என் மலர்
நீங்கள் தேடியது "oscar award"
திரையுலகில் சர்வதேச அளவில் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16-ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும்.
இதற்கிடையே, நடப்பு ஆண்டில் 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் 24 பிரிவுகளில் வழங்கப்படும் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் சமீபத்தில் வெளியானது.
இதில் 16 பிரிவுகளில் நாமினேட் ஆகி ஆஸ்கார் வரலாற்றிலேயே அதிக பிரிவுகளில் நாமினேட் ஆன படமாக சின்னர்ஸ் (Sinners) திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் ரையன் கூக்லர் இயக்கிய 'சின்னர்ஸ்' திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒப்பனை அலங்காரம், சிறந்த ஒலி, சிறந்த விஎப்எக்ஸ், சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் மற்றும் சிறந்த நடிகர் என 16 ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்போட்டியில் போட்டியிட தேர்வாகி உள்ளது.

முன்னதாக ஆல் அபவுட் ஈவ், டைட்டானிக் மற்றும் லாலா லேண்ட் ஆகிய படங்களின் 14 பிரிவுகளில் போட்டியில் இருந்த நிலையில் சின்னர்ஸ் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
சின்னர்ஸ் படத்திற்கு அடுத்தபடியாக இந்த வருட ஆஸ்காரில் லியனார்டோ டி காப்ரியோ நடித்த 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) திரைப்படம் 13 பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு நாமினேட் ஆகி உள்ளது.
அடுத்ததாக 'மார்ட்டி சுப்ரீம்', 'சென்டிமென்டல் வேல்யூ' மற்றும் 'ப்ராங்கன்ஸ்டைன்' ஆகிய படங்கள் தலா 9 பரிந்துரைகளைப் பெற்றுள்ளன.
F1, தி சீக்ரெட் ஏஜென்ட், டிரைன் ட்ரீம்ஸ், ஹாம்நெட், பிராங்கண்ஸ்டைன், பிகோனியா உள்ளிட்ட படங்களும் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
அதேநேரம் இந்தியாவின் சார்பில் ரேஸில் இருந்த ஜான்வி கபூரின் ஹோம்பவுண்ட் திரைப்படம் இறுதிப்போட்டிக்கு தேர்வாகாமல் ஏமாற்றம் அளித்தது.
- இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.
வாஷிங்டன்:
திரையுலகில் சர்வதேச அளவில் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16-ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும்.
இதற்கிடையே, நடப்பு ஆண்டில் 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் 24 பிரிவுகளில் வழங்கப்படும் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் சமீபத்தில் வெளியானது.
இதில் இந்தியாவில் இருந்து 'ஹோம்பவுண்ட்' என்ற இந்தி படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பரிந்துரை பட்டியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.
இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்து ஹோம்பவுண்ட் திரைப்படம் வெளியேறியது.
2022-ல் வெளியாகி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கன்னட படம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா'.
இதன் முன்கதையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான 'காந்தாரா சாப்டர் 1' அதே அளவு கதை இல்லையென்றாலும் பிரமாண்டத்தில் குறை வைக்கவில்லை. ஹாலிவுட் தரத்திலான VFX காட்சிகள் பிரமிக்க வைத்தன.
இந்தப் படம், உலக அளவில் சுமார் 855 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள 98-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படப் பிரிவில் போட்டியிடத் தகுதியுள்ள உலகளாவிய 201 திரைப்படங்களின் பட்டியலில் 'காந்தாரா சாப்டர் 1' இடம்பெற்றுள்ளது.
ஆஸ்கர் அகாடமி விதித்துள்ள தகுதி வரம்புகளை இந்தப் படம் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.
இந்தப் பட்டியிலில் காந்தாராவுடன் சேர்த்து அனுபம் கெர் இயக்கிய 'தன்வி தி கிரேட்' திரைப்படமும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2022 வெளியான காந்தாரா படமும் அப்போதைய ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றது. அனால் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை.
