என் மலர்
நீங்கள் தேடியது "Chain stolen"
- இளையமகள் திருமணத்தின்போது தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி திருமணத்தை நடத்தினர்.
- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கோர பண்டாவை சேர்ந்தவர் பிரமைய்யா (வயது 51). இவரது மனைவி அஞ்சலி (48). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இளைய மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.
இளையமகள் திருமணத்தின்போது தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி திருமணத்தை நடத்தினர்.
கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். கடனை எப்படி அடைப்பது என தெரியாமல் தம்பதியினர் விழிப்பிதுங்கினர்.
அப்போது பிரமைய்யாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி தனது செல்போனில் உள்ள யூடியூபில் செயின் பறிப்பது எப்படி என்ற தொழில்நுட்பத்தை கணவன், மனைவி இருவரும் கற்றுக் கொண்டனர்.
பின்னர், ஐதராபாத் வந்த இருவரும் தனியாக செல்லும் வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். பறிக்கப்பட்ட நகைகளை அஞ்சலி சித்தர் பள்ளியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து கடன் வாங்கினார். கடன் வாங்கிய பணத்தில் தங்களது கடன்களை அடைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சிக்கட் பள்ளி அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஷாப்பிங் சென்றுவிட்டு லிப்டில் வந்தார். லிப்ட் அருகே மறைந்திருந்த பிரமைய்யா மூதாட்டியை தாக்கி அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்தார். இதில் மூதாட்டியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மூதாட்டி சிக்கட் பள்ளி போலீசில் புகார் செய்தார்.
அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
நேற்று அசோக் நகரில் சுற்றி திரிந்த பிரமய்யாவையும் அவரது மனைவி அஞ்சலியையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் இளைய மகளின் திருமண கடன்களை அடைக்க யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
- 4 பவுன் செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்றார்
- போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
கோவை,
துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு சவுடாம்பிகை நகரை சேர்ந்தவர் அனந்த வேல். இவரது மனைவி குஷ்பு (வயது30).
சம்பவத்தன்று இவர் தனது சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு சென்றார். சைக்கிள் வீட்டின் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சென்று சைக்கிளில் வந்த குஷ்புவிடம் முகவரி கேட்டார். அவர் சொல்லிக்கொண்டு இருந்த போது அந்த வாலிபர் குஷ்பு கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை கேட்ட குஷ்புவின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்ற ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். பின்னர் பிடித்த வாலிபரை துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்ததிய விசாரணையில் அவர் சித்தாபுதூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகநாதன் (28) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய சரவணன்(28) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கைவரிசை காட்டினர்.
- வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர்.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள ராஜமாதா நகரை சேர்ந்தவர் சத்யதேவ். இவரது மனைவி லட்சுமி பிரபா (வயது 36). சம்பவத்தன்று இவர் தனது குழந்தையுடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமி பிரபா கழுத்தில் அணிந்து இருந்த 1 ½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். சுண்டப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக்.
இவரது மனைவி உமாதேவி (27). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் 2 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கெம்பனூரில் உள்ள தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் குழந்தைகளுடன் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் உமாதேவி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இந்த 2 செயின் பறிப்பு சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
சோமையனூர் அருகே உள்ள திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி மேகலா (50). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் பஸ் ஏறுவதற்காக பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்றார். அப்போது மேகலாவை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்துஇருந்த 3 ½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
குப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கீர்த்தனா (24). சம்பவத்தன்று இவர் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலையை முடித்து விட்டு கே.என்.ஜி. புதூர் அருகே இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கீர்த்தனா கழுத்தில் அணிந்து இருந்த 1 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
செயினை பறிகொடுத்த பெண்கள் இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
- மர்மநபர் ஒருவர் ராதாமணியிடம் முகவரி கேட்பது போல நடித்து சங்கிலியை பறித்தார்.
- ராதாமணி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை இருகூரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி ராதாமணி (வயது 65). இவர்கள் வீட்டிலேயே திண்பண்டங்கள் தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று அவர் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கே வந்த மர்மநபர் ஒருவர் அவரிடம் முகவரி கேட்டுள்ளார். ராதாமணியும் அவரிடம் முகவரி சொல்லி கொண்டிருந்தார். அப்போது அருகே வந்த அந்த நபர் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வருவதற்குள் மர்ம நபர் ஏற்கனவே தயாராயிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி பிரேமா (56). சம்பவத்தன்று அவர் அருகில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து நடந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் பிரேமா கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் செயினை பிடித்து இழுக்க பாதி செயினுடன் கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






