கோவா பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய அமைச்சர் திடீர் பதவிநீக்கம்!

தனது பதவி நீக்கத்தை "கோவா புரட்சி தினத்தில் தனக்குக் கிடைத்த ஒரு வெகுமதி" என்று கவுட் குறிப்பிட்டுள்ளார்.பாஜகவில் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
கோவா பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய அமைச்சர் திடீர் பதவிநீக்கம்!
Published on

பாஜக ஆளும் கோவாவில் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கோவிந்த் கவுட், மாநில அமைச்சரவையிலிருந்து நேற்று (புதன்கிழமை) நீக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பழங்குடியினர் நலத் துறையில் ஊழல் நடந்ததாக கவுட் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

தனது பதவி நீக்கத்தை "கோவா புரட்சி தினத்தில் தனக்குக் கிடைத்த ஒரு வெகுமதி" என்று கவுட் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 18 கோவா புரட்சி தினம் ஆகும்.

கோவா பாஜக தலைவர் தாமோதர் நாயக், கவுட் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். பதவி நீக்கத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. "இது மாநில அரசின் முடிவு" என்று மட்டும் தெரிவித்தார்.

பழங்குடியினர் நலத் துறையில் உள்ள அதிகாரிகள் கோப்புகளைச் சரிபார்க்க லஞ்சம் வாங்குவதாக மே 26 அன்று ஒரு பொது நிகழ்ச்சியில் கவுட் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

இது பாஜகவில் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

கவுட்டின் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளையைச் சந்தித்து, ஊழல் நிறைந்த பாஜக அரசாங்கத்தை நீக்கக் கோரியது.

2022 மார்ச் மாதம் பாஜக மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, வடக்கு கோவாவில் உள்ள பிரியோல் தொகுதி எம்.எல்.ஏ.வான 53 வயதான கவுட், அமைச்சராகப் பதவியேற்றார்.

2019 முதல் 2022 வரையிலும் சாவந்த் தலைமையிலான அமைச்சரவையில் கவுட் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com