search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selfie"

    • ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்
    • விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ரஜினி நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்

    தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பழங்குடி இன பெண்ணாக நடித்த மாளவிகா மோகனனின் தோற்றம் மிரட்டலாக இருந்தது.

    இவர் இந்தி மொழியில் உருவாகும் 'யுத்ரா' என்ற படத்தில் நடித்து வருவதுடன் ரன்பீர் கபூருடன் அனிமல்-2 படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் மாளவிகா மோகனன். தனது கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது அவரின் வழக்கம்.

    இன்ஸ்டாகிராமில் அவருக்கு 4 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். இந்நிலையில் கடற்கரை ரிசார்ட்டில் தங்கியுள்ள மாளவிகா மோகனன் ஓட்டல் அறையில் பிகினி உடையில் செல்பி எடுத்தபடி நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் மிக உற்சாகத்துடன் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர். மாளவிகா மோகனனனின் இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சிறுவர்கள் நமீதாவை பார்த்து அக்கா எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்கள் என கேட்டனர்.
    • வருகிற தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மத்திய மந்திரி எல்.முருகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து அன்னூர் அருகே உள்ள பொகலூர் பகுதியில் நடிகையும், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    நடிகை நமீதா வருவதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பொகலூர் பகுதியில் திரண்டிருந்தனர். நமீதா திறந்த வேனில் நின்றபடி வந்ததை பார்த்ததும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர். இளைஞர்கள் விசில் அடித்து வரவேற்றனர்.

    அங்கு நின்ற சிறுவர்கள் நமீதாவை பார்த்து அக்கா எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்கள் என கேட்டனர். மேலும் நமீதாவுடன் சிறுவர்களும், பெண்களும் செல்பி எடுக்க முயற்சித்தனர். அதற்கு சிரமம் வேண்டாம், நானே உங்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறேன் என பிரசார வாகனத்தில் நின்றபடியே சுற்றி, சுற்றி செல்பி எடுத்துக் கொண்டார்.

    பொதுமக்கள் மத்தியில் நடிகை நமீதா பேசியதாவது:-

    மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பா.ஜ.க. அரசு சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளது. கூகுள் பே, பே.டி.எம் போன்ற டிஜிட்டல் பணபரி வர்த்தனை மூலம் வங்கிகளில் காத்திருக்கும் நிலையை எளிமையாக்கி பொது மக்களுக்கு கால நேர விரயத்தையும், சிரமங்களையும் குறைத்துள்ளது. செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் செல்போன் டேட்டா உபயோகத்துக்கான கட்டணம் இந்தியாவில் மட்டுமே குறைந்த அளவில் உள்ளது.

    வெளிநாட்டில் ஒரு ஜீ.பி டேட்டா ரூ.300ஆக உள்ள நிலையில் இந்தியாவில் ரூ.10 மட்டுமே. நீலகிரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் நபரின் பெயரை கூட தனக்கு சொல்ல விருப்பமில்லை. நம்பி வாக்களித்த மக்களை அவர் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். மக்களின் நம்பிக்கையான கடவுள் வழிபாட்டினை கொச்சைப்படுத்துகிறார். எனவே வருகிற தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மத்திய மந்திரி எல்.முருகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.
    • சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை மத்தூர், பர்கூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.

    அப்போது சீமான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் திடீரென்று ஓடிவந்து அவரை கட்டி பிடித்து செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    உடனே ஆதரவாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டனர்.

