search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "couple arrest"

    • கடந்த 5.5.2023-ம் தேதி சுப்பிரமணியை குறிஞ்சிநகரில் வைத்து கடுமையாக தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.
    • சில நாட்கள் கழித்து தான் இனிமேல் சத்யாவுடன் பழக மாட்டேன் என்றும், தனது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தருமாறு கேட்டார்.

    தேனி:

    மதுரை சம்மட்டிபுரம் ராஜ்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சுப்பிரமணி(30). தந்தை இறந்துவிட்ட நிலையில் தனது தாய் நாகஜோதியுடன் வசித்து வந்தார். சுப்பிரமணி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மகளிர் சுயஉதவிக்குழுவில் பணிபுரிந்து வந்தார்.

    கன்னிசேர்வை பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுவந்தார். மகளிர்சுய உதவிக்குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை வசூல் செய்து நிறுவனத்தில் கட்டி வந்தார். அப்போது தேனி அல்லிநகரம் குறிஞ்சிநகரை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சத்யா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். மேலும் கடந்த 5.5.2023-ம் தேதி சுப்பிரமணியை குறிஞ்சிநகரில் வைத்து கடுமையாக தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.

    இதனால் அவமானம் தாங்காமல் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்தார். சில நாட்கள் கழித்து தான் இனிமேல் சத்யாவுடன் பழக மாட்டேன் என்றும், தனது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் தர மறுத்து அன்னஞ்சி பைபாஸ் பகுதியில் கடுமையாக தாக்கி சென்றுவிட்டனர்.

    பலத்த காயமடைந்த சுப்பிரமணி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு வீட்டிற்கு சென்றபோது மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது மகன் அடித்து கொலை செய்யப்பட்டதாக அவரது தாய் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு தேனி அல்லிநகரம் போலீசுக்கு மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்பிரமணியின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டதும் உறுதியானது.

    இதனையடுத்து 6 மாதத்திற்கு பின்பு கள்ளக்காதலி சத்யா மற்றும் அவரது கணவர் ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • சமீபகாலமாக பச்சைக்கிளி உள்ளிட்ட அபூர்வ வகை பறவைகளை வீட்டில் வளர்க்ககூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • 40 பச்சைக்கிளிகள், 70 முனியாஸ் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பழனி:

    பழனி ஆவணிமூலவீதியில் உள்ள ஒரு வீட்டில் அரியவகை பறவைகள் ஏராளமாக வளர்க்கப்படுவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து இன்று வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த வீட்டில் இருந்த மாரிமுத்து(52), அவரது மனைவி பார்வதி(45) ஆகியோர் காட்டில் மட்டும் வாழும் பறவைகளை அதிகளவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து 40 பச்சைக்கிளிகள், 70 முனியாஸ் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.30ஆயிரம் அபராதம் விதித்து பழனி வனச்சரகர் குமரேசன் தலைமையிலான அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சமீபகாலமாக பச்சைக்கிளி உள்ளிட்ட அபூர்வ வகை பறவைகளை வீட்டில் வளர்க்ககூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிளிகள், புறாக்கள் உள்ளிட்ட பறவை இனங்களை யாரும் அடைத்து வைத்து வளர்த்து விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பிடிபட்ட கிளிகள் மற்றும் பறவைகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்தும், இதனை யாருக்கு விற்பனை செய்ய வைத்திருந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பணம் கேட்டு கடத்தப்பட்ட வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோடு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    பீகார் மாநிலம் கல்யாண்பூர் என்ற ஊரை சேர்ந்தவர் நவீன்குமார் பட்டேல் (வயது 23). இவரது மனைவி பெயர் சசிகலா (22).

    கடந்த 6 மாதத்துக்கு முன் கணவன்-மனைவி இருவரும் ஈரோடு வில்லரசம்பட்டி ராசம்பாளையம் முத்து மாணிக்கம் நகரில் வாடகை வீட்டில் தங்கி கணவன்-மனைவி இருவரும் சாயப்பட்டறைக்கு வேலைக்கு போய் வந்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் அவர்களின் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் நைசாக பேசி அவர்களிடம் நட்பாக இருப்பது போல் நடித்து பிறகு கடத்தி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இவர்கள் ரெயிலில் பீகார் செல்லும் போது அதே மாநிலத்தை சேர்ந்த நித்திஷ்குமார் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. நித்திஷ்குமார் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நாச்சியார்பட்டி நான்கு ரோடு பகுதியில் ஒரு மினரல் வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்தார். அவருடன் அவரது தாயாரும் உடனிருந்தார்.

