search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oscar"

    • பிரபல இங்கிலாந்து இசை கலைஞர் எல்டன் ஜான் சிறப்புமிக்க ஈகோட் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்
    • ஜான் லெஜண்ட், ஹூபி கோல்ட்பர்க், ஆட்ரி ஹெப்பர்ன் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களின் வரிசையில் இணைகிறார் எல்டன் ஜான்

    பிரபல இங்கிலாந்து இசை கலைஞர் எல்டன் ஜான் தனது  "எல்டன் ஜான் லைவ்,  ஃபேர்வெல் ஃப்ரம் டோட்ஜர் ஸ்டேடியம் " என்ற லைவ் வீடியோக்காக எம்மி விருதை பெற்று ஈகாட் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

    ஈகோட் பட்டியல் என்பது எம்மி, கிராமி, ஆஸ்கார், மற்றும் டோனி ஆகிய விருதுகளின் சுருக்க பெயராகும்.

    இந்த பட்டியலி்ல் ஜெனிபர் ஹட்சன், மெல் ப்ரூக்ஸ், ஜான் லெஜண்ட், ஹூபி கோல்ட்பர்க், ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற புகழ்பெற்ற கலைஞர் இருக்கும் வரிசையில் இணைகிறார் எல்டன் ஜான்.

    1995 மற்றும் 2020 ஆண்டுகளில் "ராக்கெட்மேன்" மற்றும் "தி லயன் கிங்" போன்ற படங்களின் இசைக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் அவர் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். 2000 ஆம் ஆண்டில், ஜான் "ஐடா" நாடகத்திற்காக எழுதப்பட்ட சிறந்த ஒரிஜினல் இசை மற்றும் பாடலுக்கான டோனி விருதைப் பெற்றார். மேலும் ஆறு கிராமி விருதுகளையும் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ராக் ஸ்டார் 2022 "டோட்ஜர் ஸ்டேடியம்" ஸ்பெஷலுக்கான சிறந்த பிரிவில் அவரது ஃபேர்வெல் ஃப்ரம் டோட்ஜர் ஸ்டேடியம் என்ற லைவ் வீடியோ விருதை பெற்றுள்ளது. எம்மிஸ் விழாவில் ஜான் கலந்து கொள்ள முடியாத நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் " திறமையான குழுவில் நானும் சேர்த்து இருப்பது நம்பமுடியவில்லை. இந்த இடத்தை சேர்த்தது எனது ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உலகளவில் எனது ரசிகர்களின் உறுதியற்ற ஆதரவால் சாத்தியம் ஆகியிருக்கிறது. எனது வாழ்க்கை முழுவதும் என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்கர் விருதுக்கு படங்கள் பரிந்துரை செய்யப்படும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • மொத்தம் 22 திரைப்படங்கள் பரிந்துரைக்கு அனுப்படுகிறது.

    இந்திய திரைப்பட கூட்டமைப்பு சார்பில் 96-வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை பரிந்துரை குழுவினர் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை, அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபையில் நடைபெற்றது.

    இதில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து 22 திரைப்படங்கள் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு அனுப்படுகிறது.

    தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை -1', மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்', வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி', இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில் வெளியான '1947 ஆகஸ்ட் 16' திரைப்படமும் முன் மொழியவுள்ள பட்டியலில் உள்ளது.

    தமிழில் 4 திரைப்படங்களும், தெலுங்கில் 4 திரைப்படங்களும், இந்தியில் 11 திரைப்படங்களும், மலையாளத்தில் ஒரு திரைப்படமும், மராத்தியில் 2 திரைப்படமும் இந்த பரிந்துரை பட்டயலில் இடம்பெற்றுள்ளன. மலையாளத்தில் '2018' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்.)

