என் மலர்
நீங்கள் தேடியது "சிறுத்தை"
- வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அப்பு குட்டியின் தோட்டத்தில் பதிந்து இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர்.
- சிறுத்தையினை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம், சென்னிமலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன், தெற்கு வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள ஊர் சில்லாங்காட்டுவலசு, இங்குள்ள பாப்பங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அப்புகுட்டி. விவசாயியான இவர் தனது குடும்பத்துடன் வனப்பகுதியை ஒட்டி உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் எருமை மாடுகள், வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று அதிகாலை பால் கறப்பதற்காக அப்புகுட்டி எருமைகள் கட்டி இருந்த பகுதிக்குச் சென்றார். அங்கு பார்த்த பொழுது பட்டியில் இருந்த ஒரு வெள்ளாடு காணாமல் போயிருந்தது. அதனால், அப்புகுட்டி ஆடு தோட்டத்தில் எங்காவது உள்ளதா? என தேடி பார்த்தார்.
அப்பொழுது தோட்டத்தை ஒட்டி போடப்பட்டுள்ள கம்பி வேலி வரை அவர் சென்றார். அங்கு கம்பி வேலிக்கான கல் தூணில் அவர் வளர்த்து வந்த ஆட்டின் ரோமங்கள் ஒட்டியிருந்தது. மேலும், அதே பகுதியில் மர்ம விலங்கு ஒன்றின் கால் அடித்தடங்கள் காணப்பட்டது.
இது குறித்து அவர் சென்னிமலை வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அப்பு குட்டியின் தோட்டத்தில் பதிந்து இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் என்பதை உறுதி செய்தனர். சிறுத்தை புலி வனப்பகுதியை விட்டு வெளியேறி வெள்ளாட்டை கொன்று கம்பி வேலி வழியாக இழுத்துச் சென்று உள்ளது தெரிய வந்தது.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிலாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த விவசாயி குமாரசாமி என்பவர் தோட்டத்தில் தொடர்ந்து ஆடுகள் மற்றும் கன்று குட்டிகள் காணாமல் போன நிலையில் அவற்றை சிறுத்தை வேட்டையாடி தூக்கி சென்றதை வனத்துறை உறுதி செய்தது.
அதை தொடர்ந்து அவரது தோட்டத்தில் சிறுத்தையினை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். ஆனால், கூண்டுக்குள் சிக்காமல் தப்பி சென்ற சிறுத்தை தற்போது பாப்பாங்காடு பகுதியில் ஆடுகளை வேட்டையாடி தனது அட்டகாசத்தை தொடங்கி உள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நேற்று ஆட்டை கட்டி போட்டு இலை தலைகளை போட்டு வைத்து கூண்டு வைத்து உள்ளனர்.
- நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவர் சிறுத்தை வெளியே செல்லும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- உடனடியாக போலீஸ் நிலையத்தின் வாசல் கதவை சாத்திவிட்டு சென்றார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த நடுவட்டம் பகுதியில் சமீப நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை சம்பவத்தன்று இரவு நடுவட்டம் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது.
தொடர்ந்து ஒவ்வொரு அறையாக சென்று சாப்பிடுவதற்கு ஏதேனும் உணவு கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தது. ஆனாலும் போலீஸ் நிலையத்தில் சிறுத்தைக்கு தீனி எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுத்தை பின்னர் மெதுவாக வெளியே புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவர் சிறுத்தை வெளியே செல்லும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் உடனடியாக போலீஸ் நிலையத்தின் வாசல் கதவை சாத்திவிட்டு சென்றார்.
இந்த காட்சிகள் நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இது தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே நடுவட்டம் போலீஸ் நிலையத்துக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அங்கு வேலை பார்க்கும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ச்சியாக காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- விகாஸ் நம்பியாரின் வீட்டில் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட நாயை காணவில்லை.
- விகாஸ் நம்பியாரின் வீட்டில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளும் வனத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை, புலி, காட்டுயானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. இதனால் மலையோர கிராம மக்கள் அச்சத்துடனே வாழக்கூடிய நிலை நிலவுகிறது.
இந்தநிலையில் காசர்கோட்டில் ஊருக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காசர்கோடு கல்லடசீட்டா பகுதியை சேர்ந்தவர் விகாஸ் நம்பியார். இவர் தனது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார்.