    இதற்கிடையே நித்திஷ்குமாரிடம் நவீன்குமார் ஆசை வார்த்தை கூறினார். “அங்கு ஏன் கஷ்டப்படுகிறாய் ஈரோட்டுக்கு வந்துவிடு நிறைய பணம் சம்பாதிக்கலாம்” என்று கூறினார்.

    அவரின் பேச்சைகேட்டு ஆசையுடன் நித்திஷ்குமார் ஈரோடு வந்தார்.

    ஆனால் அவருக்கு சொன்னபடி நவீன்குமாரும் அவரது மனைவியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    நித்திஷ்குமாரை ஒரு அறையில் அடைத்து “ரூ.1 லட்சம் பணம் கொடு இல்லையென்றால் கொன்று விடுவோம்” என தனது சுய உருவத்தை காட்டத் தொடங்கினார்கள். அதற்கு நித்திஷ்குமார், “என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது. வேலை வாங்கி தருவதாக கூறி இப்படி பணம் பறிக்க முயற்சி செய்கிறீர்களே.. இது நம்பிக்கை துரோகம் இல்லையா?” என்று கேட்டார்.

    நித்திஷ்குமாருடன் ராகுல் தத்தா என்பவரும் வந்திருந்தார். அவரும் நவின்குமாரின் ஆள் என நித்திஷ்குமாருக்கு தெரியாமல் போனது. அவர்தான் நைசாக பேசி நித்திஷ்குமாரை கடத்தி வந்தார்.

    பணம் தொடர்பாக அறையில் அடைத்து வைத்து நித்திஷ்குமாரை நவீன்குமாரும் அவரது மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் சேர்ந்து அடித்து சித்ரவதை செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோடு போன மகனைப்பற்றி எந்த தகவலும் இல்லையே என்று பயந்த நித்திஷ்குமாரின் தாயார் தன் மகனை காணவில்லை என்று திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே நித்திஷ்குமாரின் தாயாருக்கு நவீன்குமார் போன் செய்து “உன் மகன் வேண்டுமானால் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று மிரட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார்.

    அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்த போலீசார் ஈரோடு வில்லரசம்பட்டி என தெரிந்தது. உடனே தனிப்படையினர் ஈரோடு வில்லரசம்பட்டிக்கு விரைந்தனர்.

    வில்லரசம்பட்டியில் ஒரு வீட்டு முன் ரத்தக்கறை வடிந்திருப்பதை கண்ட போலீசார் உள்ளே அதிரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் இருந்த ராகுல்தத்தா வெளியே ஓடி விட்டார். உள்ளே இருந்த நவீன்குமாரும் அவரது மனைவி சசிகலாவும் வசமாக சிக்கி கொண்டனர். வீட்டின் உள்ளே 3 சாக்கு மூட்டை இருந்தது.

    போலீசார் அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் கடத்தப்பட்ட நித்திஷ்குமாரின் தலை, கை, கால் என துண்டு துண்டாக உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த உடலை கைப்பற்றிய போலீசார் நவீன்குமாரையும் சசிகலாவையும் பிடித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    கேட்ட பணம் கொடுக்காததால் நித்திஷ்குமாரை கணவன்-மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் கொலை செய்து உடலை வெளியே கொண்டு போட துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைக்குள் கட்டி இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு ஏ.டி.எஸ்.பி சந்தனபாண்டியன் டவுன் டி.எஸ்.பி ராதா கிருஷ்ணன் இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், சுப்புரத்தினம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவண்ணாமலையில் கடந்த 15 ஆண்டுகளாக கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #IllegalAbortionCenter
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில், புதியதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி பங்களா வீட்டில், கருக்கலைப்பு நடந்ததை, மருத்துவக் கண்காணிப்பு குழுவினர் கடந்த 1-ந்தேதி நள்ளிரவு நடத்திய திடீர் சோதனையில் கண்டுபிடித்தனர்.

    கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் ஆனந்தி (51), அவரது கணவர் தமிழ்ச்செல்வன் (52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனந்தியின் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் செயல்பட்ட பங்களா வீடு சீல் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்ரவர்த்தி ஆகியோர் நேற்று இரவு ஆனந்தியின் பங்களா வீட்டில் வைக்கப்பட்ட சீல் உடைத்து, சோதனை நடத்தினர். 2,400 சதுர அடி பரப்பளவில், லிப்ட் வசதியுடன் கூடிய 3 அடுக்கு மாடி கட்டிடத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தபோது, பதுங்கு குழிகள் போன்ற ரகசிய அறைகள் இருந்ததும், மாடியில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:-

    சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தி ஏற்கனவே 2 முறை கைது செய்யப்பட்டவர். எனவே, அவருக்கு அதிகபட்சமான தண்டனைகள் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பு தொழிலில் ஆனந்தி ஈடுபட்டிருக்கிறார். சோதனை நடந்த அன்று மட்டும் 25 பேர் கருக்கலைப்புக்காக அப்பாய்ண்ட்மென்ட் பெற்றிருந்தனர்.


    மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கருக்கலைப்புக்காக இவரிடம் வந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சராசரியாக 19 ஆயிரம் சிசுக்களை கருவில் கலைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    ஆனந்தியிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான 9 இடங்களில் உள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆனந்தி, அவரது கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மகன் பெயரில் உள்ள 9 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    ஆனந்தியின் பெயரில் இரண்டு ஆதார் எண்கள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேறு ஏதேனும் வங்கிக்கணக்குகள், சொத்துக்கள் இருக்கிறதா என விசாரணை நடத்தி வருகிறோம்.

    ஆனந்தி நடத்தி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையத்துடன் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, இவரால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என முழுமையாக விசாரணை நடத்த, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர், டி.எஸ்.பி. ஆகியோர் உள்ளிட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 834 ஆக குறைந்திருப்பது வேதனையாக இருக்கிறது. எனவே, கருவுற்ற 4 மாதங்களுக்கு பிறகு ஸ்கேன் எடுப்பவர்கள், 2 குழந்தைகளுக்கு பிறகு கருவுற்று ஸ்கேன் எடுத்தவர்களுக்கு பிரசவம் நடந்ததா என சுகாதாரத்துறையினர் மூலம் கண்காணிக்கிறோம்.

    ஸ்கேன் சென்டர்களிலும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம் என்றார்.

    கருக்கலைப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக 3வது முறையாக ஆனந்தி கைது செய்யபட்டுள்ளார். இதனால் அவரை ஜாமீனில் வெளியில் வராதவாறு குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #IllegalAbortionCenter
    கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து போலி டாக்டர் ஆனந்தி தினமும் 25 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலித்துள்ளார். #IllegalAbortionCenter
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் அடுக்குமாடி வீட்டில், பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் கொடூரம் நடப்பதாக பாலின தேர்வை தடை செய்யும் பிரிவின் மாநில கண்காணிப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது.

    உடனே மருத்துவ கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த கமலகண்ணன், நடராஜன், தாமஸ் பிரபாகர் உள்ளிட்டோர் கடந்த 1-ந்தேதி நள்ளிரவு, கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் ஆனந்தி, அவரது கணவர் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகியோரை பொறி வைத்து பிடித்தனர்.

    அவர்களை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. இதனையடுத்து ஆனந்தியின் செல்போன் மூலம் துப்பு துலக்க முடிவு செய்தனர்.

    ஆனந்தியின் செல்போனை ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவிட்ச் ஆப் செய்தனர். மறுநாள் மாலையில் செல்போனை ஆன் செய்து பார்த்த போது கருக்கலைப்பு செய்வதற்காக 25 பேர் அழைத்தது தெரியவந்தது. அதில் 5 பெண்கள் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களை மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.

    கருக்கலைப்பு செய்வது குற்றம் இதுபோன்ற தவறுகளை செய்யக் கூடாது என கூறினர். 5 பெண்களுக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    போலி டாக்டர் ஆனந்தி தினமும் 25 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது. அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலித்துள்ளனர். இதன் மூலம் மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்.

