என் மலர்
நீங்கள் தேடியது "Apps"
- புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்யலாம்.
- இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.
வாட்ஸ்அப் செயலியில் கம்பேனியன் மோடு (companion mode) பெயரில் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.10.76 வெர்ஷன் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சம் நான்கு ஐபோன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும்.
புதிய கம்பேனியன் மோடு அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இந்த அம்சம் கொண்டு வாட்ஸ்அப் செயலி இரண்டாவது சாதனத்திலும் இயங்க செய்ய, வலதுபுறம் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.
அடுத்து லின்க் டிவைஸ் (link device) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இனி கியூஆர் கோடு திரையில் தோன்றும். வாட்ஸ்அப் பயன்படுத்தும் பிரைமரி சாதனத்தில், செட்டிங்ஸ் மற்றும் லின்க்டு டிவைசஸ் (linked devices) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதற்காக ஐபோனில் கேமராவை இயக்குவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
இவ்வாறு செய்த பின் இரண்டு சாதனங்களிலும் வாட்ஸ்அப் சின்க் செய்யப்பட்டு விடும். பிரைமரி சாதனத்தில் இண்டர்நெட் இணைப்பு இல்லாத சமயத்திலும், இரண்டாவது சாதனத்தில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும். இரண்டாவது ஐபோனில் வாட்ஸ்அப் வீடியோ / ஆடியோ அழைப்புகளை மேற்கொண்டு மற்ற அம்சங்களை இயக்கலாம்.
சில சாட்கள் முழுமையாக லோடு ஆகாமலோ அல்லது, கால் லாக்ஸ் சரியாக தெரியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். நான்கு சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போதிலும், அனைத்தும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்து உள்ளது.
- இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின.
- போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு நள்ளிரவில் மீண்டும் தொடங்கப்பட்டது.
டாடா ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மூலம் புதிய உலக சாதனை படைத்து இருப்பதாக ஜியோசினிமா தெரிவித்து உள்ளது.
ஜியோசினிமா செயலியில் டாடா ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 3.2 கோடி பேர் பார்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது. எனினும், இடையில் மழை குறுக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு நள்ளிரவில் மீண்டும் தொடங்கப்பட்டது.

நள்ளிரவு 1 மணி அளவிலும் ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். இதன் மூலம் ஜியோசினிமா, நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற 2019 ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியினை அதிகம் பேர் பார்த்தனர்.
கடந்த மே 23-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியினை 2.5 கோடி பேர் பார்வையிட்டது அதிகமாக இருந்தது. தற்போது நேற்றைய போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டு இருக்கிறது.
- இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருந்த பி.ஜி.எம்.ஐ. கேமிற்கு கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.
- மே 27 ஆம் தேதி முதல், கூகுள் பிளே ஸ்டோரில் பி.ஜி.எம்.ஐ. கேம் டவுன்லோடு செய்ய கிடைக்கிறது.
பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (பி.ஜி.எம்.ஐ.) கேம் இந்திய சந்தையில் விளையாட கிடைக்கிறது. இந்தியாவில் இந்த கேமினை மீண்டும் வெளியிட பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி அளித்து இருந்தது. அந்த வரிசையில், கடந்த 27 ஆம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்ட பி.ஜி.எம்.ஐ. கேம் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய கிடைத்தது.
எனினும், கேமினை விளையாட முடியாத நிலை இருந்து வந்தது. பி.ஜி.எம்.ஐ. கேம் இன்று (மே 29) முதல் விளையாட கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதன் படி, இணையத்தில் வெளியான தகவல்களை உண்மையாக்கும் வகையில், தற்போது கேமினை அனைவரும் விளையாட முடியும்.
பி.ஜி.எம்.ஐ. கேமில் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பவை என்ன?
- இந்தியாவில் மீண்டும் வெளியாவதை கொண்டாடும் வகையில், பி.ஜி.எம்.ஐ. பயனர்களுக்கு நான்கு இலவச மற்றும் நிரந்தர ரிவார்டு அவுட்ஃபிட்கள் (outfit) வழங்கப்படுகின்றன.
- அதிக ஆயுதங்கள் மற்றும் பொருட்கள், எலிவேட்டர்கள், ஹட்ஸ் ஆன் ஃபயர், டேக்டிக்கல் கிராஸ்போக்கள் மற்றும் ஜிப்லைன்களை கொண்ட புதிய மேப் பி.ஜி.எம்.ஐ. கேமில் தற்போது வழங்கப்படுகிறது. இந்த மேப் நுசா (Nusa) என்று அழைக்கப்படுகிறது.
