என் மலர்
நீங்கள் தேடியது "சிறுத்தை"
- சிறுத்தையின் உடலில் சிறிய கீறல் காயங்கள் மட்டுமே இருந்த நிலையில் உடனடியாக சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் வனச்சரக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறியது.
அந்த சிறுத்தை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆண்டிப்பட்டி பழனிசாமி என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் சிக்கியது. அதில் இருந்து வெளியே வர முடியாமல் நீண்ட நேரமாக போராடியது.
இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கோவை கால்நடை மருத்துவர் வெண்ணிலா மற்றும் ஓய்வு மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் கம்பி வேலியில் சிக்கியிருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர் சிறுத்தையை மீட்டு பார்த்ததில் சிறுத்தையின் உடலில் சிறிய கீறல் காயங்கள் மட்டுமே இருந்த நிலையில் உடனடியாக சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிறுத்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில் கூண்டில் அடைக்கப்பட்டு உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
- பாலக்வா பஞ்சாயத்தில் கமர்பூர் என்ற கிராமம் அமைத்துள்ளது.
- கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் சிறுத்தை ஒன்று புகுந்தது.
இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் பாலக்வா பஞ்சாயத்தில் கமர்பூர் என்ற கிராமம் அமைத்துள்ளது.
அண்மையில் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் சிறுத்தை ஒன்று புகுந்தது.
அப்போது கிராம வாசிகள் சிறுத்தையைச் சுற்றி வளைத்து குச்சிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கினர்.
சிறுத்தை திரும்பி தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதன்பின் சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளனர்.
- மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.
நேற்று அதிகாலை 3 மணிக்கு அலிப்பிரி விநாயகர் கோவில் அருகே உள்ள கனுமா சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியது. நடைபாதையில் சென்ற பக்தர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.
சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாடுவதை கண்டறிந்தனர். தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளனர். மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே செல்ல வேண்டாம். குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். கூட்டம் கூட்டமாக நடைபாதையில் செல்ல வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 66,675 பேர் தரிசனம் செய்தனர். 24,681 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.32 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.
- வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சம் அடைந்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்து உள்ளது.
திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 27 -வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை படுத்து இருந்தது. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சம் அடைந்தனர். வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். சிறிது நேரம் சாலையோரம் நடமாடிய சிறுத்தை பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது,
திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் முடிந்த அளவு இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது என்றனர்.
- நாய்களை தூக்கிச் சென்று சாப்பிடலாம் என சிறுத்தை தாக்கியது.
- ஆனால் தெருநாய் சிறுத்தையை படுகாயமாக்கியது.
டெல்லி தலைநகர் பகுதியில் தெருநாய்கள் அடிக்கடி பொதுமக்களை தாக்கி வந்த நிலையில், வெறிநாய் கடித்து சிலர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. இதனால் நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைத்து பராமரிக்க உச்சநீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது. பின்னர், கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த இன்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பாலான இடத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. தனியாக செல்லுபவர்களை கடித்து குதறும் காட்சிகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் சிறுத்தைகள், புலிகள் வீட்டில் உள்ள நாய்களை அடித்து தூக்கிச் செல்லும் காட்சிகளையும் பார்த்திருக்கிறோம்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறுத்தையையே தெருநாய் கடித்து சுமார் 300 மீ. தூரத்திற்கு இழுத்துச் சென்ற பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ள நிபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட கங்குர்டே வஸ்தி அருகே, சில நாய்கள் உலாவிக்கொண்டிருந்தன. அப்போது திடீரென அந்த பகுதியில் புகுந்த சிறுத்தை, நாய்களை துரத்தியது. இதில் ஒரு நாய், சிறுத்தையின் வாய் பகுதியை கவ்விக்கொண்டது. இதனால் சிறுத்தையால் ஒன்னும் செய்ய முடியவில்லை. தன்னை மிஞ்சிய எடை கொண்ட சிறுத்தையை 300 மீ தூரத்திற்கு இழுத்துச் சென்றது. பின்னர் படுகாயம் அடைந்த சிறுத்தை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதிக எடை மற்றும் மின்னல் வேகத்தில் பாயும் சிறுத்தையையே கடித்து குதறுகிறது என்றால், அப்பாவி மக்கள் தனியாக கிடைத்தால் என்னவாகும்? என வீடியோவை பார்க்கம்போது பதைபதைக்க வைக்ககிறது.
- பெங்களூருவில் பன்னேர்கட்டா தேசிய பூங்கா அமைந்துள்ளது.
