என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு
- கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
- பைக்கில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
தூசி:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் சென்னையில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலைபார்க்கிறார்.இவரது மனைவி பிரவினா (வயது 25).
இந்த நிலையில் நேற்று முன் தினம் பிரவினா மற்றும் அவ ரது அத்தை பூத்தானம் அம் மாளுடன் காஞ்சீபுரம்- வந்த வாசி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந் தார்.
அப்போது எதிரில் மோட் டார் சைக்கிளில் வந்த 2 மர் மநபர்கள் பிரவினா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இதுகுறித்து பிரவினா தூசி போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா வில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.






