search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goa"

    • நேபாள மேயர் கோவாவில் உள்ள ஓஷோ தியான மையத்துடன் இணைந்து தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார்
    • கோவாவில் வசிப்பவர்கள் தனது மகளை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று நேபாள மேயர் கோரிக்கை

    கோவாவில் தங்கி இருந்த தனது மகளை காணவில்லை என்று நேபாளத்தின் தங்காதி துணை பெருநகரத்தின் மேயர் கோபால் ஹமால் தெரிவித்துள்ளார்.

    36 வயதான ஆர்த்தி ஹமால் கோவாவில் உள்ள ஓஷோ தியான மையத்துடன் இணைந்து சில மாதங்களாக தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

    இந்நிலையில், மார்ச் 25 இரவு 9.30 மணியளவில் அஷ்வெம் பாலத்தின் அருகே இருந்த ஆரத்தி, அதற்கு பின் காணவில்லை என அவரது தோழி, கோபால் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

    கோவாவில் வசிப்பவர்கள் தனது மகளை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று நேபாள மேயர் கோபால் ஹமால், சமூக வலைத்தளங்களில் உதவி கோரியுள்ளார்.

    இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள கோவா காவல்துறை, ஆர்த்தியை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

    • இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுகிறது.
    • ஆய்வு செய்ய ரெய்டுகளும் நடத்தப்பட்டன.

    காலிஃபிளவர் கொண்டு செய்யப்படும் சுவையான உணவு வகை கோபி மஞ்சூரியன். உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமான உணவாக கோபி மஞ்சூரியன் விளங்குகிறது. இந்த நிலையில், கோபி மஞ்சூரியன் உணவிற்கு கோவா மாநிலத்தை சேர்ந்த நகரம் ஒன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மசாலா பொருட்கள் பூசப்பட்ட காலிஃபிளவரை எண்ணையில் பொரித்து, பிறகு பொரித்தெடுக்கப்பட்ட காலிஃபிளவரை காய்கறி வகைகள், பல்வித சாஸ் சேர்த்து சமைக்கப்படுவதே கோபி மஞ்சூரியன் என்ற பெயரில் காரசாரமாக பரிமாறப்படுகிறது. இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுவதே இதற்கு தடை விதிக்க காரணமாக கூறப்பட்டுள்ளது.

     


    முன்னதாக 2022-ம் ஆண்டு கோவாவை சேர்ந்த மபுசா நகரில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, இந்த உணவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும், கடைகளில் இந்த உணவு ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ரெய்டுகளும் நடத்தப்பட்டன.

    மும்பையை சேர்ந்த நெல்சன் வாங் என்பவரே இத்தகைய உணவை கண்டறிந்தவர் என கூறப்படுகிறது. இவர் கோழி இறைச்சியை கொண்டு மஞ்சூரியன் செய்து 1970-க்களில் பரிமாறியதாக தெரிகிறது. பிறகு, இந்த உணவு காலிஃபிளவர் கொண்டும் சமைக்க துவங்கப்பட்டது. அந்த வகையில் கோபி மஞ்சூரியன், கோழி இறைச்சி வகைக்கு மாற்றான சைவ உணவாக மாறியது. 

    • கோவா பாஜகவில், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இணைந்தனர்.
    • காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 11ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது.

    பனாஜி:

    கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் தலைமையில்  8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

    இதையடுத்து அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 11ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் காங்கிரசில் இணைந்ததால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 


    இந்நிலையில், பாஜகவில் இணைந்து பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவா மாநில முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் கூறியுள்ளதாவது: காங்கிரசில் தலைமை எங்கே இருக்கிறது? தலைமை இருந்திருந்தால், 2017 ஆண்டு 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்த போது நாங்கள் ஆட்சி அமைத்திருப்போம்.

    திடீரென என்னிடம் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கி விட்டார்கள்.இது நியாயமா? என்னை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டியது கட்சித் தலைமையின் பொறுப்பாகும்.

    ஒரு முடிவெடுக்கணும்னு நினைச்சப்போ, நான் கோவிலுக்குப் போனேன், என் தொண்டர்கள் கோபமா இருக்காங்க, இனி காங்கிரசுக்கு வேலை செய்ய வேண்டாம்னு எனக்கு சாதகமாக கோவில் பிரசாதம் வந்திருக்கு. நான் அவர்களிடம் (ஆதரவு எம்எல்ஏக்கள்) உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுங்கள், நான் உங்களுக்கு ஆதரவளிக்கிறேன் என்று தெரிவித்தேன். இப்போது காங்கிரஸ் கட்சியில் எதுவும் மிச்சமில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல், கோவாவில் ஆபரேஷன் கிச்சாட் மூலம் எம்எல்ஏக்களை பாஜக மாற்றியுள்ளாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    • ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை.
    • கோவா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோ நீக்கம்.

    கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 25 சட்டசபை உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான காங்கிரசிற்கு 11 உறுப்பினர்களும் உள்ளனர்.

    இன்று அம்மாநில மழைக்கால சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவா எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, திகம்பர் காமத், கேதர் நாயக் மற்றும் ராஜேஷ் ஃபல்தே சாய் ஆகிய ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கோவா மாநிலத்திற்கு சென்று அரசியல் நிகழ்வுகளை கண்காணிக்குமாறு அக்கட்சியின் எம்.பி முகுல் வாஸ்னிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் கட்சி நீக்கி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையும் சதித்திட்டத்தை மைக்கேல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோர் தீட்டியதாக கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் குற்றம் சாட்டி உள்ளார்.

    கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது ஜனநாயகம் அல்ல, பண நாயகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார். புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் இணைந்து காங்கிரஸ் எம்எஏக்கள், மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் வழக்குகளை எதிர்கொள்கிறார்களா என்பது குறித்த ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் பனாஜி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
    பனாஜி:

    கோவா அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணா நேற்று முன் தினம் மாலை பனாஜி கடற்கரைக்கு சென்றார். கடலை பின்னணியாக கொண்டு அவர் தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தன்னை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்கரையில் இருந்தவர்கள் அவரை மீட்க போராடினர். சற்று நேரத்தில் ரம்யா கிருஷ்ணா கடலுக்குள் மூழ்கினார். அவரது உடலை மீனவர்களும் காவல்துறையினரும் தேடி வந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் பனாஜி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தினை உடையில் மறைத்து கடத்தி வந்த நபரை சுங்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். #Hyderabadcustomsaction #Manarrested
    ஐதராபாத்:

    ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில்  இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோகாவில் இருந்து வந்த  பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

    அப்போது அந்த நபர், தங்கத்தை உருக்கி, பாலீத்தீன் பாக்கெட்டில் அடைத்து அதனை உடைக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி நூதனமான முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட தங்க பேஸ்ட் 1.16 கிலோ கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு 36,99,782 ரூபாய் ஆகும். தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்து, சுங்க அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  #Hyderabadcustomsaction  #Manarrested
    கோவா சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. #GoanewCM #Goafloortest #PramodSawant
    பனாஜி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார். 
     
    கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    முன்னதாக, கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

    இதற்கிடையே, முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த், ‘என்னுடன் 2 துணை முதல் மந்திரிகளாக விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோர் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர். இந்த அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும். அதில் பா.ஜ.க. அரசு வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில்,  கோவா சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.

    கோவா சட்டசபையில் ஆட்சி அமைக்க மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. அவருக்கு எதிராக 15 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. #GoanewCM #Goafloortest  #PramodSawant
    மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.



    இதையடுத்து, கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் வீட்டில் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
     
    இதற்கிடையே, பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்காக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    புதுடெல்லி :

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனோகர் பாரிக்கர் மறைவு செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. பொதுவாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.



    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனோகர் பாரிக்கர் ஈடு இணையில்லாத தலைவர். உண்மையான தேசபக்தர். சிறந்த நிர்வாகி. அனைவராலும் பாராட்டப் பெற்றவர். நாட்டிற்கு அவர் ஆற்றிய பணிகள் பல தலைமுறையினரின் நினைவில் இருக்கும். அவரது மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது நோயை எதிர்த்து ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது. கட்சி எல்லைகளை தாண்டி அவருக்கு அனைவரும் மரியாதை அளித்தனர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் நாளை இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது. #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    புதுடெல்லி;

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். கோவா மற்றும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அவருக்கு கணையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றவாறு தனது இல்லத்தில் இருந்தபடி முதல் மந்திரி பணிகளை கவனித்து வந்தார் மனோகர் பாரிக்கர்,

    இதற்கிடையே, இன்று மாலை உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மனோகர் பாரிக்கர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் நாளை காலை 11 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
     
    மேலும், மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி நாளை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும், தேசிய தலைநகரம் மற்றும் மாநில தலைநகரங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #ParliamentElection #Congress #RahulGandhi #FisheriesMinistry
    பனாஜி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தேதிகளில் அறிவிக்கப்பட உள்ளதால், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒவ்வொரு மாநிலமாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கோவா சென்றார். அங்கு பல்வேறு அமைப்பினர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:



    மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். தற்போது வேளாண் துறையின் கீழ் உள்ள மூன்று துறைகளில் ஒன்றாக மீன்வளத்துறை உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகமாக மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். #ParliamentElection #Congress #RahulGandhi #FisheriesMinistry
    ×