என் மலர்
நீங்கள் தேடியது "Goa"
- சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
- ஆன்மீகம், தேசிய சேவை ஒரே நோக்கத்தில் இணக்கத்துடன் முன்னேறினால்தான், வளர்ந்த இந்தியாவிற்கான நமது இலக்கு நிறைவேறும்.
கோவாவில் குஷாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பார்டகலி ஜீவோத்தம் மடத்தின் 550வது ஆண்டு விழாவையொட்டி, 77 அடி உயர பிரமாண்ட ஸ்ரீ ராமர் வெண்கலச் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மடம் உருவாக்கிய 'ராமாயண கருப்பொருள் பூங்காவையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும், சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
சிலைத் திறப்புக்குப் பிறகு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியா தற்போது ஒரு பிரம்மாண்டமான கலாசார மறுமலர்ச்சிக்கு சாட்சியாக உள்ளது. இன்றைய இந்தியா புதிய தீர்மானங்கள் மற்றும் புதிதாகக் கிடைத்த நம்பிக்கையுடன் தனது கலாசார அடையாளத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுவது, காசி விஸ்வநாதர் கோவில் மறுசீரமைக்கப்படுவது, மற்றும் உஜ்ஜயினியில் மகாகால் கோவில் விரிவுபடுத்தப்படுவது ஆகியவை, தேசத்தின் ஆன்மீகப் பாரம்பரியம் புத்துயிர் பெறுவதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
நம் இளைஞர்களின் ஆற்றல், வளர்ந்து வரும் தன்னம்பிக்கை மற்றும் நமது கலாசார வேர்களுடனான புதுப்பிக்கப்பட்ட தொடர்பு அனைத்தும் இணைந்து ஒரு புதிய இந்தியாவை வடிவமைக்கின்றன.
ஆன்மீகம், தேசிய சேவை ஒரே நோக்கத்தில் இணக்கத்துடன் முன்னேறினால்தான், வளர்ந்த இந்தியாவிற்கான நமது இலக்கு நிறைவேறும். மேலும் மக்கள் நீர் பாதுகாப்பு மற்றும் சுதேசி பொருட்களை வாக்குகுதல் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் லாக்டவுன். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்கநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், லாக்டவுன் திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நாளை திரையிடப்பட உள்ளது.
- ஆபரேஷன் சிந்தூரின் சிறப்பான வெற்றியைக் கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
- 2024-ல் குஜராத்தின் சர் க்ரீக்கில் ராணுவத்தினருடன் தீபாவளியை கொண்டாடினார்.
கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து பிரதமர் மோடி ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகிறார்.
அந்த வகையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரின் சிறப்பான வெற்றியைக் கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
அதனால், இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2014-ல் லடாக்கில் உள்ள சியாச்சின் பனிப்பிரதேசத்துக்கு சென்ற அவர், அங்கு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார்.
2015-ல், 1965-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் நமது வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள டோக்ராய் போர் நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாடத்தில் பிரதமர் பங்கேற்றார். 2024-ல் குஜராத்தின் சர் க்ரீக்கில் ராணுவத்தினருடன் தீபாவளியை கொண்டாடினார்.
- கண்ணுக்கு குளிர்ச்சியாக மரக்கன்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு சீஸா, ஊஞ்சல் என மெரினாவே அட்டகாசமாக மாறியுள்ளது.
- கடற்கரைக்கு வரும் மக்களை கண்காணிப்பதற்காக மூங்கில் கண்காணிப்பு கோபுரங்கள் நவீன தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
மெரினா சென்னையின் முக்கிய அடையாளம். உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த ஒற்றை பெயர் சென்னையின் வரலாற்றை சொல்லும். பல கனவுகளுடன் சென்னைக்கு வருபவர்களுக்கு அலைகளும், கடற்கரை மணற்பரப்பும் வாழ்க்கையை மகிழ்விக்கும் வழிகாட்டியாக காலம் காலமாக திகழ்ந்து வருகிறது.