    இதையடுத்து, இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ராம் சரண் -அமித்ஷா- சிரஞ்சீவி

    இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடலில் நடனமாடிய நடிகர் ராம் சரணை நேரில் சந்தித்து, வாழ்த்தினார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் சிரஞ்சீவியும் உடனிருந்தார். மேலும், அமித்ஷா தனது சமூக வலைதளத்தில் 'இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார்.


    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
    • உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் வெற்றியாளர்கள் தேர்வு இதற்கு முன்பே நடைபெற்ற நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்தது. இந்த முறை ஆஸ்கர் விருது வென்றவர்கள் முழு விவரம் தொடர்ந்து பார்ப்போம்.

    சிறந்த நடிகர் -பிரண்டன் பிரேசர்(BRENDAN FRASER) - தி வேல்

    சிறந்த துணை நடிகர் - கி கு யுவான் (KE HUY QUAN) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (Everything Everywhere All at Once)

    சிறந்த நடிகை - மிஷெல் யோ (MICHELLE YEOH) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (Everything Everywhere All at Once)

    சிறந்த துணை நடிகை - ஜாமி லீ கர்டிஸ் (JAMIE LEE CURTIS) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (Everything Everywhere All at Once)

    சிறந்த அனிமேஷன் திரைப்படம் - குளேர்மோ டி டிரோஸ் பினோக்கியோ (GUILLERMO DEL TORO'S PINOCCHIO)

    சிறந்த ஒளிப்பதிவாளர் - ஜேம்ஸ் பிரண்ட் (James Friend) - ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT) 

    சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - ரூத் கார்ட்டர் (Ruth Carter) -பிளாக் பந்தர் : வக்காண்டா ஃபார் எவர் (BLACK PANTHER: WAKANDA FOREVER) 

    சிறந்த இயக்குனர் - டேனியல் வான் மற்றும் டேனியல் ஸ்கீனர்ட் (Daniel Kwan and Daniel Scheinert) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE)

    சிறந்த ஆவணப்படம் - நவல்னீ (NAVALNY)

    சிறந்த ஆவண குறும்படம் - தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS)

    சிறந்த படத்தொகுப்பு - பால் ரோகர்ஸ் (Paul Rogers) - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE)

    சிறந்த சர்வதேச திரைப்படம் - ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

    சிறந்த ஒப்பனை - ஆட்ரின் மோரட், ஜுடி சின் மற்றும் அனி மேரி பிராட்லீ (Adrien Morot, Judy Chin and Annemarie Bradley) - தி வேல் (THE WHALE)

    சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் - வால்கர் பிரட்மேன் (Volker Bertelmann)- ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

    சிறந்த ஒரிஜினல் பாடல் - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்)

    சிறந்த படம் - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE)

    சிறந்த புரொடக்ஷன் டிசைன் - ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

    சிறந்த அனிமேஷன் குறும்படம் - தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் மற்றும் தி ஹார்ஸ் (THE BOY, THE MOLE, THE FOX AND THE HORSE)

    சிறந்த குறும்படம் - அன் ஐரிஸ் குட் பைய் (AN IRISH GOODBYE) - Tom Berkeley and Ross White

    சிறந்த ஒலி - டாப் கன் : மேவரிக் (TOP GUN: MAVERICK) - Mark Weingarten, James H. Mather, Al Nelson, Chris Burdon and Mark Taylor

    சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - அவதார்: தி வே ஆப் வாட்டர் (AVATAR: THE WAY OF WATER) - Joe Letteri, Richard Baneham, Eric Saindon and Daniel Barrett

    சிறந்த திரைக்கதை - வுமன் டாக்கிங் (WOMEN TALKING) - (சாரா போலே) Sarah Polley

    சிறந்த ஒரிஜினல் திரைக்கதை - எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE) - டேனியல் வான் மற்றும் டேனியல் ஸ்கீனர்ட் (Daniel Kwan and Daniel Scheinert)

    • ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா.
    • இப்படம் அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளியது.

    இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    காந்தாரா

    ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.


