search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A bear"

    • பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் சாலைகளில் வருவதற்கு மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
    • கரடியை வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

    குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது .

    இந்நிலையில் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் கரடி ஒன்று மிகவும் ஆக்ரோஷமான நிலையில் நடமாடி வருகிறது.

    இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் சாலைகளில் வருவதற்கு மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    ஆக்ரோஷமாக உலா வரும் கரடியால் பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்னர் அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதிமக்கள் வனத்துறையினர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரப்பள்ளம் அருகே கரடி தனது குட்டிகளுடன் ரோட்டை கடப்பதற்காக வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது.
    • வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் படம் பிடிக்க தொடங்கினர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை சத்தியமங்கலத்தை அடுத்துள்ள காரப்பள்ளம் அருகே கரடி தனது குட்டிகளுடன் ரோட்டை கடப்பதற்காக வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது.

    இதனை பார்த்து வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் படம் பிடிக்க தொடங்கினர். நேரம் ஆக ஆக கரடியினால் ரோட்டை கடக்க முடியாததால் பயங்கரமாக சத்தமிட்டது.

    இதனைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை வேகமாக எடுக்க சென்றனர். பிறகு சிறிது நேரம் கழித்து வாகனங்கள் சாலையில் இல்லாததை பார்த்து தனது குட்டிகளுடன் கரடி ரோட்டை கடந்து சென்றது.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கரடிகள் ரோட்டை கடந்து சென்று ஆற்றுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிற்பதும், வன விலங்குகளை கண்டதும் செல்ேபானில் படம் எடுப்பதும் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×