என் மலர்
நீங்கள் தேடியது "YouTube"
- இந்த ஆண்டு,உச்ச நட்சத்திரங்களின் படங்களில் இருந்து வெளியான பாடல்கள் உலக அளவில் வைரலானது.
- அனிருத், சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆனது.
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு தங்கக் காலமாக அமைந்தது. இந்தாண்டு தமிழ்த் திரையுலகம், இசை அளவில் புதிய உச்சங்களைத் தொட்டது. யூடியூப்பில் பாடல்களின் பார்வைகள் (வியூஸ்) எண்ணிக்கை, ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
இந்த ஆண்டு, ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் இருந்து வெளியான பாடல்கள் உலக அளவில் வைரலானது.
அனிருத், சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களின் பங்களிப்பு, தமிழ் இசையை உலக அரங்கில் கொண்டு சேர்த்தது.
இந்தக் கட்டுரையில், 2025-இல் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் பாடல்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். இந்தப் பட்டியல், லிரிக் வீடியோக்கள் மற்றும் முழு வீடியோக்களின் மொத்த பார்வைகளை அடிப்படையாகக் கொண்டது.
1. மோனிகா (Monica) - படம்: கூலி
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள்: சுப்லாஷினி மற்றும் அனிருத்
பார்வைகள்: 314 மில்லியன் (லிரிக் + வீடியோ: 236M + 78M)
இந்தப் பாடல், ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம்பெற்றுள்ளது. அனிருத்தின் டைனமிக் பீட்ஸ், பூஜா ஹெக்டேவின் நடனம் இளைஞர்களை ஈர்த்தது. "மோனிகா... ஓ மோனிகா..." என்ற வரிகள், ரீல்ஸ் மற்றும் டிக்டாக்கில் வைரலானவை. இந்தப் பாடல், 2025-இல் தமிழ் சினிமாவின் மாஸ் இசையின் உச்சமாகக் கருதப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு இது பெரும் பங்களிப்பு செய்தது.

2. கோல்டன் ஸ்பாரோ (Golden Sparrow) - படம்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK)
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடகர்கள்: சுப்லாஷினி
பார்வைகள்: 244 மில்லியன்
இது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்ற ரொமான்டிக் டூயட் பாடலாகும். பிரியங்கா மோகனின் சார்மிங் தோற்றத்துடன், ஜி.வி.பிரகாஷின் மெலடி, காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியது. "கோல்டன் ஸ்பாரோ... என் நெஞ்சுல ஆரோ..." வரிகள், சமூக வலைதளங்களில் டிரெண்டானவை. இந்தப் பாடல், 2025-இல் இளம் தலைமுறையின் காதல் ஆன்தமாக மாறியது.

3. கனிமா (Kanimaa) - படம்: ரெட்ரோ
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
பார்வைகள்: 225 மில்லியன் (லிரிக் + வீடியோ: 123M + 102M)
இது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற திருமண வரவேற்பு பாடலாகும். சூர்யா - பூஜா ஹெக்டே நடனம் மற்றும் சந்தோஷ் நாராயணனின் குரல் மற்றும் நடனத்தால் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. இந்தப் பாடல், தமிழ் சினிமாவின் உணர்ச்சி இசையின் சிறந்த உதாரணம் ஆகும்.

4. பொட்டல முட்டாயே (pottala muttaye) படம் - தலைவன் தலைவி
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன், சுப்லாஷினி
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
பார்வைகள்: சுமார் 167 மில்லியன் (லிரிக் + வீடியோ: 67M + 100M)
தலைவன் தலைவி படத்தில் இடம்பெற்ற இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. சந்தோஷ் நாராயணன், சுப்லாஷினி குரலில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடனத்தால் இந்த பாடல் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து இந்தாண்டின் பெரிய ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்தது.

