என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reunion"

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் மம்மூட்டி, தற்போது பேட்ரியாட் எனும் அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இதில் மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ஸாரின் ஷிஹப் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாக இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

    மம்மூட்டியுடன் மீண்டும் இணைவது குறித்து பேசிய இயக்குநர் அடூர் கோபாலாகிருஷ்ணன் " என்னுடைய அடுத்த படத்தில் மம்மூட்டியே முக்கிய வேடத்தில் நடிப்பார். மீதமுள்ள கதாபாத்திரங்களுக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது. திரைக்கதை எழுதும் பணி நடந்து கொண்டிருந்தபோது, மையக் கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியின் முகம் மட்டுமே என் நினைவுக்கு வந்தது.

    அவர்தான் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான நபராக இருப்பார் என்று நான் உணர்ந்தேன். எனது படங்களில் ஆண் கதாநாயகனாக நடிப்பது இது நான்காவது முறையாகும். நான் வேறு எந்த முன்னணி நடிகருடனும் இவ்வளவு முறை பணியாற்றியதில்லை". என தெரிவித்தார்.

    இப்படம் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மம்மூட்டியை அடூர் உலகிற்குள் கொண்டுவருகிறது. கடைசியாக இவர்களின் கூட்டணியில் வெளியான படம் விதேயன் (1994). அடூர் -  மம்மூட்டி கூட்டணியில் வெளியான அனந்தரம் (1987), மதிலுகள் (1989) மற்றும் விதேயன் ஆகியவை மலையாள சினிமாவின் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படைப்புகளாகும். 

    • மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
    • இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது.

    1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இந்த ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது
    • மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

     இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.


    2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டுள்ளது. 

    • ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது.
    • இதையடுத்து, தந்தை - மகள் இருவரும் நேரில் சந்தித்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரைச் சேர்ந்தவர் கெவின் ஜோர்டான். இவர் தனது பள்ளி பருவத்தில் ஜாக்கி என்பவரை காதலித்து வந்தார்.

    அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பள்ளி பருவம் என்பதால் அவர்களது பெற்றோர் இதனை அவமானமாகக் கருதினர்.

    எனவே அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்தக் குழந்தையை தத்து கொடுத்தனர். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு இருவரும் திருமணம் செய்து குழந்தைகள் பிறந்தன.

    இதற்கிடையே, கடந்த 2013-ம் ஆண்டு ஜாக்கி இறந்தார். அதன்பிறகு சிறு வயதில் தத்து கொடுத்த தனது மகளை கண்டுபிடிக்க கெவின் முடிவு செய்தார். இதற்காக தனியார் தொலைக்காட்சி உதவியை நாடினார்.

    இந்நிலையில், அவரது மகள் ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் நேரில் சந்தித்தனர்.

    50 ஆண்டுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பு இங்கிலாந்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • 1990-ம் ஆண்டு கால கட்டங்களில் ஜொலித்து வந்த பிரபலங்கள் இன்னும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.
    • வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி நினைவலைகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

    திரை உலகில் முன்னணி கதாநாயகன், கதாநாயகிகளுக்கிடையே படங்களில் நடிப்பதில் பெரும்பாலும் போட்டி இருக்கும். ஆனால் பொறாமை இருக்காது. இதில் 1990-ம் ஆண்டு கால கட்டங்களில் ஜொலித்து வந்த பிரபலங்கள் இன்னும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.

    தென்னிந்திய திரை உலகில் 90 கால கட்ட பிரபலங்கள் பலர் ஆண்டுகள் பல கடந்தும் வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி நினைவலைகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில் இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, மோகன் ராஜா, நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரபுதேவா, மேகா ஸ்ரீகாந்த், நடிகைகள் சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமாசென், மகேஸ்வரி, சிவரஞ்சனி, ஆகியோர் கோவாவில் ஒன்றாக சந்தித்தனர்.

