என் மலர்
நீங்கள் தேடியது "Sirai"
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 27.27 கோடி, கர்நாடகாவில் 1.05 கோடி என உலகளவில் ரூ.31.58 கோடி வசூல் குவித்துள்ளது. இப்படம் ரூ.6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே 'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி நாளை ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
இந்நிலையில், சிறை படத்தை பார்த்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,""நேற்று சிறை படம் பார்த்தேன். அருமையான படம். யதார்த்தமான மற்றும் நம் மனதுக்கு நெருக்கமான, நெஞ்சைத் தொடும் ஒரு காதல் கதை. விக்ரம் பிரபு மற்றும் அவருடன் நடித்த நடிகர்களின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது" என்றார்.
- அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
- லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 13 ' படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது
'சிறை ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் L. K. அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 13' படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன் மற்றும் 'டியூட்' படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஃபன் என்டர்டெய்னராக (( Fun Entertainment)) தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் இந்த படத்தை எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதுமுக நடிகர் L. K .அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான, 'சிறை ' திரைப்படம் இதுவரை உலக அளவில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இதனால் நடிகர் L. K. அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் இப்படத்தினை பற்றிய புதிய அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிப்படங்கள் மற்றும் வெப் சிரீஸ்களை இந்த வாரம் வெளியிடுகிறது இந்திய ஓடிடி தளங்கள். அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த ஓடிடிகளில் வெளியாகிறது என்பது குறித்து பார்ப்போம்..
சிறை (Sirai)- விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த விறுவிறுப்பான போலீஸ் த்ரில்லர் திரைப்படம் இன்று முதல் ஜீ5-ல் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
மார்க் (Mark)- கிச்சா சுதீப் நடித்த இந்த அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.
45- சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி நடித்த இந்த கன்னட பேண்டஸி ஆக்ஷன் திரைப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஆன்மீகம் மற்றும் கர்மா சார்ந்த கதையம்சம் கொண்ட திரைப்படம்.
தேரே இஷ்க் மேன் (Tere Ishk Mein)- தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் நடித்த இந்தித் திரைப்படம் இன்று முதல் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இது 'ராஞ்சனா' (Raanjhanaa) பாணியில் ஒரு உணர்ச்சிகரமான காதல் கதை.
The Smashing Machine- டுவைன் ஜான்சன் (The Rock) நடித்த, எம்.எம்.ஏ (MMA) வீரர் மார்க் கெரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் இன்று முதல் HBO Max ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஏ நைட் ஆஃப் தி செவன் கிங்டம்ஸ் (A Knight of the Seven Kingdoms) - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கதையின் முற்பகுதியான இது, கடந்த ஜனவரி 19 அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானது. இதன் புதிய எபிசோட்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளியாகும்.
வின்சென்ட் மஸ்ட் டை (Vincent Must Die)- ஆங்கிலத் த்ரில்லர் திரைப்படமான வின்சென்ட் மஸ்ட் டை ப்ரைம் வீடியோ ஓட்டி தளத்தில் வெளியாகியுள்ளது.
தி ஸ்ட்ரேஞ்சர்ஸ்: சேப்டர் 2 (The Strangers: Chapter 2)- திகில் பட வரிசையான இதன் இரண்டாம் பாகம் தற்போது ஸ்டார்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
- ‘சிறை’ திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
- ‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது.
அந்த வகையில், 'சிறை' படம் இதுவரை உலகளவில் ரூ.31.58 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 27.27 கோடி, கர்நாடகாவில் 1.05 கோடி என உலகளவில் ரூ.31.58 கோடி வசூல் குவித்துள்ளது. இப்படம் ரூ.6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே 'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி நாளை ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
- இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார்.
இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி வருகிற 23-ந்தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
- ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
- இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது.
இந்த நிலையில் 'சிறை' படத்தின் ஓ.டி.டி. வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி வருகிற 23-ந்தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
- இறுதிச் காட்சியில் சொல்லப்பட்ட செய்தி வலுவானது மற்றும் மிகவும் தேவையானது.
- தனது சிறந்த அறிமுகத்தின் மூலம் இதயங்களைச் சிறைபிடித்துவிட்டார்.
