search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akshay Kumar"

    • ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் கடந்த 12-ந்தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
    • விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தற்போது இந்தியில் 'சர்ஃபிரா' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

    அக்ஷய் குமார் நாயகனாக நடித்த இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கடந்த 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்தபோது அக்ஷய் குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

    முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் கடந்த 12-ந்தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

    ஆனந்த் அம்பானி அக்ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்து இருந்த நிலையில் அவரது மகன் திருமணத்தில் அக்ஷய் குமாரால் கலந்துகொள்ள முடியவில்லை.

    இந்நிலையில் கொரோனா பரிசோதனையில் நெகட்டிங் வந்த பின்னர், புதுமண தம்பதிகளுக்கு அன்பான வாழ்த்துகளை தெரிவிக்க அக்ஷய் விழாவில் கலந்து கொண்டார்.

    நேற்று மாலை நடைபெற்ற அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு பிந்தைய விழாவில் அக்ஷய் குமாரும் அவரது மனைவி ட்விங்கிள் கன்னாவும் கலந்து கொண்டனர்.

    நேற்று நடந்த விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதில் அக்ஷய் மற்றும் ட்விங்கிள் இருவரும் ஒரே வண்ண உடைகளை அணிந்து அரங்கிற்குள் நுழைவதை காண முடிந்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
    • ஆனந்த் அம்பானி அக்ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்தார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தற்போது இந்தியில் 'சர்ஃபிரா' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

    அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்த அக்ஷய் குமாருக்கு திடீரென உடல்நல குறைவு செற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். படம் வெளியான அன்று அவரால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை.

    மேலும், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனந்த் அம்பானி அக்ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்தார். ஆனால், தற்போது கரோனா பாதிப்பு காரணமாக அக்ஷய் குமாரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'.
    • சர்ஃபிரா படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று மும்பையில் நடைப்பெற்றது

    சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யப்பட்டது. சூர்யாவிற்கு மிகப்பெரிய திரைப்படமாக இப்படம் அமைந்தது.

    இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

    தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.

    தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சுதா கொங்கரா முடிவு செய்தார். இந்தியில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் , ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தியில் சர்ஃபிரா என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவந்த நிலையில். தற்பொழுது திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று மும்பையில் நடைப்பெற்றது இதில் சர்ஃபிரா படக்குழுவினரும், நடிகர் சூர்யா, ஜோதிகா, ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா பங்கேற்றனர்.

    அப்பொழுது அக்ஷய் குமாருடன் இணைந்து சூர்யா மற்றும் ஜோதிகா புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'.
    • இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யப்பட்டது. சூர்யாவிற்கு மிகப்பெரிய திரைப்படமாக இப்படம் அமைந்தது.

    இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

    தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.

    தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சுதா கொங்கரா முடிவு செய்தார். இந்தியில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் , ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தியில் சர்ஃபிரா என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவந்த நிலையில். தற்பொழுது திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

    சர்ஃபிரா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. சூரரைப்போற்று படத்தின் அதே தாக்கத்தை இந்த படத்தின் டிரைலர் ஏற்படுத்துகிறது. இந்தி சினிமாவில் கதையை அவரகளுக்கு ஏற்ற பாணியில் சிலவற்றை மாற்றுவார்கள் அதுப் போல் இல்லாமல் சுதா கொங்கரா அவரது கண்ணோட்டத்தை சிறப்பாக காட்சி அமைத்துள்ளார். இதனால் இப்படத்தின் மேல் கூடுதல் நம்பிக்கை பிறக்கிறது.

    நடிகர் சூர்யா கவுரவ தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’.
    • இந்தியில் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார் , ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'. கொரோனா காலக்கட்டத்தினால் இத்திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் போய்விட்டது. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் ஓடிடி தளத்தில் பார்த்து மக்கள் இப்படத்தை பெருமளவு வரவேற்பை கொடுத்தனர். சூர்யாவிற்கு மிகப்பெரிய திரைப்படமாக இப்படம் அமைந்தது.

    இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

    தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் கையிலே ஆகாசம் பாடல் கொடுத்த உனர்வை வார்த்தையால் சொல்ல முடியாது. அது நமக்கு எப்பொழுது கேட்டாலும் ஒரு கூஸ்பம்ப்ஸ் பாடலாக இருக்கும்.

    தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சுதா கொங்கரா முடிவு செய்தார். இந்தியில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் , ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர். இப்படத்திற்கும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தியில் சர்ஃபிரா என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவந்த நிலையில். தற்பொழுது திரைப்படம் ரிலீஸ்க்கு  தயாராகியுள்ளது.

    சர்ஃபிரா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதை படக்குழுவினர் போஸ்டர்  பதிவிட்டு அறிவித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 18 வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • ஹவுஸ்புல் 5 படத்தில் இருந்து அனில் கபூர் விலகியுள்ளதாக தகவல்.
    • படக்குழு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    பிரபல பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான அனில் கபூர், சிறப்பான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இயக்குநர் தருண் மன்சுகானி இயக்கத்தில் உருவாகும் ஹவுஸ்புல் 5 படத்தில் அனில் கபூர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், ஹவுஸ்புல் 5 படத்தில் இருந்து அனில் கபூர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனில் கபூர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா ஒப்புக் கொள்ளாதது தான் அவர் படத்தில் இருந்து விலக காரணம் என்று கூறப்படுகிறது. அனில் கபூர் விலகியுள்ளதை அடுத்து நானா படேகரின் கதாபாத்திரத்திற்கு மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது.

     


    ஹவுஸ்புல் 5 படத்தில் அனில் கபூர் மற்றும் நானா படேகர் இடையே அதிக காட்சிகள் படமாக்கப்பட இருந்ததாகவும், இருவரை தொடர்புப்படுத்தி கதை நகரும் என்றும் கூறப்பட்டது. எனினும், ஹவுஸ்புல் 5 படத்தில் இருந்து அனில் கபூர் விலகியுள்ளதாக படக்குழு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    பிரமாண்டமாக தயாராகும் ஹவுஸ்புல் 5 படத்தில் அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், அர்ஜூன் ராம்பால் மற்றும் தர்மேந்திரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமகது கான் இயக்கும் இப்படம் டிசம்பர் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • சஞ்சய் தத் ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

    அக்ஷய் குமாரின் 'வெல்கம் டு தி ஜங்கிள்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சஞ்சய் தத் கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்படாத விதத்தில் நடப்பதாக உணர்ந்த சஞ்சய் தத் இதுகுறித்து அக்ஷய் குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஸ்கிரிப்டில் பல மாற்றங்களுடன், படப்பிடிப்பின் கால்ஷீட்டிலும் பிரச்சனை ஏற்பட்டாதல் வெளியேறியதாக கருதப்படுகிறது.

    சஞ்சய் தத் ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்திருப்பதால், தயாரிப்பாளர்கள் தற்போது நடிகரை சமாதானப்படுத்துவதா அல்லது அதை முழுவதுமாக நீக்கிவிட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடர்வதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

    இப்படத்தில் சுனில் ஷெட்டி, திஷா பதானி, ரவீனா டாண்டன், லாரா தத்தா, அஃப்தாப் ஷிவ்தாசானி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், பரேஷ் ராவல், ஜாக்கி ஷெராஃப், அர்ஷத் வர்சி, ஜானி லீவர், ராஜ்பால் யாதவ், மிகா சிங், முகேஷ் திவாரி, ஜாகிர் ஹுஸ்ஸான், ஜாகிர் ஹுஸ்ஸான் ஆகியோர் நடித்துள்ளனர்.

    அமகது கான் இயக்கும் இப்படம் டிசம்பர் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.
    • அசினை ராகுல் ஷர்மாவுக்கு ஹவுஸ்புல் 2 படப்பிடிப்பு தளத்தில் வைத்து அக்ஷய் குமார் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல நடிகை அசினுடன் அக்ஷய் குமார் நடித்த கில்லாடி 786 திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் படமாக அமைந்தது.

    பின் ஹவுஸ்புல் 2 படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இதற்கிடையே அசின், அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு மணந்து கொண்டார். அசினை ராகுல் சர்மாவுக்கு ஹவுஸ்புல் 2 படப்பிடிப்பு தளத்தில் வைத்து அக்ஷய் குமார் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். ராகுல்- அசின் தம்பதிக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. பெண்ணுக்கு ஆரின் என தம்பதி பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

     