- நுசா மேப்-இல் டேக்டிக்கல் கிராஸ்போ மற்றும் SN200 ஷாட்கன், குவாட் 2 இருக்கை கொண்ட வாகனம் உள்ளது.
- மிக விரைவில் உயிரிழப்போருக்காக 'சூப்பர் ரிகால்' (Super Recall) எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- புதிய பி.ஜி.எம்.ஐ. கேமிலும், முன்பை போன்றே இன்-கேம் இவென்ட்கள் (Event) உள்ளன.
- 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த கேமினை நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரங்களும், 18 வயதுக்கும் மேற்பட்டோர் ஆறு மணி நேரங்களுக்கு மட்டுமே விளையாட முடியும்.
- மைனர்களுக்காக பி.ஜி.எம்.ஐ. கேமில் பேரண்டல் கண்ட்ரோல் மற்றும் பணம் செலுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
பி.ஜி.எம்.ஐ. கேமினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பயனர்கள், தற்போது கேமினை விளையாட முடியும். இதற்கு உங்களின் ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று பி.ஜி.எம்.ஐ. கேமினை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்தாலே போதும்.
- வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கின்றன.
- முன்னதாக குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டது.
வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை WABetainfo தெரிவித்து இருக்கிறது. வாட்ஸ்அப் யூசர்நேம் (Whatsapp Username) மற்றும் ரிடிசைன்டு செட்டிங்ஸ் இண்டர்ஃபேஸ் உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கிறது.
சமீபத்தில் தான் அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி மற்றும் சாட் லாக் போன்ற அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி இருந்தது.
வாட்ஸ்அப் யூசர்நேம்:
புதிய வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.11.15 வெர்ஷனில் உள்ள புதிய அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது அக்கவுண்ட்களில் யூசர்நேம் வைத்துக் கொள்ள செய்கிறது. இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- ப்ரோஃபைல் ஆப்ஷன்களில் இயக்க முடியும்.

இந்த அம்சம் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மொபைல் நம்பர் மூலம் காண்டாக்ட்களை அறிந்து கொள்வதற்கு மாற்றாக யூசர்நேம் மூலம் அறிந்து கொள்ள செய்கிறது. பயனர்கள் தாங்கள் விரும்பும் வித்தியாசமான அல்லது எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் யூசர்நேமை செட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் தங்களது மொபைல் நம்பர் இல்லாமல், காண்டாக்டை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய முடியும்.
ரிடிசைன்டு செட்டிங்ஸ்:
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.11.16 மற்றும் 2.23.11.18 வெர்ஷன்களில் ரிடிசைன்டு செட்டிங்ஸ் பக்கம் உள்ளது. இதில் மூன்று ஷாட்கட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஷாட்கட்-ஐ க்ளிக் செய்ததும், பயனர்கள் ரிடிசைன்டு செட்டிங்ஸ் பக்கத்தை பார்க்க முடியும். தற்போது இந்த பக்கத்தில் ப்ரோஃபைல் போட்டோ மற்றும் கியூஆர் கோடுகளை பார்க்க முடியும்.
மேம்பட்ட இண்டர்ஃபேசில்: ப்ரோஃபைல், பிரைவசி மற்றும் காண்டாக்ட்கள் உள்ளன. வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பக்கத்தில் ஸ்டார்டு மெசேஞ்சஸ் ஷாட்கட் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் செட்டிங்ஸ் பகுதியில் சிறு மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது.
Photo Courtesy: WABetaInfo
- தற்போது இந்த அம்சம் டெக்ஸ்ட் மெசேஞ்ச்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
- முதற்கட்டமாக இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.
வாட்ஸ்அப் செயலியில் மெசேஞ்ச்களை எடிட் செய்யும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப்-இல் மெசேஞ்ச்களை அனுப்பிய 15 நிமிடங்களில் அவற்றை எடிட் செய்து கொள்ள முடியும். இந்த வசதி வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் போது, 'edited' என்று வார்த்தை இடம்பெற்று இருக்கும்.
பயனர்கள் ஏற்கனவே அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் போது, அதற்கான நோட்டிஃபிகேஷன் தனியாக அனுப்பப்படாது. தற்போது இந்த அம்சம் மெசேஞ்ச்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இது புகைப்படம், வீடியோக்கள் மற்றும் இதர மீடியா அல்லது அவற்றுக்கான தலைப்பு (கேப்ஷன்) உள்ளிட்டவைகளுக்கு பொருந்தாது.

வாட்ஸ்அப் மெசேஞ்ச்-ஐ எடிட் செய்வது எப்படி?
