search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cage"

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது.
    • 9 துறைமுகங்களில் 2-k; எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    மத்திய மேற்கு வங்கக் கடலில், விசாகப்பட்டனத்திற்கு தென்கிழக்கே சுமார் 220 கி.மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது.

    எனவே, தொலை தூரத்தில் புயல் சின்னம் உருவாகி இருப்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில், நாகை துறைமுக அலுவலகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்பொழுது 9 துறைமுகங்களில் தற்போது இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புயல் உருவாகிய உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் விவசாய பணிகளில் நேற்று மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
    • பெரியகுளத்தில் இருந்து வெளியேறிய கரடி விளை நிலங்களுக்குள் புகுந்து மறைந்தது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரியகுளத்தின் கரையில் மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை, நெல் பயிர் செய்து வருகின்றனர்.

    கரடி புகுந்தது

    இந்நிலையில் நேற்று பகலில் விளைநிலங்களில் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கரடி புகுந்தது. வயலில் வாழை இலைகள் அறுத்து கொண்டிருந்த விவசாயியை கரடி ஓட, ஓட விரட்டியுள்ளது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்து விளைநிலங்களில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயிகளும் அச்சத்தில் சிதறி ஓடினர்.

    அதன்பின் கரடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மறுகால்குறிச்சி செல்லும் சாலையை கடந்து, பெரியகுளத்துக்குள் சென்றுள்ளது. அதன் பின் மீண்டும் பெரியகுளத்தில் இருந்து வெளியேறி விளை நிலங்களுக்குள் புகுந்து மறைந்தது. இந்த சம்பவம் நாங்குநேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கூண்டு வைப்பு

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்குறுங்குடி, நெல்லை வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். கரடி நடமாட்டம் காணப்பட்ட விளைநிலங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் விவசாயிகள் அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து கரடியை உயிருடன் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. அதில் கரடி விரும்பி உட்கொள்ளும் பழவகைகள் வைத்து வனத்துறையினர் இன்று 2-ம் நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தாளவாடி அருகே வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து கொன்றது.
    • மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தாளவாடி வனச் சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரசுவாமி (49)இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார் வழக்கம் போல் மாடுகளை அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார் நேற்று மதியம் மாடுகளை அழைத்தை வர சென்ற போது ஓரு பசு மாடு இறந்துகிடந்தது மாடு இறந்துகிடந்த இடம் கர்நாடக வனப்பகுக்கு உட்பட்டது.

    இதுபற்றி தாளவாடி வனத்துறை மற்றும் கர்நாடக வனத்துறைக்கு தகவல் அளித்தார் சம்பவயி–டத்திக்கு வந்த வனத்துறை இறந்த மாட்டை ஆய்வு செய்தனர் புலி தாக்கி பசு மாடு இறந்தது தெரியவந்தது.

    இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக கால்நடை வளர்போர் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-

    கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்றனர்.

    ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று வரும் சிறுத்தைகளை பிடிக்க 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் வனச்சரகத்தில் ஆந்திர மாநிலத்தின் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகளை ஒட்டி உள்ள காரப்பட்டு காப்புக்காடுகள், துருகம் காப்புக்காடுகள், ஊட்டல் வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறுத்தைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனால் அபிகிரிப் பட்டரை, பொன்னப்பல்லி, மலையாம்பட்டு, காட்டு வெங்கடாபுரம், மத்தூர் கொல்லை, சுட்டக்குண்டா, பைரப்பள்ளி, பெங்கள மூலை போன்ற பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

    சில காலங்களுக்கு முன்பு வனப்பகுதிகளுக்கு ஆடு, மாடுகளை மேய்க்க ஓட்டிச் சென்றால் அவற்றை சிறுத்தைகள் வேட்டையாடின. ஆனால், வெள்ளாட்டு கொட்டகைகள், மாட்டுக் தொழுவங்களுக்கு வந்து சிறுத்தை கால்நடைகளை தூக்கி செல்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாம்பட்டை சேர்ந்த வெங்கடேசன் ஆட்டுப்பட்டியில் நுழைந்த 2 சிறுத்தைகள் இரு ஆடுகளை தூக்கி சென்றன. அதேபோல் இரு நாட்களுக்கு முன்பு அபிகிரிப்பட்டறை கலைஞர் நகரை சேர்ந்த ராஜகோபால் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது ஆடு ஒன்றை சிறுத்தை தூக்கி சென்றது.

    சிறுத்தை தொடர்ந்து வேட்டையாடி வருவதால் வனப்பகுதி எல்லையோரக் கிராமத்தில் வசிக்கும் பயனாளிகள் ஆடுகளை வளர்ப்பதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    எனவே, சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளனர். அபிகிரிபட்டறை, அரவகல் துருகம் ஆகிய கிராமங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கூண்டு வைத்தபோது சிறுத்தை சிக்கவில்லை.

    இந்த முறையாவது பிடிபடுமா என கண்காணித்து வருகின்றனர்.

    ×