    காந்தாரா

    இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இதை காந்தாரா படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், காந்தாரா இரண்டு ஆஸ்கர் தகுதிகளைப் பெற்றுள்ளதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளது.



    • இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’.
    • சிறந்த படத்திற்கான பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' இடம்பிடித்துள்ளது.

    இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் மொத்தமாக ரூ.340 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது.


    விவேக் அக்னிஹோத்ரி 

    இந்நிலையில், 95-வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்தின் பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் இந்தியத் திரைப்படமான 'தி காஷ்மீர் பைல்ஸ்' இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மேலும் நான்கு இந்தியப் படங்களும் இடம்பெற்றுள்ளன. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, இந்திய சினிமாவுக்கு இது ஒரு பெரிய செய்தி என்று பதிவிட்டுள்ளார்.


    விவேக் அக்னிஹோத்ரி 

    மேலும், பல்லவி ஜோஷி, அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் 'சிறந்த நடிகர்' விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



    • ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது.
    • ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

    டெஹ்ரான்:

    ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

    போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18, 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது. இதில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பொது இடத்தில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈரான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன.

    இதற்கிடையே, ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரானின் அரசு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார். அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் நடிகை தரானே அலிதூஸ்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறி அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

    நடிகை தரானே அலிதூஸ்தி ஈரானின் பிரபல நடிகை ஆவார். அவர் நடித்த 'தி சேல்ஸ்மேன்' திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

    தரானே அலிதூஸ்தி ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், 18 நாட்களுக்கு பிறகு தரானே அலிதூஸ்தி விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த அவருக்கு பூங்கொத்து ஆதரவாளர்கள் கொடுத்து வரவேற்றனர்.

    • ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது.
    • அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

    டெஹ்ரான்:

    ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது.

    அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18, 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது. இதில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பொது இடத்தில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈரான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன.

    இதற்கிடையே, ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரானின் அரசு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் ஈரான் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் நடிகை தரானே அலிதூஸ்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறி அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது.

    நடிகை தரானே அலிதூஸ்தி ஈரானின் பிரபல நடிகை ஆவார். அவர் நடித்த 'தி சேல்ஸ்மேன்' திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திரையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது.
    • இதில் இந்தியா சார்பில் குஜராத்தி படமான 'செல்லோ சோ' பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்திற்கான பிரிவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப்படுவது வழக்கம்.


    செல்லோ சோ

    அந்தவகையில் இந்தியா சார்பில் 2023 - ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக குஜராத்திப் படமான 'செல்லோ சோ' என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேன் நளின் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, திபென் ராவல் மற்றும் பரேஷ் மேத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    செல்லோ சோ

    இந்த திரைப்படம் இந்தியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுவன் மற்றும் சினிமா மீதான அவனது காதலைச் சுற்றி நகரும் திரைப்படமாகும். இப்படம் ஏற்கனவே சில சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.
    • இவர் நடிப்பில் வெளியான ஷியாம் சிங்கா ராய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் "ஷியாம் சிங்கா ராய்". நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்த இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கினார்.


    ஷியாம் சிங்கா ராய்

    மறுபிறவியை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    ஷியாம் சிங்கா ராய்

    இந்நிலையில் "ஷியாம் சிங்கா ராய்" திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த காலகட்டத் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    • 2022-ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் தேர்வுக்கு ஆஸ்கர் குழு 397 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
    • இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல் இடம் பெற்றுள்ளனர்.

    திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இதைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


    சூர்யா - முதல்வர் ஸ்டாலின்

    இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கஜோலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்கர் பேனலுக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சிறப்பை சூர்யா பெற்றுள்ளார். நடிகர் சூர்யாவை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    • திரையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது.
    • ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

    திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இந்நிலையில், ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர்கள், இயக்குனர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு நடைபெற்றுள்ளது.


    கஜோல்

    இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    மேலும், புதிய உறுப்பினர்கள் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெறுவார்கள். நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    ×