என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apps"

    • கூகுள் மீட் சேவை முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சமூக வலைத்தளங்களில் பயனர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

    கூகுள் நிறுவனம் கூகுள் மீட் என்ற வீடியோ கான்பரன்சிங் சேவையை வழங்கி வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவில் திடீரென கூகுள் மீட் சேவை முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    எவ்வளவு முயற்சித்தும் உள்ளே நுழைய முடியாத விரக்தியில் சமூக வலைத்தளங்களில் பயனர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

    • அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தனிப்பட்ட தரவை பாதுகாக்கும் தொழில்நுட்ப அம்சமாகும்.

    வாட்சப் செயலுக்கு மாற்றாக ஜோஹோ (Zoho) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி என்பதால் பலரும் அரட்டை செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அரட்டை செயலியில் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்று இணையத்தில் கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த அளித்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, "எங்கள் முழு வணிகமும் நாங்கள் வாடிக்கையாளர் தரவை அணுக மாட்டோம் மற்றும் அவர்களின் தரவை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தமாட்டோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

    எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். அது விரைவில் வரப்போகிறது. அனால் அதைவிட நம்பிக்கை மிகவும் விலைமதிப்பற்றது. மேலும் உலக சந்தையில் அந்த நம்பிக்கையை நாங்கள் தினமும் சம்பாதித்து வருகிறோம்.

    எல்லா இடங்களிலும் எங்கள் தயாரிப்பின் ஒவ்வொரு பயனரின் நம்பிக்கையையும் நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அதற்கு அடுத்த பதிவில், "எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இப்போது சோதனையில் உள்ளது. நாங்கள் அதை நவம்பரில் வெளியிடப் போகிறோம்" என்று தெரிவித்தார்.

    எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இல்லாதது மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் அரட்டை செயலி செயல்படுகிறது என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளது இணையத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

    • Spotify தளத்தில் தற்போது பலரும் பாடல்களை கேட்டு வருகின்றனர்.
    • இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

    உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.

    அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில், Spotify-ல் நீங்கள் கேட்கும் பாடல்களை இன்ஸ்டாகிராம் Notes-ல் பகிரும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா வெளியிட்டுள்ளது.

    Spotify தளத்தில் தற்போது பலரும் பாடல்களை கேட்டு வரும் நிலையில், மெட்டாவின் இந்த புதிய அப்டேட் இன்ஸ்டாகிராம் பயனாளர்களை கவர்ந்துள்ளது. 

    • இந்தியாவில் இன்ஸ்டாகிராமை அதிகமான இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

    உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.

    அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படம், வீடியோவை 3:4 Ratio-விலும் பதிவேற்றம் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா கொண்டுவந்துள்ளது.

    இதன்மூலம் இனி புகைப்படங்களை Crop செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கு முன்பாக 1:1, 4:5, 16:9 வடிவங்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • Consumer Al Subscribers-க்கு முதலில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
    • இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும்.

    கூகுள் நிறுவனம் கூகுள் மீட் என்ற வீடியோ கான்பரன்சிங் சேவையை வழங்கி வருகிறது.

    இந்நிலையில், Google Meet தளத்தில் குரல் உரையாடலை அப்படியே மொழிமாற்றம் செய்து ஒலிக்கச் செய்யும்

    Real Time Speech Translation அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    Consumer Al Subscribers-க்கு முதலில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் விளங்குகிறது.
    • இந்தியா மட்டுமின்றி உலகளவில் வாட்ஸ்அப் சேவை நீண்ட நேரம் முடங்கிய சம்பவம் அரங்கேறியது.

    இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை நேற்று (அக்டோபர் 25) மதியம் முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய வாட்ஸ்அப் சேவை இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் செயல்பாட்டு வந்தது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் வாட்ஸ்அப் சேவை முடங்கி போனது. இந்த செயலி சுமார் இரண்டு மணி நேரம் முடங்கி போனது.

