என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷங்கர்"

    மதராஸி திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் படத்தை பாராட்டி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "Madharaasi பல சுவாரஸ்யமான தருணங்களைக் கொண்ட ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

    ARMurugadoss உணர்ச்சிகளை அற்புதமாக கையாண்டுள்ளார். காதலையும் கிரைமையும் இணைத்த விதம் அற்புதம்.

    சிவகார்த்திகேயனின் கதாபாத்திர சித்தரிப்பு சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது, அதை அவர் அற்புதமாக வெளிப்படுத்தினார் - ஒரு அதிரடி ஹீரோவாகவும் அசத்தியுள்ளார்! அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. Vidyut Jammwal ஆஹா! பார்வையாளர்களை அவரது ஸ்டைலால் கட்டி போடுகிறார். இப்படத்தை வழங்கிய மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்! என கூறினார்.

    • 1990-ம் ஆண்டு கால கட்டங்களில் ஜொலித்து வந்த பிரபலங்கள் இன்னும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.
    • வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி நினைவலைகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

    திரை உலகில் முன்னணி கதாநாயகன், கதாநாயகிகளுக்கிடையே படங்களில் நடிப்பதில் பெரும்பாலும் போட்டி இருக்கும். ஆனால் பொறாமை இருக்காது. இதில் 1990-ம் ஆண்டு கால கட்டங்களில் ஜொலித்து வந்த பிரபலங்கள் இன்னும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.

    தென்னிந்திய திரை உலகில் 90 கால கட்ட பிரபலங்கள் பலர் ஆண்டுகள் பல கடந்தும் வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி நினைவலைகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில் இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, மோகன் ராஜா, நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரபுதேவா, மேகா ஸ்ரீகாந்த், நடிகைகள் சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமாசென், மகேஸ்வரி, சிவரஞ்சனி, ஆகியோர் கோவாவில் ஒன்றாக சந்தித்தனர்.

     

    அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடிய மகிழ்ச்சியில் நினைவுகள், ஆரவாரங்கள் என புன்னகையோடு கடந்த கால நிகழ்ச்சிகளை விருந்தோடு கடற்கரையில் ஒரு மாயாஜால கொண்டாட்டத்தை நடத்தினர்.

     

    நிகழ்ச்சியின் போது மீனா, சங்கீதா, மகேஷ்வரி ஆகியோர் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் நடிகைகள் அனைவரும் சேர்ந்து எடுத்த ரீல்ஸ் வீடியோக்கள் என 'கோவா டூர்' பிரபலங்களின் மறக்க முடியாத கொண்டாட்டமாக அமைந்தது.

    கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    • வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது
    • வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

    CPIM கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன்  எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

    இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது அவர் மிகவும் நகைச்சுவையாக பேசினார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது

    "நிறைய சொல்ல வேண்டும் என அறிவு சொல்லும். எப்படிப் பேசவேண்டும் என திறமை சொல்லும். எவ்வளவு பேச வேண்டும் என அரங்கம் சொல்லும். எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என அனுபவம் சொல்லும். இந்த விழாவுக்காக சு.வெங்கடேசன் என்னை அப்ரோச் பண்ணிய விதம் ரொம்ப பிடித்திருந்தது.

    விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான், இருந்தாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை. இந்த விழாவிற்கு நடிகரை அழைக்க வேண்டுமானால் சிவக்குமாரை அழைத்திருக்கலாம். அவர் எவ்வளவு படித்திருக்கிறார், மகாபாரதத்தை இந்த வயதிலும் 6 மணி நேரம் விடாமல் அதைப்பற்றி பேசுகிறார்.ஹேட்ஸ் ஆஃப் டூ ஹிம். சரி அவர் வேண்டாம் நடிகர் கமல்ஹாசனை அழைத்திருக்கலாம் எவ்வளவு அறிவாளி, திறமைசாலி. அதை விட்டுவிட்டு 75 வயதில் கூலிங் கிளாஸ் அணிந்துக் கொண்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் என்னை ஏன் அழைத்தார்கள் என தெரியவில்லை." என மிகவும் நகைச்சுவையாக கூற அரங்கமே சிரிப்பலையால் நிரம்பியது.

    • ராம் சரண் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'.
    • இப்படத்தை தில்ராஜு தயாரித்திருந்தார்.

    ராம் சரண் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்தார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் படும் தோல்வியை சந்தித்தது. இப்படத்தை தில்ராஜு தயாரித்திருந்தார்.

    சமீபத்தில் நடந்த நேர்காணலில் தில்ராஜு "கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தது என்னுடைய தவறு. நான் என் தரப்பில் சில அக்ரீமண்டுகளை போட்டிருக்க வேண்டும். அது என் தவறு தான். இதற்கு அடுத்து அப்படி ஒரு படத்தை தயாரிக்க மாட்டேன்" என கூறியிருந்தார்.

