என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் செயின் பறிப்பு
- மூதாட்டியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ேபாது சம்பவம்
கரூர்
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் பாலவிடுதி காவல்சரகம் ராயப்பகவுண்டனூரை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது80). இவர் தனது கழுத்தில் 2 தங்க சங்கிலிகளை அணிந்து கொண்டு தனது வீட்டில் தனியாக அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அழகம்மாள் அணிந்து இருந்த 2 பவுன் தங்க தங்கிலியை அறுக்க முயன்று உள்ளார். இதனால் சுதாரித்தக் கொண்ட அழகம்மாள் ஒரு கையால் தனது தங்க சங்கிலியை பிடித்துக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் அழகம்மாள் அணிந்து இருந்த மற்றொரு ஒன்னரை பவுன் தங்க சங்கி லியை மர்ம நபர் அறுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து அழகம்மாளின் உறவினர் தண்டபாணி பால விடுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அழகம்மாளின் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story






