search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourist spot"

    • சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனி பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் மேலும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை தொடர்ந்து இன்று காலை வரை பெய்து வருகிறது.

    40 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்கனவே பனி பொழிவும் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஏற்காட்டில் தொடர்ந்து பனி மற்றும் மழை பெய்து வருவதால் காபி கொட்டைகளை காய வைக்க முடியாத சூழல் உள்ளது.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் இன்று காலையும் சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 22.8 மி.மீ. மழை பெய்துள்ளது . எடப்பாடி 16, தலைவாசல் 15, தம்மம்பட்டி 12, கரியகோவில் 12, ஆனைமடுவு 6, சங்ககிரி 2.2, ஆத்தூர் 1, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 88 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • பாலம் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பூங்காவை கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமதுரியாஜ் திறந்து வைத்தார்.

    கூடலூர்:

    குமுளி அருகே வாகமன் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்க வருகின்றனர். அவர்களை கவரும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தனியார் தொழில்முனைவோருடன் இணைந்து சுற்றுலா மையங்களை மேம்படுத்தும் கேரள அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இடுக்கி டி.டி.பி.சி மற்றும் பெரும்பாவூரில் உள்ள பாரத்மாதா வென்சஸ் பிரைவேட் லிமிடெட், கி.கி ஸ்டார்ஸ் இணைந்து வாகமனில் கேன்டிலீவர் கண்ணாடி பாலம் மற்றும் சாகச பூங்காவை உருவாக்கி உள்ளனர்.

    ரூ.3 கோடி மதிப்பில் கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் 120 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. 35 டன் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் ஏறி நின்று சுற்றுவட்டார பகுதியான முண்டகயம், கூட்டிக்கல், கொக்கையாறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த சாகச பூங்காவில் ஸ்கைசுவிங், ஸ்கை சைக்கிளிங், ஸ்கைரோலர், ராக்கெட் எஜெக்டர், பீரிபால், ராட்சத ஸ்விங், ஜிப்லைன் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த பூங்காவை கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமதுரியாஜ் திறந்து வைத்தார். இதன்மூலம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மெக்சிகோவில் உள்ள சுற்றுலா தலத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #MexicoFiring
    மெக்சிகன் சிட்டி:

    மெக்சிகோவில் உள்ள கரிபால்டி சுற்றுலா தலத்தில் ஏராளமானோர் நேற்று திரண்டிருந்தனர். அங்கு வார விடுமுறையை உற்சாகமாக கழித்துக் கொண்டிருந்தனர்.
     
    அப்போது அங்கு ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் பைக்கில் வந்தது. அவர்கள் இசைக்கலைஞர்கள் போன்று வேடமணிந்திருந்தனர்.

    அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கிகளால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த திடீர் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்ன காரணத்துக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #MexicoFiring
    ×