என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை"

    • எதை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும்.
    • ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன்

    விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன். இப்படத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.  இதனைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள படம் 'சிறை'. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியான நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் படத்தை பாரட்டியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். படம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    "சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும். அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது.

    தனது முதல் படத்திலே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரிக்கும், இக்கதைதான் எனக்கு வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு சார் அவர்களுக்கும் , நல்ல படைப்பு நிச்சயம் வெல்லும் என்ற உறுதியோடு இப்படைப்பை தயாரித்து இருக்கும் லலித் அவர்களுக்கும் அறிமுக நாயகனாக களமிறங்கி நம்பிக்கையான நடிப்புக்கு முயற்சித்திருக்கும் எல்.கே அக்ஷய்குமார் அவர்களுக்கும் , சிறந்த இசையை கொடுத்திருக்கும் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும். மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன். இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்பவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
    • ‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.

    'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் 'சிறை' படம் வெளியான 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில், 'சிறை' படம் முதல் நாளிலேயே உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது என்றும் இதனால் 2 நாட்களில் ரூ.2 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    • ஆயுத படை காவலர்களின் வலியையும், உணர்வுகளையும் தனது கேரக்டர் மூலம் விக்ரம்பிரபு பிரதிபலித்துள்ளார்.
    • முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழுத்தமான நடிப்பை அக்சய்குமார் கொடுத்துள்ளார்.

    ஆயுதப்படை போலீஸ் ஏட்டான விக்ரம் பிரபு வேலூர் ஜெயிலில் கொலை குற்றவாளியாக இருக்கும் அக்சய்குமாரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்கிறார். அவரோடு போலீஸ்காரர்கள் ஹரிசங்கர் நாராயணன் மற்றும் இன்னொருவரும் பாதுகாப்புக்கு செல்கிறார்கள். சிவகங்கைக்கு செல்லும் வழியில் திடீரென அக்சய் குமார் போலீஸ் துப்பாக்கியுடன் தப்பித்து விடுகிறார். இவரை பிடிக்க விக்ரம் பிரபு மற்றும் குழுவினர் முயற்சி செய்கிறார்கள்.

    இறுதியில் அக்சய் குமாரை விக்ரம் பிரபு பிடித்தாரா? அக்ஷய் குமார் எப்படி குற்றவாளியாக மாறினார்? எதற்காக அக்ஷய் குமார் தப்பிச்சென்றார் என்பதே படத்தின் மீதிக்கதை.

    போலீஸ் ஏட்டாக நடித்திருக்கும் விக்ரம்பிரபு படத்தின் கதாபாத்திரத்திற்கு தகுந்த இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஆயுத படை காவலர்களின் வலியையும், உணர்வுகளையும் தனது கேரக்டர் மூலம் பிரதிபலித்துள்ளார்.

    இன்னொரு கதாநாயகனாக நடித்திருக்கும் அக்சய்குமார் கொலைக்குற்றவாளியாக படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். கைதியாகவும், காதலியை பிரிவது. மற்றும் அவரை பார்க்க துடிப்பதிலும், தாயை நினைத்து கதறுவதிலும் அவரது நடிப்பு கைத்தட்டலை பெறுகிறது. கதாநாயகியான அனிஷ்மா அனில்குமார் எளிமையான கேரக்டரில் உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார்.

    விக்ரம் பிரபுவுடன் பாதுகாப்பு பணிக்கு போலீசாக செல்லும் ஹரிசங்கர் நாராயணன் கைதிகளை கொண்டு செல்லும் நிஜ போலீசாரின் முகபாவனைகளை அப்படியே பிரதிபலித்துள்ளார்.

    ஆயுதப்படை காவலர்களின் பணிசுமை, வலிகள் மற்றும் பல ஆண்டுகளாக சிறையில் அடைபட்டு கிடக்கும் குற்றவாளிகளின் பரிதாப நிலை, அவர்களின் பின்னணி தகவல்களை உணர்வோடு மட்டுமின்றி எதிர்பார்ப்போடு இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ்ராஜகுமாரி. ஆயுதப்படை காவலருக்கும், கொலை குற்றவாளிக்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டத்தை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகவும் அழகாகவும் கொடுத்து இருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    மதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும் ஜஸ்டின் பிரபாகரன் இசையும் ரசிக்க வைக்கிறது. 

    Milestones என்பது ஒரு நினைவுக் குறிப்பு மட்டும்.

    சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நடிகர் விக்ரம் பிரபுவிடம் நேர்காணல் நடந்தது. இதில், விக்ரம் பிரபுவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவரது பதிலும்..

