search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்சிகோவில் 20 பெண்களை கற்பழித்து கொன்ற கொடூரன்
    X

    மெக்சிகோவில் 20 பெண்களை கற்பழித்து கொன்ற கொடூரன்

    மெக்சிகோவில் 20 பெண்களை கற்பழித்து கொன்று, உடல்களை நாய்க்கு இரையாக்கிய காமகொடூரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவனுக்கு உடந்தையாக இருந்த மனைவியும் கைதானார்.
    மெக்சிகன்சிட்டி:

    மெக்சிகோவில் உள்ள ஈகாடெகப் பகுதியை சேர்ந்தவர் ஜீவான் கார்லோஸ். அவரது மனைவி பெட்ரீசியா.

    இவர்கள் குடியிருந்த பகுதியில் பல இளம்பெண்கள் திடீரென மாயமாகினர். இதுபற்றி போலீசில் புகார்கள் அதிக அளவில் பதிவானது.

    அதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இவர்களது வீட்டின் அருகே மனித உடல் உறுப்புகள் மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஜீவானையும், அவரது மனைவி பெட்ரீசியாவையும் கைது செய்தனர். அவர்களிடம் துருவி துருவி விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

    ஜீவான் கார்லோஸ் காமவெறி பிடித்தவன். அவனுக்காக மனைவி பெட்ரீசியா இளம்பெண்களை ஏமாற்றி தங்களது குடியிருப்புக்கு அழைத்து வருவாள். அங்கு பெண்களை கற்பழிக்கும் கார்லோஸ் பின்னர் அவர்களை கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கிறான்.

    கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலை துண்டு துண்டுகளாக வெட்டி அவற்றை நாய்க்கு உணவாக போட்டான். மேலும் சிலவற்றை வீட்டிற்குள்ளே புதைத்து வைத்தான். பிரிட்ஜில் பதுக்கி வைத்து உடல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக விற்பனை செய்தான்.

    இவனிடம் குழந்தையுடன் பெரும்பாலான பெண்கள் சிக்கினர். அக்குழந்தைகளை விற்றும் பணம் சம்பாதித்து இருக்கிறான்.

    இதுபோன்று 20 பெண்களை அவன் கொலை செய்து இருக்கிறான். அதை தொடர்ந்து அவனை போலீசார் கைது செய்தனர். பெண்களை கடத்தி வந்து கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக அவனது மனைவி பெட்ரீசியாவும் கைதானார்.
    Next Story
    ×