5. முத்த மழை (Muththa Mazhai) - படம்: தக் லைஃப் (Thug Life)
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
பாடகர்கள்: சின்மயி
பார்வைகள்: 139 மில்லியன் (லிரிக் + வீடியோ: 129M + 10M)
ஏ.ஆர். ரகுமானின் மேஜிக்கல் இசை மற்றும் சின்மயியின் இனிமையான குரலுடன் உருவான இந்த ரொமான்டிக் பாடல் நம்மை மெய்மறக்க வைத்தது. குறிப்பாக சின்மயியின் குரலால் இந்த பாடலுக்கு உயிரோட்டம் ஏற்பட்டதாக ரசிகர்கள் இந்த பாடலை வியந்தோதி ரசித்தனர்.

6. ஊரும் ப்ளட் (Oorum Blood) படம்: டியூட் (Dude)
இசையமைப்பாளர்: சாய் அபயங்கர்
பாடகர்கள்: சாய் அபயங்கர் மற்றும் அபர்ணா நாராயணன்
பார்வைகள்: 139 மில்லியன் (லிரிக் + வீடியோ: 130M + 9M)
இது டியூட் படத்தில் இடம்பெற்ற இது ஒரு ஹிப்-ஹாப் டிராக் ஆகும். இந்த பாடல் இளைஞர்களின் வாழ்க்கையை காதலை பிரதிபலித்தது. சாய் அபயங்கரின் கூல் பீட்ஸ் மற்றும் பிரதீப் மமிதாவின் டான்ஸ் இந்த பாடலை ஹிட் பாடலாக மாற்றியது. "ஒரு அலை அவ கலை அவ..." வரிகள், காதலர்களின் ரிங்டோனாக மாறியது

7. வழித்துணையே (Vazhithunaiye) படம்: டிராகன் (Dragon)
இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ்
பாடகர்கள்: சித் ஸ்ரீராம், சஞ்சனா கல்மஞ்சே
பார்வைகள்: சுமார் 109 மில்லியன் (லிரிக் + வீடியோ: 31M + 78M)
டிராகன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் காதலர்களின் விருப்ப பாடலாக மாறியது. குறிப்பாக இந்த வீடியோ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பாடலால் தான் கயாடு லோகர் இனைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

8. ஜிங்குச்சா (Jinguchaa) படம்: தக் லைஃப் (Thug Life)
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
பாடகர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
பார்வைகள்: சுமார் 96 மில்லியன்
இது தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற திருமண வரவேற்பு பாடலாகும். கமல்ஹாசன், சிம்பு நடனத்தாலும் வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன் குரலாலும் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றது. "சிக்கிட்டான் சிக்கிட்டான் சிக்காத ஆளு சமையலுக்கு ஏத்த ஆளு கிடைச்சிட்டான்..." வரிகள் பெண்களை வெகுவாக கவர்ந்தது.

9. கண்ணாடி பூவே (Kannadi Poove) – ரெட்ரோ (Retro)படம்: ரெட்ரோ
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
பார்வைகள்: சுமார் 88 மில்லியன் (லிரிக் + வீடியோ: 78M + 10M)
இது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற காதல் சோக பாடலாகும். சந்தோஷ் நாராயணின் இசை மற்றும் குரல் இந்த பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்தது. காதல் சோகத்தை நினைப்பவர்களின் ரிங் டோனாக இந்தாண்டு இந்த பாடல் மாறியது.