வரலாறு படைத்த தலைவர்களை சிலைகளாக தாங்கிக்கொண்டு, உழைப்பை வலியுறுத்தும் உழைப்பாளர் சிலையை தன்னகத்தே கொண்டுள்ள மெரினாவில் பல சரித்தர சாதனை கூட்டங்கள், பேரணிகள் அரங்கேறியுள்ளது. மண்ணின் மக்களின் உணர்வுகளுடன் கலந்து விட்ட மெரினா இன்றைக்கு ஏழை, எளிய மக்களின் பொழுதுபோக்கு அட்சய பாத்திரமாக இருக்கிறது.
தினமும் வந்து செல்லும் மக்களை மகிழ்விக்காமல் ஒருபோதும் மெரினா விட்டதில்லை, அதன் அலைகளும் ஓய்ந்ததில்லை. அந்த அளவுக்கு சென்னையுடன் ஒன்றி பிணைந்த மெரினா தற்போது, காலத்திற்கேற்ப தன்னை மாற்றி வருகிறது. நீலக்கொடி சான்றை பெறும் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கிறது.

மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் அலங்கார வளைவு.
பாதம் நனைக்கும் அலைகளை ரசித்த மக்களுக்கு தற்போது பெரியவர்கள் அமரும் மூங்கில் இருக்கைகள், கோவாவை போன்று படுத்துக்கொண்டு கடலை ரசிக்கும் இருக்கைகள், நிழலுக்காக ஒதுங்கும் கோபுர குடைகள், மூங்கிலால் ஆன வரவேற்பு அலங்கார வளைவுகள் என மெரினா ரொம்பவே மாறி போச்சு.
கண்ணுக்கு குளிர்ச்சியாக மரக்கன்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு சீஸா, ஊஞ்சல் என மெரினாவே அட்டகாசமாக மாறியுள்ளது. இது குழந்தைகளுடன் மெரினா கடற்கரைக்கு வரும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. காலி பாட்டில்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை போடுவதற்கு குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடற்கரைக்கு வரும் மக்களை கண்காணிப்பதற்காக மூங்கில் கண்காணிப்பு கோபுரங்கள் நவீன தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.
உடற்பயிற்சி உபகரணங்கள், மணற்பரப்பில் நடந்து செல்ல நவீன பாதைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி, அவர்கள் பொழுதை போக்குவதற்கு சிறப்பு உபகரணங்கள், போதுமான அளவு கடற்கரை உள்ளே மூங்கிலால் அமைக்கப்பட்ட கழிவறைகள் என மெரினா கடற்கரை அனைத்து தரப்பு மக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
பல மாற்றங்களை கடந்து, நவீன மயமாகி வரும் மெரினாவில், பட்டினப்பாக்கம் வரை நீண்ட தூரத்திற்கு கடல் உணவக கடைகளின் விற்பனையும் களை கட்டி வருகிறது. இருளில் ஒளிரும் வண்ண விளக்குகளால் மெரினாவின் மொத்த அழகும் மனதை அள்ளிச் செல்லும். மெரினாவின் அழகையும், நவீனத்தையும் சேதப்படுத்தாமல் ரசிப்பதே உயிர்ப்பாக இருக்கும். அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
- பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தோம்.
- அரியானா சட்டசபை மற்றும் குஜராத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனியாக சென்றுவிட்டது.
காங்கிரஸ் எப்போதும் அதன் கூட்டாளிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. கோவாவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கிடையாது என கோவா மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் அமித் பலேகர் தெரிவித்துள்ளார்.
கோவாவில் 2027ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் பலேகர் கூறியதாவது:-
கோவாவில் பொதுவாக சொல்லப்படும் விசயம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பது மாதிரி. ஏனென்றால் இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் அங்கு மாறிவிடுவார்கள். இது கடந்த காலங்களில் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் எம்.எல்.ஏ.க்களை பெறும்போது, அவர்கள் பாஜக-வில் இணைந்து விடுவார்கள். கோவாவில் இப்படி நடந்ததை இரண்டு முறை பார்த்திருக்கிறோம். இதனால் மக்கள் அவ்வாறு உணர்கிறார்கள்.
கடந்த மக்களை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்தது. ஆனால், குஜராத் (இடைத்தேர்தல்) மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அதன் கூட்டாளியை (ஆம் ஆத்மி) விட்டு விலகி துரோகம் இழைத்தது. காங்கிரஸ் உடன் கூட்டணி உருவாக்குவதற்கான கேள்விக்கே இடமில்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
40 தொகுதிகளை கொண்ட கோவாவில் ஆம் ஆத்மிக்கு 2 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர்.