- எடிட் செய்ய வேண்டிய மெசேஞ்ச்-ஐ அழுத்திப் பிடிக்க வேண்டும்
- இனி ஆண்ட்ராய்டில் மோர் (More) ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்
- ஐபோனில் எடிட் (Edit) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
- எடிட் செய்ய வேண்டிய மெசேஞ்சில் மெனு (Menu) - எடிட் மெசேஞ்ச் (Edit Message) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
- எடிட் ஆப்ஷனில் மெசேஞ்ச்-ஐ அப்டேட் (Update) செய்யுங்கள்
- மெசேஞ்ச்-ஐ அப்டேட் செய்து முடித்ததும், அதனை அப்டேட் செய்தால் குறுந்தகவல் எடிட் செய்யப்பட்டு விடும்.
முதற்கட்டமாக இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இன்று முதல் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு, ஐபோன், டெஸ்க்டாப் தளங்களில் வரும் நாட்களில் வழங்கப்படும்.
- சில மணி நேரங்கள் வரை முடங்கியிருந்த இன்ஸ்டாகிராம் செயலி, மீண்டும் செயல்பாட்டு வந்தது.
- தொழில்நுட்ப குறைபாடு காரணமாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது.
மெட்டாவினை தாய் நிறுவனமாக கொண்டிருக்கும் இன்ஸ்டாகிராம் உலகளவில் செயல்படாமல் முடங்கி போனது. இதனால் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். மேலும் இது பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சில மணி நேரங்கள் வரை முடங்கியிருந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. தொழில்நுட்ப குறைபாடு காரணமாக சேவை முடங்கியதாக இன்ஸ்டாகிராம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
"தொழில்நுட்ப குறைபாடு காரணமாக பலர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தாத நிலையை எதிர்கொண்டனர். இந்த குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விரைந்து பிரச்சினைகளை சரி செய்துவிட்டோம்," என்று மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் தனயார் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப குறைபாடு காரணமாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. இது குறித்து முடங்கிய வலைதளங்கள் பற்றிய விவரங்களை வெளியிடும் டவுன்டிடெக்டர் வலைதளத்தில், இன்ஸ்டாகிராம் செயலி சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டு இருக்கிறது.
- இந்த அம்சம் மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.
மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் சாட் லாக் பெயரில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சாட்களை தனியே ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ளலாம்.
தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி க்ரூப் சாட்களையும் இந்த ஃபோல்டரில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மெசேஜ் பிரீவியூக்கள் எதுவும் தெரியாது. இந்த அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

"இந்த அம்சம் அடிக்கடி தங்களது மொபைல் போனினை குடும்ப உறுப்பினரிடமோ அல்லது சந்தர்ப சூழல் காரணமாக மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று மெட்டா தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.
வாட்ஸ்அப் சாட்-ஐ லாக் செய்யும் முன் பயனர்கள் குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது க்ரூப்-ஐ தேர்வு செய்ய வேண்டும். சாட்களை மீண்டும் பார்க்க இன்பாக்ஸ்-ஐ கீழ்புறமாக ஸ்வைப் செய்தால், சாட்களின் மேல் லாக்டு ஃபோல்டர் இடம்பெற்று இருக்கும். லாக்டு ஃபோல்டருக்கான பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் மூலம் அன்லாக் செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் சாட் லாக் ஆப்ஷன்களில் பயனர்கள் இதர சாதனங்களில் உள்ள சாட்களை லாக் செய்யும் வசதியை வழங்குவது, பிரத்யேக பாஸ்வேர்டுகளை வைத்துக் கொள்ள செய்வது போன்ற ஆப்ஷன்களை வழங்க மெட்டா திட்டமிட்டிருந்ததாக தெரிவித்து உள்ளது.
- இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் ஆதாரமாக வெளியிட்டிருந்தார்.
- இதைத் தொடர்ந்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க், 'யாரையும் நம்பாதீர்கள்' என்று டுவிட் செய்திருந்தார்.