இதனால் கல்லடசீட்டாவில் உள்ள அவரது வீட்டை கிரிஷ் என்பவர் பராமரித்து வருகிறார். இந்தநிலையில் விகாஸ் நம்பியாரின் வீட்டில் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட நாயை காணவில்லை. அதனை கிரிஷ் தேடியபோது சற்று தொலைவில் எஸ்டேட் பகுதியில் நாயின் ஒரு கால் பகுதி துண்டாக கிடந்தது.
ஏதே விலங்கு கொன்றிருப்பதை யூகித்த அவர், அதுபற்றி டெல்லியில் உள்ள விகாஸ் நம்பியாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த வீடியோவை டெல்லியில் இருந்தவாரே பார்த்தார்.
அப்போது ஒரு நாள் இரவில் சிறுத்தை ஒன்று நாய் இருந்த பகுதியில் நடந்து சென்றதும், அதற்கு மறுநாள் வீட்டின் மாடியில் சிறுத்தை நடமாடியபடி நின்றதும், மாடியில் இருந்து கீழே இருக்கும் நீச்சல் குளத்தை பார்த்துக்கொண்டு சிறுத்தை நின்றதும் பதிவாகியிருந்தது. இதனால் ஒரு சிறுத்தை தொடர்ந்து அந்த பகுதியில் நடமாடி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் விகாஸ் நம்பியாரின் வீட்டில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளும் வனத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனடிப்படையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
- ஜெயானந்த் என்பவர் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு போன் பயன்படுத்தி கொண்டுள்ளார்.
- அப்போது கட்டிலுக்கு கீழே அவரது வளர்ப்பு நாய் தூங்கி கொண்டிருந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் குடியிருப்பு பகுதியில் தூங்கி கொண்டிருந்த நாயை சிறுத்தை வேட்டையாடிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேகான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெயானந்த் என்பவர் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு போன் பயன்படுத்தி கொண்டுள்ளார். அப்போது கட்டிலுக்கு கீழே அவரது வளர்ப்பு நாய் தூங்கி கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் சத்தமில்லாமல் நுழைந்த சிறுத்தை தூங்கி கொண்டிருந்த நாயை வேட்டையாடியது. அப்போது சிறுத்தையை கண்டு ஜெயானந்த் அதிர்ச்சியடைந்த
இதனையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது.
- நாயை சிறுத்தை தூக்கி செல்லும் காட்சி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. சமீப நாட்களாக இங்கு குடியிருப்புகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டு முன்பு வராண்டா பகுதியில் படுத்து கிடந்த வளர்ப்பு நாயை சிறுத்தை அலேக்காக கவ்வி சென்றது. சத்தம் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர், வளர்ப்பு நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.
நாயை சிறுத்தை தூக்கி செல்லும் காட்சி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
ஊட்டி எச்.பி.எப் பகுதியில் பசுமாட்டை புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க, 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழகம்-கர்நாடக இடையே பயணிக்கும் வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்கிறது. இவ்வழியாக
- 24-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், திம்பம், பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட பகுதியில் சிறுத்தை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சிறுத்தைகள் தங்களது எல்லையை அதிகரித்து வருவதால் வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது.
தமிழகம்-கர்நாடக இடையே பயணிக்கும் வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்கிறது. இவ்வழியாக அவ்வப்போது யானை, சிறுத்தை சாலையை கடந்து சொல்கிறது.
இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது 24-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது.
அதனை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். பின்னர் சிறுத்தை துள்ளி குதித்து ஓடி வனப்பகுதியில் மறைந்தது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிறுத்தை அடிக்கடி திம்பம் மலைப் பாதையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 2 காமிரா க்களை அமைத்தனர்.
- பகல் நேரத்தில் 15 ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது இரவி லும் கண்காணிப்பு
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சரல் விளை, நரிச்சிக்கல், குழிவிளை, கொரங்கேற்றி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, ரப்பர் பால் வெட்டச் சென்ற தொழி லாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 2 காமிரா க்களை அமைத்தனர்.
இந்த நிலையில் நேற்று கல்லாம்பொற்றை கிராமத்தில் ஜோசப் சிங் என்ற விவசாயி வீட்டின் பின்புறம் கட்டப்பட்டு இருந்த 2 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது தெரிய வந்தது.
எனவே ஆடுகளை கடித்துக் கொன்றது, சிறுத்தையாக இருக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே மீண்டும் பரவியது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் வன ஊழி யர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வை யிட்டனர். அந்தப் பகுதியை ஆய்வு செய்த போது, விலங்குகளின் கால் தடம் உள்ளிட்ட எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.
