search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ரஞ்சித்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீலம் புரொடக்ஷன்ஸ் 'எக்ஸ்' இணையதளத்தில் இந்த படம் தொடங்கியது தொடர்பான பல 'புகைப்படங்களை' வெளியிட்டுள்ளது.
    • நீலம் புரொடக்ஷன் பெயரில் படம் தயாரிக்கும் பா.ரஞ்சித், சில தனித்துவமான மற்றும் வெற்றிகரமான படங்களை தயாரித்துள்ளார்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், நடிகை ஷிவானி ராஜசேகர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

    'புளூஸ்டார்' பட வெற்றிக்குப் பிறகு இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் அகிரண்மோசஸ் இயக்குகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

    படத்தில் மலையாள நடிகர் ஸ்ரீநாத்பாசியும் நடிக்கிறார். நீலம் புரொடக்ஷன்ஸ் 'எக்ஸ்' இணையதளத்தில் இந்த படம் தொடங்கியது தொடர்பான பல 'புகைப்படங்களை' வெளியிட்டுள்ளது.


    'ஒரு புதிய அத்தியாயத்திற்கான ஆரம்பம். எங்கள் அடுத்த தயாரிப்பிற்கான படப்பிடிப்பு இன்று பிரகாசமான புன்னகை மற்றும் இனிமையான நினைவுகளுடன் தொடங்குகிறது என்று தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு தரப்பு இன்னும் அறிவிக்கவில்லை.

    நீலம் புரொடக்ஷன் பெயரில் படம் தயாரிக்கும் பா.ரஞ்சித், சில தனித்துவமான மற்றும் வெற்றிகரமான படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன் நடித்த ப்ளூ ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


    மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி விமர்சித்தார்.

    இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சங்கள் எழுந்தது. பல இந்து அமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர். 

    ரஞ்சித்

    இந்நிலையில், ராஜராஜன் சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதற்கு முன், வரலாற்று புத்தகங்களில் உள்ள தகவல்களையே குறிப்பிட்டதாக பா.ரஞ்சித் பதில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
    ×