என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயின் பறிப்பு"

    • இளையமகள் திருமணத்தின்போது தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி திருமணத்தை நடத்தினர்.
    • கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

    ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கோர பண்டாவை சேர்ந்தவர் பிரமைய்யா (வயது 51). இவரது மனைவி அஞ்சலி (48). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இளைய மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.

    இளையமகள் திருமணத்தின்போது தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி திருமணத்தை நடத்தினர்.

    கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். கடனை எப்படி அடைப்பது என தெரியாமல் தம்பதியினர் விழிப்பிதுங்கினர்.

    அப்போது பிரமைய்யாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி தனது செல்போனில் உள்ள யூடியூபில் செயின் பறிப்பது எப்படி என்ற தொழில்நுட்பத்தை கணவன், மனைவி இருவரும் கற்றுக் கொண்டனர்.

    பின்னர், ஐதராபாத் வந்த இருவரும் தனியாக செல்லும் வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். பறிக்கப்பட்ட நகைகளை அஞ்சலி சித்தர் பள்ளியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து கடன் வாங்கினார். கடன் வாங்கிய பணத்தில் தங்களது கடன்களை அடைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சிக்கட் பள்ளி அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஷாப்பிங் சென்றுவிட்டு லிப்டில் வந்தார். லிப்ட் அருகே மறைந்திருந்த பிரமைய்யா மூதாட்டியை தாக்கி அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்தார். இதில் மூதாட்டியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மூதாட்டி சிக்கட் பள்ளி போலீசில் புகார் செய்தார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

    நேற்று அசோக் நகரில் சுற்றி திரிந்த பிரமய்யாவையும் அவரது மனைவி அஞ்சலியையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் இளைய மகளின் திருமண கடன்களை அடைக்க யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

    • வீட்டில் தனியாக இருந்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு.
    • கைது செய்யப்பட்ட நிலையில், கட்சியில் இருந்து நீக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு.

    கேரள மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த 77 வயது மூதாட்டியிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் செயின் பறித்த சம்பவத்தில் கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலம் கூத்துபரம்பா நகராட்சி 4ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பி.பி. ராஜேஷ். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்.

    சம்பவத்தன்று ஜானகி என்ற 77 வயது மூதாட்டில் வீட்டில் தனியாக இருந்த நிலையில், சமைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஹெல்மேட் அணி ராஜேஷ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

    மூதாட்டி சமையலில் மும்மூரமாக இருந்த நிலையில், செயினை பறித்துள்ளார். இதனால் பாட்டி சத்தம் போட அக்கம்பக்கத்தில் உள்ளவர் ஓடிவந்தனர். இருந்தபோதிலும், ராஜேஷ் அவர்களிடம் பிடிபடாமல் தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர், போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியபோது, ராஜேஷ் என கண்டுபிடித்து கைது செய்தனர்.

    நீதிமன்றத்தில் ஆஜர்படுதத உள்ளனர். இதனையறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதிர்ச்சி அடைந்தது. அத்துடன் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

    • மூதாட்டியிடம் செயின் பறித்துள்ளனர்
    • மிட்டாய் கடை ஒன்று நடத்தி வருகிறார்.

    திருச்சி:

    திருச்சி புலிவலம் வேங்கை மண்டலம் அம்பலக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி சீதா (வயது 76). இந்த மூதாட்டி மூவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகாமையில் மிட்டாய் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஒரு வாலிபர் பிஸ்கட் வாங்க வந்தவர் போல் நடித்து அந்த மூதாட்டி அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறித்து விட்டார்.

    வழக்கம்போல் கடையில் சீதா உட்கார்ந்து இருந்தபோது ஒரு வாலிபர் அங்கு வந்தார். பின்னர் அவர் ஒரு பிஸ்கட் பாக்கெட் கேட்டார். அந்த மூதாட்டி பிஸ்கட்டை எடுக்க திரும்பிய போது அந்த வாலிபர் மூதாட்டியின் வாயை கையால் பொத்தி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்தார். அடுத்த நொடி அங்கு தயாராக நின்ற வாலிபரின் மோட்டார் சைக்கிளில் ஏறினார். பின்னர் இரு ஆசாமிகளும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீதா புலிவலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணி சிங்காநல்லூரில் இருந்து உக்கடத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார்.
    • 2½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி ராணி (வயது 52). ஆசிரியை.

    சம்பவத்தன்று இவர் சிங்காநல்லூரில் இருந்து உக்கடத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார். பஸ் உக்கடம் வந்ததும் ராணி பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் ஆசிரியை கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து ராணி உக்கடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையிடம் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    போத்தனூர் அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தமிழ்செல்வி (56). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சுந்தராபுரம் குறிச்சி பிரிவில் இருந்து டவுன் ஹாலுக்கு பஸ்சில் வந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் தமிழ்செல்வி கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து அவர் உக்கடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்மநபரை ேதடி வருகிறார்கள். 

    • கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • 1½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனிக்கம்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் அபிராமி (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு சென்று விட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். மொபட் கோட்டையாம்பட்டி - பனிக்கம்பட்டி ரோட்டில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் கண்இமைக்கும் நேரத்தில் அபிராமி கழுத்தில் அணிந்து இருந்த 1½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார். இது குறித்து அவர் மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள். 

    • கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
    • பைக்கில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை

    தூசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் சென்னையில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலைபார்க்கிறார்.இவரது மனைவி பிரவினா (வயது 25).

    இந்த நிலையில் நேற்று முன் தினம் பிரவினா மற்றும் அவ ரது அத்தை பூத்தானம் அம் மாளுடன் காஞ்சீபுரம்- வந்த வாசி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந் தார்.

    அப்போது எதிரில் மோட் டார் சைக்கிளில் வந்த 2 மர் மநபர்கள் பிரவினா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

    இதுகுறித்து பிரவினா தூசி போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா வில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பைக்கில் வந்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த புது ஓட்டல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். அரசு போக்குவரத்து துறையில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 40).இவர் மொபட்டில் நேற்று இரவு திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

    பக்கிரிதக்க அடுத்த ஏலகிரி ஏரிக்கோடு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் அடையாளம் தெரியாத 2 பேர் மோட்டார் பைக்கில் வந்தனர். அவர்கள் திடீரென செல்வி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர். இதில் செல்வி நிலை தடுமாறு கீழே விழுந்து காயம் அடைந்தார். பின்னர் இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். செயினை பறித்த மர்மகும்பல் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து செல்வி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூதாட்டியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ேபாது சம்பவம்

    கரூர்

    கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் பாலவிடுதி காவல்சரகம் ராயப்பகவுண்டனூரை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது80). இவர் தனது கழுத்தில் 2 தங்க சங்கிலிகளை அணிந்து கொண்டு தனது வீட்டில் தனியாக அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அழகம்மாள் அணிந்து இருந்த 2 பவுன் தங்க தங்கிலியை அறுக்க முயன்று உள்ளார். இதனால் சுதாரித்தக் கொண்ட அழகம்மாள் ஒரு கையால் தனது தங்க சங்கிலியை பிடித்துக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் அழகம்மாள் அணிந்து இருந்த மற்றொரு ஒன்னரை பவுன் தங்க சங்கி லியை மர்ம நபர் அறுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து அழகம்மாளின் உறவினர் தண்டபாணி பால விடுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அழகம்மாளின் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • பைக்கில் ஏறி தப்பிச் செல்ல முயன்ற திருடர்களை இழுத்து பைக்கோடு கீழே தள்ளிவிட்டார்.
    • திருடர்களுடன் போராடும்போது பதிவான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

    மீரட்:

    உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் செயின் பறித்த திருடர்களுடன் இளம்பெண் மற்றும் அவரது பாட்டி ஆகியோர் தைரியமாக போராடியது அனைவராலும் பாராட்டப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு செயின் திருடர்கள், இளம்பெண்ணிடம் இருந்து கம்மலை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது துணிச்சலுடன் செயல்பட்ட இளம்பெண், அந்த திருடர்களை எதிர்த்து போராடினார்.

    பைக்கில் ஏறி தப்பிச் சென்ற இருவரையும் இழுத்து பைக்கோடு கீழே தள்ளிவிட்டார். மீண்டும் எழுந்து செல்ல முயன்றபோது ஒருவனை பிடித்துக்கொண்டார். அவன் பைக்கில் ஏற முயன்றபோது தப்ப விடாமல் பிடித்துக்கொள்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

    பின்னர் செயின் பறித்த திருடர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு

    குடியாத்தம்:

    குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி பாண்டியன் நகர் அடுத்த ஜெய் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் பி.எச்.இமகிரிபாபு அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆகவும், குடியாத்தம் நில வங்கி தலைவராகவும், அப்பகுதி ஒன்றிய குழு உறுப்பினராகவும் உள்ளார்.

    இவரது மனைவி மமதா (வயது 40) இவர் ராஜா குப்பம் ஊராட்சி மன்ற தலைவராகவும் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

    நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் ஊராட்சி மன்ற தலைவர் மமதா தனது வீட்டின் வெளியே அக்கம் பக்கத்தினர் உடன் பேசிக்கொண்டிருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு மர்ம நபர்கள் மமதா அருகே வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி யடைந்த மமதா பீவி கூச்சலிட்டு ள்ளார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் ஹெல்மெட் கொள்ளை யர்கள் கண்ணி யமைக்கும் நேரத்தில் தப்பிவிட்டனர்.

    இது குறித்து உடனடியாக குடியாத்தம் நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் செயின் தாலி செயின் பறிப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த ஹெல்மெட் கொள்ளையர்கள் செயின் பறித்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கோவிலுக்கு சென்று திரும்பியபோது கைவரிசை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையை சேர்ந்தவர் விமலா (வயது 58). இவரது உறவினர் குமாரி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை திருத்தணி முருகன் கோவிலுக்கு ஸ்கூட்டரில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அரக்கோணம் மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் இரவு 8.30 மணியளவில் வந்த போது இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விமலா அணிந்திருந்த 3½ பவுன் தாலி செயினை திடீரென பறித்தனர். அப்போது அதிர்ச்சி அடைந்த விமலா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் விமலா புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • குளித்தலை நர்சிடம் மர்ம நபர் செயினை பறித்தார்
    • இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    குளித்தலையை அடுத்த, வதியம் பஞ்சாயத்து நடுவதியம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி மாலினி (வயது 22). இவர், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் மாலினியிடம் முகவரி கேட்பதுபோல் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்.இதுகுறித்து, மாலினி கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×