10. யெடி (Yedi) – படம்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK)
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ்
பாடகர்கள்: டல்கர், ஜோனிடா காந்தி
பார்வைகள்: சுமார் 84 மில்லியன் (லிரிக் + வீடியோ: 20M + 64M)
இது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்ற காதல் பாடலாகும். தனுஷ், ஜோனிடா காந்தி குரலால் இந்த பாடலால் பெரிய ஹிட் அடித்தது. குறிப்பாக அனிகா சுரேந்திரன் நடனம் இந்த பாடலுக்கு மெருகூட்டியது.
முடிவுரை:
2025 தமிழ் இசை, பாரம்பரியம் மற்றும் நவீனத்தின் சரியான கலவையாக இருந்தது. இந்தப் பாடல்கள், கோலிவுட்டின் உலகளாவிய தாக்கத்தை நிரூபித்தன. அடுத்த ஆண்டு, இன்னும் பெரிய வெற்றிகளை எதிர்பார்க்கலாம்!
- இதன்படி ஆஸ்கார் விருதுகள் விழா உலகெங்கிலும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
- கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
திரைத்துறையின் உயரிய அங்கீகாரமாக ஆஸ்கார் விருதுகள் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வருடந்தோறும் அமெரிக்காவில் இந்த விழா பிரம்பாண்டமாக நடத்தப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து திரைபிரபலங்கள் அமெரிக்காவில் கூடுவர்.
அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி இந்த ஆஸ்கார் விழாவை ஒளிபரப்பி வந்தது. 2028 வரை ஆஸ்கார் விழாவை ஒளிபரப்பும் உரிமையை ABC தொலைக்காட்சி நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. 2028-ல் ஆஸ்கார் விருதின் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் 2029-ஆம் ஆண்டு முதல் 2033 வரை ஆஸ்கார் விருதுகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை யூடியூப் தளம் பெற்றுள்ளது.
கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்த காலத்தில் பிரபலங்களின் சிவப்பு கம்பள வரவேற்பு, விருதளிக்கும் நிகழ்வு என ஆஸ்கார் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் யூடியூப்பில் மட்டுமே வெளியாகும்.
இதற்காக யூடியூப்பில் பிரத்யேக டிஜிட்டல் தளம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. இதன்படி ஆஸ்கார் விருதுகள் விழா உலகெங்கிலும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
இந்த மாற்றத்தினால் ஆஸ்கார் விருதுகளின் பார்வையாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆஸ்கார் விருதுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தரும் என்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைச் சென்றடைய இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று ஆஸ்கார் அகாடெமி தெரிவித்துள்ளது.
- இளையமகள் திருமணத்தின்போது தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி திருமணத்தை நடத்தினர்.
- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கோர பண்டாவை சேர்ந்தவர் பிரமைய்யா (வயது 51). இவரது மனைவி அஞ்சலி (48). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இளைய மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.
இளையமகள் திருமணத்தின்போது தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி திருமணத்தை நடத்தினர்.
கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். கடனை எப்படி அடைப்பது என தெரியாமல் தம்பதியினர் விழிப்பிதுங்கினர்.
அப்போது பிரமைய்யாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி தனது செல்போனில் உள்ள யூடியூபில் செயின் பறிப்பது எப்படி என்ற தொழில்நுட்பத்தை கணவன், மனைவி இருவரும் கற்றுக் கொண்டனர்.
பின்னர், ஐதராபாத் வந்த இருவரும் தனியாக செல்லும் வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். பறிக்கப்பட்ட நகைகளை அஞ்சலி சித்தர் பள்ளியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து கடன் வாங்கினார். கடன் வாங்கிய பணத்தில் தங்களது கடன்களை அடைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சிக்கட் பள்ளி அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஷாப்பிங் சென்றுவிட்டு லிப்டில் வந்தார். லிப்ட் அருகே மறைந்திருந்த பிரமைய்யா மூதாட்டியை தாக்கி அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்தார். இதில் மூதாட்டியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மூதாட்டி சிக்கட் பள்ளி போலீசில் புகார் செய்தார்.
அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
நேற்று அசோக் நகரில் சுற்றி திரிந்த பிரமய்யாவையும் அவரது மனைவி அஞ்சலியையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் இளைய மகளின் திருமண கடன்களை அடைக்க யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
- டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
- டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்தார்.
இதைதொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து டிரம்ப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் டிரம்புக்கு 24.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.217 கோடி) நஷ்ட ஈடு வழங்க யூடியூப் ஒப்புக்கொண்டுள்ளது.
- சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.
நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் நேபாள பாராளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலை சூறையாடியதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து நேபாள அரசு போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளது.
- பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை.
- டெலிகிராம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.
நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நேபாள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்ததால் தலைநகர் காத்மாண்டுவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
- சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள் இனி YouTube சேனல்களை நடத்த தடை விதித்துள்ளது.
இந்தப் புதிய விதி டிசம்பர் முதல் அமலுக்கு வரும். TikTok, Instagram மற்றும் Snapchat போன்ற சமூக ஊடக தளங்களிலும் ஆஸ்திரேலியா ஏற்கனவே இதே போன்ற விதிகளை அமல்படுத்தி வருகிறது.
YouTube ஒரு வீடியோ தளமாக இருந்தாலும், வழக்கமான சமூக ஊடகங்களின் அபாயங்கள் இங்கும் இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.
சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.
குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது. பத்தில் ஒன்பது ஆஸ்திரேலியர்கள் இந்த முடிவை ஆதரிக்கின்றனர்.
எதிர்காலத்தில் இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமையும்.
- மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார்.
- உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார்.
குளச்சல்:
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை பெற்றோர் மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
அதாவது மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார். தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார். எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வந்துள்ளார்.
அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு உள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலையில் அதிக சளி தொல்லையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, உடல் பருமனை குறைக்க முறையாக அங்கீகாரம் பெற்ற சிறப்பு டாக்டர்களை அணுகி அவர்களின் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே உடல் பயிற்சி உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதற்கிடையே இறந்த மாணவரின் இரு கண்களையும் பெற்றோர் தானம் செய்துள்ளனர்.
யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாகிஸ்தானில் 27 பேரின் யூ டியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
- வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சமீப காலமாக அரசாங்கத்தின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை பதிவிட்டனர்.
இதனால் அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. எனவே அந்த சேனல்களை தடைசெய்ய வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பத்திரிகையாளர்கள் உள்பட 27 பேரின் யூ டியூப் சேனல்களுக்கு இடைக்கால தடை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனை மீறி அரசினை விமர்சித்தால் அந்த யூடியூப் சேனல்கள் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
யூ டியூப் சேனல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையால் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இது கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே இதனை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் யூடியூப் சேனல் முடக்கப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்கு பணம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- இந்த மற்றம் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்கள் மூலம் பலர் அதிகளவு பணம் ஈட்டி வரும் நிலையில் அந்நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
யூடிட்யூப் சேனல்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்கு பணம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள், ஒரு வீடியோ போலவே உருவாக்கப்பட்ட மற்றொரு வீடியோ, செயற்கை நுண்ணறிவை பயனப்டுத்தி உருவாக்கப்படும் வீடியோக்கள், மிகக்குறைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், மற்றவர்களின் வீடியோவை காப்பியடித்து சில திருத்தங்கள் மட்டும் செய்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள், தரம் குறைந்த வீடியோக்கள், டெம்ளேட் மாடல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றுக்கு பணம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மற்றம் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
- 6 மாத குழந்தைக்கு ஹெகுரு (Heguru) பயிற்சி முறையை கற்பித்ததாகவு இந்திரஜா வீடியோ வெளியிட்டிருந்தார்.