98-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியல் வரும் ஜனவரி 22, 2026 அன்று அறிவிக்கப்பட உள்ளது. அதில் 'காந்தாரா சாப்டர் 1' இறுதிப் பட்டியலுக்குள் நுழையுமா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
- 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOMEBOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.
- கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் 2 இளைஞர்கள் பற்றிய கதையை இப்படத்தில் காட்டியுள்ளனர்.
98வது ஆஸ்கர் அகாடமி விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15 இல் நடைபெற உள்ளது.இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOMEBOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.
சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதிப் பட்டியலில் இப்படம் தேர்வாகியுள்ளது.
கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் 2 இளைஞர்கள் பற்றிய கதையை உயிரோட்டத்துடன் இப்படத்தில் காட்டியுள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் இந்திய சமூகத்தில் எப்படி பாகுபாடோடு நடத்தப்படுகிறார்கள் என்பதை இப்படம் நம் கண்முன் எடுத்துக்காட்டியது.
இந்நிலையில், இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் போட்டிக்குத் தகுதிபெற்ற 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் மீது கதைத்திருட்டு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பூஜா சாங்கோய்வாலா, தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் இந்தியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பூஜா தனது மனுவில், "அந்தப் படத்தைப் பார்த்தபோது, தயாரிப்பாளர்கள் எனது புத்தகத்தின் தலைப்பைத் தவறாகப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், படத்தின் இரண்டாம் பாதியில் எனது நாவலின் கணிசமான பகுதிகளை அப்பட்டமாகப் பிரதி எடுத்திருப்பதையும் கண்டுபிடித்தேன். இதில் அதன் காட்சிகள், உரையாடல்கள், கதை அமைப்பு, நிகழ்வுகளின் வரிசை ஆகியவை அடங்கும்" என்று கூறியுள்ளார்.
தர்மா நிறுவனம் தனது புத்தகத்தின் அதே தலைப்பைப் பயன்படுத்தியதன் மூலம் 'அப்பட்டமான ஏமாற்றுச் செயலைச் செய்துள்ளது', இது 'தற்செயலாக இருக்க முடியாது' என்றும் அவர் தெரிவித்தார்.
ஹோம்பவுண்ட் படத்தின் திரைக்கதை 2022-ல் உருவாக்கப்பட்டது. இது அவரது நாவல் வெளியிடப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.
- இதன்படி ஆஸ்கார் விருதுகள் விழா உலகெங்கிலும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
- கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
திரைத்துறையின் உயரிய அங்கீகாரமாக ஆஸ்கார் விருதுகள் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வருடந்தோறும் அமெரிக்காவில் இந்த விழா பிரம்பாண்டமாக நடத்தப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து திரைபிரபலங்கள் அமெரிக்காவில் கூடுவர்.
அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி இந்த ஆஸ்கார் விழாவை ஒளிபரப்பி வந்தது. 2028 வரை ஆஸ்கார் விழாவை ஒளிபரப்பும் உரிமையை ABC தொலைக்காட்சி நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. 2028-ல் ஆஸ்கார் விருதின் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் 2029-ஆம் ஆண்டு முதல் 2033 வரை ஆஸ்கார் விருதுகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை யூடியூப் தளம் பெற்றுள்ளது.
கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்த காலத்தில் பிரபலங்களின் சிவப்பு கம்பள வரவேற்பு, விருதளிக்கும் நிகழ்வு என ஆஸ்கார் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் யூடியூப்பில் மட்டுமே வெளியாகும்.
இதற்காக யூடியூப்பில் பிரத்யேக டிஜிட்டல் தளம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. இதன்படி ஆஸ்கார் விருதுகள் விழா உலகெங்கிலும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
இந்த மாற்றத்தினால் ஆஸ்கார் விருதுகளின் பார்வையாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆஸ்கார் விருதுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தரும் என்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைச் சென்றடைய இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று ஆஸ்கார் அகாடெமி தெரிவித்துள்ளது.
- 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOMEBOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.
- சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளது
98வது ஆஸ்கர் அகாடமி விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15 இல் நடைபெற உள்ளது.இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOMEBOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.
சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் 2 இளைஞர்கள் பற்றிய கதையை உயிரோட்டத்துடன் இப்படத்தில் காட்டியுள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் இந்திய சமூகத்தில் எப்படி பாகுபாடோடு நடத்தப்படுகிறார்கள் என்பதை இப்படம் நம் கண்முன் எடுத்துக்காட்டியது என்றால் அது மிகையாகாது
- டிஸ்னியின் 'ஜூடோபியா 2', 'கே-பாப் டிமான் ஹண்டர்ஸ்', ஜப்பானின் 'டிமான் ஸ்லேயர்' மற்றும் 'ஸ்கார்லெட்' உள்ளிட்ட படங்களுடன் போட்டியிடுகிறது.
- ஹாலிவுட் அதிரடி படங்கள் மற்றும் ஜப்பானிய அனிமே தொடர்கள் சிறு வயதிலிருந்தே தன் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அஷ்வின் குமார் தெரிவித்திருந்தார்.
2026 மார்ச் 15 இல் நடைபெற உள்ள 98வது ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கான போட்டியில் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் தகுதி பெற்ற படங்களில் 'மகாவதார் நரசிம்மா' இடம்பிடித்துள்ளது.
டிஸ்னியின் 'ஜூடோபியா 2', 'கே-பாப் டிமான் ஹண்டர்ஸ்', ஜப்பானின் 'டிமான் ஸ்லேயர்' மற்றும் 'ஸ்கார்லெட்' உள்ளிட்ட அனிமேஷன் படங்களுடன் 'மகாவதார் நரசிம்மா' போட்டியிடுகிறது.

இந்தியில் அறிமுக இயக்குனர் அஷ்வின் குமார் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான 'மகாவதார் நரசிம்மா' படம் யாரும் எதிர்பாராத வகையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியிடப்பட்டது.
ஹாலிவுட் அதிரடி படங்கள் மற்றும் ஜப்பானிய அனிமே தொடர்கள் சிறு வயதிலிருந்தே தன் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அஷ்வின் குமார் தெரிவித்திருந்தார்.
முன்னதாக தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு அவர் அளித்த பேட்டியில், "டெர்மினேட்டர், ஜுராசிக் பார்க், அவதார் போன்ற ஹாலிவுட் படங்களும், மகாபாரதம் போன்ற நமது காவியங்களும் என்னை மிகவும் கவர்ந்தன.
அந்த உத்வேகத்துடன், சர்வதேச அளவில் ஒரு இந்தியக் கதையைச் சொல்ல விரும்பினேன். நான் அனிமேஷின் பெரிய ரசிகன். இந்தப் படம் எனது குழந்தைப் பருவ நினைவுகள் மற்றும் நான் பார்த்த படங்களின் பாதிப்பில் உருவானது" என்றார். இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
- பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருந்தார்.
- ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. .
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். ஹாலிவுட் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர். இவரது நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
டாம் க்ரூஸின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது 'மிஷன்: இம்பாஸிபிள்' திரைப்பட வரிசையில் 8-வது பாகமான, 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பல்வேறு சாதனைனகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான டாம் க்ரூஸ் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில், டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டது. அவருடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
- 'தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ ஆவணப்படம் ஆஸ்கர் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது.
- முற்போக்கு பாடகரும் எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது.
'தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்' ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது.
இந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் உடைய நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
மறைந்த முற்போக்கு பாடகரும் எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இசை வடிவில் உருவான இந்த ஆவணப்படத்தை இயக்குநர் கிரிதரன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் , "தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்" ஆவணப்படம், ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளதாக நீலம் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, 17 ஆவது கேரள சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் இப்படம் சிறந்த முழு நீள ஆவணப்படம் என்ற விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
- இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி காதாபாதிரத்தில் நடித்துள்ளனர்.
- நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.
ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை குழு 2026 ஆஸ்காரின் சிறந்த சர்வதேச படம் விருதுக்கு ஹோம்பவுண்ட் (Homebound) படத்தை பரிந்துரை செய்துள்ளது.