இதனால் ஆடுகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு பற்றிய அச்சம் நீடித்தே வரு கிறது. இதற்கிடையில் சிறுத்ைத நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் காமிராக்கள் பொருத்த வனத்துறை முடிவு செய்தது. அதன்படி 10 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் கல்லாம் பொற்றை கிராமத்தில் கூண்டும் வைக்கப்பட்டு உள்ளது. பகல் நேரத்தில் 15 ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது இரவி லும் கண்காணிப்பு பணிக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வன அலுவலர் இளையராஜா தெரிவித்தார்.
- க.பரமத்தி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்
- சிறுத்தை புலியின் கால் தடம் பதிவான படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
கரூர்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே அத்திப்பாளையம், சேர்வைகாரன்புதுார், வி.என்.புதுார் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், ஆடுகளை கடித்துவிட்டதாகவும் தகவல் பரவியது. மேலும் ஒரு ஆட்டின் கழுத்து பகுதியில் சிறுத்தை கடித்தது போன்றும், சிறுத்தை புலியின் கால் தடம் பதிவான படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் க.பரமத்தி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து கரூர் வனச்சரக அலுவலர் தண்டபாணி கூறியதாவது: சிறுத்தை புலி நடமாட்டம் குறித்து க.பரமத்தி சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம். சமூக வலைதளங்களில் வெளியான காயத்துடன் கூடிய ஆடு, கால் தடம் குறித்த போட்டோவை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். ஆய்வு முடிவு வந்த பிறகே சிறுத்தையா என்பது குறித்த முடிவு தெரியவரும் என்றார்.
- 12 சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு விமானப்படை விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.
- 2-வது கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள சிவிங்கி புலிகளில் 7 ஆண்கள், 5 பெண்கள் ஆகும்.
போபால்:
சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன.
இந்தியாவின் சத்தீஸ்கர் வனப் பகுதியில் கடந்த 1947-ம் ஆண்டு கடைசி சிவிங்கிபுலி இறந்தது. அதன் பிறகு 1952-ம் ஆண்டு அந்த இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் எந்த பகுதியிலும் சிவிங்கி புலி கண்டுபிடிக்கப் படவில்லை.
இதையடுத்து சீட்டாவை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது. ஆப்பிரிக்க நாடான நமீபியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அந்நாட்டில் இருந்து 8 சீட்டாக்கள் இந்தியாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. இதில் 5 பெண், 3 ஆண் சிவிங்கி புலிகள் ஆகும்.
இந்த சிவிங்கி புலிகளை பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தின் குனோ-பல்புர் தேசிய பூங்காவில் திறந்துவிட்டார்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இது தொடர்பாக இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கி புலிகளை கொண்டு வர இந்திய விமான படையின் சி-17 ரக விமானம் கடந்த 16-ந்தேதி புறப்பட்டு சென்றது. அங்கு 12 சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு விமானப்படை விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.
சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் இன்று காலை 10 மணிக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. 2-வது கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள சிவிங்கி புலிகளில் 7 ஆண்கள், 5 பெண்கள் ஆகும்.
அவைகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிவிங்கி புலிகளை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் ஆகியோர் கூண்டில் இருந்து திறந்து விடுகிறார்கள்.
மேலும் 12 சீட்டாக்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.
- கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
- நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.
பரமத்தி வேலூர்:
பரமத்தி வேலூர் தாலுகா விற்கு உட்பட்ட இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை,வெள்ளாளபாளையம்,ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள், கன்றுகள், நாய்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்டவைகளை கடந்த 15 நாட்களுக்கு மேலாக வேட்டையாடி வந்த சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக இப்பகுதியில் எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை.
கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.