    ஆனந்தியை தொடர்பு கொண்டு பேசிய எண்களை அதிகாரிகள் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கருக்கலைப்புக்காக ஆனந்தியை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

    ஒரு இடத்தில் கருக்கலைப்பு செய்தால் பிடிபடுவோம் என்பதால் சம்பந்தப்பட்ட பெண்களின் வீட்டுக்கு நேரில் சென்று கருக்கலைப்பு செய்யும் மொபைல் சர்வீஸ் நடத்தியதும் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் வடிவிலான ஸ்கேன் கருவி.

    ஆனந்தி பயன்படுத்தும் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் கருவி, லேப்டாப் வடிவமைப்பில் உள்ளதால் அதனை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வது எளிதாக அமைந்திருக்கிறது. மேலும் ஆனந்திக்கு கருக்கலைப்புக்கான பெண்களை அனுப்பி வைக்கும் நெட்வொர்க் மாநில அளவில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    திருவண்ணாமலை வட மாவட்டங்களுக்கு கருக்கலைப்பு மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து கருக்கலைப்புக்காக பெண்களை இங்கு அழைத்து வரும் இடைத்தரகர்களின் பட்டியலை, மருத்துவ கண்காணிப்பு குழுவினர் சேகரித்து வருகின்றனர். இடைத்தரகர்கள் பலரும் விரைவில் சிக்குவர்கள் என தெரிகிறது.

    ஆனந்தியின் செல்போனுக்கு ஒரே நாளில் 25 கருக்கலைப்பு போன் கால் வந்திருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஆனந்தி தம்பதியினர் 19 ஆயிரம் சிசு கருக்கலைப்பு செய்திருக்கக் கூடும்.

    கருக்கலைப்பு செய்ய வந்த ஒரு செல் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது ஒரு லட்சம் சம்பளம் பெரும் ஆடிட்டர், ஏற்கெனவே 2 பெண் குழந்தை இருப்பதால், மூன்றாவதாக மனைவிக்கு பெண் சிசு கருவில் வளர்வது தெரிந்து கருக்கலைப்புக்கு முயன்றுள்ள கொடுமை தெரியவந்தது.

    படித்தவர்களே பெண் சிசுவை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது கொடுமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் ஆண்களும், 920 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது ஆயிரம் ஆண்களுக்கு 850 பெண் குழந்தை பிறப்பு குறைந்துள்ளது.

    பெண் குழந்தை பிறப்பு அதிகரிக்க இந்திய அளவில் டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்ட மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து திருவண்ணாமலை கலெக்டர் மற்றும் ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம் ஆகிய 3 மாநில கலெக்டர்கள் தான் கலந்து கொண்டனர்.

    கடந்த ஆண்டு மத்திய சுகாதார கண்காணிப்பு குழுவினரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் சோதனைகள் நடத்தினர். அப்போது 7 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைத்தனர்.

    எம்.பி.பி.எஸ். முடித்த ஒரு பெண் டாக்டர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அப்போது நடந்த சோதனையில் போலி பெண் டாக்டர் ஆனந்தி தப்பி விட்டார். தற்போது அவர் பிடிபட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #IllegalAbortionCenter
    திருவண்ணாமலையில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த தம்பதியரை போலீசார் கைது செய்தனர். #IllegalAbortionCenter
    திருவண்ணாமலை:

    பெண்ணாக பிறந்தால் தங்களுக்கு பாரம் என்று கருதும் பெற்றோர் கருவிலேயே அது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்து விடுகிறார்கள்.

    இதனால் நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து கருவிலேயே ஆணா, பெண்ணா என்று கண்டு பிடிப்பது குற்றம் என்று மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது.

    ஆணா, பெண்ணா என கண்டு பிடித்து கருக்கலைப்பு செய்தால் ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்பை அனைத்து ஸ்கேன் சென்டர்களிலும், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருத்துவமனைகளில் அறிவிப்பாக ஒட்டுவதற்கும் உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் திருவண்ணாமலையில் ஒரு ஸ்கேன் சென்டரில் பெண்ணின் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று கண்டு பிடித்து பெண் கருவை கலைத்து வந்தது தெரியவந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    திருவண்ணாமலை வேங்கிக்கால் என்ற இடத்தை சேர்ந்தவர் டாக்டர்ஆனந்தி. இவர் தனது வீட்டிலேயே ஸ்கேன் சென்டர் வைத்து நடத்தி வந்தார். இங்கு கர்ப்பிணிகளின் கருவில் உள்ள குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்வதாகவும் பெண் என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை சுகாதார பணிகள் இயக்குனருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து ஆனந்தியின் செயல்பாடுகளையும், பரிசோதனை மையத்தையும் சென்னையில் இருந்து சென்ற சுகாதார குழுவினர் அங்கு முகாமிட்டு கடந்த ஒரு வாரமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது அங்கு கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