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் கிறிஸ்துமஸ் அன்று வெளியான சிறை படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் சங்கர் இப்படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
'சிறை ஒரு நல்லப் படம். உண்மையிலேயே பல இடங்களில் என்னை கண்கலங்க செய்தது. படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும், அவர்களின் நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நிற்கிறது. விக்ரம் பிரபு படம் முழுவதும் ஒரு உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அக்ஷய் குமார் மற்றும் அனிஷாவின் நடிப்பு அந்த கதாபாத்திரங்களின் அப்பாவித்தனத்தையும், உணர்ச்சிகளையும் அழகாக பிரதிபலித்துள்ளது.
இந்தச் சிறந்த படைப்பை தந்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி தனது சிறந்த அறிமுகத்தின் மூலம் எங்கள் இதயங்களைச் சிறைபிடித்துவிட்டார். இறுதிச் காட்சியில் சொல்லப்பட்ட செய்தி வலுவானது மற்றும் மிகவும் தேவையானது. தமிழ் சினிமா இந்த ஆண்டை ஒரு மிகச்சிறந்த வெற்றியுடன் நிறைவு செய்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- எதை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும்.
- ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன்
விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன். இப்படத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள படம் 'சிறை'. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியான நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் படத்தை பாரட்டியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். படம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும். அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது.
தனது முதல் படத்திலே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரிக்கும், இக்கதைதான் எனக்கு வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு சார் அவர்களுக்கும் , நல்ல படைப்பு நிச்சயம் வெல்லும் என்ற உறுதியோடு இப்படைப்பை தயாரித்து இருக்கும் லலித் அவர்களுக்கும் அறிமுக நாயகனாக களமிறங்கி நம்பிக்கையான நடிப்புக்கு முயற்சித்திருக்கும் எல்.கே அக்ஷய்குமார் அவர்களுக்கும் , சிறந்த இசையை கொடுத்திருக்கும் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும். மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன். இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்பவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
- ‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் 'சிறை' படம் வெளியான 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில், 'சிறை' படம் முதல் நாளிலேயே உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது என்றும் இதனால் 2 நாட்களில் ரூ.2 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- ஆயுத படை காவலர்களின் வலியையும், உணர்வுகளையும் தனது கேரக்டர் மூலம் விக்ரம்பிரபு பிரதிபலித்துள்ளார்.
- முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழுத்தமான நடிப்பை அக்சய்குமார் கொடுத்துள்ளார்.
ஆயுதப்படை போலீஸ் ஏட்டான விக்ரம் பிரபு வேலூர் ஜெயிலில் கொலை குற்றவாளியாக இருக்கும் அக்சய்குமாரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்கிறார். அவரோடு போலீஸ்காரர்கள் ஹரிசங்கர் நாராயணன் மற்றும் இன்னொருவரும் பாதுகாப்புக்கு செல்கிறார்கள். சிவகங்கைக்கு செல்லும் வழியில் திடீரென அக்சய் குமார் போலீஸ் துப்பாக்கியுடன் தப்பித்து விடுகிறார். இவரை பிடிக்க விக்ரம் பிரபு மற்றும் குழுவினர் முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில் அக்சய் குமாரை விக்ரம் பிரபு பிடித்தாரா? அக்ஷய் குமார் எப்படி குற்றவாளியாக மாறினார்? எதற்காக அக்ஷய் குமார் தப்பிச்சென்றார் என்பதே படத்தின் மீதிக்கதை.
போலீஸ் ஏட்டாக நடித்திருக்கும் விக்ரம்பிரபு படத்தின் கதாபாத்திரத்திற்கு தகுந்த இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஆயுத படை காவலர்களின் வலியையும், உணர்வுகளையும் தனது கேரக்டர் மூலம் பிரதிபலித்துள்ளார்.
இன்னொரு கதாநாயகனாக நடித்திருக்கும் அக்சய்குமார் கொலைக்குற்றவாளியாக படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். கைதியாகவும், காதலியை பிரிவது. மற்றும் அவரை பார்க்க துடிப்பதிலும், தாயை நினைத்து கதறுவதிலும் அவரது நடிப்பு கைத்தட்டலை பெறுகிறது. கதாநாயகியான அனிஷ்மா அனில்குமார் எளிமையான கேரக்டரில் உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார்.