- 1990-ம் ஆண்டு கால கட்டங்களில் ஜொலித்து வந்த பிரபலங்கள் இன்னும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.
- வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி நினைவலைகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
திரை உலகில் முன்னணி கதாநாயகன், கதாநாயகிகளுக்கிடையே படங்களில் நடிப்பதில் பெரும்பாலும் போட்டி இருக்கும். ஆனால் பொறாமை இருக்காது. இதில் 1990-ம் ஆண்டு கால கட்டங்களில் ஜொலித்து வந்த பிரபலங்கள் இன்னும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.
தென்னிந்திய திரை உலகில் 90 கால கட்ட பிரபலங்கள் பலர் ஆண்டுகள் பல கடந்தும் வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி நினைவலைகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, மோகன் ராஜா, நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரபுதேவா, மேகா ஸ்ரீகாந்த், நடிகைகள் சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமாசென், மகேஸ்வரி, சிவரஞ்சனி, ஆகியோர் கோவாவில் ஒன்றாக சந்தித்தனர்.

அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடிய மகிழ்ச்சியில் நினைவுகள், ஆரவாரங்கள் என புன்னகையோடு கடந்த கால நிகழ்ச்சிகளை விருந்தோடு கடற்கரையில் ஒரு மாயாஜால கொண்டாட்டத்தை நடத்தினர்.

நிகழ்ச்சியின் போது மீனா, சங்கீதா, மகேஷ்வரி ஆகியோர் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் நடிகைகள் அனைவரும் சேர்ந்து எடுத்த ரீல்ஸ் வீடியோக்கள் என 'கோவா டூர்' பிரபலங்களின் மறக்க முடியாத கொண்டாட்டமாக அமைந்தது.
கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
- தனது பதவி நீக்கத்தை "கோவா புரட்சி தினத்தில் தனக்குக் கிடைத்த ஒரு வெகுமதி" என்று கவுட் குறிப்பிட்டுள்ளார்.
- பாஜகவில் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
பாஜக ஆளும் கோவாவில் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கோவிந்த் கவுட், மாநில அமைச்சரவையிலிருந்து நேற்று (புதன்கிழமை) நீக்கப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பழங்குடியினர் நலத் துறையில் ஊழல் நடந்ததாக கவுட் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
தனது பதவி நீக்கத்தை "கோவா புரட்சி தினத்தில் தனக்குக் கிடைத்த ஒரு வெகுமதி" என்று கவுட் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 18 கோவா புரட்சி தினம் ஆகும்.
கோவா பாஜக தலைவர் தாமோதர் நாயக், கவுட் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். பதவி நீக்கத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. "இது மாநில அரசின் முடிவு" என்று மட்டும் தெரிவித்தார்.
பழங்குடியினர் நலத் துறையில் உள்ள அதிகாரிகள் கோப்புகளைச் சரிபார்க்க லஞ்சம் வாங்குவதாக மே 26 அன்று ஒரு பொது நிகழ்ச்சியில் கவுட் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது பாஜகவில் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
கவுட்டின் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளையைச் சந்தித்து, ஊழல் நிறைந்த பாஜக அரசாங்கத்தை நீக்கக் கோரியது.
2022 மார்ச் மாதம் பாஜக மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, வடக்கு கோவாவில் உள்ள பிரியோல் தொகுதி எம்.எல்.ஏ.வான 53 வயதான கவுட், அமைச்சராகப் பதவியேற்றார்.
2019 முதல் 2022 வரையிலும் சாவந்த் தலைமையிலான அமைச்சரவையில் கவுட் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்கள் முன்னிலையில் டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரை அமைச்சர் திட்டினார்.
- எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரியது
கோவா மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ அதிகாரியை (CMO) பொதுமக்கள் முன்னிலையில் பாஜக அமைச்சர் விஸ்வஜித் அவமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவா மருத்துவக் கல்லூரியில் மக்கள் முன்னிலையில் டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரை அமைச்சர் பகிரங்கமாக சத்தம் போட்டது வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோ வெளியான நிலையில், சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்ததையடுத்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரியது. இதன் காரணமாக, அமைச்சர் உடனடியாக மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், என்னை அவமதித்த அதே இடத்திற்கு வந்து அமைச்சர் ரானே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மருத்துவர் ருத்ரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய மருத்துவர் ருத்ரேஷ், "என்னை பொதுவெளியில் வைத்து அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ரானே, அதே இடத்திற்கு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஸ்டூடியோவுக்குள் மன்னிப்பு வீடியோ எடுத்து வெளியிடுவதை ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.
- நீ உன் நாக்கைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.
- தான் சுகாதார அமைச்சராக இருக்கும் வரை, மருத்துவர் விளக்கம் அளித்தாலும் கூட, மீண்டும் பணியில் அமர்த்தப்பட மாட்டார் என்று மிரட்டினார்.
கோவா மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ அதிகாரியை (CMO) பொதுமக்கள் முன்னிலையில் அவமதித்த பாஜக அமைச்சர் விஸ்வஜித் ரானேவுக்கு எதிராக கோவாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, கோவா சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
சனிக்கிழமை அன்று, கோவா மருத்துவக் கல்லூரியில் மக்கள் முன்னிலையில் டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரை அமைச்சர் பகிரங்கமாக சத்தம் போட்டது வீடியோவாகப் பதிவாகியுள்ளது.
"CMO யார்? அவரை இங்கே வரச் சொல்லுங்கள்?" என்று கேட்ட அமைச்சர், நாற்காலியில் அமர்ந்திருந்த மருத்துவரை, சட்டைப் பையிலிருந்து கையை எடுத்து முகமூடியைக் கீழே இறக்குமாறு கடுமையான குரலில் கூறினார். மேலும், "நீ உன் நாக்கைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். நீ ஒரு மருத்துவர். நோயாளிகளிடம் பணிவாகப் பேச வேண்டும்" என்று கூறியபோது, மருத்துவர் பதிலளிக்க முயன்றார்.
இதனால் கோபமடைந்த அமைச்சர், "நான் சொல்லும்போது அமைதியாக இருக்காதே! போய்விடு!" என்று கூறி அவரை விரட்டினார். "அவரது இடைநீக்க உத்தரவைச் சரி செய்யுங்கள்" என்று அவர் தனது சகாக்களிடம் கூறுவதும் பதிவாகியுள்ளது.
உடனடியாக அவரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்ட அவர், தான் சுகாதார அமைச்சராக இருக்கும் வரை, மருத்துவர் விளக்கம் அளித்தாலும் கூட, மீண்டும் பணியில் அமர்த்தப்பட மாட்டார் என்றும் மிரட்டினார்.
இந்த வீடியோ வெளியான நிலையில், சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்ததையடுத்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரியது. இதன் காரணமாக, அமைச்சர் உடனடியாக மன்னிப்பு கோரினார். தான் திடீர் தூண்டுதலால் கோபமடைந்ததாகவும், மருத்துவர்கள் சமூகத்தை மதிப்பதாகவும், மருத்துவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் விஸ்வஜித் ரானே தெரிவித்தார்.
- இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுகிறது.
- ஆய்வு செய்ய ரெய்டுகளும் நடத்தப்பட்டன.
காலிஃபிளவர் கொண்டு செய்யப்படும் சுவையான உணவு வகை கோபி மஞ்சூரியன். உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமான உணவாக கோபி மஞ்சூரியன் விளங்குகிறது. இந்த நிலையில், கோபி மஞ்சூரியன் உணவிற்கு கோவா மாநிலத்தை சேர்ந்த நகரம் ஒன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மசாலா பொருட்கள் பூசப்பட்ட காலிஃபிளவரை எண்ணையில் பொரித்து, பிறகு பொரித்தெடுக்கப்பட்ட காலிஃபிளவரை காய்கறி வகைகள், பல்வித சாஸ் சேர்த்து சமைக்கப்படுவதே கோபி மஞ்சூரியன் என்ற பெயரில் காரசாரமாக பரிமாறப்படுகிறது. இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுவதே இதற்கு தடை விதிக்க காரணமாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக 2022-ம் ஆண்டு கோவாவை சேர்ந்த மபுசா நகரில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, இந்த உணவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும், கடைகளில் இந்த உணவு ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ரெய்டுகளும் நடத்தப்பட்டன.