செஞ்சுடையாம்பா ளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை புலி வந்து சென்றதற்கான கால்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து இரவில் 30 கிலோமீட்டர் தூரம் வெளியே சென்று வேட்டையாடிவிட்டு மீண்டும் அதன் இருப்பி டத்திற்கு திரும்பி வருவதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மாவட்ட வனசரக அலுவலர் பிரவீன் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் சிறுத்தை புலி வந்து செல்லும் இடம் கண்டறியப்பட்ட பகுதியில் மொத்தம் 18 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி யும், இரண்டு கூண்டுகள் வைத்து சிறுத்தை புலியின்
நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலமும் சிறுத்தை புலியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை புலி எந்த கால்நடைகளையும் பிடிக்க வில்லை என்பதால் இடம் மாறி வேறு பகுதிக்கு சென்று விட்டதா? என வனத்துறையினர் தீவிர மாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்பு தூர் பகுதியில் உள்ள தோட்டப் பகுதியில் சிறுத்தை புலியின் கால் தடங்கள் பதிந்து இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த மணி கண்டன் மற்றும் ராமாயி ஆகியோரது தோட்டப் பகுதிக்கு சென்று சிறுத்தை புலியின் கால் தடங்களை ஆய்வு செய்ததில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு
சிறுத்தை புலி வந்து சென்ற
தற்கான பழைய கால்த டங்கள் என்பதை உறுதி செய்தனர். மேலும் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறை யினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் பரமத்தி
அருகே காளிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது
38).விவசாயி.அதே பகுதி யில் இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஆடு களை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு
காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதி யில் பதிவான கால் தடங்கள்
சிறுத்தை புலி கால் தடமா?
என ஆய்வு செய்து வருகின்ற
னர்.இந்நிலையில் பரமத்தி வேலூர் பகுதியில் கால்ந டைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலியின் நட
மாட்டம் பற்றிய எந்த தடை
யும் இல்லை. இதனால் சிறுத்தை இடம் மாறி
இருக்கலாம் என்று
வனத்துறை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.
அதை உறுதி செய்யும் வகையில் நேற்று கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதியில் சிறுத்த புலி ஆட்டை வேட்டையாடி உள்ளது. பரமத்தி வேலூரில் முகாமில் இருந்த வனத்துறையை சேர்ந்த மலைவாழ் மக்கள் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலி பற்றிய எந்த தடையும் இல்லை. இருக்கூர் சுற்றுவட்டார பகுதியில் வனத்துறையினரின் தேடுதல் வேட்டை அதி கரித்திருப்பதால் பயந்து போன சிறுத்தை புலி இருக்கூர்பகுதியில் இருந்து காவிரி ஆற்றை கடந்து அக்கரையான கரூர் மாவட்டம் நொய்யல் வருகை அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளது. ஆனால் நீண்ட காலமாக தான் வசித்த கல்குவாரியை விட்டு போகாது. மீண்டும் இதே பகுதிக்கு திரும்ப வரலாம். அதனால் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் எச்சரிக்கையுடன் தங்களது கால்நடைகளையும், குழந்தை
களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இருக்கூர் பகுதி மற்றும் கல்குவாரிகளில் புலிகளின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
- கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கூர் ஊராட்சி செஞ்சுடையாம்பாளையம், வெள்ளாளபாளையம், புளியம்பட்டி மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு, கன்று குட்டி, கோழிகள், மயில்கள், நாய் உள்ளிட்டவைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை புலி பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.
இந்த சிறுத்தை புலியை பிடிக்க வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனத்துறை யினர் ட்ரோன், கண்காணிப்பு காமிரா மற்றும் கூண்டு அமைத்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
அதை உறுதி செய்யும் வகையில், கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம்புதூரில் கடந்த 16-ந் தேதி சிறுத்தை புலி 5 ஆடுகளை கடித்து கொன்றது. தகவல் அறிந்த இருக்கூர் சமுதாய கூடத்தில் முகாமில் இருந்த சேலம், நாமக்கல், ஈரோடு, சத்தியமங்கலம், முதுமலை பகுதிகளை சேர்ந்த வனத்துறையினர், கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தங்களது கூடாரங்களை காலி செய்து வருகின்றனர். தற்போது 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
பரமத்திவேலூர், கரூர் பகுதிகளில் சிறுத்தை புலியின் நடமாட்டம் தென்படவில்லை. சிறுத்தை புலி ஒரே இரவில் 50 கிலோமீட்டர் வரை கடந்து செல்லும் திறன் உடையது. மேலும் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்து கொடைக்கானல் மலை, 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் சிறுத்தை புலி கொடைக்கானல் பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.
- காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது தொடா்ந்து வருகிறது.
- சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரவேனு,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது தொடா்ந்து வருகிறது.
இந்த நிலையில் அரவேனு பெரியாா் நகா் பகுதியில் சிறுத்தை ஒன்று நீண்ட நேரம் குடியிருப்புப் பகுதியில் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடமாடியது அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குடியிருப்புவாசிகளை அச்சமடையச் செய்துள்ளது.
இந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.