    வாட்ஸ்அப் வரலாற்றில் இத்தனை மணி நேரம் செயலி முடங்கியது இதுவே முதல் முறை ஆகும். சேவை முடங்கியதால் பயனர்களால் புகைப்படம், வீடியோ, குறுந்தகவல் உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப்-இல் அனுப்பவோ, பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்து டவுன்டிடெக்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நாடு முழுக்க சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாட்ஸ்அப் சேவையை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    திடீரென முடங்கிய நிலையில், வாட்ஸ்அப் சேவைகள் மதியம் 2 மணி அளவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. எனினும், செயலியில் அவ்வப்போது சில இடர்பாடுகள் ஏற்பட்டதாக பயனர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்தே வாட்ஸ்அப் மீண்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

    முந்தைய தகவல்களில் வாட்ஸ்அப் சர்வெர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சேவை முடங்கி இருக்கலாம் என கூறப்பட்டது. எனினும், வாட்ஸ்அப் சேவை தொழில்நுட்ப குறைபாடு காரணமாக முடங்கியது என மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
    • புது அம்சம் பற்றிய விவரங்கள் செயலியின் பீட்டா வெர்ஷனில் இடம்பெற்று இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷன் 2.22.23.14/15 அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. பிளே ஸ்டோரில் இந்த அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. புது அப்டேட்டில் மல்டி டிவைஸ்-க்கான லாக்-அவுட் ஸ்கிரீன், புகைப்படம், வீடியோ, ஜிஃப் மற்றும் டாக்யுமெண்ட் உள்ளிட்டவைகளை கேப்ஷனுடன் ஃபார்வேர்டு செய்யும் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    லாக்-அவுட் ஸ்கிரீனை மேம்படுத்தும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. புதிய லாக்-அவுட் பகுதி வாட்ஸ்அப்-இல் இருந்து லாக்-அவுட் செய்ததும் காண்பிக்கும். செயலியின் செட்டிங்ஸ்-இல் இருந்தபடி இரண்டாவது சாதனத்தில் இருந்து லாக்-அவுட் செய்ய முடியும்.

    வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- லின்க்டு டிவைசஸ் ஆப்ஷன் மூலம் பிரைமரி போனில் இருந்து டேப்லெட் செஷனை விட்டு வெளியேற முடியும். மேலும் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் ஆப்ஷன்களில் இருந்து நம்பரை மாற்றுவதற்கான "சேஞ்ச் நம்பர்" அம்சம் இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் புகைப்படம், ஜிஃப், வீடியோ உள்ளிட்டவைகளை ஃபார்வேர்டு செய்யும் போது அவற்றுக்கு தலைப்பிடும் வசதி வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தரவுகளை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் தலைப்பை பார்க்க முடியும். இதே வசதி டாக்யுமெண்ட்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு அம்சங்களில் லாக்-அவுட் ஸ்கிரீன் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைவருக்குமான வெர்ஷனில் வெளியாகும் முன் இந்த அம்சம் தொடர் சோதனை செய்யப்படும். ஃபார்வேர்டு மீடியா வித் கேப்ஷன் அம்சம் பீட்டா பயனர்களில் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் பீட்டா செயலியில் பல்வேறு புது அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
    • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் இரண்டு புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 அப்டேட்டில் புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பயனர்கள் தங்களுக்கு தாங்காளாகவே குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியும். இதுதவிர ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் எனும் புது வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த இரு அம்சங்களும் சோதனை முறையில் மிக சிறிய பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) - அம்சம் கொண்டு பயனர்கள் அவர்களின் சொந்த மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியும். இதற்கான வசதியை வாட்ஸ்அப் தனித்து காண்பிக்கிறது. சில பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வேறு விதமான சின்க் வசதியை வழங்கி இருக்கிறது. அதாவது அவர்களின் சொந்த நம்பருக்கு குறுந்தகவல் அனுப்பும் போது, இவை ஏற்கனவே லின்க் செய்யப்பட்ட சாதனங்களுடன் சின்க் செய்யப்பட்டு விடும்.

    ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் - க்ரூப் சாட்களுக்குள் க்ரூப் பயனர்களுக்காக வாட்ஸ்அப் ப்ரோபைல் படத்தை வெளியிடுகிறது. இந்த வசதியை செயல்படுத்த முதலில் க்ரூப் ஒன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஒரே பெயரில் க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றவர்களை ப்ரோபைல் போட்டோவை வைத்து எளிதில் கண்டறிந்து விட முடியும்.