    இதனால் சீமான் அந்த வாலிபரை முறைத்தபடி திட்டினார். இதனைத்தொடர்ந்து அவர் தனது பேச்சை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • ஸ்டிர்லிங் தனது செல்பி புகைப்படத்தை பகிர்ந்ததை கண்ட போலீசார் அதன் மூலம் அவரது இருப்பிடத்தையும் கண்டுபிடித்தனர்.
    • கைதானவரிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் கஞ்சா, நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகள், சிக்னல் ஜாமர் கருவி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இங்கிலாந்து நாட்டில் உள்ள எசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் டேரன் ஸ்டிர்லிங். 58 வயதான இவர் மீது போதைப்பொருள் வினியோகம் செய்த வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் சமீபத்தில் ஸ்டிர்லிங் ஆன்லைனில் சட்ட விரோதமான பொருட்களை பரிமாறி கொள்வதற்காக பயன்படுத்தப்படும் என்க்ரோசாட் தளத்தில் தனது 'செல்பி' புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், அவர் ஒரு கப்பலில் மேல் சட்டை அணியாமல் இருந்தார். இதற்கிடையே போலீசார் ஸ்டிர்லிங்கை பிடிப்பதற்காக என்க்ரோசாட் தளத்தை கண்காணித்து வந்த நிலையில் ஸ்டிர்லிங் தனது செல்பி புகைப்படத்தை பகிர்ந்ததை கண்ட போலீசார் அதன் மூலம் அவரது இருப்பிடத்தையும் கண்டுபிடித்தனர்.

    அதன்படி கப்பலில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் கஞ்சா, நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகள், சிக்னல் ஜாமர் கருவி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கிராம மக்களிடம் சிக்கி தவித்த சிறுத்தையை மீட்டு இந்தூரில் உள்ள வன பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
    • சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கபட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இந்த வனப்பகுதியில் இருந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தை ஒன்று அருகில் உள்ள இக்லேரா கிராமத்திற்குள் புகுந்தது.

    அந்த சிறுத்தை நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு மெதுவாக சென்றது. இதை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த சிறுத்தை அருகில் சென்றனர். பின்னர் அந்த சிறுத்தையை சுற்றி நின்று கொண்டு அதன் வேதனையை பற்றி கவலைப்படாமல் கைத்தட்டி சிரித்தனர். மேலும் அதனை கையால் தள்ளி சித்ரவதை செய்தனர். அந்த சிறுத்தையுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் சிறுத்தை மீது ஏறி சவாரி செய்யவும் முயன்றார். இதை பார்த்த சிலர் அந்த கும்பலிடம் இது போன்று செய்யாதீர்கள், பாவம் சிறுத்தை உடல் நலம் சரியில்லாமல் உள்ளது என்று கூறினார்கள், ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவர்கள் தொடர்ந்து சிறுத்தையை கொடுமை படுத்துவதிலேயே மும்முரமாக இருந்தனர்.

    மேலும் ஒரு சிலர் அந்த சிறுத்தையை ஊருக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அதனை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் வனத் துறையினர் விரைந்து சென்று கிராம மக்களிடம் சிக்கி தவித்த சிறுத்தையை மீட்டு இந்தூரில் உள்ள வன பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    அந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண் காணிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கபட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிராம மக்கள் சிறுத்தையை கொடுமைப்படுத்தும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • செஸ் புகைப்பட கலைஞர் மரியா பிரக்ஞானந்தாவின் தாயாருக்கு சமூக வலைதள பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

    பாகு:

    அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்த உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்செனிடம் (நார்வே) தோல்வியை தழுவினார். இதன் டைபிரேக்கரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற கார்ல்சென் அடுத்த ஆட்டத்தில் 'டிரா' செய்து உலக் கோப்பையில் மகுடம் சூடினார்.

    தோல்வி அடைந்தாலும் சர்வதேச செஸ் அரங்கில் ஜாம்பவனாக திகழும் கார்ல்செனுக்கு எதிராக பிரக்ஞானந்தா தைரியமாக போராடிய விதம் ரசிகர்களின் இதயங்களை தொட்டது. பாராட்டுகளும் குவிந்தன. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இந்த போட்டியில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அவரது தாயார் நாகலட்சுமியும் உடன் சென்றுள்ளார். தந்தை மாற்றுத்திறனாளி என்பதால் பிரக்ஞானந்தாவை போட்டி நடக்கும் எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்வது அவரது தாயார் தான். அவர் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு நாகலட்சுமியின் பங்களிப்பு அளப்பரியது.

