என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபல யூடியூபர்"

    • ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் Mr Beast சேனலை நடத்தி வருகிறார்.
    • 2017 ஆம் ஆண்டில் "i counted to 100 000" என்ற வீடியோ மூலம் அவர் புகழ் பெற்றார்.

    உலக அளவில், மக்களின் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு சமூக வலைதளமாக யூடியூப் விளங்குகிறது. நமக்கு ஏதாவது ஒன்று தெரியவில்லை என்று நினைத்தால் அதற்கு நிச்சயமாக யூடியூப்பில் விடை கிடைக்கும்.

    யூடியூபில் சேனல் தொடங்குவது எளிது என்பதால், இணைய பயனர்கள் பலரும் தங்களுக்கென்று ஒரு சேனலை தொடங்கி அதில், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இதில் அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் பக்கம் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் இந்த சேனலை நடத்தி வருகிறார்.

    2017 ஆம் ஆண்டில் "i counted to 100 000" என்ற வீடியோ மூலம் அவர் புகழ் பெற்றார்.

    இந்நிலையில், யூடியூபில் 40 கோடி சந்தாதாரர்களை பெற்ற முதல் யூடியூபர் என்ற வரலாற்றை மிஸ்டர் பீஸ்ட் படைத்துள்ளார்.

    இதனை கௌரவிக்கும் விதமாக யூடியூப் CEO நீல் மோகன் அவருக்கு பிரத்யேக Play Button வழங்கி கௌரவித்தார்.

    • இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் பாகிஸ்தானில் இருந்ததாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
    • சன்னி யாதவ் உட்பட மேலும் 3 யூடியூபர்களின் நடமாட்டம் குறித்த தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இந்திய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதற்காக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா மற்றும் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதனைதொடர்ந்து, இதுபோன்ற வீடியோ பதிவர்கள் மீதான கண்காணிப்பை என்.ஐ.ஏ. அதிகரித்துள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் நடந்த போது தெலுங்கானாவை சேர்ந்த யூடியூபர் சன்னி யாதவ் என்பவர் பாகிஸ்தானில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பல்வேறு இடங்களுக்கு பைக்கில் சென்று வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை தீவிரமாக கண்காணித்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் சன்னி யாதவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள நூதன்கல் மண்டலத்தை சேர்ந்த சன்னி யாதவ், இவர் பந்தய செயலிகளை ஊக்குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற முயன்றார்.

    அது பலனளிக்காததால், அவர் துபாய் சென்றார். அதன் பிறகு சன்னி யாதவ் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

    இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கியபோது அவர் பாகிஸ்தானில் இருந்ததாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

    அவர் கடந்த காலத்தில் 5 முறை பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம் செய்துள்ளார். சன்னி யாதவ் தனது பாகிஸ்தான் பயணத்தையும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார்.

    சன்னி யாதவ் கைது செய்யப்பட்டது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும், அவர் தொடர்ந்து பைக் பயணங்களுக்குச் செல்வதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    டி.வி.யில் பார்த்த பிறகுதான் இந்தத் தகவல் பற்றித் தெரிந்து கொண்டதாக அவர்கள் கூறினர்.

    பைக்கில் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள நிலைமைகளை விவரிக்கும் வீடியோக்களை எடுத்து சன்னி யாதவ் வெளியிட்டார்.

    சன்னி யாதவ் உட்பட மேலும் 3 யூடியூபர்களின் நடமாட்டம் குறித்த தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    சன்னி யாதவ் ஏன் பாகிஸ்தானுக்குச் சென்றார்? பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்குச் செல்வதற்கான காரணம் என்ன? இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    • கடையில் பெண் ஒருவரிடம் "பேல் பூரி" வாங்கிய யூடியூபர், ஓகே... தாங்க்யூ என்று கூறினார்.
    • அதற்கு அந்த பெண்ணும் "நன்றி அண்ணா" என்று கூறுவதை கேட்டு யூடியூபர் சிரிக்கிறார்.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கிறிஸ்டோபர் லூயிஸ் தமிழில் "நன்றி தங்கச்சி" என்று பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் பெண் ஒருவரிடம் "பேல் பூரி" வாங்கிய யூடியூபர், ஓகே... தாங்க்யூ என்று கூறினார்.

    what do you say for like sister in... என்று கேட்கிறார்.