வாட்ஸ்அப் செயலி பயனர்களின் ஸ்மார்ட்போன் மைக்ரோபோனினை இயக்கியதாக எழுந்த சர்ச்சையில் அரசு விசாரணை நடத்தும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பயனர் தனியுரிமை விவகாரத்தில் இதுபோன்ற செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார். தனியுரிமை மீறப்பட்ட விவகாரத்தை அரசு முழுமையாக ஆய்வு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
"தனியுரிமை விவகாரத்தில் இது ஏற்றுக் கொள்ள முடியாத விதிமீறல் ஆகும். டிஜிட்டல் தனியுரிமை தரவு பாதுகாப்பு மசோதா தயாரிக்கப்பட்டு வரும் போதிலும், இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து ஆய்வு செய்து விதிமீறல் உறுதியாகும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம்," என்று மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் டுவிட்டர் பிதிவில் தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் பயனர் அனுமதியின்றி அவர்களது ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கியதாக டுவிட்டர் பொறியாளர் ஒருத்தர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் ஆதாரமாக வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க், 'யாரையும் நம்பாதீர்கள்' என்று டுவிட் செய்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்த வாட்ஸ்அப், "பிக்சல் போன் மற்றும் வாட்ஸ்அப் இடையே குறைபாடு இருப்பதை சுட்டிக் காட்டி குற்றச்சாட்டு தெரிவித்த டுவிட்டர் பொறியாளருடன் கடந்த 24 மணி நேரமாக பேசி வருகிறோம். இது ஆண்ட்ராய்டு பிழையாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கூகுளை கேட்டுக் கொண்டிருக்கிறோம்," என்று தெரிவித்தது.
இது தொடர்பாக தொடர்ந்து விளக்கம் அளித்த வாட்ஸ்அப், "அனுமதி அளிக்கப்பட்டால், பயனர் அழைப்புகளை மேற்கொள்ளும் போது, வாய்ஸ் நோட் அல்லது வீடியோ பதிவிடும் போது மட்டுமே வாட்ஸ்அப் சம்பந்தப்பட்ட ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கும். அப்போதும் கூட இந்த தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும். இதனால் வாட்ஸ்அப் சார்பில் கூட யாராலும் அவற்றை கேட்கவே முடியாது," என்று தெரிவித்து இருக்கிறது.
- பயனர்கள் அதிக சாதனங்களில் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தலாம்.
- லின்க் செய்யப்பட்ட போன் ஒவ்வொன்றும் தனித்தனியே வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும்.
வாட்ஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு கம்பானியன் மோட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் தங்களின் அக்கவுண்டை இரண்டாவதாக மற்றொரு சாதனத்தில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் மேலும் அதிக போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனர்கள் அதிக சாதனங்களில் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தலாம். அதாவது ஒரே மொபைல் நம்பர் கொண்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அதிகபட்சம் நான்கு சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

லின்க் செய்யப்பட்ட போன் ஒவ்வொன்றும் தனித்தனியே வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும். இதன் காரணமாக மெசேஞ்ச், மீடியா, அழைப்புகள் என அனைத்துமே எண்ட்-டு-எண்ட் என்க்ர்பிட் செய்யப்படுகிறது. எனினும், உங்களின் பிரைமரி சாதனம் 14 நாட்களுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை எனில், மற்ற சாதனங்களில் இருந்து வாட்ஸ்அப் தானாக லாக் அவுட் செய்யப்பட்டு விடும்.
விரைவில் புதிய வசதி:
தற்போது வாட்ஸ்அப் கியூஆர் கோட் மூலம் பிரைமரி சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்தில் வாட்ஸ்அப்-ஐ இணைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
வரும் வாரங்களில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் உங்களின் மொபைல் நம்பரை பதிவிட்டு அதன் பின் மொபைல் நம்பருக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் கொண்டு எளிமையாக லின்க் செய்துவிட முடியும். எதிர்காலத்தில் இந்த அம்சத்தில் பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது.
தற்போது புதிய அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
- வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அப்டேட் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
- வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் செட்டிங்ஸ்-இல் விரைவில் சர்ச் பார் வழங்கப்பட இருக்கிறது.
மெட்டா நிறுவனத்தின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் வழங்க இருக்கிறது. இதுகுறித்து WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி செயலியின் செட்டிங்ஸ்-இல் சர்ச் பார் சேர்க்கப்பட இருக்கிறது. கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், இந்த அம்சம் தற்போது பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து வெளியாக இருக்கும் எதிர்கால அப்டேட்களில் இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படலாம். ஆப்பிள் ஐபோன் வெர்ஷனில் சர்ச் பார் மூலம் ஆப் செட்டிங்ஸ்-ஐ இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் செயலியின் செட்டிங்ஸ்-ஐ குறிப்பிட்டு தேட முடியும்.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சம் எப்படி இயங்கும் என்ற ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பயனர்கள் செட்டிங்ஸ்-இன் மேல்புறத்தில் சர்ச் பார் கொண்டு தேட விரும்புவதை டைப் செய்யலாம். இவ்வாறு செய்தபின் தேடலுக்கான பதில்கள் பட்டியலிடப்படும். பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உணர்த்தும் ஐகான் இடம்பெற்று இருக்கிறது.
இவ்வாறு வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-இல் சர்ச் ஐகான் காணப்பட்டால் இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சர்ச் பார் மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த கம்பேனியன் மோட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.
Photo Courtesy: WABetaInfo