     

    இந்நிலையில் செஸ் புகைப்பட கலைஞர் மரியா பிரக்ஞானந்தாவின் தாயாருக்கு சமூக வலைதள பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். அந்த பதிவில் லெஜண்ட் மற்றும் அவரது மகனுடன் செல்பி எடுத்துக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

    செஸ் விளையாடிய பிரக்ஞானந்தாவை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் அவரது அம்மாவுக்கு புகழாரம் சூட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாத அமித்குமாரை தேடி அவரது நண்பர்கள் சென்றபோது அவர் மலை மீது இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.
    • 30 அடி ஆழத்தில் விழுந்த அமித்குமாரை 3 மணி நேரம் கடுமையாக போராடி மீட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அமித்குமார் (வயது 25).

    இவர் தற்போது கிருஷ்ணகிரியில் தங்கி பழைய பேட்டையில் உள்ள மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

    அப்போது கோவில் பின்புறம் உள்ள மலையில் ஏறிய அவர், செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழுந்துள்ளார்.

    இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது மொபைலும் உடைந்துள்ளது.

    கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாத அமித்குமாரை தேடி அவரது நண்பர்கள் சென்றபோது அவர் மலை மீது இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.

    இது குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் சற்குணம், ராஜி, இளவரசன், மஞ்சூர் அஹமத், அன்பு, நவீன் குமார் ஆகிய தீயணைப்பு வீரர்கள் செங்குத்தான பகுதியில், 30 அடி ஆழத்தில் விழுந்த அமித்குமாரை 3 மணி நேரம் கடுமையாக போராடி மீட்டனர்.

    பின்னர் அவரை தீயணைப்பு படை வீரர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இன்று அதிகாலை 3 மணியிலிருந்து காலை 6.30 மணி வரை அமித்குமாரை மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • புகைப்படத்தை இதற்கென உருவாக்கப்பட்டுள்ள hargartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழாவையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு 75-வது ஆண்டு சுதந்திரதின பவள விழாவையொட்டி தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையில் பொது மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

    அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

    அதே போல இந்த ஆண்டு சுதந்திரதினவிழா 75- வது ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான கொண்டாட்டம் வருகிற 13-ந்தேதி தொடங்கி 15- ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த விழாவை கொண்டாட இப்போது இருந்தே பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு தேசிய கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில் 4.50 லட்சம் தேசிய கொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் ஆர்வத்துடன் தேசிய கொடிகளை வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுதந்திரதினத்தையொட்டி தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய கலாச்சாரதுறை சார்பில் அனைத்து அரசு துறை அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

    நாடு சுதந்திரம் அடைந்து 75- வது ஆண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையிலும், பொதுமக்களிடம் தேச பக்தி மற்றும் தேசிய கொடி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 3 நாட்கள் நடைபெறும் கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வீடுகளிலும் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் ஏற்றப்படும் தேசிய கொடியுடன் செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை இதற்கென உருவாக்கப்பட்டுள்ள hargartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் கலாச்சார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • மூத்த தலைவர்களை முந்தியடிக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருந்தது.
    • இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக எதிர்க் கட்சிகளால் குத்தப்பட்ட முத்திரையை தகர்த்தெறியும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன.

    ராமநாதபுரம்:

    2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான சுய பரிசோதனையாக என் மண், என் மக்கள் நடைபயணத்தை தொடங்கியுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தேசத்தையும், தேசியத்தையும் மதிக்கும் மண்ணான ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டு மீண்டும் பிரதமராக பொதுமக்கள் சூளுரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஆன்மீக பூமியான ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்த இந்த பிரமாண்ட நடைபயணம் நேற்று இரண்டாவது நாளில் சற்றும் தளர்வின்றி, மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பகுதியில் தொடங்கி கேணிக்கரை வழியாக அரண்மனை வாசலை அடைந்தது.