    *சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளீர்கள். இந்த பயணத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது என்ன உணர்கிறீர்கள்?

    உண்மையிலேயே ஒரு நல்ல உணர்வு. 13 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். ஆனால் திரும்பிப் பார்க்கும்போது அது எப்படி போய்விட்டது என்றே தெரியவில்லை. இந்தப் பயணம் எனக்கு வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம்—எல்லாவற்றையும் காட்டியுள்ளது. அதைவிட முக்கியமாக, மனிதர்களை புரிந்துகொள்ளவும், வாழ்க்கையை புரிந்துகொள்ளவும் கற்றுக் கொடுத்துள்ளது.

    *ஆரம்பத்தில் சினிமா குறித்து உங்கள் கனவுகள் என்ன?

    ஆரம்பத்தில் எல்லோருக்கும் இருப்பது போல எனக்கும் ஒரு கனவு இருந்தது. சினிமா என்றால் இது தான், இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற ஒரு கற்பனை. ஆனால் களத்தில் இறங்கிய பிறகு தான் புரிந்தது, சினிமா என்பது கனவு மட்டும் அல்ல, அது ஒரு பெரிய அமைப்பு, ஒரு தொழில், ஒரு குழு வேலை.

    *25-வது படம், மைல்ஸ்டோன்ஸ், இவைகளுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்?

    எனக்கு எண்கள் முக்கியமல்ல. அந்த காலகட்டத்தில் நான் என்ன கற்றுக்கொண்டேன், என்ன மாற்றம் அடைந்தேன் என்பதே முக்கியம். Milestones என்பது ஒரு நினைவுக் குறிப்பு மட்டும்.

    *சிறை படம் உங்களை ஈர்த்த காரணம்?

    கதை தான். அது மிகவும் நேர்மையாக இருந்தது. போலீஸ் அமைப்பு, சமூகத்தின் பார்வை, மனித உணர்வுகள்—எல்லாம் மிக நுட்பமாக சொல்லப்பட்டிருந்தது.

    *சிறை ஒரு controversial படம் தானா?

    இது controversial படம் அல்ல. ஆனால் இது கேள்விகள் கேட்கும் படம். ஒவ்வொருவரும் இதில் இருந்து தங்களுக்கு ஏற்ற ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல முடியும்.

    *போலீஸ் கதாபாத்திரத்துக்காக தயாரானது எப்படி?

    அது ஒரு பெரிய அனுபவம். உடல் மாற்றம் மட்டுமல்ல, மனநிலையும் மாற வேண்டும். Body language, discipline, mentality—இவை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அது வாழ்க்கையிலும் பயன்படும் பாடங்கள்.

    • விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன்.
    • சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது

    விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன். இப்படம் விக்ரம் பிரபுவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போலீஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'சிறை'. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. த் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படம்.

    படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இப்படத்தின் 2வது பாடல் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகி உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 


    • இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
    • ‘சிறை’ திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் 2-வது சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'மின்னு வட்டம் பூச்சி ' பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், யுவனை தனக்குப் பிடித்த பாடகர் என்று கூறிய ஜஸ்டின், இந்தப் பாடலில் யுவனின் மந்திரம் இருக்கும் என்றார். யுவனுடன் சேர்ந்து, ' மின்னு வட்டம் பூச்சி ' பாடலை பத்மஜா பாடியுள்ளார், கார்த்திக் நேதா எழுதியுள்ளார். இந்தப் பாடல் நாளை வெளியாக உள்ளது.  



    • இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
    • ‘சிறை’ திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    டிரெய்லரின் படி காவல் அதிகாரியான விக்ரம் பிரபு சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றவாளியை அழைத்து செல்கிறார். அப்போது அந்த குற்றவாளி துப்பாக்கியுடன் தப்பிச்செல்கிறார். இதன்பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.

    நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள 'சிறை' படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 



    • சிறை படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.
    • விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார்.

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், சிறை' படத்தின் டிரெய்லர் வரும் 12ம் தேதி பிற்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிறை திரைப்படம் டிசம்பர் 25 முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது

    • நன்றாக படிக்கும் மவுனிகா வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார்.
    • அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு ஆத்திரத்தில் அவர்களை கடுமையாக திட்டியுள்ளார்.

    'பெண் குழந்தைகளை பெற்ற தந்தைக்குதான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை' என்ற சினிமா வரிகள் மகத்துவமானது. அதே தந்தைக்குதான் தெரியும் அந்த குழந்தையை வளர்த்து திருமணம் செய்து வைப்பது எவ்வளவு கஷ்டம் என்று.

