என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுலாத் தலம்"
- தாயப்பா- சின்னி என்ற தம்பதியினர் கிருஷ்ணா நதிக்கரையில் சுற்றுலா வந்திருந்தனர்.
- தாயப்பா தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார்.
செல்ஃபி எடுக்க வந்ததாக கூறி கிருஷ்ணா நதியில் கணவர் தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் விழுந்த கணவரை கிராம மக்கள் சாமர்த்தியமாக மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கட்லூரில் தாயப்பா- சின்னி என்ற தம்பதியினர் கிருஷ்ணா நதி அருகே சுற்றுலா வந்திருந்தனர்.
இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது, மனைவி சின்னி திடீரென தனது கணவர் தாயப்பாவை ஆற்றில் தள்ளிவிட்டார்.
இந்த எதிர்பாராத சம்பவத்தால், தாயப்பா தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார். இருப்பினும், அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக விரைந்து வந்து கயிறுகளின் உதவியுடன் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
தன்னை கொல்ல திட்டமிட்டு ஆற்றில் தள்ளிவிட்டதாக தனது மனைவி சின்னி மீது தாயப்பா போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோயர் சதுக்கம் பகுதியில் வந்த யானைகள் அங்கிருந்த சாலையோர கடைகளின் முன்பகுதியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின.
- வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட இன்று முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மோயர்பாய்ண்ட், தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும்.
கடந்த 11ந் தேதி காட்டு யானைகள் பேரிஜம் வனப்பகுதியில் முகாமிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் உள்ள தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தாலும் பேரிஜம் வனப்பகுதியில் கடந்த 8 நாட்களாக சுற்றித்திரியும் யானைகளை விரட்ட முடியவில்லை. 1 வாரமாக முகாமிட்டுள்ள யானைகளால் வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பேரிஜம் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் மோயர் சதுக்கம் பகுதியில் வந்த யானைகள் அங்கிருந்த சாலையோர கடைகளின் முன்பகுதியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின. இன்று காலையில் கடைக்கு வந்த வியாபாரிகள் கடை சேதமடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கடைகளை சேதப்படுத்தியது யானைகள் தான் என உறுதி செய்தனர்.
வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் தற்போது வியாபார கடைகளையும் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனால் வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட இன்று முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதனிடையே வனத்துறையினர் யானைகளை கண்காணித்து விரைந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோடை சீசனில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு குளு சீசன் களைகட்டி உள்ளது.
- மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போதே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்ததை போலவே கொடைக்கானலிலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்து வருகிறது.
குறிப்பாக தினந்தோறும் 2 மணி நேரத்துக்கு மேலாக இடைவெளி விட்டு விட்டு ஒரு சில இடங்களில் கன மழையாகவும், ஒரு சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது.
இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் குறைந்து காணப்பட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது பெய்த மழையால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மழையில் நனைந்தபடி அருவியை கண்டு ரசித்ததுடன், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் பாம்பார் அருவி, பியர்சோழா உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தற்போது பெய்து வரும் மழையால் குடிநீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோடை சீசனில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு குளு சீசன் களைகட்டி உள்ளது.
வருகிற 17ந் தேதி கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போதே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.






