என் மலர்
நீங்கள் தேடியது "Velpari"
- வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது
- வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.
CPIM கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது அவர் மிகவும் நகைச்சுவையாக பேசினார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது
"நிறைய சொல்ல வேண்டும் என அறிவு சொல்லும். எப்படிப் பேசவேண்டும் என திறமை சொல்லும். எவ்வளவு பேச வேண்டும் என அரங்கம் சொல்லும். எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என அனுபவம் சொல்லும். இந்த விழாவுக்காக சு.வெங்கடேசன் என்னை அப்ரோச் பண்ணிய விதம் ரொம்ப பிடித்திருந்தது.
விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான், இருந்தாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை. இந்த விழாவிற்கு நடிகரை அழைக்க வேண்டுமானால் சிவக்குமாரை அழைத்திருக்கலாம். அவர் எவ்வளவு படித்திருக்கிறார், மகாபாரதத்தை இந்த வயதிலும் 6 மணி நேரம் விடாமல் அதைப்பற்றி பேசுகிறார்.ஹேட்ஸ் ஆஃப் டூ ஹிம். சரி அவர் வேண்டாம் நடிகர் கமல்ஹாசனை அழைத்திருக்கலாம் எவ்வளவு அறிவாளி, திறமைசாலி. அதை விட்டுவிட்டு 75 வயதில் கூலிங் கிளாஸ் அணிந்துக் கொண்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் என்னை ஏன் அழைத்தார்கள் என தெரியவில்லை." என மிகவும் நகைச்சுவையாக கூற அரங்கமே சிரிப்பலையால் நிரம்பியது.
- எனது முதல் கனவுப் படமாக எந்திரன் இருந்தது.
- தற்போது எனது கனவுப் படமாக வேள்பாரி உள்ளது.
சென்னை:
விகடன் பிரசுரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இந்த விழாவில் நாவலாசிரியர் சு.வெங்கடேசன், நடிகை ரோகிணி, இயக்குனர் ஷங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் பேசியதாவது:
எனது முதல் கனவுப் படமாக எந்திரன் இருந்தது. தற்போது எனது கனவுப் படம் வேள்பாரி.
நிச்சயம் இது உலகம் போற்றும் தமிழ் படைப்பாக வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.
கனவு மெய்ப்படும் என நம்புகிறேன்.
புது புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தக்கூடிய கதையாக இருக்கிறது வேள்பாரி.
கேம் ஆப் த்ரோன்ஸ், அவதார் மாதிரி உலகம் போற்றக் கூடிய அறிவுப்பூர்வமான, ஜனரஞ்சகமான காவியமா, ஒரு பெருமை மிக்க இந்திய, தமிழ் படைப்பாக வரக்கூடிய சாத்தியம் இதில் இருக்கிறது என தெரிவித்தார்.
- வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்தது.
- சென்னையில் நடந்த விழாவில் வேள்பாரி ஒரு லட்சம் வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.
சென்னை:
விகடன் பிரசுரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நிறைய சொல்ல வேண்டும் என அறிவு சொல்லும். எப்படிப் பேசவேண்டும் என திறமை சொல்லும். எவ்வளவு பேச வேண்டும் என அரங்கம் சொல்லும். எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என அனுபவம் சொல்லும்.
கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு நிகழ்ச்சியில் ஓல்டு ஸ்டூடண்ஸ் குறித்துப் பேசினேன். அரங்கத்துல இருக்குற எல்லாரும் சிரிச்சதால நான் பேசணும்னு நினைச்சதை மறந்துட்டேன்.
இந்த விழாவுக்காக சு.வெங்கடேசன் என்னை அப்ரொச் பண்ணிய விதம் ரொம்ப பிடித்திருந்தது.
விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான், இருந்தாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை.
சிவக்குமாரும் கமல்ஹாசனும் சிறந்த அறிவாளிகள்... ஆனா, என்னை ஏன் கூப்பிட்டாங்க? இந்த 75 வயசுலயும் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வர என்ன ஏன்பா விழாவுக்கு கூப்டீங்க?
வேள்பாரி புத்தகத்தை நான் இன்னும் முழுசா படிக்கல. வேள்பாரி திரைப்படமாக உருவாகும் என காத்திருக்கிறேன்.
ஓய்வுக் காலத்தில் நல்ல புத்தகங்களைப் படிக்க விருப்பம் உள்ளது. அதற்காக வேள்பாரி புத்தகத்தை எடுத்து வைத்துள்ளேன்.
எல்லோரும் காத்திருப்பது போல நானும் வேள்பாரி திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.