விக்ரம் பிரபுவுடன் பாதுகாப்பு பணிக்கு போலீசாக செல்லும் ஹரிசங்கர் நாராயணன் கைதிகளை கொண்டு செல்லும் நிஜ போலீசாரின் முகபாவனைகளை அப்படியே பிரதிபலித்துள்ளார்.
ஆயுதப்படை காவலர்களின் பணிசுமை, வலிகள் மற்றும் பல ஆண்டுகளாக சிறையில் அடைபட்டு கிடக்கும் குற்றவாளிகளின் பரிதாப நிலை, அவர்களின் பின்னணி தகவல்களை உணர்வோடு மட்டுமின்றி எதிர்பார்ப்போடு இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ்ராஜகுமாரி. ஆயுதப்படை காவலருக்கும், கொலை குற்றவாளிக்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டத்தை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகவும் அழகாகவும் கொடுத்து இருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
மதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும் ஜஸ்டின் பிரபாகரன் இசையும் ரசிக்க வைக்கிறது.
சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நடிகர் விக்ரம் பிரபுவிடம் நேர்காணல் நடந்தது. இதில், விக்ரம் பிரபுவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவரது பதிலும்..
*சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளீர்கள். இந்த பயணத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது என்ன உணர்கிறீர்கள்?
உண்மையிலேயே ஒரு நல்ல உணர்வு. 13 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். ஆனால் திரும்பிப் பார்க்கும்போது அது எப்படி போய்விட்டது என்றே தெரியவில்லை. இந்தப் பயணம் எனக்கு வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம்—எல்லாவற்றையும் காட்டியுள்ளது. அதைவிட முக்கியமாக, மனிதர்களை புரிந்துகொள்ளவும், வாழ்க்கையை புரிந்துகொள்ளவும் கற்றுக் கொடுத்துள்ளது.
*ஆரம்பத்தில் சினிமா குறித்து உங்கள் கனவுகள் என்ன?
ஆரம்பத்தில் எல்லோருக்கும் இருப்பது போல எனக்கும் ஒரு கனவு இருந்தது. சினிமா என்றால் இது தான், இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற ஒரு கற்பனை. ஆனால் களத்தில் இறங்கிய பிறகு தான் புரிந்தது, சினிமா என்பது கனவு மட்டும் அல்ல, அது ஒரு பெரிய அமைப்பு, ஒரு தொழில், ஒரு குழு வேலை.
*25-வது படம், மைல்ஸ்டோன்ஸ், இவைகளுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்?
எனக்கு எண்கள் முக்கியமல்ல. அந்த காலகட்டத்தில் நான் என்ன கற்றுக்கொண்டேன், என்ன மாற்றம் அடைந்தேன் என்பதே முக்கியம். Milestones என்பது ஒரு நினைவுக் குறிப்பு மட்டும்.
*சிறை படம் உங்களை ஈர்த்த காரணம்?
கதை தான். அது மிகவும் நேர்மையாக இருந்தது. போலீஸ் அமைப்பு, சமூகத்தின் பார்வை, மனித உணர்வுகள்—எல்லாம் மிக நுட்பமாக சொல்லப்பட்டிருந்தது.
*சிறை ஒரு controversial படம் தானா?
இது controversial படம் அல்ல. ஆனால் இது கேள்விகள் கேட்கும் படம். ஒவ்வொருவரும் இதில் இருந்து தங்களுக்கு ஏற்ற ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல முடியும்.
*போலீஸ் கதாபாத்திரத்துக்காக தயாரானது எப்படி?
அது ஒரு பெரிய அனுபவம். உடல் மாற்றம் மட்டுமல்ல, மனநிலையும் மாற வேண்டும். Body language, discipline, mentality—இவை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அது வாழ்க்கையிலும் பயன்படும் பாடங்கள்.
- விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன்.
- சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது
விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன். இப்படம் விக்ரம் பிரபுவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போலீஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'சிறை'. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. த் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படம்.
படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இப்படத்தின் 2வது பாடல் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகி உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.