    இரவு நேரங்களில் மட்டுமே அவர் இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்ததால் பொறி வைத்து கையும் களவுமாக பிடிக்க சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டனர்.

    இதற்காக கர்ப்பிணி ஒருவரை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவரிடம் ரூ.6 ஆயிரம் கொடுத்து டாக்டர் ஆனந்தி வீட்டுக்கு கருக்கலைப்பு செய்ய ரகசியமாக அனுப்பி வைத்தனர்.

    அதன்படி அந்த பெண் ஆனந்தி வீட்டுக்கு சென்றார். அங்கு கருக்கலைப்பு செய்ய டாக்டர் ஆனந்தி நள்ளிரவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

    அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் மாநில ஆய்வுக்குழு கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகரன், நுன்கதிர் டாக்டர் நடராஜன், திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பாண்டியன் உள்ளிட்ட குழுவினர் அங்கு புகுந்து திடீர் சோதனை நடத்தினர்.

    அங்கு அனுமதியின்றி வைத்திருந்த ஸ்கேன் கருவியை பறிமுதல் செய்தனர். அங்குள்ள ரகசிய பாதாள அறையில் வைத்து கருக்கலைப்பு செய்ய முயன்றபோது ஆனந்தி அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார்.

    இதையடுத்து அதிகாரிகள் ரகசிய பாதாள அறையில் சோதனை செய்தனர்.

    அங்கிருந்த ஸ்கேன் அறிக்கைகளை ஆய்வு செய்தனர். அதில் பெண்களின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதற்கான பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு இருந்த பல்வேறு அறிக்கைகள் இருந்தன. மேலும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்களும் சிக்கியது.

    ஆனந்திக்கு உடந்தையாக அவரது கணவர் தமிழ் செல்வன் மற்றும் ஆட்டோ டிரைவர் சிவக்குமார் செயல்பட்டு வந்தனர். அதிகாரிகள் அவர்கள் இருவரையும் பிடித்து திருவண்ணாமலை போலீசில் ஒப்படைத்தனர். வீட்டில் தனியாக செயல்பட்டு வந்த பரிசோதனை மையத்திற்கும் சீல் வைத்தனர்.


    திருவண்ணாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தி, அவரது கணவர் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    சிவக்குமார் இங்கு வரும் பெண்களை பஸ் நிலையத்தில் இருந்து அழைத்து வருவது, திரும்ப அவர்களை அங்கு கொண்டு போய் விடுவது மற்றும் புரோக்கர்போல் செயல்பட்டு வந்தார்.

    கருக்கலைப்பு செய்யும் பெண்களிடம் ரூ.50 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளனர். முறைகேடாக கர்ப்பம் தரித்த பெண்களின் கருவை கலைக்கவும், பெண் சிசு கருவை கலைக்கவும், அதிகமாக பணம் வசூல் செய்துள்ளனர்.

    ஆட்டோ டிரைவர் சிவக்குமார்.

    2016-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக இது போல் சட்டவிரோத கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தி ஏற்கனவே இதுபோன்று குழந்தைகள் ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து சட்டவிரோத கருக்கலைப்பு நடத்தியதாக கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது.

    அவர் ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் தனது வீட்டிலேயே ரகசியமாக ஸ்கேனிங் மையம் நடத்தி வந்துள்ளார்.

    திருவண்ணாமலையில் இதுபோன்று புகார்கள் ஏற்கனவே நிறைய வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரிகள் சோதனை நடத்தி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கூறிவந்த 3 ஸ்கேன் மையத்திற்கு சீல் வைத்தனர்.