இது தொட்பாக கொல்கத்தாவில், தேர்வுக்குழு கமிட்டி என். சந்திரா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-
பல்வேறு மொழிகளின் 24 படங்கள், பரிந்துரைக்கு பரிசீலிக்கப்பட்டன. இது மிகவும் கடினமான தேர்வு. இந்த படங்கள் மக்களின் வாழ்க்கையை தொட்டவை. நாங்கள் தேர்வாளர்கள் கிடையாது. பயிற்சியாளர்கள். முத்திரை பதிக்கும் வீரர்கள் நாங்கள் தேடுகிறோம்.
இவ்வாறு என். சந்திரா தெரிவித்தார்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள் என 12 பேர் கொண்ட குழு ஹோம்பவுண்ட் படத்தை துர்வு செய்துள்ளது.
இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி காதாபாதிரத்தில் நடித்துள்ளனர். நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.
வட இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பால்ய நண்பர்கள், காவல்துறை அதிகாரிகளாக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அந்த வேலை தங்களுக்கு ஒருபோதும் கிடைக்காத மரியாதையைக் கொண்டு வரும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், அவர்கள் தங்கள் இலக்கை நெருங்கும்போது, அழுத்தமும் போராட்டங்களும் அவர்களின் நட்பில் சிக்கல்களை உருவாக்குகின்றன. இதுதான் படத்தின் கதைக்களம் ஆகும்.
- ஆர்டினரி பீப்பிள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.
- ரெட்போர்ட் ஒரு அர்ப்பணிப்புள்ள சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான ராபர்ட் ரெட்போர்டு (89). இவர் 1981-ம் ஆண்டு ஆர்டினரி பீப்பிள் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.
மேலும், இவர் சுற்றுச்சூழல் ஆர்வலருமாக இருந்து வந்தார். இவரது இறப்பை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ராபர்ட் ரெட்போர்ட் செப்டம்பர் 16, 2025 அன்று உட்டா மலைகளில் உள்ள சன்டான்ஸில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவர் நேசித்த இடம், அவர் நேசித்தவர்களால் சூழப்பட்டது. அவரை மிகவும் மிஸ் செய்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்புக் கலையின் மீதான அவரது ஆர்வம் ஒரு லாப நோக்கற்ற நிறுவனமான சன்டான்ஸ் நிறுவனத்தை உருவாக்க வழிவகுத்தது.
ரெட்போர்ட் ஒரு அர்ப்பணிப்புள்ள சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார். உட்டாவுக்குச் சென்று மாநிலத்தின் இயற்கை நிலப்பரப்பையும் அமெரிக்க மேற்குப் பகுதியையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்கர் விருதுக்கான குழுவில் கமல் தேர்வு செய்யப்பட்டது இந்திய திரையுலகிற்கே பெருமையான தருணம்
- கமல்ஹாசன் இந்திய மற்றும் உலக சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
திரைத்துறையின் உச்சபட்ச அமைப்பாக ஆஸ்கர் அகாடமிக்கு புதிய உறுப்பினர்களாக இணைய நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் அகாடமியில் வாக்களிக்கும் உறுப்பினராக சேரவுள்ளது குறித்து பதிவிட்ட கமல்ஹாசன், "இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கானது. என்னை செதுக்கிய எண்ணிலடங்கா கதைசொல்லிகளுக்கானது. இந்திய சினிமா இவ்வுலகிற்கு நிறைய வழங்க உள்ளது" என்று தெரிவித்தார்.
ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக இணையவுள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், ஆஸ்கர் விருதுக்கான குழுவில் கமல் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய திரையுலகிற்கே பெருமையான தருணம்.
சினிமாவின் ஒவ்வொரு அங்கத்திலும் அவர் செலுத்திய ஆதிக்கம், பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. அவர் உண்மையிலேயே கலையின் வித்தகர். மேலும் பல ஆண்டுகள் உலக சினிமாவுக்கு அவர் சேவையாற்ற மனதார வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.