    சுமார் 5 கி.மீ. தூரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் அண்ணாமலையுடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். மூத்த தலைவர்களை முந்தியடிக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருந்தது. காரணம் வழிநெடுகிலும் பெண்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினர் மலர்களை தூவி வரவேற்றனர்.

    ஆனால் அண்ணாமலை ஒரு மாநில தலைவர் என்பதை மறந்து, மக்களோடு மக்களான கலந்தார். அதேபோல் செல்லும் வழியெல் லாம் தன்னுடன் செல்பி எடுக்க வந்தவர்களிடம் சிரித்த முகத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஒரு சிலரிடம் அவர்களின் செல்போனை வாங்கி, அவர்களை அருகில் அழைத்து நிற்கவைத்து தானே செல்பி போட்டோ எடுத்து அசரவவைத்தார்.

    நடந்து சென்ற தூரம் 5 கி.மீ. என்றாலும் சற்றும் ஆர்வம் குறையாத அண்ணாமலை யாருடனும் முகம் சுழிக்காமல், முக மலர்ச்சியோடு பேசினார். அதேபோல் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக எதிர்க் கட்சிகளால் குத்தப்பட்ட முத்திரையை தகர்த்தெறியும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன. நடைபயணத்தின் போது தன்னை நோக்கி வந்த இஸ்லாமிய பெண்கள், கிறிஸ்தவ பெண்களிடம் கை குலுக்கியும், நலம் விசாரித்தும் குறைகளை கேட்டறிந்த அண்ணாமலை, அனுபவத்தில் மிளிர்ந்தார்.

    அத்துடன் வழியெங்கிலும் அண்ணாமலையை வரவேற்ற கட்சியினர், பெண்கள் தங்களுடன் அழைத்து வந்த குழந்தையை கொடுத்து வாழ்த்த சொன்னார்கள். அப்போது குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்த அண்ணாமலை அவர்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்க தவறவில்லை.

    மொத்தத்தில் பல்வேறு தலைப்புகளில் நடைபயணம் மேற்கொண்ட முன்னோர்கள், தலைவர்களை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். நடைபயணம் தொடங்கியதில் இருந்து முடிவடைந்த 5 கி.மீ. தூரமும் மிகவும் எளிமையாகவும், நெருங்கியும் வந்த அண்ணாமலை, 3-வது நாளான இன்று முதுகுளத்தூரில் காலை 9.30 மணிக்கு நடைபயணத்தை தொடங்கினார்.

    அங்குள்ள செங்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாலையில் பரமக்குடியில் நடைபயணம் மேற் கொள்கிறார்.

    • 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்து கொண்டிருந்தனர்.
    • அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன.

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலய பகுதி வழியாக 3 பேர் சென்றுள்ளனர். நேபாளத்திற்கு செல்லும் வழி பாதையான இப்பகுதி வழியாக வன விலங்குகள் கூட்டமாக செல்வது வழக்கம். இந்நிலையில் இவ்வழியாக சென்ற 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் 'செல்பி' எடுத்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 3 பேர் தலை தெறிக்க ஓடி உள்ளனர். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் யானைகள் கூட்டமாக செல்லும் போது அவைகளுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இணைய பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளனர்.
    • விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றாலோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த தாமரைக்கரையைச் சேர்ந்தவர் பாண்டியன் (23).இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த விஜய் (23), இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று விடுமுறையை முன்னிட்டு இருவரும் அணைப்பாளையம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ெரயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த ெரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் ரெயில்வே காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு மது அருந்திய பின்னர் பாண்டியன், விஜய் மட்டும் ரெயில் வரும்போது ரெயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.

    அப்போது நெல்லையில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 பேர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.'செல்பி' மோகத்தால் வாலிபர்கள் 2 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றாலோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    • நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர்.
    • 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே வாலிபர்கள் 2 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ரெயில் மோதி இறந்த 2 பேர் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 22), விஜய் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி, அங்குள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

    நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவர் மட்டும் ரெயில் வரும்போது ரெயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.

    அப்போது திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இருவர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக ரெயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    ×