    மேலும் " நடிகர் விஜய் பின்பற்றும் விதிகள் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷ வாய்ப்பாகும். அவருடைய பாலிசி ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பு, 6 மாதம் ஒரு படத்தில் நடிப்பார். மொத்தம் 120 நாட்களில் திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கும் நிறைய நேரம் கிடைக்கும். ஆனால் இங்கு தெலுங்கு திரையுலகில் அது மொத்தம் சிதைந்து கிடக்கிறது." என கூறியுள்ளார்.

    • இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'.
    • இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    சில வாரங்களுக்கு முன் நடந்த நேர்காணல் ஒன்றில் கேம் சேஞ்சர் படத்தின் படத்தொகுப்பாளரான ஷமீர் முகமத் படத்தில் வேலைப்பார்த்த அனுபவம் மிகவும் மோசமானது என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " நான் இதுவரை 60 திரைப்படங்கள் தயாரித்துள்ளேன் ஆனால் எந்த ஒரு திரைப்படமும் பெரிய இயக்குநர்களுடன் வேலைப் பார்த்தது இல்லை. கேம் சேஞ்சர் திரைப்படம் நான் செய்த தவறான முடிவு. நான் படப்பிடிப்பிற்கு முன்பே காண்டிரக்டில் சில விஷயங்களை சேர்த்திருக்க வேண்டும் அதை செய்யாதது என்னுடைய தவறு. ஒரு தவறு நடக்கும் போது அதை தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு தயாரிப்பாளரின் பொறுப்பு ஆனால் நான் அதை செய்ய தவறிவிட்டேன். இதன் பிறகு அப்படி ஒரு திரைப்படத்தை தயாரிக்க மாட்டேன்." என கூறியுள்ளார்.

    • இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'.
    • படத்தின் படத்தொகுப்பை மலையாள படத்தொகுப்பாளரான ஷமீர் முகமத் மேற்கொண்டார்.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    ராம் சரண் இப்படத்தில் 2 கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். படத்தின் இசையை எஸ்.தமன் மேற்கொண்டுள்ளார். படத்தின் படத்தொகுப்பை மலையாள படத்தொகுப்பாளரான ஷமீர் முகமத் மேற்கொண்டார். சமீபத்தில் நடந்த நேர்காணலில் கேம் சேஞ்சர் படத்தில் வேலைப்பார்த்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர் " கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நேரளவு முதலில் 7.5 மணி நேரமாக இருந்தது. அதை கொடுத்து ஷங்கர் சார் ஒரு திரைப்படத்திற்கான அளவிற்கு கட் செய்து தர சொன்னார். நான் அதை 3 மணி நேரத்திற்கு கட் செய்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து அதில் வேலை செய்ய முடியவில்ல அதனால் அப்படத்தில் இருந்து விலகினேன். இதனால் அவருடன் வேலைப்பார்த்த அனுபவம் மிகவும் மோசம்" என கூறியுள்ளார்.

    • எந்திரன் திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கினார்.
    • எந்திரன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் மனோஜ் பணியாற்றி இருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எந்திரன் படத்தில் இயக்குநர் ஷங்கருக்கு உதவி இயக்குநராக மனோஜ் பணியாற்றி இருக்கிறார்.

     


    அதன்படி எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்-க்கு மனோஜ் டூப்பாக நடித்துள்ளார். நேற்று (மார்ச் 25) மாலை மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவர் எந்திரன் படத்தில் பணியாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

     


    இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எந்திரன். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். 

    • இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன், ராம்சரண் படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


    இந்தியன்

    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஆர்.சி.15

    இதைத்தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி.15 படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்த மாத இறுதியில் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் ஷங்கர் அடுத்த மாத இறுதியில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    பின்னர், ராம் சரண் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் அந்த படத்தின் பாடல் காட்சிகள் நியூசிலாந்தில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


    இந்தியன் 2

    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்தியன் 2 படப்பிடிப்பில் யோக்ராஜ் சிங்

    இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இணைந்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில் ''கேமராவுக்குப் பின்னால் இருக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். என்னை மேலும் அழகாக மாற்றியதற்கு மேக்கப் மேனுக்கு நன்றி. கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டேன்'' என பதிவிட்டுள்ளார்.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

     

    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    இந்தியன் 2

    இந்தியன் 2

    இந்நிலையில் தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் கமல் ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்டு இந்தியன் 2 படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங்.
    • இவர் தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    சரித்திர படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்து வரும் வரவேற்பு திரையுலகுக்கு புதிய வாயிலை திறந்து விட்டுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படமும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதனால் சரித்திர கதைகளை படமாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரலாற்று நாவல்களை தேடிப்பிடித்து படிக்க தொடங்கி உள்ளனர்.

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

     

    இந்நிலையில் வேள்பாரி நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் இறங்கி இருப்பதாகவும், இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் 3 பாகங்களாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சூர்யா மன்னன் வேடத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து ரன்வீர் சிங்கிடம், ஷங்கர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழில் தயாராகும் இந்த படத்தை தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.சி.15.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஆர்.சி.15

    இதைத்தொடர்ந்து, இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங்கிற்காக படக்குழு நியூசிலாந்து சென்றிருந்தது. இந்நிலையில், இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    ×