    ஒருவேளை யாரேனும் ப்ரோபைல் போட்டோ வைக்காமல் இருந்தாலோ அல்லது பிரைவசி செட்டிங்கில் அதனை மறைத்து வைத்தாலோ, போட்டோ இல்லாமல் காலியாக உள்ள படம் செட் செய்யப்படும். இதில் குறிப்பிட்ட காண்டாக்டின் முதல் எழுத்து ப்ரோபைல் போட்டோவாக வைக்கப்படும்.

    தற்போது மெசேஜ் யுவர்செல்ஃப் மற்றும் ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் அம்சங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 வெர்ஷனிலும் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 22.23.0.70 வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தொடர் சோதனைக்கு பின் இரு அம்சங்களும் அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும்.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்களை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது.
    • இந்த அப்டேட்டில் கம்யுனிடிஸ், இன்-சாட் போல்ஸ் என புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் புதிய அம்சம் வரும் மாதங்களில் சர்வதேச அளவில் வெளியிடப்படும் என மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தஉ இருந்தார். ஏற்கனவே வெளியான தகவல்களின் படி வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் அம்சம் உருவாக்கப்பட்டு வந்தது. இந்த அம்சம் வாட்ஸ்அப் க்ரூப்களை ஒருங்கிணைக்கும் புது வசதியை செயல்படுத்துகிறது.

    கம்யுனிடிஸ் அம்சத்தின் கீழ் பயனர்கள் பல்வேறு வாட்ஸ்அப் க்ரூப்களை ஒற்றை குடையின் கீழ் கொண்டுவர முடியும். கம்யுனிடிஸ் அம்சம் மூலம் வியாபாரங்கள் உரையாடும் போது மற்ற தளங்கள் வழங்குவதை விட அதிகளவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்க முடிவு செய்துள்ளது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் வாட்ஸ்அப்-இல் அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய கம்யுனிடிஸ் அம்சத்தை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது சாட்-இன் மேல்புறத்திலும், ஐஒஎஸ் பயனர்கள் சாட்-இன் கீழ்புறத்திலும் காண முடியும்.

    இங்கிருந்து ஏற்கனவே உள்ள க்ரூப்களை ஒரு கம்யுனிடியின் கீழ் ஒருங்கிணைக்க முடியும். இதுதவிர புது கம்யுனிடியையும் உருவாக்க முடியும்.

    கம்யுனிடியில் சேர்ந்த பின் பயனர்கள் க்ரூப்களின் இடையே தங்களுக்கு தேவையான விவரங்களை மிக எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். அட்மின்களும் மிக முக்கிய அப்டேட்களை கம்யுனிடியில் உள்ள அனைவருக்கும் அனுப்ப முடியும்.

    புதிய கம்யுனிடிஸ் அம்சம் தவிர இன்-சாட் போலிங் மற்றும் 32 நபர்களுடன் வீடியோ காலிங் வசதி, க்ரூப் பயனர்கள் எண்ணிக்கை 1024 உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எமோஜி ரியாக்‌ஷன், அதிக ஃபைல் ஷேரிங் மற்றும் அட்மின் ரிமுவல் போன்ற அம்சங்களை க்ரூப்களிலும் பயன்படுகத்த முடியும். இந்த வசதி கம்யுனிடி அம்சத்திற்கு பெருமளவு உதவியாக இருக்கும்.

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அம்சங்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. வரும் மாதங்களில் உலகம் முழுக்க இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவுகளை முன்கூட்டிய ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
    • எனினும், இந்த வசதி அனைவரும் பயன்படுத்தும் பொதுவான அக்கவுண்ட்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

    இன்ஸ்டாகிராம் சேவையில் பதிவுகளை ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை பயனர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களாகவே பதிவுகளை வெளியிடும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பலர் மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தி பதிவுகளை ஷெட்யுல் செய்து வந்தனர்.

    இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள புரோபஷனல் அக்கவுண்ட்ஸ்-களுக்கு மட்டும் பதிவுகளை ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புது அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். நீண்ட காலத்திற்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய அம்சம் ஒருவழியாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெட்டா, ட்விட்டர், டிக்டாக் மற்றும் யூடியூப் என பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் தானாக பதிவு செய்ய வைக்கும் ஷெட்யுல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் பதிவுகளை ஷெட்யுல் செய்வதோடு, மெட்டா கிரியேட்டர் ஸ்டூடியோ மூலமாகவும் ஷெட்யுல் செய்ய முடியும்.

    ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று போஸ்ட் ஷெட்யுல் அம்சம் ப்ரோபஷனல் பயனர்கள், அதாவது கிரியேட்டர் மற்றும் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. புது அம்சம் கொண்டு பயனர்கள், போட்டோ, ரீல்ஸ் மற்றும் கரௌசல் போஸ்ட்களை அதிகபட்சம் 75 நாட்களுக்கு முன்பே ஷெட்யுல் செய்யலாம்.

    பதிவுகளை ஷெட்யுல் செய்ய, வழக்கம் போல் பதிவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் போஸ்ட் செய்யும் முன் "அட்வான்ஸ்டு செட்டிங்ஸ்" ஆப்ஷனில் "ஷெட்யுல் திஸ் போஸ்ட்" ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி எந்த தேதி மற்றும் நேரத்தில் குறிப்பிட்ட போஸ்ட் வெளியாக வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். 

    • வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புது அம்சங்கள் வழங்குவதற்கான சோதனைகள் அதன் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது.
    • சமீபத்தில் தான் வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருந்தது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது மெசேஜிங் செயலியில் ஏராளமான புது அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது அம்சங்கள் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் முன்பே பீட்டா வெர்ஷனில் சோதனை முயற்சியாக வழங்கப்பட்டு விடும். அந்த வகையில் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதுபற்றிய தகவல்களை WABetaInfo வெளியிட்டு இருக்கிறது. இதில் புது அம்சம் எப்படி காட்சியளிக்கும் என்ற ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி பயனர்கள் அதிகபட்சம் 30 நொடிகள் கொண்ட வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை பதிவிட முடியும் என தெரியவந்துள்ளது. மற்றவர்கள் திரையின் கீழ்புறம் வலதுபக்கமாக இருக்கும் மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்து வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை பார்க்க முடியும்.

    இதுவரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பாரில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தது. தற்போது வாய்ஸ் ஸ்டேட்டஸ் இந்த பட்டியலில் புதிதாக இணைய இருக்கிறது. தற்போது பீட்டா வெர்ஷனில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்திற்கு மட்டுமே காண்பிக்கும். இதே போன்ற நிலையை புதிய வாய்ஸ் ஸ்டேட்டஸ்-இலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.21.5 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது. இது மட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம் மேலும் சில அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இவை எப்போது செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    Photo Courtesy: WABetaInfo

    • உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் விளங்குகிறது.
    • தற்போது வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    வாட்ஸ்அப் உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக உள்ளது. தினந்தோரும் கோடிக்கணக்கானோர் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் முக்கிய பாலமாக திகழ்கிறது. இத்தனை பிரபலமாக இருக்கும் வாட்ஸ்அப் செயலி அதே அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கிறது.

    இந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு சுமார் 500 மில்லியன் பயனர் விவரங்கள் திருடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ஒருவர் சுமார் 487 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர் விவரங்களை ஹேக்கிங் கம்யுனிட்டியில் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார் என சைபர்நியூஸ் தெரிவித்து இருக்கிறது.

    இதில் உலகம் முழுக்க 84 நாடுகளை சேரந்த பயனர் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் 32 மில்லியன் பயனர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுதவிர எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் துருக்கியை சேர்ந்த வாட்ஸ்அப் பயனர் விவரங்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் 7 ஆயிரம் டாலர்கள் எனும் விலைக்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. லண்டன் டேட்டாபேஸ் விவரங்களின் விலை 2 ஆயிரத்து 500 டாலர்களும், ஜெர்மனி விவரங்களின் விலை 2 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் லீக் ஆகி இருக்கும் மொபைல் போன் நம்பர்களை கொண்டு ஏராளமான மோசடிகளை செய்ய முடியும் என்ற வாய்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

    ×