    இந்நிலையில் சமீபத்தில், பேட்டி ஒன்றில் அசினின் கணவர் ராகுல் சர்மா பேசுகையில், அசினுக்கு குழந்தை பிறக்க இருக்கும் போது, அக்ஷய் போன் செய்து குழந்தை பிறந்த உடனே தெரிவிக்க வேண்டும் என்றார். நாள் முழுவதும் அக்ஷய் பரபரப்பாக இருந்தார்.மேலும் குழந்தை பிறந்த செய்தி கிடைத்தவுடன் கிளம்பி வருவதற்குத் தனது தனி விமானத்தைத் தயார் நிலையில் வைத்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் தனது குடும்பத்தினர் வருவதற்கு முன்னரே முதல் ஆளாக வந்தவர் அக்ஷய் தான் என ராகுல் சர்மா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

     

    தனது வாழ்நாள் முழுவதும் மிகுந்த நட்புடன் பக்கபலமாக அக்ஷய் இருந்து வந்துள்ளார் என்றும் ராகுல் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ராகுல்- அசின் தம்பதியின் மகள் ஆரினுக்கு அக்ஷய் குமார் காட்பாதராக இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ’இறுதி சுற்று’ படத்தை இயக்கினார்
    • சூர்யாவை நடிப்பில் ’புறநானூறு’ படத்தை இயக்கவுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா. ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'துரோகி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த 'இறுதி சுற்று' படத்தை இயக்கினார் . இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாதவனுக்கு ஒரு கம் பேக் ஆக அமைந்த திரைப்படமாகும். ரித்திகா சிங் மிக சிறப்பான நடிப்பில் மக்கள் மனதை கவர்ந்தார். இதுவே ரித்திகா சிங் நடித்த முதல் படமாகும் .

    அதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று படத்தை இயக்கினார். மிகப் பெரிய திருப்பு முனையாக சுதா கொங்கராவுக்கு அமைந்தது இத்திரைப்படம். அப்படத்தை இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்து வருகிறார். அதற்கு 'சர்ஃபிரா' என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

    அதற்கு அடுத்து சூர்யாவை வைத்து 'புறநானூறு' படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சுதா கொங்கரா அடுத்தாக துருவ் விக்ரமிற்கு கதையை கூறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. . இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்க வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப் படுகிறது. துருவ் விக்ரம் மகான் திரைப்படத்திற்கு அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கபடி வீரராக நடித்துள்ளார். அத்திரைப்படத்தை பா.ரஞ்சித் தயாரிதுள்ளார். அதீகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரூ. 350 கோடி செலவில் பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டது.
    • கடந்த 10 நாட்களில் இதுவரை ரூ.88.25 கோடி வசூல் பெற்றுள்ளது.

    பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'.இப்படத்தில் கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் ஆகியோர் நடித்தனர்.இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கினார்.





    படே மியான் சோட் மியான்" படம் மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மனதை கவரும் இடங்களில் படமாக்கப்பட்டது.

    இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், அலிஅப்பாஸ் ஜாபர் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். ரூ. 350 கோடி செலவில் பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டது.





    இந்நிலையில் கடந்த 11- ந்தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் 'ரிலீஸ்' செய்யப்பட்டது.படே மியான் சோட் மியான் படம் வெளியிட்ட தியேட்டர்களில் முதல் சில நாட்கள் 'ஹவுஸ்புல்' காட்சிகளாக இப்படம் ஓடியது. ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்த்தனர்.

    மேலும் இப்படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் சாதனையாக கடந்த 10 நாட்களில் இதுவரை ரூ.88.25 கோடி வசூல் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.
    • முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது

    முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.

    இந்நிலையில் இந்தி திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் அக்ஷய் குமார். அவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் ஆரம்பிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று  அக்ஷய் குமார் கண்ணப்பாவின் இயக்குனர் மற்றும் விஷ்ணு மஞ்சு சந்தித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படே மியான் சோட் மியான் படம் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடி வருகிறது.
    • மேலும் இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையை தொடங்கி உள்ளது


    பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'.இப்படத்தில் கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் ஆகியோர் நடித்தனர்.இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கினார்.

    படே மியான் சோட் மியான்" படம் மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மனதை கவரும் இடங்களில் படமாக்கப்பட்டது.




    இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், அலிஅப்பாஸ் ஜாபர் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இந்தபடம் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 'ரிலீஸ்' செய்யப்பட்டது.

    படே மியான் சோட் மியான் படம் வெளிட்ட தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடி வருகிறது. ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்த்து வருகின்றனர்.




    மேலும் இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையை தொடங்கி உள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் இந்தியா முழுவதும் ரூ.15.62 கோடி வசூல் சாதனை பெற்றுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×