடியபடி இருந்த கரடி அங்குள்ள நிழற்குடைக்குள் சென்று நின்று கொண்டது.
அந்த சமயம் அவ்வழியாக வாகனங்கள் சென்றன. ஆனால் கரடி சர்வசாதாரணமாக சாலையில் ஓடுவதும், நடப்பதுமாக இருந்தது. கரடி நின்றதை பார்த்த வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் அந்த சாலையை கடந்து சென்றனர்.
நிழற்குடைக்குள் நின்றிருந்த கரடி திடீரென சாலையில் வேகமாக ஓடி வந்தது. அங்கு ஒரு நுழைவு வாயில் அருகே வந்ததும் நின்று விட்டது. அந்த நுழைவு வாயில் திறந்த நிலையில் கிடந்தது.
அதன் அருகே வந்த கரடி, நுழைவாயில் கதவின் மீது ஏறி, இறங்கி விளையாடி கொண்டிருந்தது.
சிறிது நேரம் கரடி இதுபோன்று செய்து கொண்டிருந்தது. பின்னர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து, அங்கிருந்து நகர்ந்து சென்றது.
குழந்தைகள் போல கரடி கேட்டின் மீது ஏறி, இறங்கி விளையாடியதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்து தங்களது செல்போனிலும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- புலிமான்குளம் செல்லும் அணுகு சாலையில் இன்று அதிகாலை கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.
- வனத்துறையினர் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி பகுதியில் புலிமான்குளம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் இருக்கிறது.
இங்குள்ள ராமன்குடியில் இருந்து ஆத்தாங்கரை பள்ளிவாசல் செல்லும் மெயின் சாலையில் இருந்து புலிமான்குளம் செல்லும் அணுகு சாலையில் இன்று அதிகாலை கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியதால் மக்கள் அந்த பகுதியில் குவிந்து கரடி நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
தகவல் அறிந்து உவரி போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் கரடி மாயமாகிவிட்டது. தற்போது வனத்துறையினர் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உணவு தட்டுப்பாடு, வாழ்விட அழிப்பு அல்லது மனிதர்களின் அத்துமீறல் போன்ற காரணங்களால் வனவிலங்குகள் இது போன்று குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகிறது.
தற்போது இந்த கரடியால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பாக, அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கரடியை கண்டால் அதற்கு அருகில் செல்லாமல் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- ஆசனூர் சாலையோரம் கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கரடி மிகவும் ஆபத்தான விலங்காகும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து பயிர்களையும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. இதே போல் சிறுத்தையும் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து கால் நடைகளை வேட்டையாடி வருகிறது. ஆனால் கரடி நடமாட்டம் ரொம்ப அரிதாகவே இருக்கும்.
இந்நிலையில் ஆசனூர் சாலையோரம் திடீரென கரடி ஒன்று நீண்ட நேரம் சுற்றிக் கொண்டிருந்தது. கரடி நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் அச்சத்தில் தங்களது வாகனத்தை நீண்ட தொலைவுக்கு முன்பே நிறுத்தி விட்டனர். சிறிது நேரம் ஆசனூர் சாலையை ஒட்டி அங்கும் இங்கும் சுற்றி திரிந்த கரடி பின்னர் மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது.
இதன் பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ஈரோடு வனப்பகுதியை பொருத்தவரை கரடிகள் நடமாட்டம் மிக அரிதாகவே இருக்கும். தற்போது ஆசனூர் சாலையோரம் கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரடி மிகவும் ஆபத்தான விலங்காகும். அது எந்த நேரம் மனிதர்களை தாக்கும் என்று சொல்ல முடியாது. எனவே ஆசனூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என அறிவித்துள்ளனர்.
- ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்கிய கரடி மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
- 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கரடி பிடிபட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர்பேட்டராயன் பகுதியில் ஊருக்குள் புகுந்து 2 பேரை தாக்கிய கரடி 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டது.
ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்கிய கரடி மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர், 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் வனத்துறை அலுவலர்களால் வைக்கப்பட்ட கூண்டில் கரடி பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆந்திர வனப்பகுதியில் கரடியை திறந்துவிட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
- கோவில் பகுதியில் முகாமிட்டு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
- மக்கள் பீதியில் இருந்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் கரடி வந்தது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள தெற்கு பாப்பன்குளம், ஆலடியூர், மணிமுத்தாறு போன்ற பகுதியில் அவ்வபோது மிளா, காட்டுப்பன்றி, யானை,
சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் இரவு நேரங்களில் சுற்றி திரிகின்றன.
இந்த பகுதிகளில் கரடி நடமாட்டம் என்பது சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இரவு நேரங்களில் அவை சாவகாசமாக வந்து பலாப்பழங்களை சாப்பிடுவதும், தெருக்களில் நடமாடுவதுமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் கரடி வந்தது. அதனை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மணிமுத்தாறு அருகே அண்ணா நகர் பகுதியில் உள்ள தங்கம்மன் கோவிலில் கரடி ஒன்று கோவில் வளாகத்தில் உள்ளே நுழைந்து சுற்றி திரிந்தது. கோவிலில் தீபம் ஏற்ற வைக்கப்பட்டிருந்த எண்ணெய் மற்றும் சுவாமிகளுக்கு படைக்கப்பட்டிருந்த சக்கரை பொங்கல் உள்ளிட்டவற்றை அந்த கரடி தின்றது.