    அதற்கு அந்த பெண் "தங்கச்சி" என்று கூறுகிறார்.

    younger sister is தங்கச்சி என்று கேட்கிறார்.

    அந்த பெண்ணும் ஆம் என்று கூறுகிறார். 

    இதையடுத்து "நன்றி தங்கச்சி" என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண்ணும் "நன்றி அண்ணா" என்று கூறுவதை கேட்டு யூடியூபர் சிரிக்கிறார்.

    தான் கூறியது சரியா என்று கேட்கிறார். அப்பெண்ணும் சரி என்கிறார்.

    அவர் வாங்கியதின் பெயர் என்ன என்று கேட்கிறார். அப்பெண் மசாலா பொரி என்று கூறுகிறார்.

    அந்த பெண்ணின் பெயரை கேட்கிறார். வெண்ணிலா என்று அப்பெண் பதிலளிக்கிறார்.

    வெண்ணிலாவின் "பேல் பூரி" என்று சுவைக்கிறார்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் மிஸ்டர் பீஸ்ட் சேனலை நடத்தி வருகிறார்.
    • மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் பக்கம் தற்போது வரை 34 கோடி சந்தாதாரர்களை கடந்துள்ளது.

    உலக அளவில், மக்களின் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு சமூக வலைத்தளமாக யூடியூப் விளங்குகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் பக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

    ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் மிஸ்டர் பீஸ்ட் சேனலை நடத்தி வருகிறார். மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் பக்கம் தற்போது வரை 34 கோடி சந்தாதாரர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த யூடியூபர் தியா பூய்சென் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக மிஸ்டர் பீஸ்ட் சேனலை நடத்தி வரும் ஜிம்மி டொனால்ட்சன் தெரிவித்துள்ளார்.

    கிறிஸ்துமஸ் தினத்தன்று தியா பூய்செனுக்கு ஜிம்மி டொனால்ட்சன் மோதிரத்தை நீட்டி தனது காதலை தெரிவித்துள்ளார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டதால் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்து கொண்டனர்.

    நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் ஜிம்மி டொனால்ட்சன் பகிர்ந்துள்ளார். 

    • மிஸ்டர் பீஸ்ட் சேனலை தொடங்கிய ஜிம்மி டொனால்ட்சன் சுமார் 800 வீடியோக்களை மட்டுமே அதில் பதிவிட்டு இருந்தார்.
    • மிஸ்டர் பீஸ்ட் பக்கத்தை பயனர்கள் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    உலக அளவில், மக்களின் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு சமூக வலைதளமாக யூடியூப் விளங்குகிறது. நமக்கு ஏதாவது ஒன்று தெரியவில்லை என்று நினைத்தால் அதற்கு நிச்சயமாக யூடியூப்பில் விடை கிடைக்கும்.

    யூடியூபில் சேனல் தொடங்குவது எளிது என்பதால், இணைய பயனர்கள் பலரும் தங்களுக்கென்று ஒரு சேனலை தொடங்கி அதில், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இதில் அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் பக்கம் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் இந்த சேனலை நடத்தி வருகிறார்.

    பல்வேறு சாகசங்கள் செய்து புகழ் பெற்ற இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடியூப்பில் அதிக சந்தாதாரர்கள் என்ற இந்தியாவை சேர்ந்த இசை நிறுவனமான டி-சீரிசை மிஞ்சினர்.

    2006-ம் ஆண்டு யூடியூபில் இணைந்த டி-சீரிஸ் நிறுவனத்திற்கு 26.6 கோடி சந்தாதாரர்கள் இருந்த நிலையில் கடந்த மாதம் அதனை மிஞ்சி மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் பக்கம் முதலிடத்தை பிடித்தது.

    மிஸ்டர் பீஸ்ட் சேனலை தொடங்கிய ஜிம்மி டொனால்ட்சன் சுமார் 800 வீடியோக்களை மட்டுமே அதில் பதிவிட்டு இருந்தார்.

    ஆனால் ஒவ்வொரு வீடியோவும் பல லட்சம் பார்வைகளை பெற்று புதிய உச்சம் தொட்டது. இந்நிலையில் தற்போது மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் பக்கம் 30 கோடி சந்தாதாரர்களை அடைந்த முதல் யூடியூபர் என்ற வரலாற்றை படைத்துள்ளது.

    இதற்காக மிஸ்டர் பீஸ்ட் பக்கத்தை பயனர்கள் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    ×