மும்பையை சேர்ந்த நெல்சன் வாங் என்பவரே இத்தகைய உணவை கண்டறிந்தவர் என கூறப்படுகிறது. இவர் கோழி இறைச்சியை கொண்டு மஞ்சூரியன் செய்து 1970-க்களில் பரிமாறியதாக தெரிகிறது. பிறகு, இந்த உணவு காலிஃபிளவர் கொண்டும் சமைக்க துவங்கப்பட்டது. அந்த வகையில் கோபி மஞ்சூரியன், கோழி இறைச்சி வகைக்கு மாற்றான சைவ உணவாக மாறியது.
- நேபாள மேயர் கோவாவில் உள்ள ஓஷோ தியான மையத்துடன் இணைந்து தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார்
- கோவாவில் வசிப்பவர்கள் தனது மகளை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று நேபாள மேயர் கோரிக்கை
கோவாவில் தங்கி இருந்த தனது மகளை காணவில்லை என்று நேபாளத்தின் தங்காதி துணை பெருநகரத்தின் மேயர் கோபால் ஹமால் தெரிவித்துள்ளார்.
36 வயதான ஆர்த்தி ஹமால் கோவாவில் உள்ள ஓஷோ தியான மையத்துடன் இணைந்து சில மாதங்களாக தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், மார்ச் 25 இரவு 9.30 மணியளவில் அஷ்வெம் பாலத்தின் அருகே இருந்த ஆரத்தி, அதற்கு பின் காணவில்லை என அவரது தோழி, கோபால் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.
கோவாவில் வசிப்பவர்கள் தனது மகளை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று நேபாள மேயர் கோபால் ஹமால், சமூக வலைத்தளங்களில் உதவி கோரியுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள கோவா காவல்துறை, ஆர்த்தியை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க கடந்த தேர்தலைப் போலவே சாதிக்குமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
திருப்பதி:
குஜராத், கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.
குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
கோவாவில் உள்ள 2 தொகுதியில் ஒரு தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தலைப் போலவே சாதிக்குமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் எம்.பி.யும் மத்திய மந்திரியுமான புருஷோத்தம் ரூபாலா ராஜபுத்திரர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.
இந்த கருத்து அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. ராஜபுத்திர பெண்கள் ஒன்றாக பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க போவதாகவும் எச்சரித்தனர்.
குஜராத் மாநிலத்தில் ராஜபுத்திரர்கள் 17 சதவீதம் வரை உள்ளனர். அவர்கள் எதிர்ப்பை பா.ஜ.க.வால் சமாளிக்க முடியாது என்பதால் பிரதமர் மோடி நேரடியாக அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
மேலும் பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு எதிராகவும் சில வேட்பாளர்களை பா.ஜ.க தலைமை களமிறக்கி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது. அப்போது 25 இடங்களில் வெற்றியை எட்டியது. தற்போது கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
அவர்கள் பெண்களுக்கு என பல்வேறு திட்டங்களை அறிவித்தும் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். இது காங்கிரசுக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளது.
கோவாவில் வடக்கு மற்றும் தெற்கு கோவா தொகுதிகள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி இங்கு தனித்து போட்டியிட்டதால் பா.ஜ.க.வுக்கு நல்ல பலன் கிடைத்தது. இதனால் வடக்கு கோவாவில் பா.ஜ.க எளிதாக வெற்றி பெற்றது. தெற்கு கோவாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம் இருப்பதால் காங்கிரஸ் அங்கு வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.
இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆம் ஆத்மி மற்றும் கோவா பார்வர்டு கட்சி ஆதரவளித்து உள்ளன.
கோவாவில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் 3 அம்சங்கள் பா.ஜ.க.வுக்கு தொந்தரவாக மாறி உள்ளன. விறுவிறுப்பான வாக்குப்பதிவும் நடந்து வருகிறது.
தேர்தல் முடிவுக்கு பிறகு தான் இந்த பிரச்சினைகளால் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டதா என்பது தெரியவரும் என அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.