இதுகுறித்தான காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்த தகவலை அப்பகுதி மக்கள் அம்பை வனத்துறையினருக்கு தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து சென்று கோவில் பகுதியில் முகாமிட்டு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- அப்பகுதியினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ள நிலையில், அந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே நெசவாளர் காலனியில், வயல் வெளியில் அமைந்துள்ள அக்னி சாஸ்தா கோவில் பகுதியில் நேற்றிரவு கரடி ஓன்று புகுந்தது. தொடர்ந்து அங்கும் இங்குமாக உலா வந்து பூஜை பொருட்களை சேதப்படுத்தியது. இந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.
மேலும் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு பாப்பான்குளம், கோல்டன் நகர், நெசவாளர் காலனி, கோல்டன் நகர் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர்ச்சியாக மலை அடிவார கிராம பகுதிகளில் கரடியின் நடமாட்டம் இருப்பதால் அதை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்குமாறு வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடையம் மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுத்தை, யானை, கரடி, உள்பட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ள நிலையில், இவற்றில் யானை மற்றும் கரடி இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.
இந்நிலையில் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பூவன்குறிச்சி என்ற கிராமத்தில் நேற்று இரவு ஒற்றைக் கரடியானது சுற்றி திரிந்தது. இதனை அப்பகுதியினர் செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதனால் அப்பகுதியினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ள நிலையில், அந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலையில் முள்ளம் பன்றி ஒன்றும் உலா வந்தது.
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக செல்லும் சாலை விளங்குகிறது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கரடி ஒன்று அங்குள்ள வீட்டின் பாதுகாப்பு சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றது. இதை கண்ட வளர்ப்பு நாய் குரைக்க தொடங்கியது. சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் மின் விளக்கை ஒளிர செய்துவிட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார். அப்போது கரடி உலா வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரம் அங்கேயே சுற்றிய கரடி, அதன்பிறகு அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதேபோன்று அந்த பகுதிக்கு செல்லும் சாலையில் முள்ளம் பன்றி ஒன்றும் உலா வந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்வதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- விவசாயியான இவர் நேற்று தன் தோட்டத்தில் வேலை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு முட்புதூரில் பதுங்கி இருந்த கரடி, திடீரென அவர் மீது பாய்ந்து அவரது கை, முதுகு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கடித்து குதறியது.
- அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஓலையார் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). விவசாயியான இவர் நேற்று தன் தோட்டத்தில் வேலை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு முட்புதூரில் பதுங்கி இருந்த கரடி, திடீரென ராஜேந்திரன் மீது பாய்ந்து அவரது கை, முதுகு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கடித்து குதறியது.
இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டினர்.
பின்னர் ராஜேந்திரனை மீட்டு செம்மேடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வன அலுவலர் சுப்பராயன் தலைமையிலான வனத்துறையினர்,
கரடியின் கால் தடத்தை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் நடமாடி வருகின்றன. இந்தநிலையில் நேற்று அதிகாலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் விநாயகர் கோவில் முன்புறம் கரடி உலா வந்தது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதேபோல நேற்று முன்தினம் இரவு ஊர்க்காவல் படையை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 43) ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அதே பகுதியில் கரடி துரத்தியதில் தவறி கீழே விழுந்து கிறிஸ்டோபர் காயமடைந்தார். அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான் போன்ற விலங்குகள் காணப்படுகிறது.
- பொதுமக்களை துரத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான் போன்ற வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த வன விலங்குகள் கடந்த சில மாதங்களாக ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில நாட்களாக கோத்தகிரி முக்கிய நகர பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி ஒன்று உலா வருவதாகவும், அந்த கரடி இரவு நேரம் ரோந்து பணியில் ஈடுபடும் ஊர் காவல் படையினர் மற்றும் பொதுமக்களை துரத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அந்த கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் புகார்கள் எழுந்தது. ஆனால் தற்போது கோத்தகிரி போலீஸ் நிலையம் அருகிலேயே அந்த கரடி உலா வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரவு நேரம் பணியில் இருந்த காவலர்கள் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அங்கு கரடி ஒன்று நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு கரடியை பார்த்து கூச்சலிடவே அந்த கரடி அருகில் இருந்த குடியிருப்புக்குள் சென்று மறைந்தது. போலீஸ் நிலையம் அருகில் கரடி சுற்றி திரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- காரப்பள்ளம் அருகே கரடி தனது குட்டிகளுடன் ரோட்டை கடப்பதற்காக வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது.
- வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் படம் பிடிக்க தொடங்கினர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை சத்தியமங்கலத்தை அடுத்துள்ள காரப்பள்ளம் அருகே கரடி தனது குட்டிகளுடன் ரோட்டை கடப்பதற்காக வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது.
இதனை பார்த்து வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் படம் பிடிக்க தொடங்கினர். நேரம் ஆக ஆக கரடியினால் ரோட்டை கடக்க முடியாததால் பயங்கரமாக சத்தமிட்டது.
இதனைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை வேகமாக எடுக்க சென்றனர். பிறகு சிறிது நேரம் கழித்து வாகனங்கள் சாலையில் இல்லாததை பார்த்து தனது குட்டிகளுடன் கரடி ரோட்டை கடந்து சென்றது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கரடிகள் ரோட்டை கடந்து சென்று ஆற்றுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிற்பதும், வன விலங்குகளை கண்டதும் செல்ேபானில் படம் எடுப்பதும் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் அரவேணுவில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தை இணைக்கிறது. இதில் தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 50-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளதால் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலை யில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலை நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இது ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதே பகுதியில் கடந்த சில மாதங்களில் சிறுத்தை, கரடி மற்றும் காட்டு பன்றிகள் உலா வந்துள்ளது. எனவே அப்பகுதியில் வனத்து றையினர் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்கா ணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவும் இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