- 6 மாத குழந்தைக்கு எதற்கு பயிற்சி என்று நெட்டிசன்கள் இந்திரஜாவை வறுத்தெடுத்தனர்.
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கார்த்திக் என்பவருடன் கடந்தாண்டு திருமணம் நடந்தது. தற்போது இந்திரஜாவிற்கு 6 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
திருமணத்திற்கு முன்பு பிகில், விருமன் படங்களில் நடித்துள்ள இந்திரஜா, திருமணத்திற்கு பின்பு நடிப்பதை தவிர்த்தார். குழந்தை பிறந்த பிறகு குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை பயன்படுத்துவது குறித்து யூடியூப், இன்ஸ்டாகிராமில் அவர் தொடர்ச்சியாக வீடியோ பதிவிட்டு வருகிறார். .
அண்மையில், அவரின் 6 மாத குழந்தைக்கு ஹெகுரு (Heguru) என்ற பயிற்சி முறையை கற்பித்ததாகவும், அது குழந்தைக்கு அறிவுத்திறனை வளர்க்க உதவும் என்றும் கூறி வீடியோ ஒன்றை இந்திரஜா பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக 6 மாத குழந்தைக்கு எதற்கு பயிற்சி, குழந்தையை அவர்களாகவே வளரவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்திரஜாவை வறுத்தெடுத்தனர்.
நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்து இந்திரஜாவும், அவருடைய கணவரும் சேர்ந்து 'உங்கள் பாண்டியம்மா' என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் இந்திய அரசு குழந்தை வளர்ப்பு குறித்து பல்வேறு விசயங்களை செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியுள்ள பெரும்பாலான தகவல்கள் தவறானது என்றும், அதை பின்பற்ற வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் உண்மை சரிபார்ப்பு அமைப்பு FACT CHECK செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "ஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்தரஜா மற்றும் அவரது கணவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி சர்ச்சையான நிலையில், அதற்கு அவர்கள் விளக்கமளித்து வெளியிட்ட காணொளியில் பல தவறான தகவல்கள் உள்ளன.
தவறான தகவல் 1 : ஹெகுரு என்ற கல்விமுறை/பயிற்சியைப் பற்றி இந்திய அரசு நவ்சேத்னா என்ற வழிகாட்டும் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து தான் இந்த பயிற்சி மையம் செயல்படுகிறது.
இது முற்றிலும் பொய்யான தகவல். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட Navchetana - National framework for early childhood stimulation for children from birth to three years, 2024. இது குழந்தை நலன் மற்றும் பராமரிப்பு குறித்த கட்டமைப்பு தொடர்பான ஆவணம். இதில் ஹெகுரு குறித்தோ, Right-Brain activation குறித்தோ எந்த தகவலும் இல்லை. இதிலுள்ள "Early childhood stimulation" என்ற வார்த்தையை மட்டும் வைத்து, இந்த கட்டமைப்பு குறித்த செய்திகளைத் திரித்து கூறுகின்றனர்.
தவறான தகவல் 2 : தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறனோ, மூளை வளர்ச்சியோ குறைந்ததாக எந்த தரவுகளும் இல்லை. இந்த தகவல் அவர்கள் குறிப்பிடும் நவ்சேத்னாவிலும் இல்லை.
தவறான தகவல் 3 : ஒன்றிய அரசு இந்த Right-Brain activation பயிற்சி முறையை செயல்படுத்த தனியாக பட்ஜெட் ஒதுக்கியுள்ளது.
அரசாங்கம் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த Right-Brain activation அல்லது ஹெகுரு போன்ற பயிற்சிகளை ஊக்குவிக்கவோ, நடைமுறைப்படுத்தவோ அரசு எந்தத் தொகையும் பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை.
தவறான தகவல் 4: குழந்தை பிறந்தவுடன் கூட அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது.
இது திரிக்கப்பட்ட தகவல், நவ்சேத்னா குழந்தைகளை மூன்று வயது வரை வீட்டில் வளர்ப்பதையே ஊக்குவிக்கிறது. குழந்தையைப் பராமரிக்க வாய்ப்பில்லாத நிலையில் அங்கன்வாடியில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கிறது.
மேலும், ஹெகுரு ஒரு கல்விமுறை இல்லை, இது ஒரு Activity என்றும் கூறுகிறார். இதுவும் தவறான தகவல். சென்னையில் செயல்படும் ஹெகுரு பயிற்சி மையத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இது 'JAPAN CERTIFIED RIGHT BRAIN EDUCATION' என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். அவர்களது இணையதளப் பக்கத்திலும் "RIGHT BRAIN EDUCATION" என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.
தவறான தகவல்களைப் பரப்பாதீர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமீர் கான் தற்பொழுது சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது.
அமீர் கான் தற்பொழுது சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார்.
அமீர் கானுடன் ஜெனிலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அமீர் கான் இந்த படத்தை எந்த ஓடிடி தளங்களிலும் விற்க மாட்டேன் என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்து யூடியூபில் பே பெர் வியூ என்ற ஆப்ஷனில் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி செய்தல் டிஜிடெல் விற்பனையில் இது ஒரு புது முயற்சியாக கருதப்படும்.






