search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் குடியிருப்பு வளாகத்தில் உலா வரும் கரடி
    X

    கோத்தகிரியில் குடியிருப்பு வளாகத்தில் உலா வரும் கரடி

    • பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் சாலைகளில் வருவதற்கு மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
    • கரடியை வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

    குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது .

    இந்நிலையில் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் கரடி ஒன்று மிகவும் ஆக்ரோஷமான நிலையில் நடமாடி வருகிறது.

    இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் சாலைகளில் வருவதற்கு மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    ஆக்ரோஷமாக உலா வரும் கரடியால் பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்னர் அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதிமக்கள் வனத்துறையினர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×