    ஆமாம். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு முழுமையாக இருக்கிறதா? என்றால் பாதுகாப்பு இருக்கிறது என்று உறுதியாக கூறமுடியாது.

    அதற்காக நாம் பெண் குழந்தைகளை பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, வெளியிடத்திற்கோ அனுப்பாமல் இருக்க முடியுமா? அனுப்பித்தான் ஆக வேண்டும்.

    ஆனால் ஆந்திராவில் ஒரு தாய், நாள்தோறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பார்த்து பயந்து தனது மகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த கொடுமை நடந்துள்ளது. கணவர் இல்லாததால் பள்ளியில் நன்றாக படித்துக்கொண்டிருந்த மகள் பருவ வயதை எட்டியதும் வெளியுலகமே தெரியாமல் வீட்டுக்குள் பூட்டி வைத்துள்ளார்.

    அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி. கணவர் இறந்துவிட்டதால் மகள் மவுனிகாவுடன் வசித்து வந்தார். மவுனிகா அந்தப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார்.

    நன்றாக படிக்கும் மவுனிகா வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மவுனிகா பருவவயதை எட்டினார். இதனால் அவரை பள்ளிக்கு அனுப்பாமல் பாக்கியலட்சுமி வீட்டிலேயே வைத்திருந்தார்.

    அதுமட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே மகளை அடைத்து வைத்துள்ளார். ஒரு நாள் இல்லை, 2 நாள் இல்லை. 3 ஆண்டுகளாக மகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளார் அந்த தாய்.

    ஓய்வூதியம் மூலமாக காலத்தை ஓட்டி வந்த பாக்கியலட்சுமி, வெளியிடங்களுக்கு செல்லும்போது வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். மகளை உள்ளே வைத்து வீட்டை பூட்டி சென்று வந்துள்ளார். இருட்டில் அந்த சிறுமி தவித்து வந்தார்.

    அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கேட்டதற்கு ஆத்திரத்தில் அவர்களை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தை அறிந்த அந்தப்பகுதி அங்கன்வாடி ஊழியர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து போலீசார் பாக்கியலட்சுமியின் வீட்டுக்கு நேரில் சென்று கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. அப்போது அதிகாரி ஒருவர் வீட்டை அளக்க சர்வேயர் வந்துள்ளேன் என்று சொன்னதும் பாக்கியலட்சுமி கதவை திறந்துள்ளார். உடனே போலீசாரும், அதிகாரிகளும் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் தாயாருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை.
    • நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார்.

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் சிறை திரைப்படம் டிசம்பர் 25 முதல் உலகமெங்கும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா.
    • பிரபல ரவுடியான இவர் பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    பெங்களூர் பரப்பன அக்ரகாரா மத்திய சிறையில் அடிக்கடி கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், அது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சிறையில் கைதி ஒருவர் பெரிய கத்தியால் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா. பிரபல ரவுடியான இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் சிறை வளாகத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அப்போது அவருக்கு சக கைதிகள் ஆப்பிள் மாலை அணிவித்து உள்ளனர். பின்னர் குப்பாச்சி சீனா பெரிய கத்தியால் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்துள்ளார்.

    இதை அங்கு இருந்த யாேரா ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிறை விதிகளின் படி சிறை வளாகத்தில் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்துவது குற்றம் ஆகும். ஆனாலும் கைதிகள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வெளியானது எப்படி என்று சிறைத்துறை உயர் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது முதல் கட்ட விசாரணையில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் 5 மாதங்களுக்கு முன்பு நடந்தது தெரியவந்தது. மேலும் வீடியோவில் இருந்த சில கைதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து பரப்பன அக்ரகாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறைக்குள் செல்போன்களை எப்படி கொண்டு சென்றனர். மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு உதவியது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சீனாவில் ஒரு பெண் அடுத்தடுத்து கர்ப்பமாகி 3 குழந்தைகளை பெற்றெடுத்தார்.
    • இதனால் அவர் ஜெயிலுக்குப் போவதை தவிர்த்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பீஜிங்:

    சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2020-ம் ஆண்டில் மோசடி வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார்.

    இப்படி ஒரு விலக்கு இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார்.

    இதன் விளைவாக, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து ஜெயிலுக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார்.

    தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், இதுபோல் தொடர்ந்து கர்ப்பம் தரிப்பதை அறிந்து கொண்டனர். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படலாம் என தெரிவிக்கிறது.

    ×