search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plagiarism"

    • வீட்டில் இருந்த கமலா வீட்டைப் பூட்டிவிட்டு திருவையாறில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • 16 கிராம் தங்க நகைகள், 525 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பார்வதி நகரை சேர்ந்தவர் மலர்வண்ணன். இவரது மனைவி லாவண்யா (வயது 37). இவர் இடையாத்தி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த இவரது மாமியார் கமலாவும் வீட்டைப் பூட்டிவிட்டு திருவையாறில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார்.

    இந்த நிலையில் கமலா நிகழ்ச்சி முடித்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 16 கிராம் தங்க நகைகள், 525 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர்.

    இது பற்றி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னையில் ஓவியக் கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் பேட்டி அளித்த பா.ரஞ்சித், கதைத்திருட்டை கண்டுபிடிப்பது சவாலான செயல் என்றார். மேலும் ‘மீ டூ’ இயக்கத்திற்கும் வரவேற்பு தெரிவித்துள்ளார். #PaRanjith #MeToo
    மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ஆழ்வார்பேட்டையில் குழந்தைகளுக்கான ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்த ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேள்வி:- திரையுலகை கதை திருட்டு என்ற வி‌ஷயம் அச்சுறுத்துகிறதே?

    பதில்:- இதில் நிறைய வி‌ஷயங்கள் இருக்கின்றன. உண்மை பொய் இரண்டுமே இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சவாலான வி‌ஷயம். படைப்பாளி என்பவன் யார், உண்மையிலேயே அங்கிருந்து திருடினாரா என்ற கேள்வி இருக்கிறது.

    அப்படி திருடிய பின்பும் அதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்ற கேள்வியும் இங்கிருக்கிறது. தான் எழுதிய கதையைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் திட்டமிடல் யாரிடமும் இல்லை. தற்போது அந்தச் சூழல் உருவாகி எல்லோருக்கும் பயம் வந்திருக்கிறது. இனி கண்டிப்பாகப் பதிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

    கே:- சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை பற்றி?

    ப:- ராஜலட்சுமி கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை மேலோட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவாதி, நிர்பயா விவகாரத்தில் இருந்த அரசியல் அழுத்தம் ராஜலட்சுமி கொலை வழக்கில் இல்லை.



    கே:- மீ டூ பற்றி உங்கள் கருத்து?

    ப:- வரவேற்கக்கூடிய ஒன்று, அது சரியா, தவறா என்பதைப் பின்னர் பார்க்க வேண்டும். பொது வெளிகளில் பணி செய்யும் பெண்களின் பிரச்சினை குறித்துப் பேசக்கூடிய ஒரு தளமாக மீ டூ பயன்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #PaRanjith #Plagiarism #MeToo #RajalakshmiMurder

    ×