- ஜீப்பின் கதவு வழியாக உள்ளே ஏற முயன்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பன்னேர்கட்டா தேசிய பூங்கா அமைந்துள்ளது.
இங்கு சஃபாரி பயணம் சென்றிருந்தபோது, சிறுத்தை தாக்கியதில் 13 வயது சிறுவன் காயமடைந்தான்.
நேற்று மதியம் காட்டு வழியாக ஜீப் சஃபாரி சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த ஒரு சிறுத்தை திடீரென சஃபாரி ஜீப்பை நோக்கி ஓடியது.
பின்னர் அது ஜீப்பின் கதவு வழியாக உள்ளே ஏற முயன்று, அப்போது கதவருகே அமர்ந்திருந்த 13 வயது சிறுவன் கையில் சிறுத்தையின் நகங்கள் பட்டு காயம் ஏற்பட்டது.
இதன்பின் அந்த ஜீப் ஓட்டுநர் வாகனத்தை விரைவாக செலுத்தி அங்கிருந்து பயணிகளை பத்திரமாக அழைத்துச் சென்றார். இதன்பின் சிறுவனுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து, ஜன்னல்களில் வலைகளை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்நாடக வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர காண்ட்ரே தெரிவித்தார்.

- எடக்காடு பகுதிக்கு வந்த சிறுத்தை பொதுமக்களை நேரடியாக அச்சுறுத்தவில்லை.
- காடுகளுக்கு அருகிலுள்ள சாலை வழியாக விலங்குகள் பயணிக்க வாய்ப்பு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை அதிகாலை நேரத்தில் ஊட்டி அருகே உள்ள எடக்காடு பகுதிக்கு வந்தது.
பின்னர் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் நடமாடியது. தொடர்ந்து அந்த சிறுத்தை சாலையோர பாலத்தில் ஏறி நடந்தபடி இரைதேடி நோட்டமிட்டது.
இதனை அந்த வழியாக சென்ற வாகனஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் ஒரு சிலர் ரோட்டை கடந்து பாலத்தில் அமர்ந்திருந்த சிறுத்தையை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
நீலகிரி எடக்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவலால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எடக்காடு பகுதிக்கு வந்த சிறுத்தை பொதுமக்களை நேரடியாக அச்சுறுத்தவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
மேலும் காடுகளுக்கு அருகிலுள்ள சாலை வழியாக விலங்குகள் பயணிக்க வாய்ப்பு உள்ளது. எனவே எவரும் அருகே சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம்.
உடனடியாக வனத்துறையின் அவசர எண்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் எடக்காடு பகுதி வழியாக செல்வோர் அதிக கவனத்துடன் பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன.
- வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் ஆசனூர் அருகே கடந்த சில நாட்களாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தை ஒன்று கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டை ஆடி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் சோதனை சாவடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை சாலையோரம் சென்ற குதிரையை துரத்த தொடங்கியது. சிறுத்தையை பார்த்து பயந்து குதிரை ஓட தொடங்கியது. ஆனால் சிறுத்தை விடாமல் சென்று துரத்தி அந்த குதிரையை தாக்கி கழுத்தில் கடித்து கொன்றது. பின்னர் மீண்டும் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் ஆசனூர் கிராம மக்கள் மீண்டும் பீதியில் உள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது,
எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே அடர்ந்த வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதனால் எங்கள் கிராம மக்கள் குறிப்பாக குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள் இனியும் தாமதிக்காமல் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சில வாகன ஓட்டிகள் சிறுத்தையும் நடமாட்டத்தை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.
- திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் திம்பம் மலைப்பகுதி தமிழக - கர்நாடகவை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதி மத்தியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பகுதியை 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். திம்பம் மலைப்பகுதியில் யானை, சிறுத்தை நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் உள்ள சாலையோரம் அடர்ந்த பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையோரம் உலா வந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினர்.
சில வாகன ஓட்டிகள் சிறுத்தையும் நடமாட்டத்தை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சிறிது நேரம் சாலையோரம் உலா வந்த சிறுத்தை சாலை தடுப்பு சுவரை தாண்டி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
இதன் பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து இருந்து கிளம்பிச் சென்றனர். சமீபகாலமாக திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
எனவே திம்பம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- சுமார் 18 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
- பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
வால்பாறை:
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் குடியிருப்பில் தங்கியிருந்து தேயிலை தோட்டத்திற்கு தனது மனைவியுடன் வேலைக்கு சென்று வருகிறார்.
கடந்த வாரம் மோனிகா தேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அதன் அருகே அவரது மகள் ரோஷினிகுமாரி நின்றிருந்தார்.