     

    அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடிய மகிழ்ச்சியில் நினைவுகள், ஆரவாரங்கள் என புன்னகையோடு கடந்த கால நிகழ்ச்சிகளை விருந்தோடு கடற்கரையில் ஒரு மாயாஜால கொண்டாட்டத்தை நடத்தினர்.

     

    நிகழ்ச்சியின் போது மீனா, சங்கீதா, மகேஷ்வரி ஆகியோர் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் நடிகைகள் அனைவரும் சேர்ந்து எடுத்த ரீல்ஸ் வீடியோக்கள் என 'கோவா டூர்' பிரபலங்களின் மறக்க முடியாத கொண்டாட்டமாக அமைந்தது.

    கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    • அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடை பெற்றது.
    • முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடை பெற்றது. முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு வரும் தாங்கள் படித்த தரு ணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறு வனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

    வசதி இல்லாத மாணவ, மாண வியர்களுக்கு உதவு தல், பள்ளிக்கு தேவையான அத்தியாவசியமான உபக ரணங்கள் வாங்கி தருவது, ஒவ்வொரு ஆண்டும் சங்க கூட்டம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு, புதிய மாணவ, மாண வியர்களுக்கு அரசு பள்ளியின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தல், அரசு தேர்வுக்கு தேவையான உதவிகளை புதிய மாணவ, மாணவியர்களுக்கு செய்தல் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிர்வாகி லெவி பங்கேற்று, முன்னாள் மாணவர்களால் நன்கொடையாக வழங்கப் பட்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஆசிரியைகள் ஹெலன் பிரசெல்லா, ஜாய்ஸ் அருள்செல்வி, மெர்சிபா குளோரி, ஸ்டெல்லா, சித்ரா, ஜமுனா, ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தூத்துக்குடியில் 25 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்களும், அவர்களின் மாணவர்களும் சந்தித்து நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பழைய மாணவ மாணவிகள் தங்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துறைமுக கல்விக் கழகநிர்வாகத்தின் கீழ் நடைபெற்றுவரும் துறைமுக மேல்நிலைப்பள்ளியில் 1997ம் ஆண்டு மேல்நிலை கல்வி பயின்ற மாணவ-மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நிகழ்வு, தூத்துக்குடி துறைமுக சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பழைய மாணவ மாணவிகள் தங்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர்.

    பசுமை நிறைந்த நினைவுகளை மாணவ-மாணவிகள் பலரும் நினைவுகூர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை ஆசிரியர்கள் யூஜின் சகாயராஜ், ஹெக்டோ தலைமை தாங்கினார்.

    பள்ளி தலைமை ஆசிரியை சர்மிளா முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் உலக பிரகாஷ், சுப்புலட்சுமி வரவேற்றனர். ராமச்சந்திரன் பவானி தொகுத்து வழங்கினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் காந்திமதிநாதன், சுப்பம்மாள், சார்லஸ்ரத்தினராஜ், சரோஜா ஞானம், ராமலட்சுமி, அருண்குமார் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள் ஆத்தியப்பன், விநாயகம், மஞ்சுளா, அன்னபாக்கியம், கிளாடிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் தனலட்சுமி, முன்னாள் மாணவர்கள் சக்திவேல், ராமலட்சுமி, வின்சென்ட், அம்மாள், சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாசுதேவநல்லூர் அரசு பள்ளியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அனைவரும் தங்களது பள்ளிப்பருவ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1989 - 1990 -ஆம் ஆண்டு பிளஸ் 2 கலைப்பிரிவு பயின்ற மாணவ மாணவிகள் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு அப்போதைய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் அருண் மற்றும் பன்னீர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினர். தற்போதைய அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயசீலன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    மாணவர்கள் அனைவரும் தங்களது பள்ளிப்பருவ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    பெரும்பாலனோர் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிக்குத் தேவையான 2 பேட்டரிகள் முன்னாள் மாணவர்கள் சார்பில், தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை சங்கரசுப்பிரமணியன், முத்துராஜ், வழக்கறிஞர் செந்தில், சாகுல் ஹமீது, இசக்கிராஜா, பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×