    திருவண்ணாமலையில் இதுபோல் மேலும் பல சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவற்றையும் கண்டு பிடித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #IllegalAbortionCenter
    பாகிஸ்தானில் இருந்து வந்த ரூ.50 கோடி ஹெராயினை காரில் கடத்திச் சென்ற கணவன் - மனைவியை பஞ்சாப் மாநில போலீசார் கைது செய்தனர். #Rs50croreheroin #heroinrecovered
    சண்டிகர்:

    காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு சாலை வழியாக ஹெராயின் கடத்தப்படவுள்ளதாக பஞ்சாப் சிறப்புப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதைதொடர்ந்து, லூதியானா மாவட்டத்தில் அதிகாரிகள் தீவிரமான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது வாதுமை பருப்பு பைக்குள் சுமார் 10 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    அந்த காரில் வந்த முகமது அர்பி மற்றும் அவரது மனைவி ஜமிலா பேகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் சுஞ்சாமா கிராமத்தை சேர்ந்த அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட ஹெராயின், காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதி வழியாக கடத்தி வரப்பட்டு, லூதியானாவில் உள்ள இடைத்தரகருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #Rs50croreheroin #heroinrecovered 
    மெக்சிகோவில் 20 பெண்களை கற்பழித்து கொன்று, உடல்களை நாய்க்கு இரையாக்கிய காமகொடூரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவனுக்கு உடந்தையாக இருந்த மனைவியும் கைதானார்.
    மெக்சிகன்சிட்டி:

    மெக்சிகோவில் உள்ள ஈகாடெகப் பகுதியை சேர்ந்தவர் ஜீவான் கார்லோஸ். அவரது மனைவி பெட்ரீசியா.

    இவர்கள் குடியிருந்த பகுதியில் பல இளம்பெண்கள் திடீரென மாயமாகினர். இதுபற்றி போலீசில் புகார்கள் அதிக அளவில் பதிவானது.

    அதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இவர்களது வீட்டின் அருகே மனித உடல் உறுப்புகள் மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஜீவானையும், அவரது மனைவி பெட்ரீசியாவையும் கைது செய்தனர். அவர்களிடம் துருவி துருவி விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

    ஜீவான் கார்லோஸ் காமவெறி பிடித்தவன். அவனுக்காக மனைவி பெட்ரீசியா இளம்பெண்களை ஏமாற்றி தங்களது குடியிருப்புக்கு அழைத்து வருவாள். அங்கு பெண்களை கற்பழிக்கும் கார்லோஸ் பின்னர் அவர்களை கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கிறான்.

    கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலை துண்டு துண்டுகளாக வெட்டி அவற்றை நாய்க்கு உணவாக போட்டான். மேலும் சிலவற்றை வீட்டிற்குள்ளே புதைத்து வைத்தான். பிரிட்ஜில் பதுக்கி வைத்து உடல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக விற்பனை செய்தான்.

    இவனிடம் குழந்தையுடன் பெரும்பாலான பெண்கள் சிக்கினர். அக்குழந்தைகளை விற்றும் பணம் சம்பாதித்து இருக்கிறான்.

    இதுபோன்று 20 பெண்களை அவன் கொலை செய்து இருக்கிறான். அதை தொடர்ந்து அவனை போலீசார் கைது செய்தனர். பெண்களை கடத்தி வந்து கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக அவனது மனைவி பெட்ரீசியாவும் கைதானார்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீடு புகுந்து தாக்கியத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அங்கு செட்டி பாளையம் இருளர்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யனார். அதே பகுதியை சேர்ந்தவர் குமார், அவரது மனைவி லட்சுமி (வயது 40).

    கடந்த மாதம் அய்யனார், குமார், லட்சுமி ஆகியோர் சென்னைக்கு செங்கல்சூளைக்கு வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு அய்யனாருக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வேலைக்கு சென்ற 3 பேரும் சொந்த ஊர் திரும்பினர். நேற்று மாலை அய்யனார் தனது வீட்டில் தந்தை கிருஷ்ணன், தாய் ராணி, தாத்தா கலியபெருமாள் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குமாரும், அவரது மனைவி லட்சுமியும் இரும்பு கம்பியுடன் அய்யனார் வீட்டுக்குள் புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் அய்யனார், கிருஷ்ணன், ராணி, கலியபெருமாள் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த 4 பேரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசில் அய்யனார் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து தாக்கிய குமார், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை கைது செய்தார்.
    ×