குடம் நிறைந்ததும் மோனிகா தேவி, தனது மகளை குழாயின் அருகே நிற்க கூறி விட்டு வீட்டிற்குள் சென்றார். சிறுமி ரோஷினி குமாரி மட்டும் வெளியில் நின்றிருந்தார்.
அப்போது தேயிலை தோட்டத்திற்குள் மறைந்து இருந்த சிறுத்தை ஒன்று திடீரென வெளியே வந்து, அங்கு நின்றிருந்த சிறுமி ரோஷினி குமாரியின் மீது பாய்ந்து கழுத்தை கவ்வி தரதரவென இழுத்து சென்றது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே மோனிகா தேவி வெளியில் ஓடி வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை, மோனிஷாகுமாரியை கவ்வி இழுத்து சென்றதை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி அழுதார்.
அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் ரத்தகறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. ஆனால் சிறுமியின் உடலை காணவில்லை.
இதையடுத்து வனத்துறையினர் குடியிருப்பையொட்டி உள்ள தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 18 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்து கூண்டில் சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
- ஜுக்னுபூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒரு சிறுத்தை புகுந்தது.
- சக தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் உடனடியாக அதன் மீது செங்கல் மற்றும் கற்களால் தாக்கினர்.
உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து சிறுத்தையிடம் துணிச்சலுடன் போராடிய வீடியோ வைரலாகி வருகிறது.
லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள தௌர்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட ஜுக்னுபூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒரு சிறுத்தை புகுந்தது.
அப்போது மிஹிலால் என்ற 35 வயது தொழிலாளி தனது உயிரைப் பணயம் வைத்து சிறுத்தையுடன் கடுமையாகப் போராடினார். சிறுத்தையை கீழே தள்ளி அதன் வாயை இறுக்கமாகப் பிடிக்க முயன்றார்.
மிஹிலால் சிறுத்தையை எதிர்கொள்வதைக் கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் உடனடியாக அதன் மீது செங்கல் மற்றும் கற்களால் தாக்கினர்.
இறுதியில் சிறுத்தை அருகிலுள்ள விவசாய வயல்களுக்குள் தப்பி ஓடியது. தகவல் கிடைத்ததும், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.
சிறுத்தை தாக்குதலில் மிஹிலால் மற்றும் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிறுத்தை, மோனிஷாகுமாரியை கவ்வி இழுத்து சென்றதை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி அழுதார்.
- கோவையில் இருந்து 2 மோப்பநாய்கள் பச்சைமலை எஸ்டேட் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.
வால்பாறை:
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் குடியிருப்பில் தங்கியிருந்து தேயிலை தோட்டத்திற்கு தனது மனைவியுடன் வேலைக்கு சென்று வருகிறார்.
நேற்று மாலை மோனிகா தேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அதன் அருகே அவரது மகள் ரோஷினிகுமாரி நின்றிருந்தார்.
குடம் நிறைந்ததும் மோனிகா தேவி, தனது மகளை குழாயின் அருகே நிற்க கூறி விட்டு வீட்டிற்குள் சென்றார். சிறுமி ரோஷினி குமாரி மட்டும் வெளியில் நின்றிருந்தார்.
அப்போது தேயிலை தோட்டத்திற்குள் மறைந்து இருந்த சிறுத்தை ஒன்று திடீரென வெளியே வந்து, அங்கு நின்றிருந்த சிறுமி ரோஷினி குமாரியின் மீது பாய்ந்து கழுத்தை கவ்வி தரதரவென இழுத்து சென்றது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே மோனிகா தேவி வெளியில் ஓடி வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை, மோனிஷாகுமாரியை கவ்வி இழுத்து சென்றதை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி அழுதார்.
அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் ரத்தகறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. ஆனால் சிறுமியின் உடலை காணவில்லை.
இதையடுத்து வனத்துறையினர் குடியிருப்பையொட்டி உள்ள தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாலையில் தொடங்கிய தேடுதல் பணியானது நள்ளிரவை தாண்டியும் விடிய, விடிய நீடித்தது. அதிகாலை 3 மணி வரை தேடியும் சிறுமியின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்று 2-வது நாளாக வனத்துறையினர் சிறுமியின் உடலை தேடும் பணியை தொடங்கினர். அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். மேலும் சிறுமியின் உடலை கண்டறிவதற்காக கோவையில் இருந்து 2 மோப்பநாய்கள் பச்சைமலை எஸ்டேட் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.
வனத்துறையினர் மற்றும் போலீசார் மோப்பநாய்களை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், 18 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை முதல் தேடி வந்த நிலையில், வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.






